Sunday, 26 November 2017

"விமர்சனங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காதீர்கள் "

விமர்சனங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காதீர்கள்»»


                           
ஸ்ரீபத்ரகாளியம்மன் துணை !

          அன்பிற்காக ஏங்காத உயிர்களே இல்லை.அது போல அங்கீகாரத்திற்காகவும்,தான் பிறரால் மதிக்கப்பட வேண்டும் என ஒவ்வொரு மனிதனும் ஏங்குகிறான்.

  ஆதலால்  ஒவ்வொறு மனிதனும் பிறர் தரும் விமர்சனங்களை வைத்தே தன்னை எடை போடுகிறான்.பிறர் தரும் விமர்சனங்கள் உண்மையான அக்கறை உணர்வோடு தமது வளர்ச்சிக்காக தருவதாக இருந்தால் ஏற்றுக்கொள்ளலாம்.

          ஆனால் பிறர் தரும் விமர்சனங்களில் பெரும்பாலானவை  பொறாமை உணர்வோடு அல்லது வளர்ச்சி தடுக்கும் நோக்கில்தான் இருக்கும்.அதற்கு அவர்களை குறை கூறுவதில் பயனில்லை.

          மனித உளவியல்படி மனித மனம் "ஒவ்வொருவரும் தான் பிறரை விட சிறந்தவன் "என எண்ணுமாம்.அவ்வாறு தன்னை விட சிறந்த ஒரு நபரை பழகும் நபர்களிடமோ அல்லது வேலை பார்க்கும் அலுவலங்களிலோ பார்க்கின்றபோது அவர்கள் தன்னைவிட சிறந்தவர்கள் இல்லை என்பதை செயலிலும்,அறிவிலும் போட்டி போட போதிய திறனில்லாதவர்கள் அவர்களிடம் ஏதாவது குறையோ அல்லது சிறு தவறோ எப்பொழுதாவது நடக்குமா ? என எதிர்பார்த்து காத்திருப்பார்கள் ஆனால் "தவறு செய்வது மனித இயல்பு" .எனவே அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அதை பெரிதாக விமர்சனம் செய்வார்கள்.

            எனவே எல்லாருடைய விமர்சனங்களையும் பெரிதாக எடுத்துக்கொள்ளாதீர்கள்.

       இவ்வாறு விமர்சனங்களையோ அல்லது கெட்ட எண்ண உணர்வோடு தாக்கும் நோக்கோடு வெளியிடப்படும் வார்த்தைகளை தாங்கிக்கொள்ளவோ அல்லது அந்த வார்த்தைகளுக்கு மதிப்பு கொடுத்து மனதிற்குள் அனுமதிக்காமல் செய்யவோ மனப்பயிற்சி அவசியம்.

                               

          கொளதம புத்தர் ஒரு முறை வீதியில் உலாவரும்போது அவரது கருத்துக்களை பிடிக்காத ஒருவன் அவர் எதிரில் வந்து முகத்தில் எச்சில் துப்பி விட்டான்.இவர் எந்த ஒரு எதிர்ப்பும் தெரிவிக்காமல் சிரித்துக்கொண்டோ துடைத்துக்கொண்டு சென்றுவிட்டார்.இதனை பார்த்த அவனது சீடர்கள் "ஏன் அவனை எதுவும் செய்யாமல் விட்டீர்கள்?" என வினவ "அவன் ஏதோ சொல்ல வந்தான் சொல்வதற்கு அவனுக்கு வார்த்தை கிடைக்காததால் அவ்வாறு செய்துவிட்டான்.இது அவனது பிரச்சினை அதைப்பற்றி நாம் ஏன் வருத்தப்பட வேண்டும் ? "
என்றார்.

      "புத்தர் தான் துப்பியும் எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்காமல் சிரித்துக்கொண்டே  துடைத்துவிட்டு சென்றது அவனது உள்மனதை ஆழமாக பாதித்து அவனுக்குள் உள்மாற்றம் நிகழ்ந்தது.மறுநாள் அந்த வீதிவழியாக கொளதம புத்தர் வருவாரா ? என எதிர்பார்த்து காத்திருந்தான்.அவன் எண்ணியதுபோல அவ்வீதி வழியாக வருவதை கண்ட அவன்"புத்தரது காலை கட்டி பிடித்து அழுதான்.இப்பொழுதும் அவர் எந்தவித வார்த்தைகளும் சொல்லாமல் செல்வதை கண்ட சீடர்கள் மனது பொறுக்கமுடியாமல் புத்தரிடம் "நேற்றுதான் அவன் தவறாக நடந்து கொண்டான் எதுவும் பேசாமல் சென்றீர்கள்.அதில் நியாயம் இருந்தது ஆனால் இன்றோ அவன் தான் தவறை உணர்ந்து மன்னித்துவிடுங்கள் ? என கதறுகிறான்.நீங்கள் எந்த ஆறுதலும் சொல்லாமல் வருகிறீர்களே? " என ஆதங்கத்துடன் வினவ இப்பொழுதும் கொளதம புத்தர் மாறாத புன்னகையுடன் "அவன்  என்னிடம் இன்றும்  ஏதோ ஒன்று சொல்ல வருகிறான் ஆனால் அவனிடம் வார்த்தைகள்  கிடைக்கவில்லை ?"  என்கிறார் .

         அமைதியாக.அவர் திட்டி உமிழப்பட்ட எச்சிலையும்,மனம் திருந்தி அழுத கண்ணீரையும் ஒரே மாதிரியாகவே எடுத்துக்கொண்டார்.ஆனால் அவர் எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்காமல் சென்றதே அவனது ஆழ்மனதில் ஒருவித இரசாயன மாற்றத்தை  உண்டாக்கியிருக்க வேண்டும்.

        எனவேதான் இயேசுநாதர் கூட "ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் காட்டு" என்று கூறியிருப்பார்.ஒரு கன்னத்தில் அறையும்போது பதிலுக்கு அறைய ஆரம்பித்தால் அங்கே வன்முறை விதைக்கப்படுகிறது மாறாக மறு கன்னத்தை காட்டும்போது அவனது மிருககுணம் மிரள்கிறது.அந்த மிருககுணமானது வஞ்சக எண்ணத்தோடு அடிக்கும்போது அங்கே அந்த மிருகதன்மைக்கு எதிர்ப்பில்லாமல் போனவுடன் அங்கே சிந்திக்க ஆரம்பிக்கிறது.ஆஹா ! நாம் தவறு செய்து விட்டோம்? என சிந்திக்க ஆரம்பிக்கிறது.சிந்திக்க ஆரம்பித்த அடுத்த கணமே அவனிடம் தெய்வீக குணம் மேலோங்க ஆரம்பித்துவிடுகிறது.

          அவனிடம் அவ்வித தெய்வீக தன்மை மேலோங்க செய்யும் நோக்கமே .மேற்கண்ட இரு மகான்களின் செயலும்,கருத்தும் ஆகும்.

             ஆம் இவர்களைப்போல நாம் நடந்து கொள்வது சாதரண மனிதர்களால் இயலாத காரியம்தான்.அதனால்தான் அவர்களை மகான்கள் என அழைக்கிறோம். கொளதம புத்தரை பின்பற்றி புத்த மதம் இந்தியாவில் உருவானது என்றாலும் சீனா,ஜப்பான் மற்றும் இலங்கை போன்ற நாடுகளில் விருட்சமாக வளர்ந்துள்ளது.அதேபோல இயேசுநாதரின் கருத்துக்களை பின்பற்றி கிறிஸ்தவமும் உலகம் முழுவதும் வளர்ந்துள்ளது.

                            


             இதே போல ஒரு துறவி எல்லாவற்றையும் துறந்து விட்டு வயல்வெளியில் படுத்திருந்தார்.அவர் அவ்வாறு படுத்திருக்கும்போது தலைக்கு தலையனையாக வரப்பின் மீது தலையை வைத்து படுத்திருந்தார்.அந்த வழியாக தண்ணீர் தூக்க சென்ற துடுக்குதனமான இளம்பெண்கள் " இங்கே பாராடி எல்லாவற்றையும் துறந்த துறவிக்கு தலையனை சுகத்தை விட மனசு வரவில்லை ? " என கிண்டலடித்து கொண்டு சென்றார்கள்.

        இதைக்கேட்ட அந்த துறவி"   ஆஹா ! அந்த பெண்கள் சொல்வது உண்மைதான் எல்லாவற்றையும் துறந்த நமக்கு எதுக்கு தலையனை சுகம்  எதுக்கு ? என தனக்குள்ளே கேள்விக்கேட்டுக் கொண்டு தலையை வரப்பிலிருந்து எடுத்துவிட்டு தரையில் தலை வைத்து படுத்திருந்தார்.

          தண்ணீர் தூக்கிக்கொண்டு திரும்பி வந்த பெண்கள் இவர் தரையில் தலை வைத்து படுத்திருந்ததை பார்த்த அந்த பெண்கள் " இவரெல்லாம் ஒரு துறவியா ? அடுத்தவங்க என்ன சொல்றாங்க ? என காது கொடுத்து கேட்டுக்கொண்டு அதுப்படி தன்னை மாற்றிக்கிறாரே ? இவருக்குனு ஒரு சுய புத்தி இல்லையா ? என பேசிக்கிட்டு போனாங்க ? "

        இப்படி அடுத்தவர்கள் பேசுவதையெல்லாம் நாம் கருத்தில் எடுத்துக்கொண்டால் அந்த துறவி நிலைதான் ஆகும்.எனவே அடுத்தவர் விமர்சனங்களை முக்கியத்துவம் கொடுக்காமல் தன்னைப்பற்றிய ஒரு சுய ஆய்வு செய்துகொள்ள வேண்டும்.இதற்கு அதிக பயிற்சியும்,அனுபவமும் தேவைப்படுகிறது.நல்ல சுய முன்னேற்றம் தரும் நூல்களை தேடிப்படிக்க வேண்டும்.கற்றறிந்த சான்றோர்களின் சொற்பொழிவுகள் மற்றும் கருத்தரங்களை கேட்க வேண்டும்.யோகா,தியானம் , மூச்சுப்பயிற்சி மற்றும் நாடிச்சுத்தி போன்றவைகளை அன்றாட தினசரி வாழ்வில் நேரத்தை ஒதுக்கி செய்ய வேண்டும்.நல்ல நண்பர்களை துணையாக கொள்ள வேண்டும்.இறை உணர்வை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

           ஒரு சிலர் தாம் வேலை பார்க்கும் இடங்களிலோ அல்லது உறவினர்கள் மற்றும் அண்டை அயலார் செய்யும் விமர்சனங்களை பெரிதாக மனதிற்குள் போட்டு குழப்பிக்கொண்டு நோய்வாய்படும் அளவிற்கோ அல்லது தற்கொலை வரைககோ சென்றுவிடுகிறார்கள்.

                          


            எனவே "வாழ்ந்தாலும் ஏசும்,தாழ்ந்தாலும் ஏசும் வையகம் இதுதானடா ?" என எடுத்துக்கொண்டு நாம் உயிரோடு வாழ்வதைவிட பிறரின் விமர்சனங்கள் முக்கியமில்லை.

    "இன்று தவறாக இருக்கும் ஒன்று நாளை சரியாக மாறலாம்."
நாம் சில விஷயங்களை அல்லது பிரச்சினைகளை கற்பனை செய்து பெரிதாக நினைத்து பயப்பட்டுக்கொண்டு இருப்போம்.ஆனால் ஆந்த பிரச்சினை நம்மை துன்பப்படுத்தாமல் எளிமையாக கடந்திருக்கும்."ஆஹா ! இதுக்கு போய் இவ்வளவு மனதை உழட்டிக்கிட்டோம் ?" என நினைத்து வருத்தப்பட தோன்றும்.எனவே நடிகர் விஜய் ஒரு படத்தில் கூறும் வசனம்போல " எவ்வளவோ பார்த்திட்டோம் ,இதுவா பார்க்க முடியாது ? 'என்பார்.அதுபோல "எதுவும் நிரந்தரமல்ல இந்த நிலையும் மாறும் ?" என்ற மனநிலையோடு "கிடைக்கப்போகும் பலனை பற்றி பெரிதும் எண்ணாமல் அதை இறைவனிடம் விட்டு நமது கடமையைச்செய்வோம்.


      கவிஞர் கண்ணதாசன் கூறியதுப்போல
" நாளையப்பொழுதை இறைவனுக்கு அளித்துவிட்டு நடக்கும் வாழ்விலே அமைதியைத்தேடு
உனக்கு கீழே இருப்பவர் கோடி நினைத்துப்பார்த்து நிம்மதியைத்தேடு
எதையும் தாங்கும் தாங்கும் இதயம் இருந்தால் இறுதி வரை அமைதி நிலவும்
வாழ்க்கையென்றால் ஆயிரம் இருக்கும் வாசல்தோறும் வேதனை இருக்கும் "
என்ற கவி வரிகளோடு இப்பதிவை நிறைவு செய்கிறேன்.

     மன அடிப்படையில் நம்மை தேற்றிக்கொள்ள வேண்டும் என்பதற்காகவை இப்பதிவிற்கு பல மணிநேரங்களை செலவழித்திருக்கிறேன்.நீங்கள் சில விநாடிகள் செலவழித்து படித்த இப்பதிவை மற்றவர்களுக்கும் பகிர்ந்து பயன்பெறச்செய்யுங்கள்.

                                     


                                  
அன்புடன்
சோதிடர் ரவிச்சந்திரன்
   M.Sc ,MA, BEd,
ஆசிரியர் & சோதிட ஆய்வாளர்
ஓம் சக்தி ஜோதிட நிலையம்
கறம்பக்குடி
புதுக்கோட்டை மாவட்டம்


செல் : 97 151 89 647
                 740 257 08 99


  எனது வாட்ஸ்அப் எண்
97 151 89 647.


(தங்களது சாதகத்தினை போனின் வழியாக பார்க்க விரும்புவோர்கள் தொடர்பு கொள்க.கட்டணம் உண்டு )

No comments: