கிரகங்கள் படுத்தும் பாடு -(11)

ஸ்ரீபத்ரகாளியம்மன்துணை!
ஒருவர் வாழ்வின் அனைத்து நிலைகளுக்கும் வினாவாகவும் அதன் விடையாகவும் இருந்து வழிநடத்தும் கிரகங்களால் உண்டாகும் விளைவுகளைப்பற்றிய தொடர் பதிவு.
ஒரு சிலர் என்னதான் காசு பணம் ஈட்டினாலும் எப்பொழுதும் கடன் தொல்லை அவர்களை வாட்டி வதைக்கும்.
"கடன்பட்டார் நெஞ்சம்போல கலங்கினார் இலங்கை வேந்தன்" என கம்பர் தனது ராம காவியத்தில ராவனன் படும் சொல்ல முடியாத வேதனைக்கு ஈடாக என்ன வேதனை என சிந்தித்தபோது அதனை கடன்பட்டவரின் மனநிலையோடு ஒப்பிடுவார்.அந்த அளவுக்கு வேதனை தரக்கூடிய கடன்காரர்களாக ஒருவர் இருப்பதற்கு அவரது சாதகங்களில் சத்ரு ஸ்தானம் எனப்படும் ஆறாமிடம் வலுப்பெற்றிருப்பதே முதன்முதல் காரணமாகும்.
"கடன்பட்டார் நெஞ்சம்போல கலங்கினார் இலங்கை வேந்தன்" என கம்பர் தனது ராம காவியத்தில ராவனன் படும் சொல்ல முடியாத வேதனைக்கு ஈடாக என்ன வேதனை என சிந்தித்தபோது அதனை கடன்பட்டவரின் மனநிலையோடு ஒப்பிடுவார்.அந்த அளவுக்கு வேதனை தரக்கூடிய கடன்காரர்களாக ஒருவர் இருப்பதற்கு அவரது சாதகங்களில் சத்ரு ஸ்தானம் எனப்படும் ஆறாமிடம் வலுப்பெற்றிருப்பதே முதன்முதல் காரணமாகும்.
சிலராது சாதகங்களில் தனாதிபதி,தனஸ்தானம் மற்றும் தனக்காரகர் குரு போன்றவை பலவீனமடைந்து சத்ரு ஸ்தானமான ஆறாமிட வலிமையானால் அவன் தனம் ஏதும் ஈட்ட முடியாமல் வாழ்நாள் முழுவதும் கடன்காரர்களாக இருப்பர்.இவர்கள் கடன்காரர்களாக இருப்பது நன்று.இல்லையெனில் பிணியாலோ அல்லது சத்ருக்களால் தொல்லைகள் மிகலாம்.
ஆனால் தனம்,தன ஸ்தானம் மற்றும் தனகாரகர்குரு பகவான் போன்றவை வலுப்பெறுப்பெறுவதோடு எதிரி ஸ்தனமான ஆறாமிடமும் வலுப்பெற்றால் சொத்து பெருகும் அளவிற்கு கடனும் பெருகும்.
ஒரு சிலருக்கு சம்பாத்தியமும் இல்லை ,எவ்வித கடனும் இல்லை என இருப்பார்கள் இவ்வித அமைப்புடையவர்களது சாதகத்தில் தனம் எனப்படும் இரண்டாமிடம் மற்றும் இதன் அதிபதி ,தன காரகர் குரு பகவான் மற்றும் ஆறாமிடமும் பலவீனப்பட்டிருக்கும்.
ஒருவரின் சாதகத்தில் ஆறாமிடம் நீசம் பெற்றிருந்தால் அவருக்கு எதிரி கிடையாது.அவ்வாறு இருப்பதால் அவர்களுக்கு எதிரியால் செய்யப்படும் எதிர்மறையான செயல்கள்(திட்டுதல்,ஏவி விடுதல் ,புள்ளி வைத்தல்.....) சாதகரை வந்து தாக்குவதில்லை.மாறாக திரும்ப அவர்களையே தாக்கிவிடுகிறது.
இவை மட்டுமல்லாமல் பிணி (நோய்) தொல்லை அதிகம் இருப்பதில்லை.எல்லாவற்றிர்க்கும் மேலாக கடன் தொல்லையும் இருப்பதில்லை.
ஆறாமாதிபதியை லக்கனத்தில் கொண்டவர்கள் பிணியுடையவர்களாக இருப்பார்கள்.மேலும் கிரிமினலாக சிந்திக்கும் முரட்டுக்குணம் கொண்டிருப்பார்கள்.
இரண்டாமிடத்தில் கொண்டவர்கள் எதிரியின் சொத்து தனக்கு சேரும்.எதிர்ப்பவரின பலம் பாதி கிடைக்கும்.குடும்ப வாழ்க்கை பாதிக்கும்,வாக்கு சுத்தம் இல்லாது போகும்,கல்விநிலை பாதிக்கலாம் அல்லது வழக்கறிஞர் போன்ற கிரிமினலாக சிந்திக்கும் கல்வி பெறலாம்.
மூன்றாமிடத்தில் ஆறாமாதிபதி இடம்பெற்று அந்த வீட்டிற்குரியவனும் மறைவு ஸ்தானத்திற்கு சென்றால் "கெட்டவன் கெட்டில் ராஜயோகம்"
என்ற வகையில் "விபரீத ராஜயோகத்தை "கொடுக்கும்.மேலும் சாதகரது சகோதர ஸ்தானம் பாதிக்கப்பட வாய்ப்பு உண்டு.சாதகர் வீரியம் மிக்கவராகவும் ,பலம்மிக்கவராகவும் இருப்பர்.
என்ற வகையில் "விபரீத ராஜயோகத்தை "கொடுக்கும்.மேலும் சாதகரது சகோதர ஸ்தானம் பாதிக்கப்பட வாய்ப்பு உண்டு.சாதகர் வீரியம் மிக்கவராகவும் ,பலம்மிக்கவராகவும் இருப்பர்.
நான்காமிடத்தில் இருந்தால் தன் சுகம் தாய் சுகம் பாதிப்பதோடு வண்டி வாகனயோகமும் பாதிக்கப்படலாம்.கல்விநிலையில் தடை ஏற்படலாம்.
ஐந்தாமிடத்தில் இருந்தால் தனது புத்தியானது எதிர்மறையாக இருப்பதோடு புத்திரம் மற்றும் பூர்வ புண்ணிய ஸ்தானம் பாதிக்க வாய்ப்பு உண்டு.
ஆனால் அதேநேரத்தில் ஆறாமிடத்தில் ஆறாமாதிபதி வலுப்பெற்று அந்த இடத்தில் ராகு போன்ற அசயர்கள் வலுப்பெற்றிருந்தால் யாருக்கும் அஞ்சாத பலவானாக இருப்பான் .
ஏழாமிடத்தில் இருந்தால் மனைவி ஸ்தானம் பாதிக்கப்படலாம்.தாமத திருமணம் ஏற்படும்.
எட்டாமிடத்தில் இருந்தால் விபரீத ராஜயோகம் ஏற்படலாம்.எதிரியால் கண்டம் ஏற்பட வாய்ப்புண்டு.
ஒன்பதாமிடத்தில் இருந்தால் தந்தை ஸ்தானம் பாதிக்கப்படலாம்.தான தர்ம குணம் ஏற்படாது.பாக்கியம் தடைபடலாம்.
பத்தாமிடத்தில் இருந்தால் சிறந்த வழக்கறிகராக இருப்பான்.இதற்கு அந்த ஸ்தானமும் வலுப்பெற்றிருக்க வேண்டும்.மாறாக பலவீனப்பட்டால் அரசுக்கு விரோதமான தொழிலில் ஈடுபடுவான்.
பதினொறாமிடத்தில் ஆறாமாதிபதி இடம்பெற்றால் எதிரியால் லாபம் அடையலாம்.மூத்த சகோதரத்திற்கு பாதிப்பு ஏற்படலாம்.மறைமுக லாபம் பெறலாம்.
பணிரெண்டாமிடத்தில் ஆறுக்குடையவன் ஏறினால் மாளிகை போன்ற வீடு அமையும்.மேலும் விபரீத ராஜயோகம் ஏற்படலாம்.வெளிநாட்டு யோகம் உண்டு..
ஆறாமாதிபதி பணிரெண்டு ராசிகளில் அமரும்போது ஏற்படும் நன்மை தீமைகளைப் பார்த்தோம்.ஆனால் அதேநேரத்தில் ஆறாமதிபதி இருந்த ஸ்தானாதிபதி வலுப்பெற்று சுபர் பார்வை பெற்றிருப்பின் ஆறாமதிபதியால் ஏற்படும் பாதிப்பு குறைய வாய்ப்பு உண்டு.
நன்றி.வாழ்க நிறைவுடன் !

அன்புடன்
சோதிடர் ரவிச்சந்திரன்
M.SC,MA,BEd
Teacher & Astrologer
ஓம்சக்தி ஜோதிட நிலையம்
கறம்பக்குடி
புதுக்கோட்டை மாவட்டம்
செல் :97 151 89 647
Cell : 740 257 08 99
Whatsup no
97 151 89 647
97 151 89 647
(சோதிடம் போன் வழியாக பார்க்க விரும்புவோர் தொடர்பு கொள்ளவும்.தங்களது பிறந்ததேதி,நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை மேற்கண்ட எனது வாட்ஸ்அப் எண்ணிற்கு மெஸ்ஸேஸ் செய்து கட்டணம் செலுத்தும் விபரங்களை பெறவும் )
My email
masterastroravi@gmail.com
masterastroravi@gmail.com
My website address
AstroRavichandransevvai.blogspot.com
++++++++++++++++++++++++++++
No comments:
Post a Comment