கிரக பார்வையினால் உண்டாகும் மாற்றங்கள் - ( 2 )
செவ்வாய்பட்டிஸ்ரீபத்ரகாளியம்மன் துணை !
கிரக பார்வைகள் மனித வாழ்வில் உண்டாகும் மாற்றங்களை பற்றி தொடர் பதிவாக எழுதி வருகிறேன்.சோதிடம் என்பது மாய வித்தையல்ல இது அறிவியலின் ஒரு பிரிவு எனவும் ,மேலும் கணிதம் பிறந்ததே சோதிடத்திலிருந்துதான் என்பதை இன்றைய இளைஞர்களை புரிய வைத்து இக்கலை அவர்கள் அனைவரையும் சென்றடைய வைப்பதே எனது நோக்கம் ஆகும்.எனவே இப்பதிவை தாம் படிப்பதோடு மற்றவர்கள் பயன்பட பகிர்வதே எனக்கு நீங்கள் செய்யும் நன்றி கடன் ஆகும்.
சனி பகவானும் மற்றும் செவ்வாய் பகவானும் இணைந்தோ அல்லது தனித்தனியாகவோ பணிரெண்டு வீட்டையும் பார்ப்பதால் உண்டாகும் பலன்களை பார்ப்போம்.
லக்கனத்தையோ அல்லது லக்கன அதிபதியையோ பார்க்கும்போது சாதகர் கிரிமினலாக சிந்திக்க கூடியவராக மாற்றிவிடும்.சாதகரிடம் நல்ல தன்மைகள் குறைந்தும் அதே நேரத்தில் சாதகர் அசட்டு தைரியத்துடன் காணப்படுவார்.
இரண்டாமிடத்தை பார்க்கும்போது அவரது வாக்கில் ஒருவித பொய்மை தன்மையும் மற்றும் திருட்டுதனம் மிகுந்திருக்கும்.அவரது வாக்கில் சுத்தம் இருக்காது.கல்வியை பொருத்தவரை வழகறிஞராகலாம்.இவர் சாதகத்தில் தனாதிபதி பலப்படவில்லையெனில் கையில் சேர்க்கும் தனம் தங்காது.பிறரை ஏய்த்து பிழைப்பராக இருக்க வாய்ப்புண்டு.மேலும் குடும்ப வாழ்வில் ஈடுபடுவதில் தடையை உண்டாக்கும்.
(தனாதிபதி மற்றும் சுபர் பார்வை மற்றும் சேர்க்கையை பொறுத்து பலன் மாறுபடலாம் )
மூன்றாமிட பார்வையானது சகோதர தடையை தரலாம் அல்லது சகோதர ஒற்றுமையை குலக்கலாம்.காம கற்பனை ஸ்தானம் என்பதால் தவறான காம எண்ணத்தை உண்டாக்கும்.தவறான வழியில் பொருள் ஈட்டியாவது புகழ் பெற மனம் அலை பாயும்.தைரியம் மிக்கவன் ஆவார்.
நான்காமிட பார்வையானது அவனது மனதில் காம எண்ணங்கள் மிகும்.தன் சுகம் மற்றும் தாய் சுகத்தில் பாதிப்பை தரலாம்.சனி திசை செவ்வாய் புத்தியிலோ அல்லது செவ்வாய் திசை சனி புத்தியிலோ வாகனங்களில் செல்லும்போது எச்சரிக்கை அவசியம்.
ஐந்தாமிட பார்வையானது புத்திர தடையை உருவாக்கும்.பூர்வீகத்தில் வசிக்கும் யோகத்தை குறைக்கும்.சிலருக்கு இவ்விரு கிரகங்களின் தசையிலோ அல்லது புத்தியிலோ பூர்வீக சொத்தில் இழப்பு ஏற்படலாம்.
ஆறாமிட பார்வையானது எதிரியை வெல்லும் தைரியம் உண்டாக்கும்.
ஏழாமிட பார்வையானது திருமண தடையையோ அல்லது மனதிற்கு பிடிக்காத மனைவியோ உண்டாகலாம்.கூட்டு தொழில் ஆகாது.மனையில் இடைஞ்சல் உண்டாக்கலாம்.
எட்டாமி பார்வையானது சனிதிசை செவ்வாய் புத்தியிலோ அல்லது செவ்வாய் திசை சனி புத்தியிலோ எதிர்பாராத விபத்துக்கள் நடக்க வாய்ப்புகள் உண்டு.எனவே வாகனங்களில் செல்லும்போது அதன் திசை புத்திகளில் எச்சரிக்கையாக இருத்தல் அவசியமாகும்.
தேவையில்லாத அடிதடி மற்றும் வம்பு வழக்குகள் உருவாகும்.
ஒன்பதாமிட பார்வையானது ஒருவரை பெருந்தன்மை குணம் அற்றவராகவும் மற்றும் கஞ்சதனம் உடையவராகவும் மாற்றிவிடுகிறது.
பத்தாமிட பார்வையானது ஒருவரை கிரிமினல் தன்மை உடையவராகவும் மற்றும் தாம் செய்யும் தொழிலில் நேர்மை தன்மை அற்றவராகவும் மாற்றிவிடுகிறது.ஒரு சிலரை தலைசிறந்த கிரிமினல் வழக்கறிஞராக மாற்றவும் செய்கிறது.
பதினொறாமிடபார்வையானது ஒருவரை எந்த வழிமுறையை பின்பற்றியாவது லாபம் ஈட்டக்கூடியவராக மாற்றிவிடுகிறது.
பணிரெண்டாமிட பார்வையானது பிறர் மாதர்மீது காம சுகம் பெற விரும்புவராகவும்,அயன ,சயன சுகங்களில் குறைவு உடையவராக மாற்றிவிடுகிறது.
மேற்கண்ட பலன்கள் அனைத்தும் பொதுபலன்களே.சனி மற்றும் செவ்வாய் பார்வை பெறும் இடத்தின் அதிபதியின் வலு மற்றும் ஏனைய சுபகிரகங்களின் பார்வை இதுபோல பல காரணங்களினால் பலனில் மாறுபடலாம்.
நன்றி.தொடரும்...
(தங்களது குடும்ப அங்கத்தினர்களுக்கு போன் வழியாக சாதகபலன்,திருமணபொருத்தம் மற்றும் சாதகம் கணித்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெறலாம் கட்டணம் உண்டு.தங்களது பிறந்ததேதி,நேரம் மற்றும் இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் எண்
97 151 89 647 க்கு மெஸ்ஸேஸ் செய்யவும்)
97 151 89 647 க்கு மெஸ்ஸேஸ் செய்யவும்)
தொடர்புக்கு
செல்
740 257 08 99
97 151 89 647
செல்
740 257 08 99
97 151 89 647
அன்புடன்
சோதிடர்ரவிச்சந்திரன்
M.SC,MA,BEd,
சோதிட ஆராய்சியாளர்,
முதுநிலை வேதியியல் ஆசிரியர்,
வாழ்வியல் ஆலோசகர்,
ஓம்சக்தி ஜோதிட ஆனலைன் ஆலோசனை மையம்,
கறம்பக்குடி,புதுக்கோட்டை மாவட்டம்.
சோதிடர்ரவிச்சந்திரன்
M.SC,MA,BEd,
சோதிட ஆராய்சியாளர்,
முதுநிலை வேதியியல் ஆசிரியர்,
வாழ்வியல் ஆலோசகர்,
ஓம்சக்தி ஜோதிட ஆனலைன் ஆலோசனை மையம்,
கறம்பக்குடி,புதுக்கோட்டை மாவட்டம்.
My website .click hear
AstroRavichandransevvai.blogspot.com
************************************
No comments:
Post a Comment