Saturday, 25 November 2017

**யோனி பொருத்தம்--ஓர் ஆய்வு **

**யோனிப்பொருத்தம் -ஓர் ஆய்வு **

                                

கிரகங்கள் படுத்தும் பாடு- ( 183 )

செவ்வாய்பட்டி,  அருள்மிகு ஸ்ரீ பத்ரகாளியம்மன் துணை!

          இரு மனங்கள் இணையும் திருமணம் எனும் பந்தத்திற்க்கு பொருத்தம் பார்க்கும்போது தம்பதிகள் இருவரும் தாம்பத்ய உறவினை சமபோகமாக ஒருவரை ஒருவர் மனநிறைவினை தரக்கூடிய வகையில் தாம்பத்திய உறவு சுகமாக அவர்களுக்கு இடையில் இருக்குமா ? என்பதை அறிந்து கொள்ள "யோனி பொருத்தம் " எனும் ஒரு வித விவாகதசவித பொருத்தம் பார்க்கப்படுகிறது.

          இல்லற வாழ்வில் ஈடுபடும் தம்பதிகளுக்கு இடையே அவர்களது அந்தரங்க வாழ்வில் அவர்களுக்கு இடையே உடன்பாடும்,அன்னியோன்யமும் இல்லாதபோது அவர்களுக்கு இடையே மெல்ல ஒருவித பிரிவினை வர வாய்ப்புகள் உள்ளது.இதன் விளைவாக அவர்களுக்கு இடையே மன அடிப்படையில்  சிறு விரிசல் வந்து பிரிவினையை நோக்கியோ அல்லது தடம் மாறி செல்வதற்கான வாய்ப்புகளோ உள்ளது.

        இன்றைய நவ நாகரிக அபரிதமான தொழில்நுட்ப வளர்ச்சியில் மனம் அடக்க தெரியவில்லை எனில் பிரச்சினைகள் விபரீதத்திற்க்கு இழுத்து சென்றுவிடுவதால் யோனிபொருத்தம் கட்டாயம் பார்க்கப்பட வேண்டிய பொருத்தங்களில் ஒன்றாகும்.

                         

    யோனி பொருத்தத்திற்க்கு ஒவ்வொரு நட்சத்திற்க்குரிய விலங்குகளின் யோனிகளை ஓப்பிட்டு பார்த்து பொருத்தம் செய்யப்படுகிறது.

    யோனி பொருத்தம் இல்லாதபட்சத்தில் அவர்களது சாதக கட்டத்தில்  தாம்பத்திய உறவில் திருப்தி அடையக்கூடிய கிரகநிலைகள் இருக்கும்பட்சத்தில் விவாகம் செய்து கொள்ளலாம்.

எலிக்கு --பூணை ,பாம்பு
யானைக்கு--சிங்கம்,மனிதர்
புலிக்கு--மான்,பசு,நாய்,எருமைக்கடா
குரங்குக்கு--ஆடு
பாம்புக்கு--கீரி,ஆடு
பூணைக்கு--நாய்,புலி

மேற்கண்டவை ஒன்றுக்கொன்று பகையோனிகள் ஆகும்.

  இது போன்ற அமைப்புகள் தம்பதிகள் இருவருக்கும் நட்சத்திர பொருத்தத்தில் இருந்தால் யோனி பொருத்தம் இல்லை எனலாம்.

     காரணத்தை விளக்க முற்பட இயற்கையில் எலி ,பூணைகளுக்கு இடையே ஒருவித பகைமை தனமை இருக்கும் என்பதால் இவ்வித அமைப்பு  உடைய தம்பதிகளை திருமன பந்தத்தில் இணைத்தால் வாழ்க்கை பயணம் சிறக்காது.

     இதேபோல புலி உள்ளவர்களுக்கு ,மானை மிருகமாக கொண்ட நட்சத்திரத்தினை இணை சேர்க்ககூடாது. புலியானது மானை எளிதில் வேட்டையாடிவிடும். அவர்களுக்கு இடையே தாம்பத்ய திருப்தி ஏற்படாது என்பதால் பொருத்தம் போடக்கூடாது என முன்னோர்கள் வகுத்து உள்ளனர்.

      இவ்வாறு நட்சத்திர அடிப்படையில் பொருத்தம் இல்லாத தம்பதிகளை  கட்ட அடிப்படையில் நன்கு ஆராய்ந்து பார்க்கும்போது பாதிப்பு வராது எனும் சூழலில் விவாகம் செய்யலாம்.

       கட்ட அடிப்படையில் தம்பதிகளது சாதக கட்டத்தில் காமக்காரகன் செவ்வாய்,சுக்கிரன் மற்றும் காமநிலைகளை கண்டறிய உதவும் மூன்று, நான்கு,ஐந்து,ஏழு மற்றும் பணிரெண்டாம் இட அதிபதிகளை ஆராய்ந்து பார்த்து அவை சிறப்பாக இருக்கும் பட்சத்தில் யோனி பொருத்தம் இல்லாத சூழலிலும் அவர்கள் விவாகம் செய்து கொள்ள பரிந்துரைக்கலாம்.

                            

       காமத்தின் களம் மனமே ஆகும்.மனம் செய்யும் கற்பனைகளைப்போல உண்மைநிலையில் அவ்விதம் அமைவதில்லை.எனவே மனோகாரகன் சந்திரன் பலமாக அமையும் பட்சத்தில் தன்னை கட்டுபடுத்தி ஆளும் தன்மை படைத்தவர்களாக இருப்பர்.

  ஒருவரது காமத்திற்க்கு நல்ல வடிகாலாக அமையும் வீரியகாரகன் எனப்படும்  செவ்வாய்பகவானின் பலம் அவசியம்.செவ்வாய் இரத்தத்திற்க்கும்,இரத்தத்தில் உள்ள எலும்பு மஞ்சைகளுக்கு மற்றும் விந்து,அண்ட அணுக்களுக்கும் காரகர் ஆவார்.

  இந்த காம காரகர் செவ்வாய்பகவானைப்போலவே அந்தரங்க இன்பங்களை அள்ளிதரும் மன்மதன் சுக்கிரபகவான் ஆவார்.

        சாதக கட்டத்தில் சுபர் பார்வை பெறாத சுக்கிர பகவான் உடன் சனி அல்லது ராகு சேர்க்கை பெற்ற அமைப்பை பெற்றவர்கள்,

         இதேபோல சுபர் பார்வை அற்ற செவ்வாய் பகவான் உடன் ராகு அல்லது சனி சேர்ந்திருக்கும் அமைப்பை பெற்றவர்கள்,

          சுக்கிரன் மற்றும் செவ்வாய் பகவானை சாதக கட்டத்தில் நான்கு மற்றும் பணிரெண்டாம் இடத்தில் பெற்பவர்கள்,

      சனி,செவ்வாய், சுக்கிரன் மற்றும் ராகு சேர்க்கை பெற்று இருப்பவர்கள்,

     சந்திரன், சுக்கிரன் சேர்க்கை பெற்ற அமைப்பை பெற்றவர்கள்,

இதுபோன்ற மேற்கண்ட அமைப்பை பெற்றவர்களுக்கு கட்டாயம் யோனி பொருத்தம் அவசியம் ஆகும்.

நன்றி!

(தங்களது சாதக பலன், திருமணபொருத்தம் மற்றும் ஜெனன சாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாகவே நீங்கள் எந்த நாட்டில் இருந்தாலும் பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ்அப் எண்ணிற்க்கு மெஸ்ஸேஸ் செய்து கட்டணம் செலுத்தும் விபரம் பெறலாம்.)

தொடர்புக்கு

  வாட்ஸ்அப்
     97 151 89 647

        செல்
   740 257 08 99
      97 151 89 647

                             
அன்புடன்
  சோதிடர் ரவிச்சந்திரன்
      M.Sc ,MA ,BEd,
  ஆசிரியர் &  சோதிட ஆராய்ச்சியாளர்,
  ஓம்சக்தி சோதிட ஆன்லைன் ஆலோசனை மையம்,
கறம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.

No comments: