Saturday, 4 November 2017

சாதகத்தில் நடைபெறும் திசையானது உங்களுக்கு யோகமாக அமைய ?

சாதகத்தில் நடைபெறும் திசையானது உங்களுக்கு யோகமாக அமைய ?

                                       
                               
செவ்வாய்ப்பட்டி
  - ஸ்ரீ பத்ரகாளி அம்மன் துணை!

கிரகங்கள் படுத்தும் பாடு-(179)

         சாதகத்தில் லக்கனமும்,ராசியும் ஒன்றாக பெற்றவர்கள் பாக்கியவான்கள் எனினும் இவர்களுக்கு வழிநடத்த கூடிய திசையானது லக்கனத்திற்க்கு இருக்கக்கூடிய அதே ஸ்தானமே ராசிக்கும் வரும் என்பதால் ,  சுப ஸ்தானமாக இருக்கும பட்சத்தில் எதிர்பார்ப்பதைவிட அதிக நன்மையை தரும்.சுப ஸ்தானமாக இல்லாத பட்சத்தில் எதிர்பார்ப்பதைவிட கூடுதலான இன்னல்களை தரக்கூடிய வாய்ப்பாக அமைகிறது.

          அதேநேரத்தில் லக்கனமும்,ராசியினையும் வெவ்வேறாக பெற்றவர்கள் நடைபெறும் திசையானது லக்கனத்திற்க்கு ஆறு அல்லது எட்டு போன்ற மறைவு ஸ்தானமாக இருந்தாலும், ராசியையே லக்கனமாக கொண்டு நடைபெறும் திசைக்கான ஸ்தானத்தை உற்றுநோக்கி பார்க்கும்போது அவை சுப ஸ்தானமாக இருக்க வாய்ப்பு உண்டு.

         எனவே நடைபெறும் திசையானது லக்கனத்தின் அடிப்படையில் நன்மையை தராத பட்சத்தில்,ராசிக்கு நன்மையை தரும் வாய்ப்பு இருப்பின் அத்திசையானது ஒரளவு நன்மையை தரக்கூடிய திசையாக அமையும்.

            நடைபெறும் திசையானது லக்கனம் மற்றும் ராசி இரண்டிற்க்கும் சுபமாக இருப்பின் நடைபெறும் திசையானது யோக பலன்களை கூடுதலாக தர வாய்ப்பு உண்டு.

            லக்கனம் மற்றும் ராசி இரண்டிற்க்கும் பெரும்பாலும் கெடுதலான ஸ்தானமாக நடைபெறும் திசையானது அமைய வாய்ப்பு இல்லை என்பதால் லக்கனத்தையும்,ராசியையும் வெவ்வேறாக பெற்றவர்கள் யோகசாலிகள் ஆவார்.

           இவை மட்டுமல்லால் நடைபெறும் திசையானது யோக பலனைத்தர அவை லக்கனாதிபதிக்கு நட்பாக அமைய வேண்டும்.உதாரணமாக ரிஷபம்,துலாம் லக்கனத்திற்க்கு வரக்கூடிய குரு திசை,சிம்ம லக்கனத்திற்க்கு வரக்கூடிய சனிதிசை ,மேஷ,விருட்சக லக்கனத்திற்க்கு வரக்கூடிய சனி திசை இவையெல்லாம் லக்கனாதிபதிக்கு பகையாக இருப்பதால் அதன் திசை காலங்களில் நன்மையை தரக்கூடிய வாய்ப்பு குறைவு.

         நடைபெறும் திசையானது லக்கனாதிபதியானது இருக்கும் இடத்திலிருந்து கேந்திர ,திரிகோணங்களில் அமரும் பட்சத்தில் யோக பலன்களை அதிகமாக தரும்.மாறாக மறைவிட ஸ்தானமாக இருப்பின் யோக பலன்கள் மட்டுப்படுத்தப்படலாம்.

          நடைபெறும் திசையானது லக்கனாதிபதிக்கு நட்பாக அமைந்து அவை இடம்பெறும் இடத்திற்க்கு கேந்திர,திரிகோணமாக அமைந்து பாவர் கலப்பின்றி இயற்கை சுபர் நட்சத்திர சாரம் மற்றும் பார்வையைப்பெற்று லக்கனத்திற்க்கும் கேந்திர ,திரிகோணமாக அமைய பலவித யோக பலன்களை காரக மற்றும் ஸ்தான பலத்திற்க்கு ஏற்ப அள்ளி தரும்.

           சுப கிரகமாக இருப்பின் நற்பலனை தரும் எனவும் , பாவ கிரகமாக இருப்பின் அசுப பலனை தரும் எனவும் நாமே ஒரு கருதுகோள்களை உருவாக்கி கொள்ளக்கூடாது.உதாரணமாக இயற்க்கை சுப கிரகமாகவே இருந்தாலும் துலாம் ராசிக்கு குருபகவானும்,மேஷ ராசிக்கு புதன் பகவானும் கெடு பலன்களையே தரும் . ஏனெனில் இவ்விரு கிரகங்களும் இயற்க்கை சுப கிரகமாகவே இருந்தாலும் அவை அவ்விரு ராசிகளுக்கும்  மூன்று,ஆறுக்குடைய பாவ ஸ்தானமாக இருப்பதால் அவை அவ்விரு ராசிகளுக்கு நன்மை பலன்களை தரப்போவதில்லை.

              இதேபோல துலாம் ராசிக்கு சனிபகவான் பாவ கிரகமாக இருந்தாலும் அக்கிரக திசை காலங்களில் யோக பலன்களை அள்ளி தரும்.காரணம் அவை சுப ஸ்தானமாக இருப்பதால் ஆகும்.

               நடைபெறும் திசையானது மேற்கூறிய பல வகையில் பலன்பெற்றும் ஒரு சிலருக்கு அக்கிரக திசையானது நன்மையை தரவில்லை என பலர் வருத்தப்படலாம்.இதற்க்கான காரணம் என்னவாக இருக்கலாம் ? என பலவாறு எனது சோதிட அனுபவத்தில்  ஆராய்ந்து பார்த்தால் அவை கீழ்கண்ட காரணங்களினாலும் பலன் இழக்கலாம்.

          ராசியில் மேற்கண்ட வகையில் பலம் பெற்று இருந்தாலும் பாவம் அல்லது அம்ச அடிப்படையில் இடமபெறும் இடத்தினை பொறுத்தும் பலம் இழக்கலாம்.

             சில நேரங்களில் அக்கிரகங்கள் பெறும் நட்சத்திர அதிபதியானது நடைபெறும் திசை நாதனுக்கு நட்பாகவும்,நல்ல ஸ்தான பலத்தையும் பெற்று பாவர் கலப்பின்றி சுபர் பார்வை பெற்று அவை அம்சத்திலும் பலமடைந்த நிலையில் இருக்கவேண்டும்.

          நடைபெறும் திசை நாதன் ராசியில் பலம்பெற்று அம்சத்தில் பலம் இழந்த சூழலிலும் அத்திசையானது யோக பலன்களை எதிர் பார்த்த அளவு தருவதில்லை.

         ராசியில் உச்சமாக இருந்தாலும் அவை குறிப்பிட்ட பாகை வரையே உச்ச பலத்தினை தரும்.அந்த குறிப்பிட்ட பாகையினை தாண்டிய கிரகங்கள் சாதாரண பலத்தினையே பெற்றிருக்கும்.

         ஒரு கிரகம் ராசியில் உச்சமே பெற்றிருந்தாலும் அவை வக்கிரம் பெற்றிருப்பின் அவை உச்ச பலனிற்க்கு பதிலாக நீச பலனை தரும்.எனவே ஒரு கிரகம் மேலோட்டமாக பார்க்குமபோது உச்ச பலம் பெற்றிருப்பதுபோல தோன்றினாலும் மேற்கூரிய காரணங்களினாலும் அத்திசையானது யோக பலன்களை தராமல் போவதற்க்கு வாய்ப்பு உண்டு.

        ஒரு குறிப்பிட்ட பாகைக்குள் சூரியபகவனோடு இணைந்துள்ள கிரகங்கள் அஸ்தங்கம் அடையக்கூடிய வாய்ப்பு உண்டு என்பதால் அஸ்தங்கம் அடைந்த கிரகங்கள் யோக பலன்கள் குறைவு உண்டாக வாய்ப்பு உண்டு என்பதால் இவஐ போன்றவற்றை ஆராய்ந்து பார்க்க வேண்டும்.

    செவ்வாய் பகவான் சூரியனிடமிருந்து முன்பின்னாக 17 பாகைக்குள்ளும்,புதன் பகவான் 11 பாகைக்குள்ளும்,குருபகவான் 15 பாகைக்குள்ளும், சுக்கிரன் பகவான் 9 பாகைக்குள்ளும், சனிபகவான் 17 பாகைக்குள்ளும் அஸ்தங்கம் அடைகிறது.

இவ்வாறாக பலவகையில் ஆராய்ந்து பார்த்து நடைபெறும் திசையானது யோக பலன்களை கொடுக்குமா ?கொடுக்காதா ? என சாதகருக்கு பலன்கள் அளிக்கப்படவேண்டும்.
அடுத்த பதிவில் வேறு ஒரு தலைப்பில் உங்களை சந்திக்கிறேன்.

(தங்களது சாதக பலன், திருமணபொருத்தம் மற்றும் ஜெனன சாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக நீங்கள் எந்த நாட்டில் இருந்தாலும் பெற , தங்களது பிறந்த தேதி,பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது 
வாட்ஸ் ஆ ப் எண்ணிற்க்கு மெஸ்ஸேஸ் செய்து கட்டணம் செலுத்தும் விவரம் பெறலாம்)

தொடர்பு கொள்ள

  வாடஸ் ஆப் எண்
    97 151 89 647

      செல்
   740 257 08 99
       97 151 89 647

My Email
masterastroravi@gmail.com

My blogspot
  AstroRavichandransevvai.blogspot.com.

அன்புடன்

  சோதிடர் ரவிச்சந்திரன்
      சோதிட ஆராய்ச்சியாளர்.
ஓம்சக்தி ஆனலைன் சோதிட ஆலோசனை மையம்,
கறம்பக்குடி,புதுக்கோட்டை மாவட்டம்,
தமிழ்நாடு,இந்தியா.
...........

No comments: