கிரகங்கள் படுத்தும் பாடு-. (பகுதி -3)
செவ்வாய்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!
மனிதனுக்கு மனிதன் வாழ்வியல் நிலை வேறுபடுவதற்கான காரண காரியங்களை ஆய்வு செய்து பார்க்கும் போது ஜோதிட அடிப்படையில்
நவ கிரகங்கள் பன்னிரெண்டு பாவகங்களில் எப்படி அமைந்து உள்ளது,கிரகங்கள் இருக்கும் வீடு , சேர்க்கை பெறும் கிரகங்கள் , பார்வை பெறும் கிரகங்கள் , கிரகங்கள் பெற்ற நட்சத்திர சாரம், கோச்சார நிலை மற்றும் நடக்கும் தசா புத்திகள் ஆகிய பலவற்றை சார்ந்து அமைகிறது.
எல்லாவற்றிற்கும் மேலாக முற்பிறவியில் நாம் செய்த நல்வினை மற்றும் தீவினைகளுக்கு ஏற்பவே இந்தப் பிறப்பில் பிறவியாக எந்த இடத்தில் எந்த பெற்றோருக்கு எவ்வித நிலையில் பிறக்கின்றோம் என்பதை காலம் முடிவு செய்கிறது.
ஒன்பது கிரகங்கள் இயல்பாகவே கொண்ட பலன்களை காரகத்துவம் 'என்று அழைக்கிறோம்.இவை மாறாத ஸ்திர தன்மை கொண்டது.ஒரு கிரகம் தரும் காரக பலன்கள் வாழ்நாள் முழுவதும் தரக்கூடியது.அந்த கிரகம் இருக்கும் வீடு , சேர்க்கை மற்றும் பார்வை செய்யும் தன்மைக்கு ஏற்ப காரகத்துவ பலன்களை வாழ்நாள் முழுவதும் தரக்கூடிய நிலையில் இருக்கும்.
ஒருவர் ஜாதகத்தில் லக்கனத்தை அடிப்படையாக அந்த கிரகங்கள் இடம் பெறும் இடத்தை வைத்து அந்த கிரகங்கள் தரும் பலனை ஆதிபத்தியம் என்று அழைக்கிறோம்.இந்த ஆதிபத்தியம் தரும் பலன்கள் அந்த கிரகங்கள் தசை நடத்தும் போது மட்டுமே தருகிறது.
ஒரு கிரகம் பெறும் ஆதிபத்தியம் கீழ் கண்ட வகைகளில் எவ்வகை என ஆராய்ந்து அறியப்பட வேண்டும்.
1) கேந்திர ஸ்தானம் 1,4,7,10
2) திரி கோணங்கள் 1,5,9
3) மறைவிட ஸ்தானம்: 3,6,8,12
4) உப ஜெய ஸ்தானம் 3,6,10,11
5) காம திரிகோணம்; 3,7,12
6) பண பர ஸ்தானம் ;2,5,8,11
6) அபோக்கிலியம் : 3,6,9,12
போன்றவை போதுமான தெரிந்து கொள்ள வேண்டியவை ஆகும்.
லக்கன யோகர்கள் திரிகோண ஸ்தானத்தில் அமரும் போது ஜாதகருக்கு யோகத்தை அள்ளித் தருகிறது.பாவர்கள் கேந்திரத்தில் அமரும் போது நல்ல பலனைத் தருகிறது.சில நேரங்களில் லக்கன அவ யோக கிரகங்கள் மற்றும் இயற்கை பாவ கிரகங்கள் உப ஜெய ஸ்தானமான மூன்று, ஆறு பத்து மற்றும் பதினொன்றில் நட்பு நிலையில் அமரும் போது அதன் தசையில் யோகத்தை தருகிறது.
சில நேரங்களில் லக்கன அவ யோக தசைகள் மற்றும் பாவ கிரக தசைகள் எந்த இடத்தில் இருந்தாலும் நல்ல பலனைத் தர வேண்டுமாயின் அந்த கிரகம் இயற்கை சுப கிரகமான குரு, வளர்பிறைச் சந்திரன் தனித்த புதன் மற்றும் சுக்கிரன் ஆகிய தொடர்பை பெற்ற நிலையில் நல்ல பலனைத் தருகிறது.
ஒரு மனிதன் இப்புவியில் பிறப்பாக பிறப்பு எடுக்கும் அந்த நேரத்தில் ஜாதக கட்டத்தில் உள்ள கிரக நிலைகளும், தொடர்ந்து நடக்கும் தசாபுத்தி மற்றும் கோச்சார பலன்கள் ஆகிய மூன்றையும் பொறுத்து மனித வாழ்வின் நிலை அமைகிறது.
ஒரு மனிதன் எவ்வளவு கஷ்டங்கள் வந்தாலும் மனம் தளராமல் தாக்கு பிடித்து எதிர் நீச்சல் போட்டு முன்னேறுவதற்கும் அதே போல் யோகங்கள் வந்தாலும் அதை சந்தோஷமாக முழுவதும் அனுபவிப்பதற்கும் லக்னம் மற்றும் லக்கனாதிபதியின் வலிமையை பொறுத்து அமைகிறது.
சில யோக ஜாதகங்களை பார்க்கும் போது லக்கன பகை கிரகங்கள் ஒன்றை ஒன்று தொடர்பு கொண்ட நிலையிலும் மற்றும் யோக கிரகங்கள் ஒன்றை ஒன்று தொடர்பு கொண்ட நிலையிலும் இருக்கும்.இதனால் லக்கன யோக கிரகங்கள் பங்கப்படாமல் ஒன்றை ஒன்று பார்வை அல்லது சேர்க்கை பெற்ற நிலையில் இருந்து தொடர்ந்து லக்கன யோக கிரக தசைகள் நடந்து கொண்டு இருக்கும்.
சிலர் பிறப்பிலிருந்து கஷ்டப்படும் ஜாதகங்களை ஆய்வு செய்து பார்க்கும் போது லக்கன யோகர்கள் பாவ அல்லது பகை கிரக தொடர்பையும் பெற்ற நிலையில் தொடர்ந்து பகை அல்லது பாவ கிரக தொடர்பை பெற்ற நிலையில் தொடர்ந்து அவ யோக தசைகள் நடப்பில் இருக்கும்.இதை தாங்கக்கூடிய லக்கனாதிபாதியும் பலம் இழந்து காணப்படும்
நன்றி
வாட்ஸ் அப் & செல் & கூகுள் பே
097151 89647
மற்றொரு செல்; 7402570899
Email masterastroravi@gmail.com
(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)
அன்புடன்
சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்
M.Sc,M.A,BEd
ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர், ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கறம்பக்குடி புதுக்கோட்டை மாவட்டம்.
No comments:
Post a Comment