Wednesday, 5 July 2023

கிரகங்கள் படுத்தும் பாடு-பகுதி-(1)

 கிரகங்கள் படுத்தும் பாடு -பகுதி-1)




செவ்வாய்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!


   மனித வாழ்வினை வழி நடத்தி செல்வதில் கிரகங்கள் பங்கு அலாதியானது.


    ஒன்பது கிரகங்கள்,இருபத்து ஏழு நட்சத்திரங்கள் மற்றும் பன்னிரெண்டு ராசிகள் இவைகள் மூன்றும் ஒருங்கிணைந்த நிலையில் 

ராசி கட்டத்தில் போடும் டிசைன்கள் மனித வாழ்வினை கட்டமைக்கிறது.


  நவ கிரகங்களில் சூரியன் மற்றும் சந்திரன் ஒளி கிரகங்கள் என்று அழைக்கப்படுகிறது.ஒரு ஜாதகருக்கு  இவையே அப்பா மற்றும் அம்மாவாக செயல்படும் காரக தன்மையை பெற்ற கிரகங்கள் ஆகும்.


  ஒரு ஜாதகரை வழி நடத்தி செல்லும் பாவகமாக செயல்படுவது உயிர் அல்லது விதி என்று அழைக்கப்படும் லக்கனம் மற்றும் உடல் அல்லது மதி என்று அழைக்கப்படும் ராசி ஆகிய இரண்டிற்கும் காரக கிரகமாக செயல் படுவது ஒளி கிரகங்களான  சூரியன் மற்றும் சந்திரன் ஆகும்.ஆம் சூரியன் பகவானே லக்கனத்திற்கு காரகன் ஆவார்.சந்திரன் பகவான் இருக்கும் வீடே ராசியாக கருதப்படுகிறது.


  சூரியன் இருக்கும் இடத்தை லக்கனமாக கொண்டும் ஜாதக பலன் கணிக்கப்படுகிறது.இந்த அமைப்பிற்கு "கதி" என்று அழைக்கப்படுகிறது.இம்முறை மேலை நாட்டு ஜோதிடத்தில் இடம் பெறுகிறது.


 சூரியன் பகவானை தந்தை ஸ்தானமான ஒன்பதாம் இடத்திற்கு காரகராக செயல்படுகிறார்.சந்திரன் பகவான் தாய் ஸ்தானமான நான்காம் இடத்திற்கு காரகர் ஆவார்.


  சூரியன் அல்லது சந்திரன் உடன் நட்பு கிரகங்களான குரு,புதன் , செவ்வாய்  சேர்க்கை பெற அல்லது பார்வை செய்ய அக் கிரகங்கள் பலப்படுகிறது.பாவ கிரகமான சனி, அல்லது ராகு சேர்க்கை அல்லது பார்வை பெற பலம் இழக்கிறது.பாவத்துவமடைகிறது .


  எவர் ஒருவர்  ஜாதகத்தில் 

சூரியன் மற்றும் சந்திரன் ஆகிய இரண்டு ஒளி கிரகங்கள் பலமடைந்து நிற்கும் ஜாதக அமைப்பு பெற்றவர்கள் ஆட்சி செய்யும் அதிகாரம் மற்றும் அதிகாரம் செய்யும் வேலையில் அமர வைக்கும்.குறிப்பாக பொளர்ணமி யோகத்தில் பிறந்தவர்கள் எனில் நிச்சயமாக உயர் தன்மை உடையவராக மற்றும் தன்னை சுற்றி நேர்மறை அலை பரவி கொண்டு இருக்கும்.


 உதாரணமாக விருச்சிகம் லக்கினத்தில் பிறந்தவர்கள்


 சித்திரை பொளர்ணமி 


மேஷத்தில் சூரியன்,   துலாத்தில் சந்திரன் சித்திரை நட்சத்திரத்தில்) ,


   கார்த்திகை தீபத்தில் பிறந்தவர்கள்


         ரிஷபத்தில் சந்திரன்,-ரோகினி நட்சத்திரம்¡ கார்த்திகை மாதம் சூரியன் விருச்சிகம் லக்கினத்தில் 


   ஆவணி அவிட்டத்தில் பிறந்தவர்கள்


     சிம்மம் வீட்டில் சூரியன் மற்றும் கும்பம் ராசி அவிட்டம் நட்சத்திரத்தில் 


தை பூசத்தில் பிறந்தவர்கள் 


தை பூசம் பிறந்தவர்கள் (கடகத்தில் சந்திரன் பூசம் நட்சத்திரம் மற்றும் தை மாதம் மகர வீட்டில் சூரியன் பகவான்) 


 மாசி மகத்தில் பிறந்தவர்கள்


    சிம்மம் ராசியில் மகம் நட்சத்திரத்தில் சந்திரன் மற்றும் சூரியன் மாசி மாதம் கும்பத்தில்


பங்குனி உத்திரத்தில்


  மீனம் வீட்டில் சூரியன் மற்றும் உத்திரம் நட்சத்திரத்தில் கன்னி ராசியில் சூரியன்


  ஆக விருச்சக லக்னத்தில் பௌர்ணமி திதியில் பிறப்பவர்கள் தர்மா கர்மாதிபதி யோகத்தையும் பெற்றவர்களாக திகழ்கிறார்கள்.அதாவது ஒன்பதாம் இட அதிபதி -தர்ம அதிபதி மற்றும் பத்தாம் இட அதிபதி -கர்ம அதிபதி

ஆக ஒன்பதாம் மற்றும் பத்தாம் இட அதிபதிகள் சம சப்தம பார்வை தர்ம-கர்மாதிபதி யோகத்தையும் மற்றும் பொளர்ணமி யோகத்தையும் ஒருங்கே பெற்ற நிலையில் சூரியன் தசை அல்லது சந்திரன் தசை நடப்பில் வரக்கூடிய காலங்களில் மிகுந்த யோகத்தை பெற்ற ஜாதகமாக விளங்குகிறது.


  ஒரு சிலர் பௌர்ணமி காலத்தில் பிறந்தும் மிகுந்த அளவு ஜொலிக்க இயலாமல் போவதற்கு காரணம் அந்த பௌர்ணமி காலங்களில் சந்திர கிரகணம் உண்டாவது காரணமாக அமைகிறது. 


   பொளர்ணமி காலங்களில் சந்திரன் உடன்  ராகு சேர்ந்து சூரியனுடன் கேது  எட்டு  பாகைக்குள்ளாக நெருக்கமாக இணையும்  தருணத்தில் சந்திர கிரகணம் உருவாகிறது.


  சந்திர கிரகணம் என்பது சூரியன் , புவி  மற்றும் சந்திரன் ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும்போது வரும்பொழுது உண்டாகிறது.இங்கு நிழல் கிரகங்களால் சந்திரன் ஒளியானது சில குறிப்பிட்ட நேரத்திற்கு புவியில் விழ விடாமல் ஒளி மறைப்பு செய்கிறது.இந்த அமைப்பில் பிறந்தவர்கள் பொளர்ணமி யோக பலனை முற்றிலும் பெற இயலாமல் போய் விடுகிறது.இதுவே சுபத்துவ படிநிலை ஆகும்.


 இந்த ஒளி மறைப்பு முழுவதும் நடைபெற சந்திரன் உடன் ராகு இணைந்து சூரியன் உடன் கேது இணையும்போது உண்டாகிறது.சில நேரங்களில் சந்திரன் உடன் கேது இணைந்து சூரியன் உடன் ராகு இணைந்த சந்திரன் கிரகணம் பகுதி அளவு சந்திர கிரகணம் ஆகும்.இவை பகுதியாளவு ஒளி மறைப்பு செய்கிறது.கடந்த மே ஐந்து 2023 ல் ஏற்பட்ட பகுதி அளவு சந்திர கிரகணம் ஆகும்.இந்த அமைப்பில் பகுதி அளவு பொளர்ணமி யோக பலனை அடைவார்கள்.


  இவை தவிர பொளர்ணமி யோகத்தில் பிறந்தும் அந்த யோக பலனை முற்றிலும் அனுபவிக்க இயலாமல் போவதற்கு பொளர்ணமி நேரத்தில் சூரியன் உடன் அல்லது சந்திரன் உடன் பாவ கிரகமான சனி மற்றும் செவ்வாய் நெருக்கமாக இணைந்த நிலையில் ஒளி கிரகமான சந்திரன் உடன் இணைந்த நிலையிலும் ,தனது சம சப்தம பார்வையால் ஏழாம் இடத்தில் உள்ள சூரியனை பார்த்து பார்வை செய்து பாவத்துவம் அடைய செய்ததில் மிகுந்த பாவத்துடன் அடைகிறது.


    சூரிய அல்லது சந்திரன் தசையில் தாய் அல்லது தந்தைக்கு ஆகாத நிலை அல்லது கர்மம் செய்யும் அமைப்பு உண்டாகிறது.இந்த அமைப்பில் குரு , புதன் மற்றும் சுக்கிரன் தொடர்பு பார்வை அல்லது சேர்க்கை நிலையில் இழந்த வலிமையை ஒரளவு மீண்டும் பெற்று மீண்டும் ஒரளவு நல்ல பலனைத் தரும் நிலை அடைகின்றது.


  ஒளி கிரகங்களான  சூரிய பகவானை மற்றும் ஒரு ஒளி கிரகமான சந்திரன் பகவான் சூரியனை 12 பாகைக்குள் நெருக்கமாக நெருங்கும் போது அமாவாசை உண்டாகிறது. சூரியனும் சந்திரனும் தனது ஒளியை இழக்கிறது.


  அமாவாசை அமைப்பில் பிறந்த ஜாதகத்தில் ராகு அல்லது கேது இணைந்த நிலையில் சூரிய கிரகணம் உண்டாகிறது.இந்த அமைப்பில் பிறந்த நிலையில் பிறந்த குழந்தை தாய் மற்றும் தந்தை பாதிக்கப்படுவதுடன் மனநிலையும் பாதிக்கப்பட்ட நிலைக்கு உட்படுவார்கள்.இந்த அமைப்பை சனி பார்த்த நிலையில் சூரிய அல்லது சந்திரன் தசை வரக்கூடிய காலங்களில் தாய் மற்றும் தந்தை இழக்க கூடிய நிலை ஏற்படுகின்றது.இந்த பலன் சில நேரங்களில் மாறுபாட்டால் இயற்கை சுப கிரகமான குரு பகவான் பார்த்த நிலையில் சுபத்துவமே மேலோங்கிய நிலை என்பதைப் பொறுத்து பலன் மாறுபடுகிறது.


.இந்த சூரியன் கிரகணம் சூரிய ஒளியை முழு மறைப்பு செய்ய சூரியன் மற்றும் சந்திரன் உடன் ராகு இணைந்த நிலையில் மட்டுமே உண்டாகிறது.


      சூரியன் மற்றும் சந்திரன் உடன் கேது இணைந்த நிலையில் முழு சூரிய ஒளி மறைப்பு நடைபெறாது.இந்த நிலையில் பிறந்தவர்கள் பெருமளவு  பாதிப்புக்கு உள்ளாவதில்லை.


  ஒரு நபர் சித்திரை, வைகாசி,ஆடி மற்றும் ஆவணி மாதத்தில் அமாவாசையில் பிறந்தவர்கள் பெருமளவு பாதிப்புக்கு உள்ளாவதில்லை. இணைந்த சூரியன் அல்லது சந்திரன்  ஏதாவது ஒரு கிரகம் ஸ்தான வலிமையை பெற்றிருப்பதை காரணமாகும்.


 சித்திரை மாதத்தில் சூரியன் உச்சம், வைகாசி மாதத்தில் சந்திரன் உச்சம் ,

ஆடி மாதத்தில் சந்திரன் ஆட்சி மற்றும் ஆவணி மாதத்தில் சூரியன் ஆட்சி போன்ற வகையில் ஸ்தான வலிமையை பெற்று இருப்பதால் இழந்த ஒளி அளவை மீண்டும் பெறும் அமைப்பை பெறுகிறது.


தொடரும்...


நன்றி.


வாட்ஸ் அப் & கூகுள் பே & செல்

  097151 89647 


மற்றொரு செல்; 7402570899


Email masterastroravi@gmail.com


(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)



அன்புடன்


 சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன் 

      M.SC,M.A,BEd

ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர், ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.

No comments: