ஒருவர் ஜாதகத்தில் சனி, செவ்வாய், ராகு மற்றும் கேது பகவான்.
செவ்வாய்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!
ஒருவர் ஜாதகத்தில் இயற்கை பாவ கிரகமான சனி, செவ்வாய் , ராகு மற்றும் கேது பகவான் ஆகிய நால்வரின் இருப்பு மிகவும் முக்கியமான ஒன்றாகும்.இந்த நான்கு கிரகங்களும் எந்த ஒரு ஸ்தானத்தில் நின்றாலும் அல்லது எந்த ஒரு கிரகங்கள் உடன் எட்டு பாகைக்குள்ளாக நெருக்கமாக இணைந்து நின்றாலும் நிற்கின்ற பாவத்தையும் மற்றும் இணைந்த கிரகங்களையும் பாவத்துவம் ஆக்கி விடுகிறது.வேறு வகையில் இயற்கை சுப கிரக தொடர்பு பெறாத பட்சத்தில் இணைந்த கிரகங்கள் தனது தசையில் லக்கன ஆதிபத்தியத்தை பொறுத்து கெடு பலனை ஜாதகருக்கு கொடுக்கிறது.இதில் கேது பகவான் மட்டுமே சற்று விதி விலக்காக செயல் படுகிறது.
இயற்கை சுப கிரகங்கள் உடன் இணையும் பொழுது மட்டும் தான் சுப தன்மையினை அடைகிறது.
சனி பகவான் தான் இருக்கும் இடத்தையும் மற்றும் பார்வை செய்யும் இடத்தையும் பலம் இழக்க செய்கிறது.இயற்கை சுப கிரக தொடர்பு பெற்ற நிலையில் கெட்ட மற்றும் நல்ல பலனையும் தருவதில்லை.உதாரணமாக குரு பார்வை பெற்ற சனி பகவான் பார்வை சர்வ நாசம் செய்வதில்லை.அதே நேரத்தில் நல்ல பலனையும் தந்து விடுவது கிடையாது.
சனி பகவான் தனித்த நிலையில் இருக்கும் மற்றும் பார்க்கும் இடத்தையும் கெடு பலனை ஜாதகருக்கு கொடுக்கிறது.சனி பகவான் உடன் செவ்வாய் இணையும் பொழுது சனி மற்றும் செவ்வாய் ஆகிய இரு பாவ கிரகங்கள் சேர்ந்து பார்வை செய்யும் ஸ்தானங்கள் மற்றும் பார்வை பெறும் கிரகங்கள் முழுமையாக பாவத்துவ நிலையினை அடைந்து விடுகிறது.
சனி மற்றும் செவ்வாய் உடன் ராகு பகவானும் சேர்ந்து நின்ற நிலையில் கூடுதலான பாவத்துவ தன்மையினை அடைகிறது.இந்த சனி, செவ்வாய் மற்றும் ராகு ஆகிய மூவரும் இணைந்து எந்த பாவத்தில் நின்றாலும் அந்த பாவகமும் மற்றும் அத்துடன் இணைந்த கிரகங்களும் முழுமையாக தனது பலத்தை இழந்து விடுகிறது.
சனி மற்றும் செவ்வாய் பகவான் உடன் கேது பகவான் இணையும் பொழுது சூட்சும வலுவை பெற்று விடுகிறது.பொதுவாகவே ராகு பகவானை போல் அல்லாமல் கேது பகவான் தன்னுடன் இணைந்த கிரகத்தின் பலனை அதிகரித்து வலுப்பெற்று நிற்க செய்கிறது.குறிப்பாக பாவ கிரகங்கள் உடன் இணையும் பொழுது மட்டும் சூட்சும வலுவை பெறுகிறது.
சனி பகவான் தனித்த நிலையில் எந்த கிரகத்தை பார்த்தாலும் முழுவதும் பாவத்துவ நிலைக்கு உட்படுத்துகிறது.ஆனால் செவ்வாய் பகவான் தன் நட்பு கிரகமான குரு, சந்திரன், சூரியன் ஆகிய கிரகங்கள் உடன் இணையும் போது அல்லது பார்வை செய்யும் பொழுது கெடுதலை தருவதில்லை.
சனி பகவான் உடன் குரு , வளர்பிறைச் சந்திரன் புதன் மற்றும் சுக்கிரன் இணைந்து நின்றாலும் அல்லது பார்வை செய்தாலும் சனி பகவான் தனது கொடுமையான பார்வை பலனை சற்று குறைத்து கொள்கிறது.அதே நேரத்தில் தன்னுடன் இணைந்த கிரகத்தை பாவத்துவம் அடைய செய்து விடுகிறது.சனி பகவான் தன்னுடன் இணைந்த அல்லது பார்வை செய்த கிரகத்தால் தான் சுப நிலையை அடைந்து தனது தசையில் நல்ல பலனைத் இ.அதேநேரத்தில் தன்னுடன் இணைந்த கிரகத்தினை பாவ நிலையை அடைய வைத்து தனது தசையில் கெட்ட பலனை தருகிறது.
புத்திர காரகன் குரு பகவான் உடன் சனி அல்லது ராகு இணையும் பொழுது குரு சண்டாள யோகத்தை தருகிறது.இது ஒரு அவ யோக அமைப்பு ஆகும்.இது புத்திர தோஷத்தை ஜாதகருக்கு தருகிறது.
களத்திர காரகன் சுக்கிரன் உடன் சனி அல்லது ராகு இணைவு களத்தின் தடையை தருகிறது.
வித்தை காரகன் புதன் பகவான் உடன் சனி அல்லது ராகு இணையும் போது தான் பெற்ற வித்தையை கொண்டு பலரை நாசம் செய்யும் நாச வேலைகளில் தனது மூளையை பயன்படுத்த வைக்கும்.
சூரியன் உடன் சனி அல்லது ராகு இணையும் தந்தையை பாதிப்பு மற்றும் அரசு வேலை கிடைப்பதில் தாமதம் போன்ற பலனை ஜாதகருக்கு கொடுக்கிறது.
சந்திரன் உடன் சனி அல்லது ராகு இனையும் தாய் அல்லது மனநிலை பாதிப்பை உண்டாக்கும்.
சூரியன்,சனி , செவ்வாய்,குரு ஆகிய கிரகங்கள் உடன் தனித் தனியாக கேது இணைந்தால் நல்ல பலனைத் ஜாதகருக்கு கொடுக்கிறது.
நன்றி!
வாட்ச் அப் & செல் & கூகுள் பே
097151 89647
மற்றொரு செல்; 7402570899
Email masterastroravi@gmail.com
(தங்களது ஜாதக பலன், திருமண 💒 பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)
அன்புடன்
சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்
M.Sc,M A,BEd
ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர், ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.
No comments:
Post a Comment