உமது கர்மாவை முடிவு செய்யும் தசைகள் .
செவ்வாய்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!
ஒருவர் ஜாதகத்தில் நல்ல தசை அமைப்புகள் வரும்பொழுது அவர்கள் சந்திக்கும் மனிதர்கள், அவர்கள் எடுக்கும் முடிவுகள் மற்றும் அதனால் கிடைக்கும் பலன்கள் அனைத்துமே நல்ல முறையில் அமைந்து அவர்கள் யாரும் தொடாத அளவிற்கு உயர்ந்த இடத்திற்கு செல்வார்கள்.
"உள்ளபடி யோகம் உள்ளவர்க்கு நாளும் நட்ட விதை யாவும் நல்ல மரம் ஆகும்".
மாறாக அவர்களுக்கு கெட்ட நேரம் நடந்தால் அதாவது அவர்களுக்கு உகந்த யோக தசைகள் நடக்காமல் அவ யோக திசைகள் மற்றும் கோச்சார அடிப்படையில் ஏழரை மற்றும் அஷ்டம சனி போன்ற கெட்ட கோச்சார பலன்கள் நடக்கக்கூடிய காலங்களில் அவர்கள் சந்திக்கக்கூடிய மனிதர்கள் ,அவர்கள் எடுக்கும் முடிவுகள் மற்றும் அதனால் கிடைக்கும் பலன்களும் நல்ல முறையில் அமையாமல் அவர்கள் கீழ்நோக்கி தள்ளப்படுவார்கள்.
கொட்டும் மழை நேரம் உப்பு விற்க போனேன்!
காற்றடிக்கும் நேரம் பொறி விக்க போனேன் !
தப்பு கணக்கை போட்டு தவித்தேன்!
பட்ட பிறகே புத்தி தெளிந்தேன்!
என்றவாறு புலம்பி திரிவார்கள்.
ஒருவருக்கு வெற்றி மேல் வெற்றி வரும்பொழுது அந்த வெற்றிக்கு வித்தாக தான் மட்டுமே காரணம் என்று இறுமாப்பு கொள்வார்கள்.அந்த கால கட்டத்தில் அவர்களுக்கு கால நேரம்,ஜாதகம் இவற்றில் நம்பிக்கை வருவதில்லை.இந்த மாதிரியான தருணங்கள் அவர்கள் ஜோதிடர்களை நாடி செல்வதில்லை.
இதே போன்ற மனிதர்கள் சில நேரங்களில் தனது புத்திசாலித்தனத்தால் எவ்வளவு முயன்றாலும் தோல்வி மேல் தோல்வியை தழுவும் போது மட்டும் நின்று நிதானித்து யோசிப்பார்கள்.ஓகோ ஜாதகத்தில் கெட்ட நேரம்/நல்ல நேரம் என்று சொல்கிறார்களே ஒரு தடவை போய்தான் பார்ப்போம் என ஜாதகத்தை தேடுவார்கள்.
அங்கே போய் பார்த்தால்தான் தெரியும் தனக்கு கஷ்டமான சூழல் ஆரம்பித்த நேரத்தில் தான் ஆறு அல்லது எட்டு தசைகள் அல்லது லக்கன அவயோக தசைகள் கோச்சார அடிப்படையில் ஏழரை அல்லது அஷ்டம சனி போன்றவை நடப்பில் இருக்கும்.இவ்வாறு வாழ்வில் உயர்வுக்கு தான் மட்டுமே காரணம் என ஆணித்தரமாக நம்பிய இவர்களால் தாழ்வுக்கும் தான் மட்டுமே காரணம் என இவர்களால் ஆணித்தரமாக நம்ப முடியவில்லை.அப்போது மட்டும் கால நேரத்தின் மீது தனது தாழ்வுக்கான காரணத்தை ஏற்றி விடுவார்கள்.
கனியன் பூங்குன்றனார் தனது
"யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற புறநானூற்று பாடலில்
"தீதும் நன்றும் பிறர் தர வாரா" என்று குறிப்பிடுகிறார்.இதேபோல முழு நம்பிக்கை கொண்டவர்கள் பாராட்டதக்கவர்கள்.
ஒருவர் உறுதியான மனநிலை கொண்டு எதன் மீதும் விருப்பு வெறுப்பு இல்லாத சமநிலை தன்மை கொண்ட மனிதர்களை கோள்கள் தாக்குவதில்லை.இவர்கள் லொளகீக ஆசாபாசங்களுக்கு அப்பாற்பட்டவர்கள்.இவர்களை பொறுத்த மட்டில் எது வந்தாலும் ஒன்றே ஆகும்.
இவர்கள்
கோளறு பதிகம் பாடலில் உள்ள கருத்துப்படி உறுதியான மனநிலை கொண்டவர்களாக இருக்க வேண்டும்.
"நாள் என்ன செய்யும் ? வினைதான் என்செயும் ?என்னை நாடி வந்த கோள் என்ன செயும் ? கொடுங்கூற்று என செயும் குமரேசா இருதாளும் சிலம்பும் சதங்கையும் தண்டையும் சண்முகமும்
தோளும் கடம்பும் என் முன்னே வந்து தோன்றிடுமே ?"
மேற்கண்ட வகையில் உறுதியான மனநிலையோடு
"ஏழை மனதை மாளிகை ஆக்கி
இரவும் பகலும் காவியம் பாடு!
"நாளைய பொழுதை இறைவனுக்கு அளித்து நடக்கும் வாழ்வில் அமைதியை தேடு ,
உனக்கு கீழே உள்ளவர் கோடி நினைத்துப் பார்த்து நிம்மதி தேடு!
மயக்கமா கலக்கமா
வாழ்விலே நடுக்கமா
வாழ்க்கையிலே கலக்கமா
வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும் வாசல் தோறும் வேதனை இருக்கும்
வந்த துன்பம் எதுவென்றாலும்
வாடி நின்றால் ஓடுவதில்லை
எதையும் தாங்கும் இதயம் இருந்தால் இறுதி வரைக்கும் அமைதி நிலவும்."
இதேபோல இறைவனிடம் சரணாகதி அடைந்தவர்களை இறைவன் கைவிடுவதில்லை.கோள்களின் தாக்குதல் அவர்களை நிலை குலைய செய்வதில்லை.
ஒருவர் ஜாதகத்தில் லக்னாதிபதி வலிமையான அமைப்பை பெற்றவர்கள் எந்த நிலையிலும் தன்நிலை குலைவதில்லை.அவர்கள் எவ்வளவு கஷ்டங்கள் வந்தாலும் எதிர்நீச்சல் போட்டு வெற்றி பெற்று விடுவார்கள்.
இன்றைக்கு என்னிடம் ஒருவர் ஜாதகம் பார்க்க வந்து இருந்தார் .அவர் தன் மகனுக்கு பத்தாம் வகுப்பு படிக்கின்ற காலத்தில் என்னிடம் ஜாதகம் பார்க்க வந்திருந்தார்.
அவர் கன்னி லக்கனம் துலாம் ராசி லக்கனத்திற்கு மறைவிட ஸ்தானமான பன்னிரண்டாம் இடத்தில் சூரியன்,சனி , சுக்கிரன்,ராகு ,புதன் இரண்டாம் இடத்தில் சந்திரன், மூன்றாம் இடத்தில் குரு பகவான், ஆறாம் இடத்தில் ராகு, ஒன்பதாம் இடத்தில் செவ்வாய்
இவருடைய ஜாதகத்தில் லக்கனாதிபதியான புதன் 12 இல் மறைந்து சனி ,செவ்வாய் ,ராகு,கேது சூரியன் போன்ற பாவர்களுடைய தொடர்பை பெற்றுள்ளது.மிருகசீரிஷ நட்சத்திரம் தொடக்க மூன்று ஆண்டுகள் செவ்வாய் தசை அடுத்து மூன்றாம் வயதிலிருந்தே ராகு தசையும் ஆரம்பம்.லக்கன மற்றும் ராசி அதிபதி மறைவிடத்தில் பாவத்துவமாகி பலவீனமான ராகு தசையில் எதிர்த்து போராடி ஜெயிக்கும் யோகம் இல்லை.பார்ப்பதற்கும் பிள்ளை நோஞ்சானாக இருப்பார்.பத்தாம் வகுப்பு அரசு பொது தேர்வில் தோல்வியை தழுவி விட்டார்.
ஆனால் ராகு தசை இருபத்தொரு வருடம் படிக்கும் காலம் முழுவதும் இருப்பதால் பெரிய அளவில் படிப்பில் கவனம் இருக்காது.ஆனால் அதன் பிறகு வரும் குரு தசையில் நன்றாக இருப்பார் என்று ஆறுதல் தந்து அனுப்பி வைத்தேன்.
நன்றி.
வாட்ஸ் அப் & செல் & கூகுள் பே
. 097151 89647
மற்றொரு செல்: 7402570899
Email masterastroravi@gmail.com
(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)
அன்புடன்
சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்
M.Sc,M.A,BEd
(ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர்), ஓம் சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.
No comments:
Post a Comment