Wednesday, 5 July 2023

கிரகங்கள் படுத்தும் பாடு-பகுதி-2

 கிரகங்கள் படுத்தும் பாடு -

         ( பகுதி-2 )




செவ்வாய்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!


   நிழல் கிரகங்களான ராகு மற்றும் கேது பகவான் ஆகிய இருவரும் இணைந்து ஒருபோதும் நிற்பதில்லை.ராகு பகவான் இருக்கும் வீட்டிற்கு ஏழாவது இடத்தில் கேது பகவான் நிற்கிறது.நிழல் கிரகங்களான ராகு மற்றும் கேது பகவானுக்கு சொந்த வீடு கிடையாது.உச்சம், ஆட்சி போன்ற ஸ்தான வலிமை கிடையாது.திருக் பலம் என்னும் பார்வை பலம் கிடையாது.எல்லா  கிரகங்களும் முன்னோக்கி செல்ல (clockwise)  ராகு மற்றும் கேது பகவான் மட்டுமே பின்னோக்கி நகர்கிறது.எனவே ராகு மற்றும் கேது பகவானுக்கு வக்ர கதி கிடையாது.


ராகு மற்றும் கேது பகவான் சூரியனை நெருங்கும் போது அஸ்தமனம் ஆவதில்லை.மாறக மாபெரும் ஒளி கிரக ஒளியை கிரகண தோஷம் அடைய செய்கிறது.மாறாக அஸ்தங்கம் அடைவதில்லை.


 இவ்வாறாக மற்ற கிரகங்களிலிருந்து நிழல் கிரகமான ராகு மற்றும் கேது பகவான் மாறுபட்டு நிற்கிறது.எனவே பலன் தருவதிலும் மாறுபட்டு நிற்கிறது.


   ஜாதக பலன் அளிப்பதில் நிழல் கிரகங்களான ராகு மற்றும் கேது பகவான் மிகவும் முக்கியமானது ஆகும்.

தன்னுடன் இணைந்த கிரகத்தின் பலனை மாற்றுவதில் நிழல் கிரகங்களின் பங்கு குறிப்பிடத்தக்கது.


 லக்கனத்திற்கு யோகராகவே இருந்தாலும் அவை ராகுவுடன் நெருக்கமாக எட்டு பாகைக்குள்ளாக இணைந்து நிற்கின்ற நிலையில் அதன் தசையில் நல்ல பலனைத் தருவதில்லை.

ராகுவுடன் எத்தனை சுப கிரகங்கள் இணைந்த நின்றாலும்  இணைந்து நிற்கும் கிரகங்களின் பலனை தனது தசையில் தருகிறது.தன்னுடன் இணைந்து நிற்கும் சுப கிரகங்கள் எட்டு பாகைக்குள்ளாக இருந்தால் அவை 

ராகுவால் பாவத்துவத்திற்கு உட்பட்டு தனது தசையில் ஆதிபத்தியம் மற்றும் காரக கிரக கெடு பலனை ஜாதகருக்கு கொடுக்கிறது.


 ராகுவுடன் எட்டு பாகைக்குள்ளாக சுப கிரகங்களான சுக்கிரன் ,குரு மற்றும் புதன் இணைந்த நிலையில் தாம்பத்திய சுகத்தை தரும் சுக்கிரன் பாவத்துவமடைகிறது.சுக்கிர தசையில் தனது காரக மற்றும் ஆதிபத்திய பலனை கெடுக்கிறது.இன்னும் சனி , செவ்வாய் போன்ற பாவ கிரகங்கள் பார்த்த நிலையில் கூடுதலான கெடு பலனை ஜாதகருக்கு கொடுக்கிறது.இதேபோல குரு பகவான் தனது குரு பகவான் தனது தசையில் புத்திர தோஷத்தை தருகிறது.இதன் முழு பலன் ஐந்தாம் இட அதிபதி மற்றும் ஐந்தாம் இடத்தை பார்க்கும் கிரகங்கள் ஆகியவற்றை பொறுத்து பலன் அமைகிறது.


 ராகு பகவான் உடன் இணைந்த கிரகங்களை வளர்பிறை சந்திரன் போன்ற இயற்கை சுப கிரகங்கள் பார்வை செய்ய பாவத்துவம் நீங்கி சுபத்துவ நிலையினை அடைகிறது.


  ராகு பகவான் ஒளி கிரகமான சூரியன் உடன் எட்டு பாகைக்குள் நெருக்கமாக நெருங்கும் போது சூரியனை கிரகண படுத்தி சூரியனை பலம் இழக்க செய்கிறது.


  சூரியன் உடன் ராகு இணைந்து சனி சம சப்தமாக பார்வை செய்த நிலையில் ஒன்பதாம் இட அதிபதி பலம்பெற்று ஒன்பதாம் இடத்தை குரு பார்வை செய்த நிலையில் தந்தையின் உயிருக்கு பாதிப்பு இல்லை.


 ஆனால் ஒன்பதாம் இடத்தில் பாவ கிரகங்கள் இருந்து ஒன்பதாம் இட அதிபதியும் பலவீனப்பட்டு இருந்தால் தந்தை உயிருடன் இருக்க மாட்டார்.


 ஒன்பதாம் இடத்தில் பாவ கிரகங்கள் இருந்து ஒன்பதாம் இட அதிபதி பலம் பெற்று இருந்தால் தந்தை இருப்பார்.ஆனால் தந்தையையாக இருக்க மாட்டார்.


இது போலவே சந்திரன் உடன் ராகு எட்டு பாகைக்குள் இணைந்த நிலையில் மனநிலை பாதிப்பு மற்றும் உயிர் காரணியான தாய்க்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது.இந்த சந்திரன் வளர்பிறை சந்திரன் எனில் ஒருவித பாதிப்பையும் மற்றும் தேய்பிறை சந்திரன் எனில் ஒருவித பாதிப்பையும் கொண்டிருக்கிறது.


 தேய்பிறை சந்திரன் உடன் ராகு இணைந்து சனி பார்வை செய்த நிலையில் கூடுதலான பாதிப்பை தொடர்புடைய தசையில் கொடுக்கிறது.இந்த பாவத்துவ அமைப்பிற்கு ஒற்றை குருவின் பார்வை முழு அமைப்பையும் சுபத்துவ படுத்தி நல்ல பலனைத் தருகிறது.


 மேற்கண்ட வகையில் செவ்வாய் பகவான் உடன் ராகு இணைந்த நிலையில் சகோதர தோஷத்தை தருகிறது.இவை மட்டுமல்லாமல் செவ்வாய் பகவானின் காரக மற்றும் ஆதிபத்திய பலனை கொடுக்கிறது.


இது போலவே ராகு பகவான் எந்த பாவகத்தில் நிற்கின்றதோ அந்த பாவக ஆதிபத்தியம் பலனை கெடுக்கிறது.லக்கனத்தில் ராகு பகவான் இருக்கும் போது லக்கனத்தை கெடுக்கிறது.


லக்னத்தில் ராகு இருந்தால் ஏழாம் இடத்தில் கேது வந்து களத்திர தோஷத்தை தருகிறது . இரண்டாம் இடத்தில் ராகு இருக்கும்போது எட்டாம் இடத்தில் கேது இருந்தால் மாங்கல்ய தோஷத்தை தருகிறது .இவை அனைத்தும் சர்ப்ப தோஷம் என்று அழைக்கப்படுகிறது.


  மூன்றாம் இடத்தில் ராகு சகோதர தோஷத்தை தருகிறது. நான்காம் இடத்தில் ராகு பகவான் தன் சுகம், தாய் சுகம், கல்வியால் சுகம் மற்றும் வண்டி வாகன சுகம் போன்றவற்றை பாதிக்கிறது.


ஐந்தாம் இடத்தில் ராகு பகவான் புத்திர தோஷம் மற்றும் பூர்வ புண்ணிய தோஷத்தை தருகிறது


  ஆறாம் இடத்தில் ராகு பகவான் எதிரியை வெல்லாம்.ஏழாம் இடத்தில் ராகு பகவான் திருமண தடையை உண்டாகிறது.எட்டாம் இடத்தில் ராகு இருப்பின் மாங்கல்ய தோஷத்தை தருகிறது.ஒன்பதாம் இடத்தில் ராகு பிதுர் தோஷத்தை தருகிறது.பத்தாம் இடத்தில் ராகு பகவான் வேலை செய்யும் அமைப்பை பெறுகிறது.


பதினொன்றாம் இடத்தில் ராகு பகவான் இளைய தாரத்தை தடுக்கிறது.மூத்த சகோதர தோஷத்தை தருகிறது.


பன்னிரண்டாம் இட ராகு பகவான் நித்திரை சுகத்தை தடுக்கிறது.


மேற்கண்ட அனைத்து பலன்களும்.பொது பலன்களே.இந்த பலன் அனைத்தும் இருக்கும் வீட்டின் அதிபதி மற்றும் அந்த இடத்தை பார்க்கும் கிரகம் ஆகியவற்றை பொறுத்து பலன் மாறுபடுகிறது.


   ஒரு பாவகத்தில் ராகு பகவான் உடன் சனி  செவ்வாய் மற்றும் தேய்பிறை சந்திரன் போன்ற பாவ கிரகங்கள் இணைய அந்த இருக்கும் இடம் கூடுதலான பாவ தன்மையை அடைகிறது.இவ்வாறு பாவத் தன்மையை அடைந்த  ராகு பகவான் அந்த பாவகத்தை அதிகமாக பாதிக்கிறது.இவ்வாறு  பாதிப்பதோடு ராகுவுடன் இணைந்த பாவ கிரகங்கள் பார்வை செய்யும் இடத்தையும் மற்றும் பார்வை செய்யும் கிரகத்தையும் அதிகமாக பாதிக்கிறது.இந்த அமைப்பிற்கு ஒற்றை குரு பார்வையானது ஒட்டு மொத்த இடத்தையும் சுபத்துவ படுத்துகிறது.

 


நன்றி!


வாட்ஸ் அப் & செல் & கூகுள் பே

    097151 89647 


மற்றொரு செல்; 7402570899


Email masterastroravi@gmail.com


(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)



அன்புடன்


   சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன் 

        M.Sc,M.A,BEd

ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர், ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.

No comments: