Friday, 7 July 2023

காசேதான் கடவுளப்பா....!?

 காசேதான் கடவுளப்பா..?!

        


செவ்வாய்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!


  இன்றைய கால கட்டத்தில் பணம் சம்பாதிக்கிறது  என்பது அவ்வளவு எளிதான காரியமல்ல.அடுத்தவர் பையில் இருக்கும் பணத்தை நம் கைக்கு கொண்டு வர  கடுமையாக உழைக்க வேண்டி இருக்கிறது.


"கைக்கு கைமாறும் பணமே உன்னை கைப்பற்ற நினைக்குது மனமே காசேதான் கடவுளப்பா அந்த கடவுளுக்கும் இது தெரியுமப்பா!!"


  ஒரு சிலர் ஒரு நாள் முழுவதும் உழைத்து குறைந்த பட்ச தொகையாக ரூ 300 கூட சாம்பாதிக்க இயலாத சூழலில் இருப்பார்கள்.உழைப்புக்கு ஏற்ற ஊதியம் கிடைக்காமல் அல்லாடுகிறார்கள்.


 ஒரு சிலர் குளிர் பதன அறையில் அமர்ந்து கொண்டு வினாடி கணக்கில் பல லட்சக்கணக்கான பணத்தை சம்பாதிக்கிறார்கள்.


மேற்கண்ட இந்த மாறுபட்ட தன்மைக்கு நீங்கள் அறிவு, அனுபவம் மற்றும் அந்தஸ்து என குறிப்பிட்டாலும் முக்கியமான உண்மை அவர்கள் கால நேரம் தான் முக்கிய காரணமாக அமைகிறது என்பது ஜோதிடராகிய எனது அசைக்க முடியாத புள்ளி விவரங்கள் ஆகும்.


  பணம் சம்பாதிக்கிற அமைப்பு உங்கள் ஜாதகத்தில் இருந்தால் நிச்சயம் அவர் தொட்டதெல்லாம் துலங்கி வாழ்வின் உயரிய நிலையில் அடைய முடியும்.உங்கள் ஜாதகத்தில் லக்னாதிபதி வலுவாக அமைந்து தன-பாக்கிய-லாப அதிபதிகள் வலுப்பெற்று நல்ல ஸ்தான நிலையில் நல்ல வலிமை பெற்று உகந்த தசா அமைப்புக்கள் பிறக்கும் போதிலிருந்து தொடர்ந்து இருந்தால் நிச்சயமாக பண கஷ்டம் இருக்காது.


2,9,11 ஆம் அதிபதிகளும் மற்றும் தன் காரகன் குரு பகவானும் வலிமை பெற்று ஒன்றுக்கொன்று பார்வை, சேர்க்கை மற்றும் பரிவர்த்தனை போன்ற முறைகள் வழியாக வலு பெற்று அதன் ஏதாவது தசை நடப்பில் உள்ள காலங்களில் யாரும் எதிர் பார்க்காத உயரத்திற்கு வாழ்க்கை தரம் உயர்ந்து செல்லும்.


மேற்கண்ட அமைப்பை பெற்று வித்தைக்காரர் புதன் பகவான் மற்றும் குரு பகவான் வலுப்பெற்று நின்றால் மேற்கண்ட தசாபுத்தி நடக்கும் போது தனது மூளையினை பயன்படுத்தி உடல் உழைப்பு இன்றி பெரும் தனம் ஈட்டுவார்கள்.


  ஒரு சிலர் ஜாதகத்தில் லக்னாதிபதி பலம் பெற்று தன-பாக்கிய -லாப அதிபதிகள் மற்றும் தன் காரகன் குரு பகவான் போன்றோர் இயல்பான நிலையில் அமைந்த நிலையில் உகந்த தசா அமைப்புக்கள் வராத நிலையில் கஷ்டமான சூழ்நிலையில் பிறந்து நடுத்தரமான வருமானத்தில் வாழ்க்கை நடத்துவார்கள்.


ஒரு சிலர் ஜாதகத்தில் லக்னாதிபதி பலம் இழந்தோ  அல்லது இருள் கிரகமான சனி பகவான்,ராகு ,தேய்பிறை சந்திரன் மற்றும் செவ்வாய் போன்ற கிரகங்கள் லக்கனத்தில் நின்றிருந்த நிலையில் தன -பாக்கிய -லாப அதிபதிகள் மற்றும் தன காரகன் குரு பகவான் போன்றோர் பலம் இழந்த நிலையில் உள்ளவர்கள் தனது உடல் உழைப்பால் கடினமாக உழைத்து உழைப்புக்கு ஏற்ற ஊதியம் பெறாதவர்களாக இருப்பார்கள்.


நன்றி


வாட்ஸ் அப் & செல் & கூகுள் பே

   097151 89647 


மற்றொரு செல்: 7402570899


Email masterastroravi@gmail.com



அன்புடன்

   சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன் 

       M.Sc,M.A,BEd

ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர், ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.

No comments: