பன்னிரண்டு பாவகங்களுடன் தொடர்பு கொள்ளும் சனி மற்றும் கேது சேர்க்கை பலன்கள் .
செவ்வாய்ப்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!
ஜாதகத்தில் சனி பகவான் இருள் கிரகம் ஆகும் இதனாலே அதனை இயற்கை பாவ கிரகமாக கருதப்படுகிறது. சனிபகவான் இருக்கும் இடமும் மற்றும் பார்க்கக் கூடிய இடத்தையும் பாவத்துவ நிலைக்கு உட்படுத்தி பலவீனப்படுத்தும்.
சனி பகவான் உடன் செவ்வாய் , தேய்பிறை சந்திரன் மற்றும் ராகு ஆகிய மூன்று கிரகங்கள் இணையும் போது அல்லது சனி மற்றும் செவ்வாய் பகவானால் பார்க்கப்படும் போது அந்த ஸ்தானம் அதிக பாதிப்புக்கு உள்ளாகிறது. அதாவது சனி உடன் ராகு சேர்ந்த நிலையில் இருக்கும் மற்றும் பார்க்கும் இடமும் கூடுதல் பாதிப்புக்கு உள்ளாகிறது.இன்னும் இந்த சனி மற்றும் ராகு உடன் செவ்வாய் சேர்ந்து அல்லது பார்க்கின்ற நிலையில் இருந்தால் அவை இருக்கும் இடத்தையும் மற்றும் பார்வை செய்யும் இடத்தையும் அதிக பாதிப்புக்கு உள்ளாகிறது.
சில நேரங்களில் சனியுடன் இதுபோன்ற பாவ கிரகங்கள் இணைந்தும் அல்லது அவர்களுக்கு எந்த விதமான பாதிப்பு தரவில்லை எனில் சனியுடன் இணைந்த கிரகங்களின் பாகை அடிப்படையில் 13 பாகை அளவில் ஐம்பது சதவீதம் பாதிப்பையும் மற்றும் 22 பாகைக்கு மேல் இருப்பின் ஒரு வீட்டில் இருந்தாலும் ஒன்றாக இல்லை என்ற அடிப்படையில் பாதிப்பை தராது. மேலும் அவற்றுக்கு வேறு ஏதேனும் வகையில் சுபத்துவ பார்வை கிடைத்துள்ளதா ? என்பதையும் பொறுத்து பலன் மாறுபடும்.
சனி பகவான் ஆனவர் பார்க்கும் இடத்தை சர்வ நாசம் செய்யும் என்றாலும் சில நேரங்களில் இயற்கை சுப கிரகங்கள் ஆன குரு பகவான், வளர்பிறைச்சந்திரன் ,தனித்த புதன் மற்றும் சுக்கிரன் ஆகியவற்றின் பார்வை அல்லது சேர்க்கை ஆகிய தொடர்பு பெற்ற நிலையில் அவை சுபத்துவமாக மாறி நல்ல பலனை தருவதும் உண்டு அவை பார்க்கும் மற்றும் இருக்கும் இடத்தை கெடுப்பதும் இல்லை.அதே நேரத்தில் அள்ளி கொடுத்து விடுவதும் இல்லை.
நிழல் கிரகமான கேது பகவானை இயற்கை பாவக்கிரக வரிசையில் பெரும்பாலும் சேர்த்து விட முடியாது. இவை தன்னுடன் இணைந்த கிரகத்தின் பலனை அதிகரித்து தரச் செய்வார்.
ராகு பகவானை போல கேது பகவான் தனுடன் இணைந்த கிரகத்தில் பலனை கெடுத்து விடுவதுமில்லை.
கேது பகவான் இயற்கை சுப கிரகமான குரு பகவான் உடன் இணைந்த நிலையில் கேள யோகம் என்ற கோடீஸ்வரர் ஆகும் யோகத்தை வழங்குகிறார்.
சூரியன் உடன் கேது பகவான் இணையும் போது மிகப் பெரிய ஆன்மீக யோகத்தை தருகிறார்.
சுக்கிரன் உடன் கேது இணையும்போது கூட இல்லற வாழ்வினை பெரிதும் பாதித்துவிடவில்லை.
புதன் பகவானுடன் கேது இணையும் போது வித்தையில் சாதுரியத்தை ஜாதகருக்கு அள்ளி வழங்குகிறார்.
சந்திரனுடன் கேது இணையும் போது யூகித்து அறியும் உள்ளுணர்வை சாதகருக்கு வழங்குகிறார்.
இயற்கை பாவ கிரகமான சனி பகவான் மற்றும் செவ்வாய் பகவானுடன் சேது பகவான் இணையும்போது கூட ராகு பகவான் அளவிற்கு கெடுதலான பலனை ஜாதகருக்கு தந்து விடுவதில்லை இவை மறைமுக வலுவை பாவ கிரகங்களுக்கும் அள்ளி வழங்குகிறது.
சனி பகவான் கேதுவுடன் இணைந்து குருபகவான் பார்க்கின்ற நிலையில் ஆன்மீகத்தில் உயரிய நிலையை சாதகரை அடைய வைக்கிறது.
ஜாதகத்தில் குரு, சனி மற்றும் கேது தொடர்பு கொள்ளக்கூடிய நிலையில் ஜாதகர் ஆன்மீக எண்ணம் மிகுதியாக உடையவராக அதைப்பற்றிய எண்ணங்களும் மற்றும் சிந்தனைகளும் கொண்டவராக விளங்குவார்.
இனி பன்னிரெண்டு பாவங்களுடன் சனி மற்றும் கேது பகவான் இடம்பெறும் போது உண்டாகும் பலன்களை பார்ப்போம்.
லக்கனம் என்பது சாதகரை பற்றி ஒருவர் தெளிவாக தெரிந்து கொள்ள உதவக்கூடிய ஸ்தானமாகும் அதாவது ஒருவருடைய அழகு ஆரோக்கியம் பண்பு நாட்டம், எண்ணம் ,சிந்தனை ,செயல் மற்றும் ஆயுள் ஆகியவற்றை ஆராய்ந்து அறியக்கூடிய இடமாகும்.
ஆகையால் இந்த இடத்தில் அதாவது லக்னத்தில் சனி மற்றும் கேது இணையும் போது பெரும்பாலும் அவர் லெளகீக வாழ்வியல் சிந்தனையை விட ஆன்மீக சிந்தனை மேலோங்கி நிலையில் இருக்கும். அதே நேரத்தில் லக்னத்தில் உள்ள சனி மற்றும் கேது லக்னத்தையும் ஏழாம் இடத்தையும் சனி பகவான் பார்வை செய்கிறார் என்ற வகையில் லெளகீக வாழ்க்கைக்கு தேவையான திருமண உறவில் பெரிதும் நாட்டம் இல்லாமல் அதாவது சிற்றின்ப நாட்டம் இல்லாமல் பேரின்ப நாட்டம் பெரிதும் உடையவராக இருப்பார். அதிலும் குறிப்பாக லக்னத்தில் உள்ள சனி ,கேது பகவானை குரு பகவான் தனது ஐந்து மற்றும் ஒன்பதாம் பார்வையால் பார்க்கப்படக்கூடிய நிலையில் அவர் எண்ணம் ,சொல் மற்றும் செயல் அனைத்தும்
இறை சிந்தனை உடையவராக இருப்பார். இவருக்கு பகட்டு ஆன்மீகத்தின் மீது நம்பிக்கை இருக்காது.
வாக்கு ஸ்தானமான இரண்டாம் இடத்தில் சனி ,கேது சேர்க்கை கொடுத்த வாக்கை காப்பாற்ற கூடியவராகவும் வாக்குப் பழிதம் உடையவராகவும் இருப்பார். இந்த அமைப்பை குரு பகவான் பார்த்த நிலையில் ஆன்மிக பேச்சாளராகவும் சாஸ்திரங்களை சம்பிரதாயங்களை பற்றி எடுத்துரைப்பவராகவும் திகழ்வார்.
மூன்றாம் இடத்தில் சனி மற்றும் கேது பகவான் அதன் தசை காலங்களில் உப ஜெய ஸ்தானமான மூன்றாம் இடத்தில் இருக்கும் போது யோக பலனை ஜாதகருக்கு கொடுக்கிறது.இன்னும் குரு பகவான் பார்வை செய்தால் நற் புகழை அடைய செய்கிறது.
நான்காம் இடத்தில் சனி கேது இணைந்த நிலையில் நான்காம் அதிபதியும் வலிமை அடைந்து இருப்பின் எதையும் ஆன்மீக அடிப்படையில் ஆராய்ந்து பார்த்து விடை காண செய்யும்.
லக்கனத்தில் சனி மற்றும் கேது இணைந்தால் எந்த அளவுக்கு ஆன்மீகத் தேடல் இருக்குமோ அதே போல ஐந்தாம் இடத்தில் சனி ,கேது இணைவு மனிதனை ஆன்மீக நோக்கிய தேடல் பயணத்தில் மேற்கொள்ள வைக்கும்.ஐந்தாம் இடத்தில் சனி மற்றும் கேது இணைந்த நிலையில் பாவத்துவம் அடையாத குரு பகவான் பார்வை செய்தால் ஆன்மீக ஞான தேடலில் ஆர்வம் உண்டாகும்.
இவர்களது பக்தி என்பது அக தேடல் கொண்ட பக்தியாக இருக்கும் . நான் யார்? என்ற வினாவிற்கு விடை தேடுவார்கள்.சித்தர்கள் மீது நாட்டம் உடையவர்களாக இருப்பார்கள்.
ஆறாம் இடத்தில் சனி மற்றும் கேது இணைந்த நிலையில் எதிரிக்கு கூட இவர்களை பிடிக்கும்.தன்னை சுற்றி அன்பானவர்களை வைத்து கொள்வார்கள்.
ஏழாம் இடத்தில் சனி கேது இணைவு திருமண உறவில் பெரிதும் நாட்டம் இல்லாமல் இருப்பார்கள்.இவர்கள் "தாமரை இலை தண்ணீர் போல" லெளகீக வாழ்வில் மட்டும் படாமல் இருப்பார்கள்.
எட்டாம் இடத்தில் சனி மற்றும் கேது இணைவு பெரிய அளவில் மாற்றம் இல்லை.ஆயுள் தீர்க்கம் ஆகும்.
தர்ம ஸ்தானமான ஒன்பதாம் இடத்தில் சனி மற்றும் கேது இணைந்து உள்ள நிலையில் சித்த புருஷர்கள் தொடர்பு உண்டாகும்.ஆன்மீக குரு கிடைப்பார்கள்.தணியாத ஆன்மீக தேடல் ,தர்ம சிந்தனை மற்றும் பரந்த மனம் உடையவராக இருப்பார்.இன்னும் குரு பகவான் பார்வை செய்த நிலையில் மேற்கண்ட பலனில் நேரிய வழியில் ஆன்மீக தேடல் இருக்கும்.
"பத்தாமிடத்தில் ஒரு பாவியாவது இருக்க வேண்டும் "என்ற நிலையில் 10-ஆம் இடத்தில் சனி +கேது இணைவு ஆன்மீக சார்ந்த விஷயங்களில் ஈடுபட்டு அதன் மூலமாக கிடைக்கும் ஜீவிதத்தில் வாழ்க்கை நகரும்.
உப ஜெய ஸ்தானமான பதினொன்றாம் இடத்தில் சனி +கேது இணைவு சாதகரை நல்ல வழியில் நேரிய வழியில் நல்ல சிந்தனையில் நோக்கி நகர வைக்கும்.
முக்தி ஸ்தானம் என்று அழைக்கப்படும் பனிரெண்டாம் இடத்தில் சனி+ கேது இணைவு மறு பிறப்பற்ற முக்தி நிலையை அடைக்க வைக்கும்.சனி கேது இணைந்து குரு பார்வை செய்கின்ற நிலையில் அவருடைய அந்திம காலம் இறை நாமத்தை ஜெபித்து கொண்டு நல்ல மகிழ்ச்சியான நிலையில் மரணத்தை அதாவது சித்தி நிலையை அடைவார்கள்.
நன்றி.!
(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)
வாட்ஸ் அப் & செல் & கூகுள் பே
097151 89647
மற்றொரு செல்: 7402570899
Email masterastroravi@gmail.com
அன்புடன்
சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்
M.Sc,M.A,BEd
(ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர்)
ஓம் சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.
No comments:
Post a Comment