Tuesday, 4 July 2023

குழியை பறித்து குப்புற தள்ளும் கோள்களின் நிலை

 குழியை பறித்து குப்புறம் தள்ளும் கோள்களின் நிலை.

  


செவ்வாய்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!


  ஒருவர் ஜாதகத்தில் இருள் கிரகமான சனி மற்றும் நிழல் கிரகமான ராகு ஆகிய இரு கிரகங்கள் தனி தனியாக அல்லது சேர்ந்து ஒரு ராசியில் நின்றாலும் அல்லது ஏதாவது ஒரு கிரகத்துடன் இணைந்து நின்றாலும் நிற்கின்ற அந்த பாவத்தையும் மற்றும் இணைந்த கிரகத்தையும் பாவத்துவ நிலைக்கு உட்படுத்தி விடும்.


  சனி பகவான் தன்னுடன் சேர்ந்த அல்லது பார்த்த எந்த கிரகத்தையும் பாவத்துவம் ஆக்கிவிடும் ஆனால்  செவ்வாய் பகவான் பாவ கிரகமாக இருந்தாலும் தனது நட்பு கிரகமான குரு , சந்திரன், சூரியன் ஆகியவற்றுடன் சேரும் போது அல்லது பார்வை செய்யும் போதும் கெடு பலனை செய்வதில்லை. ஆனால் செவ்வாய் பகவான் சனி, ராகு உடன் இணையும் போதும் அல்லது செவ்வாய் மற்றும் சனி ஒருவருக்கு ஒருவர் பார்க்கப்பட்ட நிலையிலும் அந்த பார்க்கப்படும் ஸ்தானங்களும் நிற்கின்ற வீடும் அந்த கிரகங்களுடன் இணைந்த கிரகங்களும் கூடுதலான பாவத்துக்கு உட்படும்..


     குரு பகவான் உடன் சனி அல்லது ராகு இணைந்தால் குரு சன்டாள யோகத்தை தருகிறது.இங்கு குரு பாவத்துவம் ஆகி தனது தசையில் கெட்ட பலனை தருகிறது.ஆனால் குரு பகவான் தன்னுடன் இணைந்த சனி அல்லது ராகு பகவானை சுபத்துவதிற்குக் உட்படுத்தி அதன் தசையில் நல்ல பலனைத் தர வைக்கிறது.ஆனால் குரு பகவான் பாவத்துவமாகி தனது தசையில் கெட்ட பலனை தருகிறது.


 குரு பகவான் உடன் சனி அல்லது ராகு இணையும் பொழுது தன நஷ்டத்தையும், புத்திர தோஷத்தையும் ,படிப்பில் பெரிய ஆர்வம் இல்லாத தன்மையும் மற்றும் ஆன்மீகத்துக்கு எதிரான நிலையும் சாதகருக்கு கொடுக்கிறது.


   சுக்கிரன் பகவான் உடன் சனி அல்லது ராகு இணையும் பொழுது தாமத திருமணத்தையும், தாம்பத்திய சுகத்தில் திருப்தி இல்லா தன்மையும் கொடுக்கிறது.இங்கும் சுக்கிரன் பாவத்துவமாகி தன்னுடன் இணைந்த சனி அல்லது ராகுவை சுபத்துவ படுத்துவார்.


 புதன் பகவான் தனித்த நிலையில் இயற்கை சுபராக திகழ்கிறார். புதன் பகவான் சனி அல்லது ராகுவுடன் இணையும்போது அவர் இயற்கை பவராக செயல்பட்டு கெட்ட பலனை  கொடுப்பார்.


 இருள் கிரகமான சனி பகவானுடனும் மற்றும் நிழல்கிரகமான ராகு பகவானுடன் செவ்வாய் இணையும் போது அந்த இடம் கூடுதலான பாவத்துக்கு உள்ளாகிறது. இத்துடன் தேய்பிறை சந்திரன் இணைந்தால் படுமோசம்.


  எந்த வீடாக இருந்தாலும் செவ்வாய், ராகு  மற்றும் தேய்பிறை சந்திரன் இணைந்து சனியால் பார்க்கப்பட்டாலும், அல்லது சனி, ராகு மற்றும் தேய்பிறை சந்திரன் இணைந்து செவ்வாயால் பார்க்கப்பட்டாலும் வேறு ஏதேனும் சுபத்துவம் கிடைக்காத நிலையில்  இந்த அமைப்பு அந்த சாதகருக்கு கடுமையான இன்னல்களை தரக்கூடிய அமைப்பாக அமைகிறது.


    அதிலும் குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் சனியின் வீடான மகர, கும்ப வீட்டில் செவ்வாய் , ராகு இணைந்து சனியால் பார்க்கப்பட்டாலும் மற்றும் செவ்வாயின் வீடான மேஷ ,விருச்சக வீட்டில் சனி , ராகு இணைந்து செவ்வாயால் பார்க்கப்பட்டாலும் அந்த இடம் அவர் பெற்ற லக்னத்தை பொறுத்து அதன் தசை காலங்களில் கூடுதலான கெடு பலனை கொடுத்து கஷ்டப்பட வைப்பார்.


 ஒரு வீட்டில் தேய்பிறைச் சந்திரன் சனி, ராகு இணைந்து நின்றாலும் அல்லது ஒரு பாவத்தையோ அல்லது கிரகத்தையோ சனி மற்றும் தேய்பிறை சந்திரன் இணைந்து பார்த்தாலும் அந்த கிரகமும் அல்லது பாவமும் கூடுதலான கெட்ட பலனை அடைகிறது.


 சனி பகவான் உடன் தேய்பிறைச்சந்திரன் இணைந்து பார்ப்பது இரண்டு சனி அந்த கிரகத்தை அல்லது பாவத்தை பார்ப்பதற்கு சமம் ஆகிறது.  ஒரு சனியின் பார்வையே சர்வ நாசத்தை உண்டாக்கும் என்றால் கூடுதலாக தேய்பிறை சந்திரனும் சேர்ந்து பார்க்கும் பொழுது வார்த்தைகளால் வர்ணிக்க இயலாத வேதனையை  அதன் தசை காலங்களில் சாதகர் அனுபவிக்க நேரிடும்.


 சூரியனும் சந்திரனும் இணைந்த அமாவாசைகளிலும் சூரியனுக்கு சமசுத்தமாக சந்திரன் இருக்கின்ற பௌர்ணமி நிலையிலும் ராகு  மற்றும் கேது போன்ற கிரகங்கள் இணையும் பொழுது அவை கிரகண தோஷத்தை உண்டாக்குகிறது. அமாவாசையின் போது சூரிய கிரகணமும் மற்றும் பௌர்ணமி காலங்களில் சந்திர கிரகணமும் உண்டாகிறது இது ஒரு வித வலிமை இழந்த அமைப்பாகும்.


  இன்னும் அமாவாசை மற்றும் பௌர்ணமி காலங்களில் சனி இணையும் பொழுதும் கூடுதலான பாவத்து நிலையை அவை அடைகிறது. என்னதான் முழு பௌர்ணமி ஆளுமை தன்மை மிக்க அமைப்பாக இருந்தாலும் அந்த பௌர்ணமி காலங்களில் சூரியனுடன் அல்லது சந்திரனுடன் சனி அல்லது ராகு இணையும் பொழுது அந்த பௌர்ணமி யோகத்தின் தன்மை மாறி அரசாங்கம் யோகம் மற்றும் ஆட்சி செய்யும் அதிகாரம் போன்ற அமைப்பை தர இயலாமல் போய் விடுகிறது.


 ஒளி கிரகமான சூரியன் மற்றும் சந்திரனுடன் சனி அல்லது  ராகு இணையும் பொழுது அதை அந்த ஒளி தன்மையை குறைப்பதோடு தந்தை மற்றும் தாய்க்கு ஆகாத நிலையினையும் அரசு வேலை கிடைப்பதை தாமதப்படுத்தக்கூடிய அமைப்பையும் ஆளுமை தன்மை அற்ற நிலையில் தருகிறார்.


 ஒரு குறிப்பிட்ட ஸ்தானமும் அல்லது கிரகமும் சனி, செவ்வாய், ராகு மற்றும் தேய்பிறை சந்திரன் போன்ற இயற்கை பாவ கிரகங்களால் பாதிக்கப்பட்டாலும் ஒற்றை குருவின் பார்வை அல்லது வளர்பிறை சந்திரன், தனித்த புதன் மற்றும் சுக்கிரன் ஆகியவற்றின் தொடர்பு முழு அமைப்பையும் சுபத்துவ நிலைக்கு உட்படுத்தி நல்ல பலனைத் தர வைக்கிறது.


நன்றி.


வாட்ஸ் அப் & செல் & கூகுள் பே

   097151 89647 

மற்றொரு செல்; 7402570899


Email masterastroravi@gmail.com


(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)

   



அன்புடன்

  சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன் 

      M.Sc,M.A,BEd

ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர், ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கறம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.

No comments: