ஆன்மீக அனுபவங்கள்.
செவ்வாய்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!
இன்றைய கால கட்டத்தில் எல்லாமே வெளி வேஷமாக போய் விட்டது.நெற்றி நிறைய திருநீறு பூசி கொண்டு கழுத்தில் உத்திராட்ஷ மாலை அணிந்து கொண்டு இருப்பதனாலேயே அவரை பக்திமான் என முடிவு செய்து விட முடியாது.அவரை நெருக்கமாக பழகி பார்த்தால் அவரது இருளான மற்றொரு முகம் தெரிய வருகிறது.
யோகா , தியானம் செய்தால் மனதை அடக்கி ஆள கூடிய தன்மை படைத்தவர்களாக இருப்பார்கள் என நெருங்கி பழகி பார்த்தால் அவர்களிடம் எவ்வித பயிற்சியும் செய்யாத மனிதன் பராவாயில்லை என எண்ண தோன்றுகிறது.இவர்கள் செய்யக்கூடிய தியானம் ,யோகா மற்றும் முத்திரை எல்லாம் மற்றவர்களின் பார்வைக்கு காட்டி கொள்ளவதற்காக செய்வது போல் தெரிய வருகிறது.
தினமும் கோவிலுக்கு சென்று சிவ வழிபாடு செய்பவராக வெளியில் காட்டிக்கொண்டு சிவனின் சொத்தை பாதி அபகரித்து வைத்து இருப்பார்.
சிலரது பக்தி கூட வெற்று வெளி பகட்டாக இருக்கும்.பக்தர்களே பார்த்து வியக்கும் படியாக பெரிய ஆளுயர மாலை , எலுமிச்சை பழ மாலை ,பலவித அபிஷேக ஆராதனைகள் மற்றும் கிடா பூஜை என மற்றவர் பார்த்து வியக்கும் படியான பெரிய பணக்காரர் என எண்ணும்படியாக பக்தி வழிபாடு எல்லாம் செய்து கலக்குவார்கள்.
சிலர் கோயில் பூசாரியிடம்
"என்ன வேண்டும் என்றாலும் கேளுங்கள்? நான் சாமிக்கு செய்கிறேன்" என்பார்கள்.சாமிக்கு செய்யும் அளவுக்கு நாம் பெரிய ஆட்கள் இல்லை என்பதை உணராமல் சொல்லுவார்கள்.சாமி தனக்கு வேண்டியதை யாரிடம் கொடுக்க வேண்டுமோ, அவர்களுக்கு கொடுத்து தனக்கு வேண்டியதை அவர் மூலமாக நிறைவேற்றி கொள்ளும்.
ஊருக்கு பெரிய மனிதனை போல காட்டி கொள்வதற்காக பிறர் அறிய அண்ணசத்திரம், தான தர்மங்கள், நன்கொடை கொடுத்தல் போன்றவற்றை சிறப்புற செய்து தன்னை புகழும் படியான தோரணையை உருவாக்கி கொள்வார். ஆனால் அடுத்தவர் சொத்தை அவருக்கே தெரியாமல் அபகரித்து கொள்வார்.
பெண்களை கண்டாலே எட்டி நிற்பவர் போல எட்டடி தள்ளி நிற்பார்.பணிவாக பேசுவார்.பல அப்பாவி அபலை பெண்களின் கற்பை சூரையாடி இருப்பார்.
நல்லவர்கள் பிறர் அறியும் படியான எந்த செயலை செய்ய நினைக்க மாட்டார்கள்.பார்ப்பதற்கு ஒன்றும் தெரியாதவன் போல இருப்பார்.பார்வைக்கு தெரியும் படியான பகட்டான விஷயங்களை செய்ய மாட்டார்கள்.இவர்கள் கடலின் ஆழத்தில் இருக்கும் முத்து போல இருப்பார்கள்.
இவர்கள் தங்களுக்குள் உண்மையாக இருப்பார்.இவர்கள் செய்யும் எந்த நற்காரியங்களும் வெளியில் யாருக்கும் தெரியும் படியாக இருக்காது.
"கண்டவர் விண்டிலர்
விண்டவர் கண்டிலர்"
உண்மையான இறை பக்தி என்பது தன்னுள் இறையை அறிய முயல்வது.இவ்வாறு அறிய செய்யும் முயற்சியில் பல ஜென்மங்கள் ஈடுபடலாம்.ஒரு சிலருக்கு வெகு விரைவாக அந்த நிலையை அடைந்து விடுகிறார்கள்.அவ்வாறு அந்த நிலையை அடைந்தவர்கள் வெளியில் யாரிடமும் காட்டி கொள்ள மாட்டார்கள்.பார்ப்பதற்கு சாதாரண மனிதர்கள் போல நம்முடன் வாழ்வார்கள்.இவர்கள் கடலின் அடி ஆழத்தில் இருக்கும் முத்து போன்றவர்கள்.ஒரு சிலர் முக்தி நிலையை அடைந்தது போல பெரிதாக அலட்டிக் கொள்வார்கள்.அவர்கள் நிச்சயமாக இல்லை.
அந்த சிறப்பு நிலையை அடைய கல்வி, அந்தஸ்து,சாதி போன்ற எதுவும் உதவி செய்யாது.இன்னும் சொல்லபோனால் நாம் இதுவரை கற்ற மற்றும் பெற்ற பல விஷயங்கள் கூட ஞானம் அடைய பெரிய தடையாக இருக்கும்.இறைவனிடம் சரணாகதி ஒன்றே சிறப்பான தகுதி நிலை ஆகும்.
நாயான்மார்களில் எவ்வித படிப்பறிவும் இல்லாத கண்ணப்ப நாயனார் தான் விரைவில் இறைநிலையை அடைய முடிந்தது.அவனது எந்த வித சந்தேகமும் இல்லாத சரணாகதி அவனை இறையின் முக்தி நிலையை அடைய முடிந்தது.
கோயிலுக்கு சென்று சாமி கும்படுதல் என்பது பக்தி வழிபாட்டின் துவக்க நிலை ஆகும்.இது ஒரு குழந்தை கல்வி பயில பாலர் பள்ளிக்கு (kindergarten) செல்வது போன்றது.பக்தியின் உயரிய நிலையை அடைய இன்னும் பல கட்டங்களை தாண்ட வேண்டி இருக்கும்.
தனக்குள் தான் யார் ? என்பதை கண்டறிய இயன்றால் அவர்கள் கோயிலுக்கு செல்ல தேவையில்லை.அவர்கள் இருக்கும் இடமே கோயிலாக மாறிவிடுகிறது.தன்னை அறிதல் கலையை உடையவர்கள் சந்தை கூட்டத்தில் இருந்தாலும் அந்த கூட்டத்தில் இருந்து விலகி தனிமை நிலை அடைவார்.
தனிமை நிலையில் இருப்பது என்பது தான் பலருடன் சேர்ந்து இருக்காமல் இருப்பது என முடிவு செய்து விடாதீர்கள்.நீங்கள் தனிமையில் அமர்ந்து கொண்டு உங்கள் அகத்தை உற்று நோக்குங்கள் மனதிற்குள் பலவித இரைச்சல்கள் இருப்பதை காணலாம்.உங்கள் மனதினுள் பலவித இரைச்சல்கள் சந்தை கூட்டத்தை போல காணப்படும்.
அதற்குள் கடந்த காலத்தில் நிகழ்ந்த மான அவமானங்கள்,பழி வாங்கும் எண்ணம், ...இது போன்று மனது ஒன்றுக்கு ஒன்று தொடர்பில்லாத பலவித எண்ண அலைகள் எழுந்து ஓய்வதை காணலாம்.
இன்னும் கூர்ந்து மனதை அடக்க நினைத்தால் அது இன்னும் முன்னிலும் கூடுதலாக துள்ளி குதித்து கொண்டு ஓடுகிறது.ஒருவரை நினைத்தவுடன் பலிவாங்க பலவித கற்பிதங்களை வடிவமைக்கிறது.ஒரு சிலரை கட்டி உறவாட நினைக்கிறது.
சில நேரங்களில் கடந்த காலத்தில் நடந்த பல்வேறு விஷயங்களை கவனத்திற்கு கொண்டு வருகிறது.அதில் நிகழ்ந்த வெற்றிகளை கண்டு சந்தோஷ் படுகிறது.ஏமாற்றங்களை எண்ணி துக்கப்பட வைக்கிறது.அவமானங்களை எண்ணி கோபப்பட வைக்கிறது.
சில நேரங்களில் எதிர் காலத்தில் தன்னை வெற்றி வீரனாக எண்ணி சந்தோஷப்பட வைக்கிறது.அவமானபடுத்தியவனை அல்லது தோற்க செய்தவனை தோற்கடித்து வெற்றி பெற்றது போல் சந்தோஷ பட வைக்கிறது.
ஆனால் மனம் நிலையாக நிகழ்காலத்தில் எவ்வளவு முயன்றாலும் ஓர் இடத்தில் நிற்க வைக்க முடியவில்லை.
எனவே மனதை அடக்க நினைக்காமல் அதன் போக்கிலே போக விட்டு வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்க வேண்டும்.கயிற்றை அவிழ்த்து கொண்டு ஓடும் மாட்டை அதன் போக்கிலே கயிற்றை பிடித்து கொண்டு ஓடி பிறகு கொஞ்ச தூரத்தில் இறுக்கி நிறுத்தி பிறகு மாடு தானாகவே தனது பிடிக்குள் வந்து சொல்வதை கேட்பது போல மனதை அதன் போக்கில் ஓட விட்டு வேடிக்கை காட்டி மூச்சு எனும் கயிற்றால் மெல்ல மெல்ல இறுக்கி கடைசியில் அது நாம் சொற்படி நடக்கும் படியாக செய்ய வேண்டும்.
இவ்வாறு இறைந்து கிடக்கும் மனதை பலவித பயிற்சியால் தியா ஒருமுகப்படுத்த பலவித சக்திகள் மனதிற்கு உண்டாகும்.
இதன் பிறகு ஒருவருக்காக மனதார வேண்டிக்கொண்டால் அவரது வேண்டுதல் பழிக்கும்.இவரது பக்தியில் எவ்வித ஏமாற்றுவதும் இருக்காது.
"உள்ளமே பெருங்கோவில்
ஊனுடம்பு ஆலயம்
வள்ளல் பிரானார்க்கு வாய் கோபுரவாசல்
தெள்ளந்தெளிந்தவர்க்கு சீவன் சிவலிங்கம்
கள்ள புலனைந்தும் காளா மணி விளக்கு"
மனதை உற்று நோக்கி மூச்சு பயிற்சி உடன் மன பயிற்சியும் செய்தால் நமது மெய்,வாய்,கண்,காது, மூக்கு ஆகிய ஐந்து புலன்களும் நாம் சொற்படி நடக்கும். ஐந்து புலன்களையும் கள்ள புலன்கள் என்கிறார்.ஏனெனில் நம் சொற்படி கேட்காமல் செயல்படும் என்பதால் ஆகும். சிலரைப் பார்க்காதே என்றால் மீண்டும் பார்க்கும். கேட்காத மற்றும் கேட்க கூடாத விஷயங்களை கேட்கும். ஆனால் இந்த ஐந்து புலன்களும் மனதின் வழியாக இயங்குவதால் மனதை அடக்க இந்த ஐந்து திருட்டுப் புலன்களும் நாம் சொல்படி கேட்கும். இப்போது ஐம்புலன்கள் மூலம் பெறப்பட்ட அறிவை பகுத்து அறியக்கூடிய பகுத்தறிவுக்கு அப்பாற்பட்ட ஏழாம் அறிவு( seventh sence) எனப்படும்
பகுத்தறிவுக்கு எட்டாத அப்பாற்பட்ட விஷயங்களும் நம் கண்ணிற்கு புலப்படும்.
நன்றி.
வாட்ஸ் அப் & செல் & கூகுள் பே
097151 89647
மற்றொரு செல்; 7402570899
Email masterastroravi@gmail.com
(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)
அன்புடன்
சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்
M.Sc,M.A,BEd
ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர், ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.
No comments:
Post a Comment