Thursday, 6 July 2023

பகைமை நிறைந்த கெட்ட எண்ணம் உடையவரை கண்டறிய இயலுமா?

 பகைமை நிறைந்த கெட்ட எண்ணம் உடையவரை கண்டறிய இயலுமா ?

   


செவ்வாய்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!


   ஒருவர் ஜாதகத்தை பார்த்தவுடன் பகைமை நிறைந்த கெட்ட எண்ணம் உடையவரை கட்டாயம் எளிதாக கண்டுபிடிக்க இயலும்.


ஒருவர் ஜாதகத்தில் லக்கனம் மற்றும் ராசி மற்றும் அதன் அதிபதி உடன் பார்வை மற்றும் சேர்க்கை போன்ற வகையில் தொடர்பு கொள்ளும் கிரகங்கள் எத்தகைய தன்மை வாய்ந்தது என்ற அடிப்படையில் ஒருவர் எப்படிப்பட்டவர் என்பதை கண்டறிந்து விடலாம்.


     ஒரு சிலர் நல்லவர் போல நடித்து நம்மை ஏமாற்றி நம் அருகே இருந்து கொண்டே நமக்கு நடக்கும் எல்லா பிரச்சினைகளுக்கும் அவரே காரணமாக இருப்பார்.


  ஒரு சிலர் கோடிக்கணக்கில் சொத்துக்கள் வைத்து இருப்பார்கள்..ஆனால் தனக்கு எதிரி அல்லது எதிர் வீட்டுக்காரர் ஒரு கார் வாங்கினால் கூட உயிர் போய் விடும்.தனக்கு எத்தனை கார் இருந்தும் அவர் ஒரு கார் வாங்கிய உடனே தனது நிம்மதி அனைத்தையும் இழந்து தவிப்பார்.தனக்கு ஒரு கண் போனாலும் பரவாயில்லை எதிரிக்கு இரண்டு கண் போக வேண்டும் ".


இவ்வாறாக பல தரப்பட்ட மனிதர்கள் நம் வாழ்வில் சந்திக்க நேரிடும்.


    ஒருவர் ஜாதகத்தில் லக்கனத்தில் சனி பகவான் இருந்தாலோ அல்லது லக்கனத்தை சனி பார்த்தால் கெட்ட குணம் உடையவராகவும் மற்றும் அடுத்தவர் வளர்ச்சியை கண்டு பொறாமை படக்கூடியவராகவும் திகழ்வார்.


லக்கனத்தில் செவ்வாய் இருந்து சனி பகவான் பார்வை பட்டாலோ அல்லது லக்கனத்தில் சனி பகவான் இருந்து செவ்வாய் பகவான் பார்வை செய்தாலும் முரட்டுதனமான குணம் உடையவராக காணப்படுவார்.இது போன்ற அமைப்பு உடையவர்கள் பிறரிடம் உள்ளதை வலுக்கட்டாயமாக பிடுங்கி பயன்படுத்தும் குணம் உடையவராக இருப்பார்.


    லக்கனத்தில் சனி ,ராகு மற்றும் தேய்பிறை சந்திரன் நின்று செவ்வாய் பகவான் பார்வையை பெற்ற அமைப்பு உடையவர்கள் தனக்கு ஒரு கண் பார்வை இழந்தாலும் எதிரிக்கு இரண்டு கண் போக வேண்டும் என்ற கொள்கை உடையவராக காணப்படுவார்கள்


  லக்கனத்தில் குரு பகவான் நின்றாலும் லக்னத்தை குரு பார்த்தாலும் நேரிய எண்ணம் உடையவராகவும் மற்றவருக்கு உதவி செய்யும் தாராள குணம் உடையவராகவும் மற்றும் திறந்த மனப்பான்மை உடையவராகம் திகழ்வார்.


   "சங்கு சுட்டாலும் வெண்மை தரும்" என்பார்கள். சிலர் என்னதான் கஷ்டமான சூழல் வந்தாலும் தன்னிலை மாறாமல் நேரிய வழியில் நடப்பார்கள்.லக்க்னத்தில் இயற்கை சுப கிரகங்கள் நின்ற நிலையில் அல்லது லக்கனாதிபதியே இயற்கை சுப கிரகமாக இருந்து நடப்பு தசை மற்றும் கோச்சார பலன்கள் அவ யோக அமைப்பில் இருந்தால் அதாவது ஆறு அல்லது எட்டு அல்லது அவ யோக தசைகள் நடப்பில் இருந்தாலோ அல்லது கோச்சார அடிப்படையில் ஏழரை அல்லது அஷ்டம சனி நடப்பில் இருந்தாலும் இது போன்ற தருணங்களில் கடுமையான கஷ்டங்களுக்கு உட்பட்டாலும் அத்தகைய நிலையில் தன்னிலை மாறாமல் நேரிய வழியில் நடக்க கூடியவராக இருப்பார்.


‌ லக்கனத்தில் பாவ கிரகங்கள் தொடர்பு பெற்றுள்ள நிலையிலும் சிலர் நல்ல குணம் படைத்தவர்களாக இருப்பதற்கான காரணம் என்ன என்று ஆய்வு செய்து பார்த்தால் ஒருவர் ஜாதகத்தில் லக்னத்தில் பாவ கிரகங்கள் இருந்தாலும் இயற்கை சுப கிரகங்கள் தொடர்பினை பெற்றுள்ள நிலையில் அந்த பாவ தன்மைகள் நீக்கப்பட்டு விடும்.ஆதலால் நல்ல தன்மை படைத்தவர்களாக இருப்பபார்கள்.


   ஒரு சிலர் ஜாதகத்தில் வாக்கு ஸ்தானமான இரண்டாம் இடத்தில் பாவ கிரகங்களான சனி, செவ்வாய் ,ராகு மற்றும் கேது இடம்பெற்று நின்றாலும் அல்லது சனி மற்றும் செவ்வாய் போன்ற பாவ கிரகங்கள் பார்த்தாலும் அவர் கொடுத்த வாக்கை காப்பாற்றக்கூடிய தன்மை அற்றவராகவும் இருப்பார்.இவர்கள் பேசியது ஒன்றாகவும்,செயல் வேறாகவும் இருக்கும்.


 

ஒருவர் ஜாதகத்தில் வாக்கு ஸ்தானமான இரண்டாம் இடத்தில் சனி மற்றும் செவ்வாய் இருந்தாலும் அல்லது சனி மற்றும் செவ்வாய் சேர்ந்து அல்லது தனித்தனியாக பார்த்தாலும் வேறு ஏதேனும் சுபத்துவம் கிடைக்காத நிலையில் கெட்ட வார்த்தைகள் அல்லது பிறர் மனம் நோகும் படியான வார்த்தைகளை பயன்படுத்துவார்கள்.ஆனால் அதே நேரத்தில் இயற்கை சுப கிரகங்கள் தொடர்பு கிடைக்க பலன்கள் மாறுபடும்.

எனவே விதிகளை மட்டும் கவனிக்காமல் விதிவிலக்குகளை தெரிந்து வைத்து இருந்தால்தான் ஜோதிட பலன்களை தெளிவாக கூற‌ இயலும்.


நன்றி


வாட்ஸ் அப் & செல் & கூகுள் பே

   097151 89647 

மற்றொரு செல்: 7402570899


(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)



அன்புடன்

   சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன் 

      M.SC,M.A,BEd

ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர், ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கறம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.

No comments: