உங்கள் கர்மா உங்களை வழி நடத்துகிறது- (KNOW YOUR KARMA)
செவ்வாய்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!
ஒரு சிலருக்கு கோடிக்கணக்கான பணம் சேர்ந்து இந்த பணத்தை என்ன செய்வது என்று தெரியாத அளவிற்கு வருமான வரித்துறையில் மாட்டிக் கொள்ளாமல் இருப்பதற்கு நகையாக மாற்றி மறைத்து வைப்பது , உறவினர்கள் மற்றும் நண்பர்கள் பெயரில் சொத்து வாங்கி போடுவது என்ற வகையில் இந்த பணத்தை என்ன செய்வது என்று தெரியாமல் முழிக்கும் நபர்கள் உள்ள அதே உலகத்தில் தான் அன்றாட அடிப்படை தேவைக்கு அல்லாடும் மனிதர்களும் இருக்கிறார்கள்.
இந்த மாதிரியான மாறுபட்ட நிலைக்கு அதாவது ஏற்ற தாழ்வுகளுக்கு காரணம் கடவுளின் படைப்பே காரணம் என்று சொல்லி ஒதுக்கி விட முடியாது.ஒருவருக்கு நடக்கும் நல்வினை மற்றும் தீவினைகளுக்கு அவர்களது ஊழ்வினை பயனே காரணம் ஆகும்.
ஒருவர் அவருடைய ஊழ்வினை பயன் காரணமாக இந்த உலகில் பிறப்பு எடுக்கிறார்.எனவே நாம் கர்ம பலனை அனுபவிக்கவே இந்த உலகில் பிறப்பாக பிறக்கின்றோம்.
மாணிக்கவாசகர் அருளிய சிவபுராணம் பாடலில் "மாய பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி" என்கிறார்.
இவ்வுலகில் மண்ணில் அவதரிப்பதையே மாய பிறப்பு என்கிறார்.இந்த மாய பிறப்பை அறுக்கும் மன்னன் ஆக சிவபிரானை போற்றுகிறார்.மனிதன் பிறந்து வளர்ந்து மறைந்து மறு பிறப்பை பெறுகிறான்.பிறப்பற்ற பெரு நிலை எய்த மனிதன் ஆசைகளற்ற நிலையில் இறக்க வேண்டும்.எந்த ஆசைகள் நிறைவேறாமல் ஏக்கத்துடன் இறக்க பயந்து இறக்கிறானோ அதுவே மறுபிறப்புக்கு வழி வகுக்கிறது.
ஒரு குழந்தை பிறக்கும் போது அழுது கொண்டே பிறக்க சுற்றியுள்ள மனிதர்கள் அனைவரும் மகிழ்ச்சியான நிலையில் வரவேற்பார்கள்.அதே போல அந்த மனிதன் இறக்கும் போது முழுமனதுடன் மனநிறைவோடு மகிழ்ச்சியான மனநிலையில் உயிர் போக சுற்றியுள்ள மக்கள் அனைவரும் அழுது புலம்புவார்கள்.
கண்ணதாசன் தான் சொல்லுவார் தனது அர்த்தமுள்ள இந்து மதம் நூலில்" மூன்று பக்கம் நீர் நிறைந்த கடலை தந்து குடிக்க முடியாமல் செய்து விட்டு ஒரு பக்கம் தண்ணீருக்கு அல்லாடும் நிலையினை தந்தது யார் ? என்று நம்மிடம் கேள்வி கேட்கிறார்.
காசு பணம் இல்லாத காலங்களில் கூழ் குடித்து கொண்டு மீன் ,கறி போன்ற விதமான உணவுக்கு ஏங்கி அதற்காக கஷ்டப்பட்டு உழைத்துப் போராடி பணத்தை சேர்த்த பிறகு நீரிழிவு நோய், குறை இரத்த அழுத்தம் வந்து மருத்துவர்கள் கறி ,மீன் சாப்பிடக்கூடாது .கூழ் மட்டுமே குடிக்க வேண்டும் என்று மருத்துவர் கூறிய பிறகு எதற்காக ஏங்கி உழைத்தோமோ அந்நிலை அடைந்த பிறகு அதை தவிர்க்க வேண்டிய சூழ்நிலையை பாருங்கள்.
உங்களுடைய ஜாதகத்தினை பார்த்து நீங்கள் இந்த பிறப்பில் எந்த மாதிரியான வாழ்வினை வாழ சிருஷ்டிக்கபட்டிருக்கிறீர்கள் என்பதை தெளிவாக தெரிந்து கொள்ளலாம்.
எந்த கிரகம் உங்களை அதிகமாக வழிநடத்த போகிறது என்பதை வைத்து நீங்கள் எவ்வித வாழ்வினை வாழ போகிறீர்கள் என்பதை சொல்லி விடலாம்.எவ்வித சவாலை சந்திக்க போகிறீர்கள் என்பதை கண்டறியலாம்.
பிறப்பின் நோக்கத்தை உங்கள் ஜாதகத்தில் 12 ராசிகளில் 9 கிரகங்கள் 27 நட்சத்திர பாதத்தில் கொண்டு அமர்ந்திருக்கக் கூடிய விதத்தை வைத்து உங்கள் பிறப்பின் ரகசியத்தை துல்லியமாக கண்டறிய இயலும்.
முன் பிறப்பில் அவரவர் செய்த நல்வினை மற்றும் தீய வினைக்களுக்கு ஏற்பவே இப்பிறவியில் பிறப்பாக பிறப்பு எடுக்கிறோம்.இதற்கு ஏற்ற அமைப்பில் கிரகங்கள் சஞ்சாரம் செய்கின்ற வேளையில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் குறிப்பிட்ட பெற்றோருக்கு பிள்ளையாக பிறக்கின்றோம்.
ஒருவர் எதை நோக்கிப் பயணமாக இருக்கும் என்பதை ஜாதக கட்டத்தில் உள்ள கிரகங்களும் , தசை புக்தி மற்றும் கோச்சார பலன்களும் முடிவு செய்கிறது.
ஒரு மனிதன் வாழ்வில் எதிர்பாராத பல திருப்பங்களை கொண்டிருக்கும்.வாழ்வின் கடைநிலை வாழ்வியல் பொருளாதார வீடுகளில் படிக்காத பெற்றோர்களுக்கு பிறந்து பிறந்து உகந்த தசா மற்றும் கோச்சார பலன்களை தக்க சமயத்தில் தந்து வாழ்வின் உச்ச நிலைக்கு கொண்டு செல்வதும் உண்டு.
"இறைவன் எப்பொழுதும் பாதை முழுவதும் பூக்களே நிறைந்து இருக்கும் என்று வாக்கு தரவில்லை.". வாழ்வில் ஏற்ற , இறக்கங்கள் இரண்டும் கலந்தே தான் இருக்கும்.
ஏதோ லட்சத்தில் ஒருவருக்கு தான் பிறப்பிலிருந்து இறக்கும் வரை ராஜ யோக அமைப்பில் வாழ்ந்து மறைவார்கள்.
கிராமத்தில் பழமொழி ஒன்று உண்டு.
"மூன்று தலைமுறை வாழ்ந்தவனும் இல்லை.மூன்று தலைமுறை அழிந்துவனும் இல்லை".
எனவே ஒவ்வொருவரும் நமது கர்ம வினையை அனுபவிக்கவே பிறந்து இருக்கிறோம்.கர்ம வினை கண்டு நொந்து கொள்ளாமல் மற்றும் கர்ம வினையால் உயர்ந்த நிலையில் இருந்தால் ரொம்ப ஆடிவிடாமல் சீராக வாழ்ந்து சிறப்பாக அடுத்த பிறவிக்கு தயாராகுவோம்.
நன்றி.
வாட்ஸ் அப் & செல் & கூகுள் பே
097151 89647
மற்றும் ஒரு செல் ; 7402570899
(தங்களது ஜாதக பலன், திருமண 💒 பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)
அன்புடன்
சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்
M.Sc,M.A,BEd
ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர், ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.
Email masterastroravi@gmail.com
No comments:
Post a Comment