ஒருவர் செய்யும் தொழில் மூலம் பெரும் பொருள் ஈட்ட ...?
செவ்வாய்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!
"திரைகடல் ஓடியும் திரவியம் தேடு" என்பார்கள். ஒரு மனிதன் ஒரு குறிப்பிட்ட பருவத்தை எய்திய பிறகு அவன் வாழ்வை சிறப்பாக அமைத்திட ஏதாவது ஒரு வகையில் பொருள் ஈட்ட வேண்டும்.
இந்த காலகட்டத்தில் பொருள் ஈட்டுவது என்பது எளிதான காரியம் அல்ல. அடுத்தவர் கையில் உள்ள பணத்தை நாம் கல்லாவில் நிரப்ப அதற்கென்று பிரத்தியேகமான ஒரு மூளை தேவைப்படுகிறது.
போட்டி நிறைந்த உலகில் ஒரு தொழிலை ஆரம்பித்து அதில் வரும் எதிர்ப்புகள் மற்றும் தொழில் போட்டிகளை எதிர் கொண்டு வெற்றி பெற அந்த தொழில் சார்ந்த பெரிய ஞானம் தேவையாக இருக்கிறது.எல்லாவற்றிற்கும் மேலாக அந்த தொழிலை தொடங்க காலம் நேரம் ஒத்துழைக்க வேண்டும்.
தனது மூளை உழைப்பின் மூலம் இருந்த இடத்திலிருந்து எவ்வித உடல் உழைப்பையும் கொடுக்காமல் மாதத்திற்கு லட்சக்கணக்கில் அல்லது கோடிக்கணக்கில் பணம் சம்பாதிப்பவரும் உண்டு. ஒரு சிலர் காலையிலிருந்து மாலை வரை முழு உடல் உழைப்பை கொடுத்து அந்த உடல் உழைப்புக்கு ஏற்ற சம்பளத்தை கூட பெற இயலாத நிலையில் இருப்பவர்கள் பலர் உண்டு.
இது போன்ற மாறுபட்ட நிலைகளுக்கு காரணம் என்ன என்று ஆய்வு செய்து பார்த்தால் அவர்கள் பிறந்த நேரத்தில் ஜாதக கட்டத்தில் கிரகங்கள் சஞ்சாரம் செய்யும் நிலையே காரணமாக அமைகிறது.
ஒருவர் தொழில் செய்து பிழைக்க வேண்டுமென்றால் அவர்கள் ஜாதகத்தில் ஜீவனஸ்தானம் அல்லது தொழில் ஸ்தானம் என்று அழைக்க கூடிய பத்தாம் இடம் வலுப்பெற்று இருக்க வேண்டும்.இதேபோல தொழிலுக்கு காரக கிரகமான சூரிய பகவான் பனைமடைந்த நிலையில் இருக்க வேண்டும்.
ஒரு சிலர் இருந்த இடத்திலிருந்து இணையத்தில் (internet) வழியாக மாதத்திற்கு லட்சம் அல்லது கோடிக்கணக்கான பணத்தை ஈட்டுபவர் ஜாதகத்தை ஆராய்ந்து பார்த்தால் அவருடைய ஜாதகத்தில் வித்தை காரகன் என்று சொல்லக்கூடிய புதன் பகவான் வலுப்பெற்று மற்றும் சுபத்துவம் அடைந்து தொழிற் ஸ்தானமான பத்தாம் இடத்தோடு தொடர்பு கொண்டு வளர்பிறை சந்திர கேந்திரத்தில் அல்லது குரு பகவான் பார்வையில் புதன் பகவான் அமர்ந்திருக்கும்.
சிலர் வண்டி வாகனத்தின் (transfort) மூலமாக பெரும் தனம் ஈட்ட அவர்களது ஜாதகத்தில் நான்காம் இடம், அதன் அதிபதி மற்றும் சுக்கிரன் பகவான் ஆகிய மூன்று நிலைகளும் வலுப்பெற்று யோக தசைகள் நடப்பில் இருக்க வேண்டும்.
சிலர் நடனம்,சினிமா , சமூக ஊடகங்களின் வழியாக( media) பெரும் தனம் ஈட்ட அவர்கள் ஜாதகத்தில் கலை காரகன் சுக்கிரன் பலமடைந்து இருக்க வேண்டும்.பலம் மற்றும் சுபத்துவ நிலையில் தொழில் ஸ்தானத்துடன் தொடர்பு கொண்ட நிலையில் யோகம் தரும் தசை நடப்பில் இருக்க வேண்டும்.
சிலர் எழுத்து இசை, பாடல் ,கதை, பத்திரிகை, கவிதை எழுதுதல் , கணிதம் , கணினி,பேச்சு மூலமாக பெரும் தனம் ஈட்ட வளர்பிறை சந்திர கேந்திரத்தில் புதன் பகவான் வலுவடைந்து இருக்க வேண்டும்.
உணவகங்கள் மூலமாக பெரும் தனம் ஈட்ட சுக்கிரன் பகவான் பலமடைந்து இருக்க வேண்டும்.
ஒருவர் ஜாதகத்தில் செவ்வாய் பலமடைந்து சுபத்துவ நிலையில் தொழில் ஸ்தானத்துடன் தொடர்பு கொள்ள மருத்துவம் ,போலிஸ் , ராணுவம், சீருடை பணியாளர், செங்கல்,மண் ,ஜல்லி போன்ற
கட்டுமானப் பொருட்கள், விவசாயம், ரியல் எஸ்டேட் போன்ற வகையிலான தொழிலில் ஈடுபட்டு பெரும் பணம் சம்பாதித்து சொத்து வாங்கி சேர்க்கும் யோகம் உண்டாகும்.
ஒருவர் ஜாதகத்தில் சனி பகவான் அதிக சுபத்துவமான நிலையில் JCB போன்ற கனரக வாகனங்கள், சுரங்கம் போன்ற புதை படிவங்கள், குடிக்க இயலாத திரவமான பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய்,இவை தவிர நிலக்கரி,ஆட்டோமொபைல், செப்டிக் டேங்க், பிணம் தூக்கும் வண்டி போன்ற வகையில் தொழில் செய்து பெரும் பணம் சம்பாதித்து சொத்து வாங்கி சேர்க்கும் யோகம் உண்டாகும்.
ஒருவர் ஜாதகத்தில் சந்திரன் பகவான் அதிக சுபத்துவமாகி தொழில் ஸ்தானத்துடன் தொடர்பு கொள்ள பால், ஐஸ்கிரீம்,கூல்டிரிங்ஸ்,,இறால்,மீன்,சிப்பி
நண்டு போன்ற நீர் வாழ் உயிரினங்களின் வளர்ப்பு,உப்பாளங்கள், போன்றவற்றின் வாயிலாக பெரும் பணம் ஈட்ட முடியும்.
நன்றி
வாட்ஸ் அப் & செல் & கூகுள் பே
097151 89647
மற்றொரு செல்: 7402570899
Email masterastroravi@gmail.com
(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)
அன்புடன்
சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்
M.Sc,M.A,BEd
ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர், ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.
No comments:
Post a Comment