ஆரோக்கியமான வாழ்விற்கு... ஜோதிடம் தரும் பதில் தான் என்ன?
செவ்வாய்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!
"சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும்"என்பார்கள்.
A sound body gives you sound mind" உடம்பு நன்றாக இருந்தால்தான் உள்ளம் நன்றாக இருக்கும்.
திருமூலர் தனது திருமந்திரத்தில்
"உடம்பார் அழியின் உயிரார் அழிவார் திறம்பட மெய்ஞானம் சேரவும் மாட்டார்
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே உடம்பை வளர்த்தேன்!
உயிர் வளர்த்தேனே !"
இன்றைய கால கட்டத்தில் உடலால் வரும் நோய்களை விட மனதினால் வரும் நோய்களே அதிகம் ஆகும்.
ரத்த அழுத்தம் சர்க்கரை இரத்த கொழுப்பு போன்றவை மனதினால் வரக்கூடிய நோய்கள் ஆகும் இவற்றை குறைபாட்டு நோய்கள் என்று அழைக்கப்படுகிறது.
உணவினால் வரும் நோய்களை தக்க மருந்தினை பயன்படுத்துவதன் மூலமாக விடுபடலாம்.ஆனால் இந்த மனதினால் வரும் நோய்கள் வர விடாமல் தடுக்க உடற் பயிற்சி,யோகா , தியானம் போன்றவற்றின் மூலமாகவும், சரியான உணவு முறைகள் மாற்றம் மற்றும் சரியான தூக்கம், போன்றவற்றின் மூலமாக அதிக பாதிப்புகளுக்கு உட்படுத்தாமல் வெளி வர இயலும்.
ஒருவர் ஜாதகத்தில் உயிர் மற்றும் உடல் என்று அழைக்கப்படும் லக்கனம், ராசி மற்றும் அதன் அதிபதி வலிமை பெற்று நின்றால் என்னதான் மனம் மற்றும் உடல் நோய்கள் வந்தாலும் அதிலிருந்து எதிர் நீச்சல் அடித்து அந்த நோயின் தாக்கத்திலிருந்து தப்பித்து உயர் பிழைக்க இயலும்.
எவர் ஒருவர் ஜாதகத்தில் லக்னாதிபதி உச்சம்,ஆட்சி போன்ற நிலைகளில் கேந்திர கோணங்களில் நின்று வலிமையை அடைந்து கேந்திர கோணங்களில் நின்று இயற்கை சுப கிரகங்களால் பார்க்கப்பட்டால் அவர் உடல் வலிமை பெற்று எவ்வளவு வியாதிகள் எதிர் நீச்சல் போட்டு மனம் தளராமல் அந்த வியாதியிலிருந்து விடுபடுவார்.
ஒரு நோய் தாக்கத்திலிருந்து விடுபட வேண்டும் எனில் முதலில் நோயாளிக்கு அந்த நோயிலிருந்து விடுபடுவோம் என்ற ஆழ்ந்த நம்பிக்கை இருந்தால்தான் மருத்துவர்களால் அந்த நோயின் தாக்கத்திலிருந்து வெளி கொணர இயலும்.தன்னம்பிக்கை கைவிட்ட ஒரு நபரை என்னதான் மருத்துவ விஞ்ஞானம் பல்கி பெருகி இருந்தாலும் அந்த நோயின் தாக்கத்திலிருந்து வெளி கொணர இயலாமல் போய் விடுகிறது. அந்த தன்னம்பிக்கை அளவீடு மிகவும் முக்கியமானது ( confident level is very important. ).
தன்னம்பிக்கையை மட்டும் இழந்தால் மருத்துவர்கள் அவருடைய உயிரை அல்லது அந்த நோயை குணப்படுத்த இயலாது ( One man who lose your confident level Doctors can not recover his disease ).
ஒரு மனிதனுக்கு அந்த தன்னம்பிக்கை அளவீட்டை நிர்ணயம் செய்வது லக்கனாதிபதி , லக்கனத்திற்கு காரகரான ஆத்மா காரகன் சூரியன் மற்றும் மனநிலை காரகன் சந்திரன் ஆகிய மூன்று கிரகங்களும் வலிமையாக( பாவத்துவம் அல்லது பலவீனம் அடையாமல்) இருப்பவர்களுக்கு மேற்குறிப்பிட்ட வகையான உறுதியான தன்னம்பிக்கை உடையவர்களாக இருப்பார்கள்.
கவிஞர் தேசிய விநாயகம் பிள்ளை அவர்கள் உடல் நலம் பேணல் பற்றிய அழகான பாடலை தந்துள்ளார்.
"காலை மாலை உலாவி
நிதம் காற்று வாங்கி வருவோரை
காலை தொட்டு கும்பிட்டு
காலன் ஓடி போவானே ! " என்கிறார்.
(இங்கு காலன் என்பது எமன் ஆகும்.)
அதிகாலை எழுந்து வெற்று உடலில் மூச்சு பயிற்சி, தியானம் மற்றும் யோகா போன்றவை செய்து விட்டு வெளிகாற்றை வாங்கி கொண்டு சிறிது நேர நடப்பயிற்சியை நாள்தோறும் செய்து வந்தால் நல்ல உடல் மற்றும் மனநலத்தை பெறலாம்.
ஒருவர் தனக்கு வரக்கூடிய வியாதியைப் பற்றி அறிந்து கொள்ள ஒரு ஜாதக கட்டத்தில் ருண ரோக மற்றும் சத்ரு ஸ்தானம் என்று அழைக்கக்கூடிய ஆறாம் இடத்தை ஆய்வு செய்து பார்க்க வேண்டும்.ஆறாம் இடத்திற்கு நோய்க்கு காரக கிரகம் சனி பகவான் ஆகும்.
ஒருவர் ஜாதகத்தில் லக்னாதிபதியை விட ஆறாம் இட அதிபதி வலுப்பெற்று நிற்க கூடாது. அவ்வாறு இருந்தால் அவர் நோய் நொடிக்கு ஆளாகுவார்.
ஆறாம் இடத்தில் சனி அமர்வதும் ஆறாம் இடத்தை சனி பார்ப்பதும் ஜாதகருக்கு நல்லது. ஆறாம் இடத்துக்குரிய கெட்ட பலனை அவை குறைக்கும்.
ஆனால் அதே நேரத்தில் ஆறாம் இடம் அதிக பாவத்துவமும் அடையக் கூடாது. அதாவது ஆறாம் இடத்தில் செவ்வாய் மற்றும் ராகு அமர்ந்து ஆறாம் இடத்தை சனி பார்த்தால் அதிக கெடுதலை உண்டு பண்ணும். இது அதன் தசை காலங்களில் கூடுதலான கெடுதலை தரக்கூடிய அமைப்பில் இருக்கும்.
ஆறாம் இட அதிபதி சூரியனாக இருந்தால் வயிற்று வலி, அரையாப்பு சொரி சிரங்கு ,உஷ்ணம் சம்பந்தப்பட்ட வியாதிகள், தலை வலி போன்றவை ஆகும்.
ஆறாம் இட அதிபதி சந்திரன் பகவானாக இருந்தால் அஜீரண கோளாறு, சீதம், வயிற்றுப்போக்கு மற்றும் உதிரம் சம்பந்தப்பட்ட வியாதிகள்.ஆகும்.
ஆறாம் விட அதிபதி செவ்வாய் பகவானாக இருந்தால் வாந்தி, தலைவலி, மண்டை இடி, புரடிவெட்டு மற்றும் வெட்டு காயம் போன்றவை ஆகும்.
ஆறாம் இட அதிபதி புதன் பகவானாக இருந்தால் கை, கால், முடக்கல் எனும் வாயு சம்பந்தப்பட்ட வியாதி கழுத்தில் புண், மற்றும் நரம்பு சம்பந்தப்பட்ட வியாதிகள்.
ஆறாம் இட அதிபதி குரு பகவான் ஆக இருந்தால் யோகம், மர்மஸ்தான வியாதிகள், உதிரப்போக்கு ,அரசர்களால் காயம், நெஞ்சில் இருந்து மற்றும் அடி வயிற்று வலி போன்றவை வரும்.
ஆறமிட அதிபதி சுக்கிரன் பகவனாக இருந்தால் கட்டி ,பிளவை, மூல நோய், பெண்களால் புருஷநோய், சூலை நோய்,, மற்றும் பாலியல் நோய் போன்றவைகள் வரும்.
ஆறாம் இடம் அதிபதி சனி பகவான் எனில் வாத நோய், சூலை நோய் ,எலும்பு உருக்கி,வாத நீர் போன்றவை ஆகும்.
ஆறாம் இடத்தில் ராகு மற்றும் கேது பகவான் இருந்தால் விஷ பூச்சிகள் மயக்கம், பிசாசு ,பீடை மற்றும் துற்பிணி முதலியவை வரும்.
எனவே ஒருவர் ஜாதகத்தில் ஆறாம் இட அதிபதி தசை அல்லது ஆறாம் இடத்தில் உள்ள கிரகங்களின் தசை நடக்கும் போது ஒரு மனிதனுக்கு அவை சார்ந்த நோய் வரும்.இதே போல கோச்சார அடிப்படையில் அர்த்தாஷ்டம சனி , ஏழரைச்சனி மற்றும் அஷ்டம சனி போன்றவை வரும் பொழுதும் மனம் அழுத்தம் தரக்கூடிய வியாதிகள் சாதகருக்கு வரும்.இது போன்ற தருணங்களில் லக்கனாதிபதி வலுவாக இருந்தால் அந்த குறிப்பிட்ட தசை மற்றும் கோச்சார காலத்தில் அந்த வியாதிகள் வந்தாலும் அதிலிருந்து போராடி அந்த காலகட்டம் முடிந்த பிறகு மீண்டும் புத்தொளி பெறுவார்.லக்கனாதிபதி வலுவாக இல்லாமல் ஆறாம் இடம் அதிபதி வலுவாக இருந்தால் அந்த காலகட்டத்தில் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி அதனை தொடர்ந்தும் அந்த நோயின் தாக்கம் குறிப்பிட்ட காலம் வரை நீடிக்கிறது.
ஒருவர் நோயை குணப்படுத்தும் மருத்துவராக இருந்தால் அவரது கிரக நிலைகளை ஆய்வு செய்து அதற்கு ஏற்றார் போல் மருத்துவம் செய்தால் நோயாளியை நோயிலிருந்து வெளி கொணர முடியும்.
ஒரு மருத்துவர் நோயாளியை நோயிலிருந்து வெளி கொணர வான் புகழ் கொண்ட வள்ளுவ பெருந்தகை சொல்லும் வழிமுறையை கையாள வேண்டும்.
"நோய்நாடி நோய்முதல் நாடி அது தணிக்கும் வாய் நாடி வாய்ப்பச் செயல்"
தனது குறட்பாவில் ஒரு மருத்துவர் நோய் இன்னதென்று ஆராய்ந்து, அந்த நோய் வந்ததற்கான காரணத்தையும் ஆராய்ந்து ,அந்த நோயை போக்கும் வழிமுறையை அந்த நோயாளியின் உடலின் தன்மைக்கு ஏற்ப வைத்தியம் செய்ய வேண்டும் என்கிறார்.
நோய் - நோய்க்கான காரணம் -தீர்க்கும் வழிமுறை அவரவர் உடலுக்கு ஏற்றபடி வைத்தியம் இந்த நான்கு வழிமுறையை ஜோதிட மற்றும் அறிவியல் அடிப்படையில் ஆய்வு செய்து வைத்தியம் பார்க்கும் போது அதனால் கிடைக்கும் பலன் பயனுள்ளதாக இருக்கும்.
நன்றி.
வாட்ஸ் அப் & செல் & கூகுள் பே
097151 89647
மற்றொரு செல்: 7402570899
Email: masterastroravi@gmail.com
(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)
அன்புடன்
சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்
M.Sc,M.A,BEd
(ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர்,)
ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.
No comments:
Post a Comment