ஒருவர் அந்த விஷயத்தில் கில்லியாக தூள் கிளப்ப ?
செவ்வாய்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!
இல்லறம் என்பது கணவன் மனைவி இருவரும் ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து குடும்ப வாழ்விலும் மற்றும் சிற்றின்ப வாழ்விலும் பரஸ்பர அன்பும் மற்றும் ஆதரவுடனும் செயல் பட வேண்டும்.
வான் புகழ் கொண்ட வள்ளுவ பெருந்தகை தொடாத சப்ஜெக்ட் கிடையாது.செக்ஸ் லைஃப் பற்றியும் அழகாக சொல்லி இருப்பார்.
காம வாழ்வில் வெற்றி பெற வள்ளுவர் தரும் சூத்திரம் படித்து பயன் பெறுங்கள்.
"ஊடலில் தோற்றவர் வென்றார் அதுமன்னும் கூடலிற் காணப்படும்"
ஊடலில் தோற்றவரே வென்றார்.இநத உண்மை ஊடல் முடிந்து கூடும்போது அறியப்படும் " என்பார்.
ஒருவர் அந்த விஷயத்தில் கில்லியாக இருக்க வேண்டும் எனில் ஜாதகத்தில் சுக்கிரன் பகவான் வலிமை என்பது மிகவும் குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.
சுக்கிரன் என்பவர் தனக்கு வரும் வாழ்க்கை துணையை கணிக்க உதவும் களத்திர காரக கிரகம் ஆகும்.
சுக்கிரன் என்பவர் வாழும் பருவத்தில் மனிதனுக்கு தேவையான மனைக்கும் மற்றும் மனையாளுக்கும் மிகவும் முக்கியமான காரக கிரகம் ஆகும்.
ஜாதகத்தில் சுக்கிரனின் நிலையினை கொண்டு அவர் எந்த அளவுக்கு தாம்பத்திய சுகத்தை அனுபவிக்க பிறந்தவர் என்பதை கண்டறிய இயலும்.
ஒருவர் ஜாதகத்தில் தனக்கு வரக்கூடிய வாழ்க்கை துணையை குறிக்க ஏழாம் இடம் மிகவும் முக்கியமானது ஆகும்.இந்த வாழ்க்கை துணை ஸ்தானமான ஏழாம் இடத்திற்கு காரகன் ஆக சுக்கிரன் பகவான் திகழ்கிறார்.
ஒருவர் காம வாழ்வில் வெற்றி பெற அவரது ஜாதகத்தில் காம திரிகோண ஸ்தானமான மூன்றாம் இடம், ஏழாம் இடம் மற்றும் பண்ணிரெண்டாம் இடம் மற்றும் கிரகங்களில் சுக்கிரன் ஆகிய நிலைகளை ஆய்வு செய்வதன் அடிப்படையில் கண்டறியலாம்.
இன்றைய கால கட்டத்தில் நூறு சதவீத திருப்தியான நிலையில் தாம்பத்திய சுகத்தை பெரும்பாலான தம்பதிகள் அனுபவிப்பதில்லை.வேண்டா வெறுப்பான மனநிலையுடன் வேறு வழியின்றி காம சுகத்தை தனது வாழ்க்கை துணையுடன் அனுபவிக்கிறார்கள்.இன்றைய மக்கள் தொகையில் நான்கு சதவீதம் பேர் தாம்பத்திய சுகத்தை பிறருக்கு கொடுக்க இயலாதவர்களாக உள்ளார்கள்.
தம்பதிகள் இருவருக்கும் மன ரீதியான ஈர்ப்பு இருந்தாலோழிய அவர்களது காம சுகம் சாந்தி செய்யப்படும்.இதனால்தான் திருமணம் ஆன தம்பதிகள் சந்திக்கும் முதல் இரவினை "சாந்தி முகூர்த்தம்" என்று அழைத்தார்கள்.
மனதளவில் ஒட்டுதல் இல்லாத கூடலால் எவ்வித திருப்தியும் மற்றும் மன சாந்தியும் கிடைப்பது கிடையாது.
மனதளவில் முழு திருப்தி அடையாத காம ஈடுபாடு உடையவர்கள் தடம் புரள வாய்ப்பை உருவாக்கி தந்து விடுகிறது.
சுக்கிரன் பகவானை ஒருவர் ஜாதகத்தில் பலமான அமைப்பில் சுபத்துவ நிலையில் பிறந்தவர்கள் காம சுகத்தை தனது மனைவியுடன் முழு திருப்தியாக அனுபவிக்க பிறந்தவர்கள் ஆவார்.
ஒருவர் ஜாதகத்தில் சுக்கிரன் உச்சம் பெற்று நின்றால் பல மனைவியுடன் தாம்பத்திய சுகத்தை அனுபவிக்க பிறந்தவர் ஆவார்.சுக்கிரன் நீசம் பெற்று நின்றால் ஒரு மனைவி என் வேடிக்கையாக சொல்வது உண்டு.
ஆனால் அதே நேரத்தில் சுக்கிரன் நீசம் பெற்று சனி, செவ்வாய், ராகு மற்றும் கேது போன்ற பாவ கிரகங்கள் சேர்க்கை ஜாதகரை தவறான வழியில் ஈடுபட்டு தன்னை விட தாழ்ந்த அல்லது சொல்லி கொள்ள வெட்க படக்கூடிய உறவு நிலைகளுடன் அருவருக்கத்தக்க வகையில் சிற்றின்ப உறவு கொள்ள வைத்து அவமான பட செய்யும்.
சுக்கிரன் ஒருவருக்கு காம சுகத்தை தரக்கூடிய கிரகம் ஆகும்.ஒருவர் காம சுகத்தை தரக்கூடிய உறுப்பின் வீரியம் பற்றி அறிய உமது ஜாதகத்தில் செவ்வாய் பகவானையும் கவனிக்க வேண்டும்.செவ்வாய் காம வீரியத்தை குறிக்கும் கிரகம் ஆகும்.குரு பகவான் ஒருவரது உயிர் அணுக்களை குறிக்க கூடிய கிரகம் ஆகும்.ஒருவர் ஜாதகத்தில் புதன் பகவானும் வலிமையாக இருக்க வேண்டும்.புதன் பகவான் பலம் இழந்து நின்றால் ஒருவருக்கு நரம்பு தளர்ச்சி உண்டாகும்.நரம்பு தளர்ச்சி உடையவர்கள் தாம்பத்திய விஷயத்தில் சரியாக ஈடுபட முடியாது.
ஒருவர் ஜாதகத்தில் சுக்கிரன் பகவான் பாவத்துவம் அல்லது பலவீனம் அல்லது பலவீனமான நிலையில் பாவத்துவம் அடைந்த நிலையில் ஒருவருக்கு தாம்பத்திய சுகத்தை அடைய இயலாது.
பாவத்துமான அல்லது பலவீனமான சுக்கிரன் தசை நடப்பில் உள்ள காலங்களில் பலர் தடம் மாறி விடுகிறார்கள்.
சுக்கிரன் உடன் செவ்வாய் சேர்க்கை காதல் உணர்வுகளை தூண்டி பெற்றோர் உணர்வுகளை மதிக்காமல் காதல் என்ற பெயரில் தவறான முடிவுகளை எடுத்து விடுகிறார்கள்.
சுக்கிரன் உடன் சனி, செவ்வாய், ராகு மற்றும் தேய்பிறை சந்திரன் சேர்க்கை அல்லது பார்வை போன்ற தொடர்பால்
3,7 12 ஆம் இடங்களில் ஏற்பட்டு விட்டால் பல மலரில் தேன் உறிஞ்சும் வண்டாக மாறிவிடுவார்.
நன்றி
வாட்ஸ் அப் & செல் & கூகுள் பே
097151 89647
மற்றொரு செல்: 7402570899
Email masterastroravi@gmail.com
(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)
அன்புடன்
சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்
M.SC,M.A,BEd
ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர், ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.
No comments:
Post a Comment