Wednesday, 5 July 2023

கையில் பணம் வந்து சேரும் நேரம் எப்போது?

 கையில் பணம் வந்து சேரும் நேரம் எப்போது?

         


செவ்வாய்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!


   ஜாதகம் பார்க்க வரும் பெரும்பாலான நபர்களின் மிக முக்கியமான கேள்வி கையில் பணம் எப்போது வந்து சேரும் என்பது தான் ஆகும்.லொளகீக வாழ்க்கையில் ஈடுபடும் மனிதனுக்கு பணம் மிகவும் அத்தியாவசியமான ஒன்றாகும்.


  ஒருவர் ஜாதகத்தில் பணம் சேரும் யோகத்தை தருவதில் முதன்மை வகிக்கும் கிரகம் குரு பகவான் ஆகும்.இதனால்தான் குரு பகவானை தன காரகன் என்று அழைக்கப்படுகிறது.


      இதேபோல தனம் ஒருவரது கைக்கு வந்து சேரும் அமைப்பை தெரிந்துகொள்ள ஒருவர் ஜாதகத்தில் தன ஸ்தானமான இரண்டாம் இடம்,பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் இடம்,லாப ஸ்தானமான பதினொன்றாம் இடம் ஆகியவற்றை ஆய்வு செய்து பார்க்கப்பட வேண்டும்.


    மேலே குறிப்பிட்ட 2,9,11 ஆம் இட அதிபதிகளான தன அதிபதி,பாக்கிய அதிபதி மற்றும் லாப அதிபதி ஆகியவற்றையும் ஆய்வு செய்து பார்க்கப்பட வேண்டும்.


  எவர் ஒருவர் ஜாதகத்தில் தன ,பாக்கிய மற்றும் லாப அதிபதிகள் வலிமை பெற்று இருந்தால் மட்டும் போதாது.அந்த குறிப்பிட்ட தசை அல்லது யோக தசை நடப்பில் இருக்க வேண்டும்.லக்கனாதிபதியும் பலம் அடைந்து இருக்க வேண்டும்.


தன காரகன் குரு பகவான் தன ஸ்தானமான இரண்டாம் இடம் ,பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் இடம் மற்றும் லாப ஸ்தானமான 11-ஆம் இடம் அதன் அதிபதிகள் ஆகியவற்றுடன் பங்கப்படாத நிலையில் தொடர்பு கொண்டு இருக்க வேண்டும்.


  தன, பாக்கிய மற்றும் லாப அதிபதிகள் தங்களுக்குள் பார்வை, சேர்க்கை அல்லது பரிவர்த்தனை மூலம் தொடர்பு கொண்டு எவ்வித இயற்கை பாவ கிரக தொடர்பு இல்லாமல் இயற்கை சுப கிரகமான குரு பகவானின் தொடர்பு பெற்று அதன் தசை நடக்கக்கூடிய காலங்களில் மிகுந்த தானயோகத்தை சாதகர் பெறுவார்.


 தன்,பாக்கிய மற்றும் லாப அதிபதிகளில் ஏதாவது ஒரு கிரகம் இயற்கை பாவ கிரகம் எனில் அந்த கிரகத்தின் பார்வை அல்லது சேர்க்கை பாவத்துவ நிலையினை உண்டாக்கும்.எனவே இது போன்ற நிலைகளில் இயற்கை சுப கிரக பார்வையை கட்டாயம் பெற்ற நிலையில் மட்டுமே பணத்தை அதன் தசையில் உங்களது கையில் வந்து சேர்க்கும்.


 தன அதிபதியும் மற்றும் தன காரகன் குரு பகவான் ஆகிய இருவரும் வலுப்பெற்று பார்வை அல்லது சேர்க்கை மூலமாக தொடர்பினை பெற்று இருந்தால் அதன் தசையில் ஜாதகரின் கையில் பல வழிகளில் பணம் வந்து சேரும்.


பாக்கிய அதிபதியை பங்கம் அடையாத குரு பகவான் பார்த்து வலுப்படுத்தி பாக்கியாதிபதி தசை நடக்க அந்த தசை காலங்களிலும் ஜாதகருக்கு பணம் வந்து சேரும்.


தன-பாக்கிய -லாப அதிபதி மற்றும் குரு பகவான் ஆகிய நால்வரின் தொடர்பு பெற்று சுபத்துவமான நிலையினை அடைந்து இதில் ஏதாவது ஒரு தசை நடப்பில் உள்ள காலங்களில் தான் மேற்கொண்ட முயற்சிகள் வழியாக வெற்றி ஏற்பட்டு பணம் உங்கள் கைகளில் வந்து சேரும்.நீங்கள் மகா தன யோகம் பெற்ற நிலையில் கோடீஸ்வரர் ஆகி விடுவீர்கள்.


நன்றி


வாட்ஸ் அப் & செல் & கூகுள் பே

   097151 89647 


மற்றொரு செல்; 7402570899


Email masterastroravi@gmail.com


(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்)



அன்புடன்

சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன் 

   M.Sc,M.A,BEd

ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர், ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கரம்பக்குடி புதுக்கோட்டை மாவட்டம்.

No comments: