Thursday, 6 July 2023

 ஒருவர் ஜாதகத்தில் சம்பாதித்து சொத்து வாங்கி சேர்க்கும் காலம்




செவ்வாய்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!


   "சம்பாதிப்பது என்பது புருஷ லட்சணம்" ஆகும் .


  "திரை கடல் ஓடியும் திரவியம் தேடு " என்பார்கள்.


  பெரும்பாலான மக்கள் நாள் முழுவதும் உடலால் உழைத்து பணம் ஈட்டி சொத்து வாங்கி சேர்ப்பார்கள்.


 ஒரு சிலர் தனது மூளையினை பயன்படுத்தி அறிவாற்றலால் இணையத்தினை பயன்படுத்தி கோடிக்கணக்கான‌ தொகையினை சம்பாதித்து‌ சொத்து வாங்கி சேர்ப்பார்கள்.


  ஒருவருக்கு நல்ல நேரம் வந்தால் சொத்து சேர்வது என்பதும்

சில நேரங்களில் கண்மூடி கண் திறப்பதற்குள் எப்படி வந்து சேர்ந்தது என்று எண்ணி பார்ப்பதற்குள் சேர்ந்து விடுவது உண்டு.அதேபோல ஒருவருக்கு கெட்ட நேரம் வந்தால் எப்படி வந்ததோ அதே வழியில் அதே நொடியில் அழிந்து விடுவதும் உண்டு.


இதனால் தான் 

"மூன்று ஜெனரேஷன் வாழ்ந்தவர்களும் இல்லை.மூன்று ஜெனரேஷன் கெட்டவர்களும் இல்லை " என்பார்கள்.


  ஒருவர் என்னதான் அறிவாளியாக அல்லது சிறந்த மேதையாக இருந்தாலும் உகந்த யோக அமைப்புகள் ஒருவர் ஜாதகத்தில் இருந்து அவை சார்ந்த உகந்த தசா புக்தி மற்றும் கோச்சார பலன்கள் ஆகிய இரண்டும் சேர்த்து ஒருசேர நன்முறையில் அமைந்தால் தான் கோடீக்கனக்கான‌ பணத்தை சம்பாதித்து சொத்து வாங்கி சேர்க்க இயலும்.


  ஒருவர் ஜாதகத்தில் லக்னாதிபதி வலிமை பெற்று லாப ஸ்தான அதிபதியும் வலிமை அடைந்த ஒருவர் தனது கடுமையான முயற்சியால் பணம் சம்பாதித்து சொத்து வாங்கி சேர்ப்பார்கள்.


    உங்கள் ஜாதகத்தில் ஐந்தாம் இடமான பூர்வ புண்ணிய ஸ்தானம் வலுவாக இருந்தால் பூர்வீக அடிப்படையில் சொத்துக்கள் இருந்து அந்த சொத்தை அடிப்படையாக கொண்டு உகந்த யோக தசைகள் நடப்பில் உள்ள காலங்களில் பணம் வந்து சொத்து மேல் சொத்து வாங்கி சேர்க்கும் யோகம் உண்டாகும்.


  ஒருவர் ஜாதகத்தில் புதன் பகவான் வலிமை பெற்று சுபத்துவமான நிலையில் பத்தாம் இடத்துடன் தொடர்பு கொள்ள இனையத்தினை அல்லது சமூக ஊடகங்களின் துணை கொண்டு கோடிக்கணக்கான ரூபாய் சம்பாதிக்கும் யோகம் உண்டாகும்.


 ஒருவர் ஜாதகத்தில் எட்டு மற்றும் பன்னிரண்டாம் இடம் சுபத்துவமான நிலையில் ஆறு மற்றும் பன்னிரண்டாம் இடத்தில் உள்ள ராகு பகவான் தசையில் அல்லது சர ராசியில் உள்ள கிரகங்களின் தசையில் அந்நிய தேசம் சென்று அல்லது ஷேர் மார்க்கெட் போன்ற வழிகளில் கோடீக்கணக்கான பணத்தை சம்பாதித்து சொத்து வாங்கி சேர்க்கும் யோகம் உண்டாகும்.


 ஒருவர் ஜாதகத்தில் தன காரகன் குரு பகவான் வலிமை அடைந்த நிலையில் தன-பாக்கிய- லாப ஸ்தானம் அல்லது அதன் அதிபதிகள் உடன் தொடர்பு கொண்டு சுபத்துவ படுத்திய நிலையில் இதில் ஏதாவது ஒரு தசை நடக்க கூடிய காலங்களில் ஜாதகர் மேற் கொண்ட தொழில் வழியாக சம்பாதித்து பெரும் சொத்து வாங்கி சேர்க்கும் யோகம் உண்டாகும்.


ஒருவர் ஜாதகத்தில் எந்த கிரகம் அதிக சுபத்துவமாக இருந்து ராசி அல்லது லக்கனத்திற்கு இரண்டு மற்றும் பத்தாமிடத்துடன் தொடர்பு கொள்கிறதோ அவை சார்ந்த எண்ணங்களும் மற்றும் சிந்தனைகளும் உருவாகி அவை சார்ந்த தொழிலை ஒருவர் சரியாக கண்டறிந்து தக்க தருணத்தில் மேற்கொள்ள கோடீக்கனக்கான பணம் சம்பாதித்து சொத்து வாங்கி சேர்க்கும் யோகம் உண்டாகும்.


நன்றி.


வாட்ஸ் அப் & செல் & கூகுள் பே

   097151 89647 

மற்றொரு செல்; 7402570899


Email masterastroravi@gmail.com


(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)

         

அன்புடன்

  சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன் 

     M.SC,M.A, BEd

(ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர், ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.

No comments: