#சனிபகவான் தரும் கர்மயோகம் "
பதிவு-( 3 )
'"கிரகங்கள் படுத்தும் பாடு- ( 96 )
ஸ்ரீபத்ரகாளியம்மன் துணை!
சனிபகவான் ஆனவர் தான் இருக்கும் இடத்தை விட பார்க்கும் இடத்திற்குத்தான் அதிக இன்னல்களை தருவார்.சனிபகவான் ஆனவர் தனது பார்வையால் பார்க்கப்படும் இடங்கள் மூன்று,ஏழு மற்றும் பத்து ஆகும்.
சனிபகவான் லக்கனத்தில் இருக்கும் பட்சத்தில் அல்லது லக்கனாதிபதியாக ஆட்சி பெறும் பட்சத்தில் சாதகரை நேரிய வழியில் அல்லாது அவரை வழிநடத்தும் அவரது மூன்றாம் பார்வையானது சகோதரஸ்தானத்தை பார்ப்பதால் சகோதரர்கள் இல்லாதவராகவும் ,சகோதரகாரகனும்(செவ்வாய்),மூன்றாமிடமும் பலமாக இருந்தால் சகோதரன் உண்டு எனினும் சகோதரனால் சாதகருக்கு பயனற்ற நிலையை உருவாக்கும்.
லக்கனத்தில் இருக்கும் சனிபகவான் களஸ்திரஸ்தானம் எனும் ஏழாமிடத்தை பார்வை செய்யும்போது காலதாமத திருமணத்தை உருவாக்குகிறது.இரண்டாமிட அதிபதியும்.ஏழாமாதிபதியும்,களஸ்திரகாரகன் சுக்கிரன் பலவீனப்படும் நிலையில் ஏழாமிட சனி பார்வை திருமணம் ஆகும்நிலை என்பது மிகவும் சிரமம் ஆகிறது.ஒரு சிலருக்கு நன்கு கல்வி,அழகு ,மற்றும் அந்தஸ்து இருந்தும் நல்ல மனைவி அமையாததற்கும் காரணமாகிறது.அதேநேரத்தில் பலப்பட்டிருக்கும் நிலையில் திருமணம் தடையின்றி தந்தாலும் அவர்களுக்கிடையே ஒருவித அன்யோன்யம் இல்லாத சூழ்நிலையை உருவாக்குகிறது.
சனியின் பத்தாமிட பார்வை தொழில்ஸ்தானத்தை பார்வை செய்யும்போது அவனை சனிசார்ந்த தொழிலில் ஈடுபடவைக்கிறது
சாதகத்தை பொறுத்தவரையில் சனிபகவான் ஆனவர் இயற்கை பாவியாக இருப்பதால் இவர் உச்சம்,ஆட்சி பெற்று நேர்வலு பெறாமல் இருப்பதே நல்லது ஆகும்.இவ்வாறு உச்சம்,ஆட்சி போன்றநிலை சனிபகவான் சாதகத்தில் பெறும்போது அவை பஞ்சமகா யோகங்களில் ஒன்றான #சசகயோகம் என அழைக்கப்படுகிறது.
சசகயோகம் எனும் யோகம் சாதகத்தில் ஒருவருக்கு இல்லாமல் இருப்பதே நல்லது.இருக்கும்பட்சத்தில் சாதகரை ஆளடிமை,கீழ்மட்ட வேலைகள்,கொத்தடிமைகள் ,எடுபிடி வேலைபார்ப்பவராகவும்,சுய சிந்தனையின்றி பிறர் ஈடும் ஏவல் பணிகளை செய்பவராகவும்,சோம்பேறியாகவும் ஒருவரை செயல்படவைக்கும். .அதேநேரத்தில் சனிபகவான் ஆனவர் நேர்வலுபெறாமல் சூட்சும வலுபெறும் நிலையில் சனிபகவான் ஆனவர் மக்கள் போற்றும் தலைவராகவோ,ஆயுதங்களை பயன்படுத்தி அறுவை சிகிச்சை செய்யும் மருத்துவராகவோ,கனரகவாகனங்களை சரிசெய்யும் மெக்கானிக்கரகவோ,இரும்பு சார்ந்த தொழில் லாபமடைவராகவோ,அலுவலகங்களில் கடைநிலை ஊழியராகவோ மற்றும் மின்சாரநிலைய ஊழியராகவோ மாறச்செய்கிறார்.
பொதுவாக பாவிகள் உபஜெய ஸ்தானமான 3,6,9,11 போன்ற இடங்களில் இருக்கும்போது பலமுடையதாக நன்மைகள் பலவற்றை செய்கிறது.யோகமுள்ளவன்,ஆயுள் அதிகம்,பணவசதி,பிதுர்தோஷமுள்ளவன்,சத்ருபங்கன் மற்றும் அரசங்கலாபமுடையவன் போன்ற யோகங்களை வழங்குகிறது.
இரண்டாமிடத்தில் சனிபகவான் இடம்பெறும்போது தனது பேச்சு மற்றவருக்கு பிடிக்காத நிலையை உருவாக்கும்.வாக்காதிபதியும் செவ்வாய் போன்ற பாவியாக இருக்கும்போது ஆணவக்காரன் என பெயர் எடுப்பான்.மேலும் திருமண தடை மற்றும் கல்வியில்தடை போன்வற்றை அந்த ஸ்தான அதிபதிகளுக்கு ஏற்ப உருவாக்குவார். பொய் பேசுபவராகவும் உருவாக்கி பார்க்கும்.
மூன்றாமிட சனிபகவான் சகோதர தடையை உருவாக்குவார்.திடவலிமை,புகழடைவதில் சிரமமானநிலை,கீழான காம எண்ணம் போன்றவைகளை தரும்.
நான்காமிட சனிபகவான் தாய்க்கு பீடை ,திரேகத்தில் வடு,நாய் கடித்தல்,கல்வியில் தடை மற்றும் மனசஞ்சலம் போன்றவற்றை உருவாக்குவார்.
ஐந்தாமிட சனிபகவான் புத்திர தடையை உருவாக்குபவராகவும்,பூர்வீக சொத்தில் வாழ இயலாத நிலையையும் உருவாக்கும்.மேலும்"ஐந்திலே சனி இருந்தால் அழைத்து வைக்க மாமன் இல்லை.மிஞ்சியே இருந்தாலும் மீள்வான் ஒரு மாமன் "எனும் வகையில் மாமன் வர்க்கத்திற்கு ஆகாது.
ஆறாமிட சனி பகவான் எதிரியை வெல்லலாம்.பாவிகள் ஆறாமிடமேறுவது நல்லது என்ற வகையில் இதன் தசை காலங்களில் நல்லது பல செய்யும்.
ஏழாமிடத்தில் உள்ள சனிபகவான் ஒருவனுக்கு திருமண தடையை உருவாக்குவார்.அழகான மனைவி அமையாது.அந்த ஸ்தானாதிபதி மற்றும் களஸ்திரகாரகரை பொறுத்து பலனில் மாறுதல் உண்டாகும்.மேலும் மனையில் தொல்லையும் மற்றும் நண்பர்களால் பிரச்சினையும் உண்டாகும்.அதிலும் குறிப்பாக ஏழாம் வீடு சனியின் ஜென்ம விரோதியான செவ்வாய் (மேஷம்,விருட்சகம்) ,சூரியனின் (சிம்மம்)வீடாக இருக்கும்பட்சத்தில் மனைவியிடம் சற்று எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.
எட்டாமிடத்தில் உள்ள சனிபகவான் ஆயுள்காரகன் என்ற வகையில் ஆயுளை பலப்படுத்துவார்.ஆனால் அதன் திசை காலங்களில் வம்பு,சண்டை மற்றும் வழக்கு போன்றவற்றில் ஒருவனை ஈடுபட வைக்கும்.
ஒன்பதாமிட சனிபகவான் ஒருவனை கஞ்சத்தனம் உடையவனாக பிறருக்கு ஒரு பைசாகூட இழக்காதவனாகவும்,தானதர்ம குணமில்லாதவனாக மாற்றுகிறது.தந்தைகாரகர் சூரியனுக்கு சனிபகவான் பகை என்ற வகையில் ஒன்பதாமிட சனி தந்தையால் பயனற்ற நிலையை உருவாக்குகிறார்.
பத்தாமி சனிபகவான் #அமலயோகம் தந்து அதன் தசை காலங்களில் மக்கள் போற்றும் தலைவராக ஒருவரை மாற்றும்.தலைசிறந்த அரசியல் தலைவராக்கி பதவியில் அதன் திசை காலங்களில் அமர செய்து அழகுபார்க்கும்.அதிக வாகனங்களுக்கு உரிமையளராக வாகனகாரகன் சுக்கிரன் மற்றும் வாகனஸ்தானத்தை பொறுத்து உருவாக்கும்.இரும்பு சார்ந்த தொழில் நல்ல பணவரவை தரும்.
பதினொராமிடம் உபஜெயஸ்தானம் என்ற வகையில் லாபஸ்தான சனிபகவான் தனது காரக தொழிலால் நன்மைகள் பல செய்வான்.
பணிரெண்டாம் இட சனி பகவான் ஒருவரை சயனசுகம் அற்றவனாக அலைச்சல் உடையவனாக மாற்றுகிது.அதன் தசை காலங்களில் விரயங்கள் பல செய்பவனாகவும்,படுக்கை சுகம் குறைந்தவனாகவும் மாற்றுகிறது.பொருள் விரயம்,ஆடு,மாடு விரயம் போன்றவற்றை அளிக்கிறது..
தொடரும்.
(தங்களது சாதகபலனை போன் வழியாக ஆலோசனை பெறவும்,திருமணப்பொருத்தம் மற்றும் பரிகாரவிவரங்கள் மற்றும் ஜெனனசாதகம் கணித்தல் போன்ற சேவைகளுக்கு எனது வாட்ஸ்அப் மூலமாகவோ அல்லது போன் மூலமாகவோ பிறந்த தேதி,நேரம் மற்றும் இடம் போன்றவைகளை மெஸ்ஸேஸ் மூலம் தெரிவித்து பலனை போனில் பெறலாம்.#கட்டணம் உண்டு)
அன்புடன்
சோதிடர்ரவிச்சந்திரன்
M.SC,MA,BEd,
சோதிட ஆய்வாளர்,
முதுநிலை வேதியியல் ஆசிரியர்,
வாழ்வியல் ஆலோசகர்,
ஓம்சக்தி அஸ்ட்ரோ ஆன்லைன் சென்டர்,
கறம்பக்குடி,புதுக்கோட்டை மாவட்டம்
தமிழ்நாடு,இந்தியாஂ
சோதிடர்ரவிச்சந்திரன்
M.SC,MA,BEd,
சோதிட ஆய்வாளர்,
முதுநிலை வேதியியல் ஆசிரியர்,
வாழ்வியல் ஆலோசகர்,
ஓம்சக்தி அஸ்ட்ரோ ஆன்லைன் சென்டர்,
கறம்பக்குடி,புதுக்கோட்டை மாவட்டம்
தமிழ்நாடு,இந்தியாஂ
தொடர்புக்கு
செல்
97 151 89 647
740 257 08 99
செல்
97 151 89 647
740 257 08 99
வாட்ஸ்அப்
97 151 89 647
97 151 89 647
.
No comments:
Post a Comment