சாதகம் பார்க்கும்போது கவனிக்க வேண்டிய சில விதிமுறைகள் :-
சாதக கட்டத்தில் ஒரு கிரகம் உச்சம்,ஆட்சி போன்ற பலமான அமைப்பை பெற்றிருந்தால் அதன் திசை காலங்களில் யோகங்களை வாரி வழங்கும் என மேம்போக்காக பார்த்து பலன் சொல்லிவிட்டு அவ்வாறு அத்திசை காலங்களில் நன்மையை தருவதற்கு பதிலாக பலவித இன்னல்களை சாதகர்கள் அடையும்போது சாதகம் பார்க்கப்படும் நபரால் சோதிடத்தின் மீதும் ,சோதிடரின் மீதும் ஒருவிதமான அவநம்பிக்கை ஏற்பட்டுவிடுகிறது.
இதற்கு காரணம் ஒரு கிரகம் உச்சம் ,திரிகோணம் மற்றும் ஆட்சி பெற்ற எல்லா கிரகங்களும் நன்மையை செய்யாது எனும் சில அடிப்படை விவரங்களை தெரியாமல் பலனளிப்பதால் வரும் விளைவாகும்.ஒரு கிரகம் பலமான அமைப்பை பெற்றிருந்தாலும் அதன் ஸ்தான அமைப்பை கட்டாயம் பார்க்கவேண்டும்.
உதாரணமாக துலாம் மற்றும் மேஷம் ஆகிய இரண்டையும் லக்கனம் மற்றும் ராசியாக கொண்டவர்களுக்கு புதன் பகவானும் மற்றும் குருபகவானும் உச்சம் பெற்றிருப்பதாக வைத்துக்கொண்டால் அவை சாதகருக்கு அதன் காரகபலனை சிறப்பாக தந்தாலும் அதன் திசை காலங்களில் அத்தனையும் இழந்தோ அல்லது அதனால் பயனற்றோ துன்ப படவேண்டிய சூழலை உருவாக்கிவிடுகிறது.
சற்று விரிவாக சொல்லவேண்டுமென்றால் குருவின் காரகபலன்களான பணம் ,பதவி,பட்டம்,புகழ்,கல்வி,ஞானம்,
செல்வம் மற்றும் குழந்தைபாக்கியம் முதலியன்.இதேபோல புதனின் காரகபலன்களான எழுத்து,ஓவியம்,கணிதம்,இசை,வித்தைகள்,சோதிடம்,பேச்சு மற்றும் மாமன்வர்க்கம் போன்றவையாகும்.
செல்வம் மற்றும் குழந்தைபாக்கியம் முதலியன்.இதேபோல புதனின் காரகபலன்களான எழுத்து,ஓவியம்,கணிதம்,இசை,வித்தைகள்,சோதிடம்,பேச்சு மற்றும் மாமன்வர்க்கம் போன்றவையாகும்.
இப்பொழுது மேலே குறிப்பிட்ட மேஷம் மற்றும் துலாம் லக்கன மற்றும் ராசியாக கொண்டவர்களுக்கு குருவும்,புதனும் பலம்பெற்றிருக்கும்போது மேற்கண்ட காரக பலன்களை அனைத்தும் தந்தாலும் அதன் திசை காலங்களில் அந்த காரகத்தால் பெற்ற அனைத்து பலனையும் இழந்து வேதனைப்பட காரணம் எதுவாக இருக்கும் என ஆராய்ந்து நோக்கினால் பின்வரும் காரணங்களே காரணமாகிறது.
அவை அவ்விரு ராசிகளுக்கும் மறைவுஸ்தானமான மூன்று மற்றும் ஆறாமிட ஸ்தானத்தை பெற்றிருப்பதாலே ஆகும்.அதிலும் குறிப்பாக ஆறாமிடத்திலே உச்சமோ அல்லது ஆட்சியோ பெற்றிருக்கும்போது ஆறாமிடஸ்தானம் ருணம் , ரோகம் மற்றும் சத்ருஸ்தானம் என்பதால் மிகுந்த இன்னல்களை குருவும்,புதனும் சுபராக இருந்தாலும் கொடுக்கிறது..
அடுத்தபடியாக ஒரு கிரகம் சுபஸ்தானங்களான கேந்திர,திரிகோணம் அமைப்பை பெற்றிருந்து மற்றும் உச்சம் ,திரிகோண அமைப்பை பெற்றிருந்தாலும் அதன் திசை காலங்களில் தரக்கூடிய நல்ல பலன்கள் குறைவதற்கு இன்னும் பல காரணங்கள் உள்ளது.
1) சுபர்களின் அதிபதிகள் கேந்திரம் ஏற கேந்திராதிபத்தியதோஷத்தை அந்த கிரகங்கள் பெற்றுவிடுவதால் அத்திசை காலங்களில் அக்கிரகம் உச்சம்,ஆட்சி,மூலதிரிகோணம் போன்ற பலமான அமைப்பை பெற்றிருந்தாலும் அவை தரும் யோகங்களில் பங்கம் ஏற்பட்டுவிடுகிறது.எனவே சுபர்கள் கேந்திர அதிபதிகளாக வரும்போது அவை திரிகோணங்களிலோ அல்லது மறைவு இடங்களிலோ இடம்பெறுதல் நல்லது.
2) பாவ கிரகங்கள் திரிகோணமேறி உச்சம் ,ஆட்சி போன்ற பலமான அமைப்பை பெற்றிருப்பினும் அத்திசை காலங்களில் அவை தரும் பலன்களில் குறைவு ஏற்பட வாய்ப்பு உண்டு.எனவே பாவகிரகங்கள் திரிகோணம் ஏறாமல் கேந்திரமேறல் நற்பலனை தரும் வாய்ப்புண்டு.
3) சிலநேரங்களில் கிரகங்களின் ஸ்தானங்கள் மறைவுஸ்தானமாக இல்லாமாலும் ,பாவ கிரகமாக இருந்தால் கேந்திரமேறியும் மற்றும் சுப கிரகமாக இருந்தால் திரிகோணமோ அல்லது மறைவுஸ்தானமேறியும் அதாவது மேலே குறிப்பிட்ட எல்லா விதிகளும் ஒத்துவந்தாலும் ஒரு கிரக திசையானது நன்மை தருவதில் தாமதமோ அல்லது பலனில் குறைவு ஏற்பட்டு விடுகிறது.
இதற்கு என்ன காரணமாக இருக்கும் என தீவிர ஆராய்ச்சி செய்து பார்க்கும்போது அக்கிரகம் பெற்றிருக்கும் நட்சத்திரசாரம் ஒரு முக்கிய காரணம் ஆகும்.ஒரு கிரகம் எல்லா விதிகளையும் நிறைவு செய்தாலும் அவை பெற்ற நட்சத்திரசாரம் பார்த்து பலனளிப்பது மிக மிக அவசியமானது ஆகும்.
ஒரு கிரகம் பலமான அமைப்பை பெற்றிருந்தாலும் அவை அச்சாதகரின் மறைவுஸ்தான அதிபதிகளின் சாரமோ அல்லது பாவகிரகங்களான ராகு,கேது ,சனி போன்ற பாவர்களின் சாரமோ பெற்றிருந்தால் யோகபலன்கள் குறையலாம்.
5) ஒரு கிரகம் மேற்கூறிய எல்லா விதிகளையும் பெற்றிருந்தாலும் அம்ச பீடத்தில் நீசமோ அல்லது மறைவுஸ்தானம் போன்ற அமைப்பெற்றிருந்தாலும் அத்திசை காலத்தில் யோகபங்கம் ஏற்பட வாய்ப்புண்டு.
(தங்களுடைய சாதகங்களை நன்கு ஆராய்ந்து உங்களுக்கு தற்பொழுது நடைபெறும் திசைகள் நற்பலனை அளிக்குமா ? திருமண யோகமுண்டா ? கற்ற கல்வியாலும் ,பெற்ற வித்தையாலும் பலனுன்டா ?புத்திரபாக்கியம் உண்டா? இதுபோன்ற பயனுள்ள பல கேள்விகளுக்கு #போன் வழியாக பலன் அளிக்கப்படும்.கட்டாயம் கட்டணம் உண்டு.மேலும் முழுவிபரம் பெற எனது வாட்ஸ்அப் எண் அல்லது அலைபேசிக்கு தொடர்பு கொள்ளவும்.)
No comments:
Post a Comment