Thursday, 31 August 2017

சாதகம் பார்க்கும்போது கவனிக்க வேண்டிய விதி முறைகள்

 சாதகம் பார்க்கும்போது கவனிக்க வேண்டிய சில விதிமுறைகள் :-


           சாதக கட்டத்தில் ஒரு கிரகம் உச்சம்,ஆட்சி போன்ற பலமான அமைப்பை பெற்றிருந்தால் அதன் திசை காலங்களில் யோகங்களை வாரி வழங்கும் என மேம்போக்காக பார்த்து பலன் சொல்லிவிட்டு அவ்வாறு அத்திசை காலங்களில் நன்மையை தருவதற்கு பதிலாக பலவித இன்னல்களை சாதகர்கள் அடையும்போது சாதகம் பார்க்கப்படும் நபரால் சோதிடத்தின் மீதும் ,சோதிடரின் மீதும் ஒருவிதமான அவநம்பிக்கை ஏற்பட்டுவிடுகிறது.

             உதாரணமாக துலாம் மற்றும் மேஷம் ஆகிய இரண்டையும் லக்கனம் மற்றும் ராசியாக கொண்டவர்களுக்கு புதன் பகவானும் மற்றும் குருபகவானும் உச்சம் பெற்றிருப்பதாக வைத்துக்கொண்டால் அவை சாதகருக்கு அதன் காரகபலனை சிறப்பாக தந்தாலும் அதன் திசை காலங்களில் அத்தனையும் இழந்தோ அல்லது அதனால் பயனற்றோ துன்ப படவேண்டிய சூழலை உருவாக்கிவிடுகிறது.

                    


         இப்பொழுது மேலே குறிப்பிட்ட மேஷம் மற்றும் துலாம் லக்கன மற்றும் ராசியாக கொண்டவர்களுக்கு குருவும்,புதனும் பலம்பெற்றிருக்கும்போது மேற்கண்ட காரக பலன்களை அனைத்தும் தந்தாலும் அதன் திசை காலங்களில் அந்த காரகத்தால் பெற்ற அனைத்து பலனையும் இழந்து வேதனைப்பட காரணம் எதுவாக இருக்கும் என ஆராய்ந்து நோக்கினால் பின்வரும் காரணங்களே காரணமாகிறது.

          அவை அவ்விரு ராசிகளுக்கும் மறைவுஸ்தானமான மூன்று மற்றும் ஆறாமிட ஸ்தானத்தை பெற்றிருப்பதாலே ஆகும்.அதிலும் குறிப்பாக ஆறாமிடத்திலே உச்சமோ அல்லது ஆட்சியோ பெற்றிருக்கும்போது ஆறாமிடஸ்தானம் ருணம் , ரோகம் மற்றும் சத்ருஸ்தானம் என்பதால் மிகுந்த இன்னல்களை குருவும்,புதனும் சுபராக இருந்தாலும் கொடுக்கிறது..

                             


                   1)  சுபர்களின் அதிபதிகள் கேந்திரம்  ஏற கேந்திராதிபத்தியதோஷத்தை அந்த கிரகங்கள் பெற்றுவிடுவதால் அத்திசை காலங்களில் அக்கிரகம் உச்சம்,ஆட்சி,மூலதிரிகோணம் போன்ற பலமான அமைப்பை பெற்றிருந்தாலும் அவை தரும் யோகங்களில் பங்கம் ஏற்பட்டுவிடுகிறது.எனவே சுபர்கள் கேந்திர அதிபதிகளாக வரும்போது அவை திரிகோணங்களிலோ அல்லது மறைவு இடங்களிலோ இடம்பெறுதல் நல்லது.

             3) சிலநேரங்களில் கிரகங்களின் ஸ்தானங்கள் மறைவுஸ்தானமாக இல்லாமாலும் ,பாவ கிரகமாக இருந்தால் கேந்திரமேறியும் மற்றும் சுப கிரகமாக இருந்தால் திரிகோணமோ அல்லது மறைவுஸ்தானமேறியும் அதாவது மேலே குறிப்பிட்ட எல்லா விதிகளும் ஒத்துவந்தாலும் ஒரு கிரக திசையானது நன்மை தருவதில் தாமதமோ அல்லது பலனில் குறைவு  ஏற்பட்டு விடுகிறது.

             இதுபோன்ற பல சோதிட விதிகளை கவனித்து அதன் பின்னரே ஒருவருக்கு நடக்கும் திசையானது நன்மையை செய்யுமா ? அல்லது தீமையை செய்யுமா ? என சோதிடர்களாகிய நாம் பலனளிக்கவேண்டும்.எல்லாவற்றிற்கும் மேலாக சோதிட விதிகளை தெளிவாக படித்திருந்தாலும் எல்லாம் வல்ல பரம்பொருளின் அருளும் ,கிரகங்களின் ஆசிர்வாதமும் மற்றும் குருவருளும்     சோதிடர்களுக்கு இருந்தால்தான மறைவாக உள்ள பல சூட்சும விதிகள் கண்ணிற்கு புலப்படும் என கூறி மேற்கூறிய மூவித ஆசிர்வாதமும் கிடைக்க நான் தினம் துதிக்கும் ஸ்ரீபத்ரகாளியம்பாளை வணங்குகிறேன்.
(தங்களுடைய சாதகங்களை நன்கு ஆராய்ந்து உங்களுக்கு தற்பொழுது நடைபெறும் திசைகள் நற்பலனை அளிக்குமா ? திருமண யோகமுண்டா ? கற்ற கல்வியாலும் ,பெற்ற வித்தையாலும் பலனுன்டா ?புத்திரபாக்கியம் உண்டா? இதுபோன்ற பயனுள்ள பல கேள்விகளுக்கு #போன் வழியாக பலன் அளிக்கப்படும்.கட்டாயம் கட்டணம் உண்டு.மேலும் முழுவிபரம் பெற எனது வாட்ஸ்அப் எண் அல்லது அலைபேசிக்கு தொடர்பு கொள்ளவும்.)

வாட்ஸ்அப்
97 151 89 647

                          


                             

No comments: