கேதுபகவான் தரும் ஆன்மீக சிந்தனைகள்
செவ்வாய்ப்பட்டி பத்ரகாளியம்மன் துணை!
அசுபதி,மகம் மற்றும் மூலம் ஆகிய மூன்று நட்சத்திர அதிபதியாக திகழ்வதுதான் செம்பாம்பு என அன்புடன் அழைக்கப்படும் கேதுபகவான் ஆவார்.இதில் அசுபதி முதல் வீடாகிய மேஷத்திலும்,மகம் ஐந்தாம் வீடாகிய சிம்மத்திலும் மற்றும் மூலம் ஒன்பதாம் வீடாகிய தனுசிலும் அமர்ந்து மனித வாழ்வினை வழிநடத்தி செல்கிறது.
இந்த மூன்று ஸ்தானங்களும் ஜெனன கால காலசக்கரத்திற்கு திரிகோண ஸ்தானங்கள் ஆகும்.இம்மூன்று நட்சத்திரங்கள் இடம்பெறக்கூடிய வீட்டின் அதிபதிகளான செவ்வாய், சூரியன் மற்றும் குரு ஆகிய மூவரும் கேதுபகவான் உடன் சேர்ந்த அருள் அணி எனப்படும் ஞான வாழ்வினை வழங்குபவர்கள் ஆவார்.
குருபகவான் உடன் கேது பகவான் இணைந்திருந்தாலோ அல்லது கேதுபகவானை குருபகவான் பார்த்தாலோ சாதகருக்கு ஆன்மீக நிலை நோக்கி நகர செய்யும்.எதையும் முன்னரே யூகித்தறியும் ஞானத்தினை அளிப்பர்.பட்டறிவோடு மெய்ஞான அறிவினை வழங்குவதில் வல்லவர்.
அடாவடித்தனத்திற்கும்,வம்பு ,வீம்பு மற்றும் முரட்டுதனத்திற்கும் காரகர் செவ்வாய் பகவான் ஆவார்.இவர் ஒருவரது சாதகத்தில் வலுப்பெற அவர் இரத்த முஷ்டியுடன் யார் பேச்சிற்கும் மதிப்பளிக்காத தலைக்கணம் உடையவராக திகழ்வார்.இப்படிப்பட்ட காரகம் உடைய செவ்வாய் பகவான் உடன் கேது பகவான் சேர சாதகரை நல்ல பண்பாளராக ,அமைதியான குணம் படைத்தவராக மாற்றுவதில் கேதுபகவானிற்கு அளப்பறிய பங்கு உண்டு.
அடாவடித்தனத்திற்கும்,வம்பு ,வீம்பு மற்றும் முரட்டுதனத்திற்கும் காரகர் செவ்வாய் பகவான் ஆவார்.இவர் ஒருவரது சாதகத்தில் வலுப்பெற அவர் இரத்த முஷ்டியுடன் யார் பேச்சிற்கும் மதிப்பளிக்காத தலைக்கணம் உடையவராக திகழ்வார்.இப்படிப்பட்ட காரகம் உடைய செவ்வாய் பகவான் உடன் கேது பகவான் சேர சாதகரை நல்ல பண்பாளராக ,அமைதியான குணம் படைத்தவராக மாற்றுவதில் கேதுபகவானிற்கு அளப்பறிய பங்கு உண்டு.
ஆத்மாக்காரகன் சூரியபகவான் உடனான கேது இணைவு ஆன்மீக தலைவர்களாக மாற்றி தரும்.
எனவே கேதுபகவான் உரிய நட்சத்திரங்களும் அவை இடம்பெறும் வீடும் அதன் அதிபதிகளையும் ஆராய்ந்து பார்க்க பார்க்க பலவிதமான சூட்சும உண்மைகள் புலப்படுகிறது.
கர்ம வாழ்வினை தரக்கூடிய கர்மக்காரகன் உடன் கேதுபகவான் இணைய அவன் தனது வாழ்வினை கர்மயோகியாக வாழ வழிசெய்கிறது.
கேதுபகவான் ஒருவரை ஆன்மீக தலைவராக,பேச்சாளராக,அருள் வாக்கு சொல்லும் குறிகாரர் ஆக,வாக்குபலிப்பவராக மற்றும் தலைசிறந்த ஜோதிடராக மாற்றுவதில் பெரும் பங்கு உண்டு.
லக்கனம் அல்லது ராசியில் இடம்பெறும் கேதுபகவான் சாதகரை அனுமானிக்கும் சக்தியையும்,ஞான நிலை நோக்கி நகரவைக்கும் செயலையும் செய்கிறது.
வாக்கு ஸ்தானத்தில் இடமபெறும் கேதுபகவான் வாக்குவன்மையை தருகிறார்.
இதேபோல பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் இடம்பெறும் கேதுபகவான் ஆன்மீக நாட்டத்தை தருகிறார்.மோட்ஷஸ்தானமாள பணிரெண்டில் இடம்பெறும் கேதுபகவான் முக்திநிலையை தருகிறார்.
இதேபோல பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் இடம்பெறும் கேதுபகவான் ஆன்மீக நாட்டத்தை தருகிறார்.மோட்ஷஸ்தானமாள பணிரெண்டில் இடம்பெறும் கேதுபகவான் முக்திநிலையை தருகிறார்.
3.6.11 ஸ்தானங்களில் இடம்பெறும் கேதுபகவான் யோகங்களை வழங்கும் வல்லமை படைத்தவராக திகழ்வார்.கேதுபகவான் ஆனவர் மேற்கண்ட ஸ்தானங்களில் பலம்பெற நியாயமான வழிகளில் பொருள் ஈட்டி பிறர் பயன்பெற வாழ்க்கை வாழ்வர்.
கேதுபகவான் தன்னோடு இணைந்த கிரகங்களின் பலனை உறிஞ்சி தராமல் தனித்து பலன் அளிப்பதில் வல்லவர்.தன்னோடு இணைந்த கிரகங்களின் வலிமையை ராகுபகவான் அளவிற்கு கெடுப்பதில்லை.
கேது பகவான் கும்பம்,விருட்சகம்,கன்னி மற்றும் குருவின் வீடான தனுசு,மீன வீட்டிற்கு நன்மையை வாரி வழங்குவார்.
போக வாழ்வினை தருவதில் ராகுபகவான் சிறந்தவர் எனில் ஞான வாழ்வினை அளிப்பதில் இவர் வல்லவர் ஆவார்.
ஆன்மீகத்தில் சிறந்து விளங்கும் பெரும்பாலோனோர்கள் கேதுவின் நட்சத்தில் பிறந்தவர்களாக இருப்பர்.
(தங்களது சாதகபலன், திருமணபொருத்தம் மற்றும் ஜெனன சாதகம் கணித்தல் போன்ற சேவைகளை போன் வழியாக நீங்கள் எந்த நாட்டில் இருந்தாலும் பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த இடம் மற்றும் பிறந்த நேரம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ்அப் எண்ணிற்கு மெஸ்ஸேஸ் செய்து கட்டணம் செலுத்தும் விபரம் பெறலாம்.)
அன்புடன்
சோதிடர் ரவிச்சந்திரன்
M.Sc,MA,BEd,
சோதிட ஆராய்ச்சியாளர்,
ஓம்சக்தி ஆன்லைன் சோதிட ஆலோசனையாளர்,
கறம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.
சோதிடர் ரவிச்சந்திரன்
M.Sc,MA,BEd,
சோதிட ஆராய்ச்சியாளர்,
ஓம்சக்தி ஆன்லைன் சோதிட ஆலோசனையாளர்,
கறம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.
My email
masterastroravi@gmail.com
masterastroravi@gmail.com
My website
AstroRavichandransevvai.blogspot.com
AstroRavichandransevvai.blogspot.com
No comments:
Post a Comment