என்னுடைய சாதகம் யோக சாதகமா ? நான் நிறைய காசு பணம் சம்பாரிப்பேனா ?
செவ்வாய்பட்டிஸ்ரீபத்ரகாளியம்மன் துணை !
கிரகங்கள் படுத்தும் பாடு - ( 149 )
சாதகம் பார்க்க வரும் அநேகர் மேற்கண்ட கேள்வியை என்னிடம் கேட்பதால் அவர்கள் அனைவருக்கும் பயன்படும் வகையில் இப்பதிவை கொண்டு செல்கிறேன்.
என்னைப்பொறுத்த வரையில் எல்லோருடைய சாதகங்களும் நல்ல யோகமான சாதகங்களே ஆகும்.
.ஒவ்வொறுவருடைய சாதகங்களிலும் ஒவ்வொறு விதமான யோகங்கள் உள்ளது.அதேபோல எல்லா கிரகங்களுமே நல்ல கிரகங்கள் ஆகும்.நல்ல காசு பணங்களை தரும் நல்ல கிரகங்களின் திசைகளைவிட , கஷ்டங்களை தந்து வாழ்வின் உண்மையான உறவுகளையும் ,நண்பர்களையும் புரிந்து கொள்ள வைக்கும் பாவ கிரக ,ஸ்தானங்களின் திசையே மேலானதாகும்.
ஒவ்வொறுவரும் பூர்வ ஜென்ம கர்மப்படியே பிறப்பெடுக்கிறோம்.அதன் அடிப்படையிலே அவன் ஜெனிக்கும்போது வானவீதியில் கிரகநிலைகள் அமைகின்றன்.அவனுக்கு அமையக்கூடிய உறவுநிலை ,அறிவுநிலை,சுகநிலை மற்றும் ஆயுள்நிலை அனைத்திற்கும் காரணமாக அமைகிறது.
எனவே ஒருவரது பூர்வஜென்ம பலனே நாம் மறுபிறப்பாக பிறப்பெடுக்கிறோம்.ஆதலால் ஒருவனது நல்வினை,தீவினைகளுக்கு அவனே காரணம் ஆகும்.
புறநானூற்று பாடல்வரியில்
"தீதும் நன்றும் பிறர்தரவாரா "
என்று குறிப்பிடப்படுகிறது.ஆதலால்.நாம் செய்யும் பூர்வபுண்ணிய கர்மப்படியே நமக்கு தாய்,தந்தை,மனைவி மற்றும் பிள்ளைகள் முதலிய உறவநிலைகள்,உடல்நிலை மற்றும் உள்ள நிலைகள் அமைகிறது.
ஒவ்வொறு மானிடனும் ஏதோ ஒரு காரணத்திற்காக பிறப்பெடுக்கிறோம்.அந்த காரணம் என்ன ? என்பதை கண்டறிந்து அதனை நோக்கி பயணம் மேற்கொள்வதே மனித பிறப்பெடுத்த நமது நோக்கமாக இருக்கவேண்டும்.
வாழ்வில் பிறப்பெடுத்ததன் நோக்கத்தை அறிவதில் ,அறிய முயல்வதில் உற்ற துணையாக சோதிடக்கலை அமைகிறது.நல்ல சோதிட ஞானத்தை பெற்ற சோதிடர்களை நல்ல வழிகாட்டியாக கொண்டு வாழ்வியலை நகர்த்த பயிலுங்கள்.
உலகாதய மனிதனுக்குதான் காசு ,பணம் மற்றும் சொத்துக்களை தரும் கிரகநிலையுள்ள சாதகமே யோக சாதகம் ஆகும்.ஆனால் ஆன்மீக பற்றற்ற வாழ்வினை மேற்கொள்வோருக்கு நல்ல கிரகநிலைகளைவிட வாழ்வில் பலவித கஷ்டங்களை தந்து வாழ்க்கை பாடம் கற்று வாழ்வின் உண்மையான தாத்பாரியத்தை உணரவைக்கும் கெட்ட கிரகநிலைகளே மேல் ஆகும்.
எல்லா கிரகங்களும் நல்ல கிரகங்களே ஆகும்.அவை நமது பூர்வ புண்ணியப்படியே நமது சாதக கட்டத்தில் நன்மை தரும் கிரகங்களாகவோ அல்லது கஷ்டங்கள் தரும் கிரகங்களாகவோ அவரவர் சாதக கட்டத்தில் இடம் பெறுகிறது.எனவே கிரகங்கள் யோகர் ஆவதற்கும், பாவர் ஆவதற்கும் அவரவர் பிறப்பெடுத்த நேரமேயொழிய கிரகங்கள் அல்ல.
துலாம் ராசியில் ஜெனித்தவருக்கு கிரகங்களில் இயற்கை பாவியான சனிபகவான் ஆனவர் யோகங்களை தனது தசையில் வாரிவழங்குவார்.ஆனால் இயற்கை சுபரான குருபகவான் தனது திசையில் பெரும் கடன்காரராகவோ,பிணி மற்றும் எதிரிகளை பெற்றவராக மாற்றுகிறது.அதேபோல மேஷ ராசிக்கு இயற்கை சுபரான புதன் திசை கடன்,பிணி போன்ற பலவித இன்னலாகளை தருகிறார்.எனவே அவரவரது ஜெனன நேரமே இக்கிரகங்களை நல்லது செய்யும் கிரகமாகவோ ,இன்னல்கள் தரக்கூடிய கிரகங்களாகவோ மாற்றுகிறது.
இந்த பிறப்பில் நாம் செய்யும் நல்வினைபடியே ,தீவினைப்படியே நாம் மறு பிறப்பெடுக்கிறோம் என்பதை உணர்ந்தவர்கள் இறைவன் தமக்கு இப்பிறப்பில் தந்த பணியை நேர்வழி தவறாது செய்ய மறுஜென்மம் புணர்ஜென்மமாக அமைகிறது.
இறைவன் எல்லோருக்கும் எல்லா யோகங்களையும் ஒரு சேர தந்துவிடுவதில்லை.தனயோகத்தை தந்த இறைவனே ,சுகஸ்தானம் கெட்டு பிணிஸ்தானம் வலுக்க செய்து அச்செல்வத்தை அனுபவிக்க இயலாமல் செய்துவிடுகிறான்.
திரிகோணஸ்தானங்களை வலுவாக தந்து அறிவாளியாக்கி , தனஸ்தானத்தை பலமிழக்க செய்து தனது அறிவினை பயன்படுத்தி பிழைக்க இயலாமல் சாதகரை செய்துவிடுகிறார்.
ஒரு சிலருக்கு தனம்,சுகம்,பூர்வபுண்ணிய,தர்ம மற்றும் தொழில் ஸ்தானங்களை பலமடைந்த நிலையில் தந்து திறமைசாலியாகவும்,செல்வந்தனாக ஆக்கியிருந்தாலும் அவனது குடும்ப ,களத்திரஸ்தானம் மற்றும் அவை சார்ந்த கிரகங்களை பலமிழக்க செய்து தனக்கு இணையான வாழ்க்கை துணை அமைவதில் சிக்கலை தந்துவிடுகிறார்..
ஒரு சிலருக்கு தனம்,சுகம்,கல்வி ,அழகான மனைவி ஆகிய அனைத்து செல்வங்களையும் தந்தாலும் அவனது புத்திரஸ்தானமும்,புத்திரகாரகன் குருபகவானும் பலவீனமடைந்து கொஞ்சி குலாவி விளையாட குழந்தை செல்வம் இல்லாத குறையை தந்துவிடுகிறது.
எல்லாம் நிறைவாக அமையப்பெற்ற சாதகங்கள் மிகவும் அரிதாகவே உள்ளது.ஓருவரது மறுபிறப்பு முற்பிறப்பே முடிவு செய்கிறது.அவரவர் கர்ம வினைப்படியே அவரது பிறக்கும் இடமும்,நேரமும் அமைகிறது.
எவர் ஒருவர் தன்னுள் மனதினை அடக்கி அகம் நோக்கி நித்திய பேரானாந்த வாழ்வினை பெறுபவர் மறுபிறப்பற்ற முக்திநிலையை அடைகிறார்.ஒருவரது இறப்பை மனமுவது ஆசைகளற்று மகிழ்ச்சியாக யார் ஏற்றுகொள்கிறார்களோ அவர் பிறப்பற்ற முக்தி நிலையை அடைவார்.
ஒருவரது சாதகத்தில் விரயஸ்தானத்தில் ஞானகாரகன் கேதுபகவான் அமர்ந்து தர்மஸ்தானமான ஒன்பதாம் இடம் பலமடையும்போது மறுபிறப்பற்ற முக்திநிலையை அடைவார்.
எனவே இவ்வுலக வாழ்க்கை ஒரு நாடகமேடை சிறப்பாக தமக்கு தரப்பட்ட சிறு அடிமட்ட பாத்திரமாக இருந்தாலும் அப்பாத்திரத்தில் திறம்பட வாழ மறுபிறப்பில் பதக்கங்களும் ,பரிசுகளும் உண்டு என கூறி இப்பதிவை நிறைவு செய்கிறேன்.
"நமச்சிவாயம் வாழ்க !
நாதன்தாள் வாழ்க !!.
(தங்களது சாதகபலன்,திருமணபொருத்தம் மற்றும் ஜெனனசாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக நீங்கள் எந்த நாட்டில் இருந்தாலும் பெறலாம்.
பிறந்ததேதி,நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவைஅகளை எனது வாட்ஸ்அப் எண்ணிற்கு மெஸ்ஸேஸ் செய்து கட்டணம் செலுத்தும் விபரம் பெறலாம் .)
தொடர்பு கொள்ள
செல்
740 257 08 99
97 151 89 647
வாட்ஸ்அப்
97 151 89 647
அன்புடன்
சோதிடர்ரவிச்சந்திரன்
M.SC,MA,BEd.
சோதிட ஆராய்ச்சியாளர்,
முதுநிலை வேதியியல் ஆசிரியர்,
ஓம்சக்தி ஜோதிட ஆன்லைன் ஆலோசனை மையம்,
கறம்பக்குடி,புதுக்கோட்டை மாவட்டம்.
My website
AstroRavichandransevvai.blogspot.com
AstroRavichandransevvai.blogspot.com
@@@@@@@@@@@@@@@@@@@@
No comments:
Post a Comment