Tuesday, 22 August 2017

உங்களது சாதகப்படி மாமனார்-மாமியார் உறவுநிலை

உங்கள் சாதகப்படி "மாமனார்-மாமியார் " உறவுநிலை

                                                                   
கிரகங்கள் படுத்தும் பாடு-(148 )

செவ்வாய்பட்டிஸ்ரீபத்ரகாளியம்மன் துணை !

                     திருமணமான தம்பதிகள் மனம் ஒத்து மகிழ்ச்சியாக வாழ்ந்து இல்வாழ்க்கை நடத்தி நல்ல புதல்வரை பெற்று வாழ உற்ற துணையாக இருப்பது நல்ல உறவுநிலைகளே ஆகும்.அதிலும் குறிப்பாக ஒரு ஆடவருக்கோ /பெண்டீருக்கோ நல்ல மாமனார்,மாமியார்,மச்சான் ,நாத்தனார்,கொழுந்தியாள் மற்றும் கொழுந்தன் போன்ற உறவுகள் நல்ல நிலையில் அமைவதற்கும்,அமையாமல் இருப்பதற்கும் அவர்களது சாதக கட்டத்தில் உள்ள கிரகநிலைகளே காரணம் என்பதை அறிய முயல்வதே இப்பதிவின் நோக்கமாகும்.

                       ஒருவருடைய சாதக கட்டத்தில் தங்களது கணவர்/மனைவி நிலையை அறிய உதவும் களஸ்திர ஸ்தானம் ஏழாமிடம் ஆகும்.இந்த ஏழாமிடத்தையே லக்கனமாக கொண்டு ஒருவர் தமக்கு அமையபோகும் மாமனார்/மாமியார்,கொழுந்தன்/மைத்துனர் மற்றும் நாத்தனார்/கொழுந்தியா போன்ற உறவுநிலைகளை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

                               

மாமனார் நிலை


                  ஒருவரது சாதகத்தில் ஏழாமிடத்திற்கு ஒன்பதாம் இடமான லக்கனத்திற்கு மூன்றாமிடத்தினை மாமனாரை பற்றி அறிந்து கொள்ளலாம்.
லக்கனத்திற்கு மூன்றாமாதிபதி கேந்திர கோணம் ,தன மற்றும் லாபஸ்தானம் ஏறி சுபரால் பார்வை பெறில் தனக்கு கிடைக்கும் மாமனார் நல்ல மாமனராக அமைவர்.

                          மூன்றாமாதிபதி லாபம் ஏறி நின்றால் மாமனார் சேர்த்து வைத்துள்ள சொத்தால் லாபம் அடையும் யோகம் அமையும்.மாமனாரால் பொருள் சேரும் .

                   மாறாக மூன்றாமாதிபதி மறைவுஸ்தானம் (6,8,12 ) ஏறி நின்றாலோ அல்லது சனி,ராகு மற்றும் செவ்வாய் போன்ற பாவிகள் தொடர்பு பெற்றிருந்தாலோ மாமனாரால் பலம் பெறும் யோகம் அமைவதில்லை.மேலும் தனக்கு அமைந்த மாமனாரால் என்றென்றும் தொல்லையே.

                           


மாமியார் நிலை.


                  ஒருவரது சாதகத்தில் ஏழாமிடத்திற்கு நான்காமிடமான லக்கனத்திற்கு பத்தாமிடம் மாமியாரின் நிலையை அறிய ஆய்வு செய்யப்படவேண்டிய இடமாகும்.

                            எனவே ஒருவருக்கு பத்தாமிடம் பலம்பெற நல்ல மாமியார் அமையும் உண்டு.
பத்தாமாதிபதி கேந்திர கோண ,தன ம்றும் லாபஸ்தானமேற மாமியாரால் பலன் அடையும் யோகம் உண்டு.

                    அவனது மாமியார் அவனை பெற்ற மகனைவிட பாசமாக நடத்துவார்.
பத்தாமிட அதிபதி லாபமேற மாமியாரால் பொருள் சேர்க்கை உண்டாகும்.
மாறாக பத்தாமாதிபதி மறைவுஸ்தாமேறினாலோ அல்லது இந்த அதிபதியுடன் சனி,ராகு மற்றும் செவ்வாய் சேர்க்கை பெற்றாலோ நல்ல மாமியார் கிடைக்கபெற வாய்ப்பில்லை.

                             நாத்தனார் /கொழுந்தியாள்/கொழுந்தன் உறவுநிலை


                          

ஒருவரது சாதகத்தில் கள்ஸ்திர ஸ்தானமான ஏழாம் இடத்திற்கு மூன்றாம் இடமான ஒன்பதாம் இடத்தினை கொண்டு நாத்தனாள் /கொழுந்தியாள் /கொழுந்தன் உறவுநிலை அறியலாம்.

                  ஒன்பதாமாதிபதி மேற்கண்டவகையில் பலப்பட உறநிலை நன்முறையில் அமையும்.

நன்றி.
(தங்களது சாதகபலன்,திருமணபொருத்தம் மற்றும் ஜெனன சாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக நீங்கள் எந்த நாட்டில் இருநதாலும் பெறலாம்.
தங்களது பிறந்ததேதி,நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ்அப் எண்ணிற்கு மெஸ்ஸேஸ் செய்து கட்டணம் செலுத்தும் விபரங்களை பெறலாம்)
செல்
740 257 08 99
  97 151 89 647
வாட்ஸ்அப் எண்
97 151 89 647
                                                                           
அன்புடன்
சோதிடர் ரவிச்சந்திரன்
     M.SC,MA,BEd.
   சோதிட ஆராய்ச்சியாளார்,
முதுநிலை வேதியியல் ஆசிரியர்,
ஓம்சக்தி சோதிட ஆன்லைன் ஆலோசனை மையம்,
கறம்பக்குடி,புதுக்கோட்டை மாவட்டம்.

My email
masterastroravi@gmail.com
My website
AstroRavichandransevvai.blogspot.com
@@@@@@@@@@@@@@@@@@@@@

No comments: