Thursday, 17 August 2017

கற்ற கல்விக்கும் சோதிடத்திற்கும் தொடர்பு உண்டா ?

கற்ற கல்விக்கும் சோதிடத்திற்கும் தொடர்பு 


                                                        
கிரகங்கள் படுத்தும் பாடு- ( 52 )

ஸ்ரீபத்ரகாளியம்மன் துணை!

                                 ஒருவர் பணம் சேர்ப்பதற்கும் ,கற்ற கல்விக்கும் தொடர்பு இருக்கவேண்டுமென்றால் அவனுடைய தனஸ்தானம் எனப்படும் இரண்டாமிடமும்,அதன் அதிபதியும் சுபஸ்தானம் பெற்று உயர்கல்வியை அளிக்கும் நான்காமிடமும்,மேல்நிலை கல்வியை தரும் பாக்கியஸ்தானமும் (2,4,9) ஆகிய மூன்று ஸ்தானங்களும் தொழில் ஸ்தானமான பத்தாமிடத்தோடு தொடர்பு பெற்றிருக்கவேண்டும்.

                                     இவ்வாறான அமைப்பை பெற்றவர்களே தாம் கற்ற கல்விக்கு ஏற்ற தொழிலை அவர்கள் வாழ்வில் மேற்கொள்ளமுடிகிறது.
மேற்கண்ட 2,4,9,10 போன்ற ஸ்தானங்கள் பலப்பெற்று சம்பந்தம் பெறுவதுடன் அரசுகிரகமான சூரியனையும் பலமாக பெற்று இந்த அமைப்புகளுக்கு குருபகவான் பார்வைக்கும் உட்படும்போது கற்ற கல்விக்கு ஏற்றார்போல அரசு துறையில் வேலை கிடைக்க வாய்ப்பு பெறுகிறார்கள்..

                                  அதேநேரத்தில் வாக்குஸ்தானத்தில் பாவகிரகங்களான செவ்வாய் அல்லது சனி மற்றும் ராகு அல்லது கேதுபகவானை பெற்றவர்கள் மற்றும் அதன் அதிபதிகள் பலம்பெற்ற அமைப்பை பெற்றவர்கள்  கல்வியும்,ஞானமும் பெற்றிருந்தாலும் தங்களது செயல்களில் வரட்டுவிதண்டவாதம் உடையவர்களாக இருப்பார்..இவர்கள் தலைமையின் கீழ் வேலை பார்பாது கடினம்.இவர்களுக்கு மட்டும்தான் எல்லாம் தெரியும் என்பது போன்ற செயல்களில் ஈடுபடுவார்கள்.செவ்வாய் பலம்பெறுவதால் ஒருவித அசட்டு துணிச்சல் உருவாகும்.
இரண்டில் பாவகிரகமும் இரண்டு மற்றும் நான்காமாதிபதியும் நீசம் பெறும்போது கல்வி என்ற பேச்சுக்கே  இடம் இல்லை.

                                                   


                                   மேலும் இரண்டாமிடத்தோடு சுபகிரக தொடர்பு கொடுத்த வாக்கை காப்பாற்றும் தன்மை இருக்கும்.இதுபோன்றவர்களின் பேச்சை நம்பலாம்.

                               அதேநேரத்தில் வாக்குஸ்தானத்தோடு சனி+செவ்வாய் சேர்க்கை மற்றும் இரண்டு கிரகங்களும் சேர்ந்தே   அல்லது இரு கிரகங்களும் தனித்தனியாகவோ பார்வை பெறுபவரின் பேச்சில் உண்மை இருக்காது.இவர்களிடம் சற்று எச்சரிக்கையாக இருத்தல் நலம்.இவர்கள் நேரிய வழிக்கு மாறாக பொருள் ஈட்டுவார்கள்.(பலனானது அந்த அதிபதி சுபர் பார்வை பொறுத்து மாறுபடலாம்)

                                      மேலும் இவை குடும்ஸ்தானமாகவும் அமைவதால் இந்த இடத்தில் பாவிகளோ அல்லது உச்சம் பெற்ற கிரகங்களோ இல்லாமல் இருத்தல் நலம்.மேலும் இரண்டாமிடம் சாதகரது மனைவி ஸ்தானத்திற்கு  மாங்கல்யஸ்தானமாகவும் வருகிறது.எனவே பொதுவாக இரண்டாமிடத்தில எவ்வித கிரகமும் இடம்பெறாமல் இருத்தல் உகந்தது.
இந்த இரண்டாமிடம் வலது கண்ணிற்கு உகந்தஸ்தானமாக வருவதால் சூரியன்+ராகு சேர்க்கை கண்பார்வை பாதிப்பை உண்டாக்கும்.

                                              இரண்டாமிடத்தில் அமரும் புதனோடு அசயர்களான அரவு தொடர்பு திக்கி திக்கி பேசவைக்கும்.
வாக்குஸ்தானத்தோடு புதன் மற்றும் கேது சம்பந்தம் சோதிட ஞானத்தை வழங்கும்.

                                                         


                                          ஒரு சிலர் ராஜதந்திரமாகவும்,வஞ்சகமாகவும் பேசுபவராக இருந்தால் அவரது வாக்குஸ்தானத்தில் ராகு பகவான் அரங்கேறியிருப்பார்.

                                      சிலர் முரட்டுதனமாக அடாவடியாக பேசுபவராக இருந்தால் அவரது இரண்டாமிடம் செவ்வாய் பகவான் இருப்பார்.அதுவும் ஆட்சி ,உச்சமாக பெற்றவர்கள் அசட்டு தைரியமாக இருப்பார்கள்.மீனம் ,தனுசு லக்கனகாரர்களும் இதுபோன்ற அமைப்பு உருவாகலாம்.

                                      சிலர் பிறர் மனம் புண்படும்படியாக பேசுபவராகவும்,வீண்விவாதங்களகல் ஈடுபட்டு வாம்பில் மாட்டிக்கொள்ளவும்,நல்லதே பேசினாலும் தவறாக போய்சேரவும் காரணமாக வாக்குஸ்தான சனிபகவான் செய்துவிடுவார்.இவர்கள் வள்ளுவ பெருந்தகை பாடிய "யாகாவாராயினும் நாகக்க காவாட்கால் சோகப்பர் சொல்லிழுக்கு அகப்பட்டு"-என்ற குறள்படி நடக்க கற்றுக்கொள்ளவேண்டும்.

                              சிறந்த பேச்சாற்றல் மற்றும் சோதிட ஞானத்தை ஒருவர் பெற இரண்டாமிட புதன்பகவான் உதவிசெய்வார்.சிலரை அருள்வாக்கு சொல்வராகவும்,வாக்கு பலிக்கும் ஆன்மீக அமைப்பை இரண்டாமிட கேதுபகவான் வழங்குகிறார்.

                                    இரண்டாமிடத்தில் குருபகவான் இருப்பது தனநாசத்தை உருவாக்கும்.மேலும் அது "காரகபாவ நாஸ்தியை உருவாக்கும்.இரண்டாமிட சூரியன் அனல்பறக்கும் கோபத்திற்கு சொந்தகாரர் .இவருக்கு பறக்கும் சண்டைக்காரன் மற்றும் அவசரகால ஹார்மோனான "அட்ரீனல் சுரப்பி"அதிகம் சுரக்கும்.
இரண்டாமிட சுக்கிரன் கலை நுணுக்கத்தை உண்டாக்கும்.

                                                                        


அன்புடன்,

சோதிடர்ரவிச்சந்திரன்
M.SC,MA,BEd,
சோதிட ஆராய்சியாளர்
முதுநிலை வேதியியல் ஆசிரியர்
வாழ்வியல் ஆலோசகர்
ஓம்சக்தி சோதிட ஆராய்சி நிலையம்.


எனது  வாட்ஸ்அப் எண்: 
97 151 89 647

செல்

             97 151 89 647
                        740 257 08 99



.தங்களுடைய சாதகத்தினை கணித ஆய்வு செய்து அறிவியல் அடிப்படையில் போன் வழியாக பலன் பெறலாம்.கட்டணம் உண்டு.தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ்அப் எண்ணிற்கு மெஸ்ஸேஸ் செய்து கட்டணம் செலுத்தும் விபரம் பெறலாம்



Email address

  masterastroravi@gmail.com

my website
AstroRavichandransevvai.blogspot.com

No comments: