Monday, 21 August 2017

திருமணயோகம் ( கடவுள் அமைத்து வைத்த மேடை )

                    "கடவுள் அமைத்து வைத்த மேடை "


                                                                 

கிரகங்கள் படுத்தும் பாடு -( 150 )

செவ்வாய்பட்டஸ்ரீபத்ரகாளியம்மன் துணை !

                            மணவாழ்வு நன் முறையில் அமைய கவனிக்கப்படவேண்டிய விதிமுறைகள்.

                                    ஒரு மணமாகக்கூடிய தம்பதிகளை பொருத்தம் போட்டு இணைக்ககூடிய சோதிடரின் பணி இன்றியாமையாத பணி ஆகும்.எனவேகீழ்கண்ட வகையில் ஆய்வு செய்து பார்த்து பொருத்தம் போடப்படவேண்டும்.

                        1) லக்கனம் ,ஏழாம் வீடு இந்த வீட்டதிபதிகள் இவர்கள் பெற்ற நவாம்சம் ,நவாம்ச அதிபதிகளின் தன்மைகள் பற்றி கவனிக்கப்படவேண்டும்.

                       2) குறிப்பிட்ட  மேற்கண்ட கிரகம் பெற்றுள்ள நட்சத்திர அதிபதியின் நிலையை கவனிக்கப்படவேண்டும்.

                           3) ஏழாம் அதிபதியும் ,நவாம்சத்தில் ஏழாம் அதிபதியும் சுபர்அல்லது அசுபர் பார்வைகளின் நிலை கவனிக்கப்படவேண்டும்.

                          4)லக்கனாதிபதி,குடும்பாதிபதி,களஸ்திரதானதிபதி மற்றும் அட்டமாதிபதி இவர்களின் நிலை அறியவேண்டும்.

                                5) லக்கனம்,குடும்பஸ்தானம்,களத்திரஸ்தானம் மற்றும் மங்கல்யஸ்தானம் இவைகளில் ராகு,கேது ,சனி மற்றும் செவ்வாய் சேர்க்கையற்றோ அல்லது அந்த ஸ்தான அதிபதிகளோடு சேர்க்கையற்றோ இருக்கப்படவேண்டும்.இவை லக்கனம் மற்றும் ராசி ஆகிய இரண்டிற்கும் கவனிக்கப்படவேண்டும்.அவ்வாறு இணைவு இருப்பின் அதற்கு ஏற்றார்போல பொருத்தம் போடப்படவேண்டும்.

                         6)  களஸ்திரகாரகர் சுக்கிரன் ,மங்களகாரகன் செவ்வாய் இவர்களோடு சனி ,ராகு மற்றும் கேது சேர்க்கையற்று இருத்தல் நல்லது.

                         7) ஏழாம் இடத்தில் எந்த கிரகமும் இல்லாதபோது அதன் அதிபதியை நன்கு கவனிக்கப்படவேண்டும்.

                                                                


                       8) ஏழாம் வீட்டு தொடர்பான யோகங்கள் உள்ளனவா? அந்த யோக தாக்கம் திருமணம் சம்பந்தமாக உள்ளதா ? என கவனிக்கப்படவேண்டும்.

                        9 ) ஏழாமிடத்தில் ஒன்றிற்கு மேற்பட்ட கிரகங்கள் இருந்தால் அவற்றுள் பலம் பெற்ற கிரகம் அதனின் இயற்கை தன்மை ,மேலும் ஏழாம் அதிபதிக்கும்,அக்கிரகத்திற்கும் உள்ள நட்புறவு இவற்றிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படவேண்டும்.

                     10) தம்பதிகளின் சாதக கட்டத்தில் 1,2,7,8 போன்ற வீட்டு கிரகங்களின் பலம் மற்றும் பலவீனம் அறியப்படவேண்டும்.

                    11) மேற்குறிப்பிட்ட வீடுகளின் கிரகங்களின்  அதிபதி கொண்டுள்ள தொடர்புநிலைகள் மற்றும் அதன் காரகநிலைகள் பற்றி ஆய்வு செய்யப்படவேண்டும்.இக்கிரகங்களோடு மறைவுஸ்தானாதிபதிகள் தொடர்புநிலை அறியப்படவேண்டும்.

                       12) திருமண நிர்ணயத்தில் ராசி சக்கரத்துடன் நவாம்ச சக்கரத்தில் அமைகின்ற கிரக நிலைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவேண்டும்.
உதாரணமாக ராசி சக்கரத்தில் ஏழாமாதிபதி உச்சம் பெற்று அம்சத்தில் நீசம் பெறின் அக்கிரக பலன் குறையும்.எனவே ராசி சக்கரத்தில் பலம் பெற்ற கிரகம் அம்சத்திலும் சமவலிமை பெற்றிருக்கவேண்டும்.

                        13) குறிப்பிட்ட காலத்தில் விம்சோத்தரி முறையில் நடைபெறும் திசைபுத்திகள் மற்றும் அப்போதுள்ள கோச்சார கிரகநிலைகளையும் கவனிக்கப்படவேண்டும்.

                          14)தம்பதிகள் இருவரது புத்திரஸ்தானமான ஐந்தாமிடம் ராகு,கேது சேர்க்கையற்றோ அல்லது ஐந்தாமாதியின் வலிமை மற்றும் புத்திரகாரகர் குருபகவானின் நிலைமை முதலியவை ஆய்வு செய்யப்படவேண்டும்.

                   மேற்கண்ட வகையில் ஆய்வு செய்து மணமாகும் தம்பதிகளுக்கு விவாக பொருத்தம் இடப்படவேண்டும்.இத்துடன் நட்சத்திர அடிப்படையிலான பொருத்தங்களையும் கவனிக்கப்படவேண்டும்.நட்சத்திர அடிப்படையிலான தசாவித பொருத்தங்களைவிட கட்ட பொருத்தங்களே மேலானது. 

                                                           


(தங்களது சாதகபலன்,திருமணபொருத்தம் மற்றும் ஜெனன சாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக நீங்கள் எந்த நாட்டில் இருந்தாலும் பெறலாம்.
தங்களது பிறந்ததேதி,நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ்அப் எண்ணிற்கு மெஸ்ஸேஸ் செய்து கட்டணம் செலுத்தும் விபரம் பெறலாம்)


வாட்ஸ்அப்

97 151 89 647


செல்

740 257 08 99

  97 151 89 647

                                                                                  
அன்புடன்

சோதிடர்ரவிச்சந்திரன்
  M.SC,MA,BEd.
சோதிட ஆராய்ச்சியாளந்,
முதுநிலை வேதியியல் ஆசிரியர்,
ஓம்சக்தி ஜோதிட ஆன்லைன் ஆலோசனை மையம்,
கறம்பக்குடி,புதுக்கோட்டைமாவட்டம்.


      EMAIL ; masterastroravi@gmail.com

my website

astroravichandransevvai.blogspot.com


No comments: