Thursday, 31 August 2017

ரஜ்ஜூ பொருத்தம்- ஓர் ஆய்வு

ரஜ்ஜூப் பொருத்தம் -ஓர் ஆய்வு

                     

கிரகங்கள் படுத்தும் பாடு- ( 164 )

செவ்வாய்ப்பட்டி
அருள்மிகு ஸ்ரீ பத்ரகாளியம்ம Iன் துணை !

          இரு மனம் இணையும் திருமண பந்தத்திற்கு  மனபொருத்தமும்,சாதக பொருத்தமும் அவசியம் ஆகும்.சாதக பொருத்தம் பார்த்து  இல்லற வாழ்வில் தம்பதிகளை ஜோடி சேர்ப்பதில் சோதிடர்களின் பங்கு அலாதியானது.

           "திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர் " என்பார்கள்.இப்பயிர் கால வெள்ளத்தில் அடித்து செல்லாமாலும்,அழிந்து போகமாலும் "ஆல்போல் தழைத்து அருகுபோல் வேறூன்றி நன் மக்களை பெற்றெடுத்து ஊர் போற்றும் தம்பதிகளாக வாழ வழி வகுப்பதில் கிரகங்களின் பங்கு குறிப்பிடத்தக்கது.

           நமது கர்ம வினைப்படிதான் நமது வாழ்வானது இட்டு செல்லும் எனினும் அவர்களை ஒரளவு கலங்கரை விளக்கமாக இருந்து வழி காட்ட உதவுதில் சோதிடர்கள் பங்கீடு முக்கியமானது.

            ஒரு சில தம்பதிகள் சரியாக கணக்கிடாத அல்லது கணக்கிடுவதில் கவனக்குறைவு உண்டான சோதிடர்களால் பொருத்தம் பார்க்கப்பட்டு திருப்தியான பொருத்தம் இல்லாமல் வாழ்வில் இன்னல்களையும்,பிரிந்து வாழும் சூழல் உருவாகிவிடுவதும் சோதிடர்களின் தவறு அன்று தங்களது கர்ம பலனே அன்றி வேறு அல்ல.

        எந்த ஓன்றும் 'காரணம் இன்றி காரியம் இல்லை " எல்லாம் அவரவர் வினைப்பயனே.இதன் அடிப்படையில் சோதிடம் அறிந்த புறநானூறு கவிஞர்  கணியன் பூங்குன்றனார்
தமது பாடல் வரிகளில்
"தீதும்நன்றும் பிறர் தரவாரா " என்கிறார்.

                             


            திருமணவானில் கொடி கட்டி பறக்க பெற்றோர்கள் கவனத்திற்கு. கொண்டுவரும் பொருட்டு இப்பதிவினை இட்டு  செல்கிறேன்.

               திருமண பொருத்தம் பார்க்க சோதிடர்களை நாடும்  பெற்றோர் நட்சத்திர அடிப்படையிலான "விவாக தசவிதப்பொருத்தம் " மற்றும் கட்ட அடிப்படையிலான கிரக பொருத்தங்கள் ஆகிய இரண்டிற்கும் முக்கியத்துவம் கொடுத்து பார்க்கும்படி சோதிடர்களிடம் கேட்டுக்கொள்ளுங்கள். எனது தனிப்பட்ட அனுபவ அறிவுரை "நட்சத்திர பொருத்தங்களை விட சாதக கட்ட அடிப்படையிலான கிரகங்களின் பொருத்தத்திற்கு " அதிக முக்கியத்துவம் கொடுங்கள்.

              விவாக தசவித பொருத்தம் பார்க்கும்போது ரஜ்ஜூ பொருத்தம் எனப்படும் கயிறு பொருத்தம் அல்லது மாங்கல்ய பலப்பொருத்தத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.காரணம் என்னவெனில் தம்பதிகளின் ஆயுள் பலம் ஆகும்.

             நமது முன்னோர்கள் விவாக தசவிதபொருத்தங்களில் ஏனைய பொருத்தங்கள் இருந்தாலும் ரஜ்ஜூபொருத்தம் இல்லாவிட்டால் விவாகம் செய்யக்கூடாது என கூறியுள்ளார்கள்.அதாவது தம்பதிகள் இருவருக்கும் ஒரே ரஜ்ஜூ வந்தால் திருமணம் செய்யக்கூடாது என விளக்கியுள்ளார்கள்.

       இதற்காக
ஏனைய பொருத்தங்களும்,கட்ட பொருத்தங்களும் நன்றாக  இருந்து ரஜ்ஜூ பொருத்தம் மட்டுமே இல்லாத தம்பதிகளுக்கு பொருத்தம் இல்லை என விவாகம் செய்யாமல் தடுத்துவிடலாமா ? என என்னிடம் கேள்வி கேட்டால் "கூடாது " என்பதே எனது பதிலாக அமையும்.
ரஜ்ஜூ பொருத்தம் பார்க்கும்போது சில விதிவிலக்குகள் உண்டு.என்னவென விரிவாகவும்,விளக்கமாகவும்  எனது சிற்றறிவுக்கு எட்டியவரை விளக்குகிறேன்.

          தம்பதிகள் இருவருக்கும் ஒரே ரஜ்ஜூவாக இருக்கும் பட்சத்தில் ரஜ்ஜூ பொருத்தத்தில் ஆரோக ரஜ்ஜூ (ஏறுமுகம்) , அவரோக ரஜ்ஜூ (இறங்கு முகம் ) என இரு வகையான உட்பிரிவுகள் உள்ளது.ஒரே ரஜ்ஜூவாக உள்ள  தம்பதிகளுக்கு ஒரு ரஜ்ஜூ ஆரோக ரஜ்ஜூ ' வாக  இருந்து மற்றோன்று அவரோக ரஜ்ஜூ ' வானால் பொருத்தம் உண்டு என எடுத்துக்கொள்ளலாம் என சோதிட ஆர்வலர்களுக்கு தெரிவித்து கொள்கிறேன்.

              ஆனால் தம்பதிகள் இருவரது ரஜ்ஜூ'வும் ஆரோக ரஜ்ஜூ ' வாக இருந்தாலோ அல்லது அவரோக ரஜ்ஜூ 'வாக இருந்தாலோ விவாகம் செய்யக்கூடாது.

                  தம்பதிகள் இருவருக்கும் ஆரோக
ரஜ்ஜூ 'வானால் புருஷ நாசம்.அவரோக ரஜ்ஜூவாக இருந்தால் ஸ்திரி நாசம் ஆகும்.

ரஜ்ஜூ பொருத்தம் வகைகள்

     1)  பாத ரஜ்ஜூ

     2)  தொடை ( ஊரு ) ரஜ்ஜூ
     3)  தொப்புள்
         (நாபி அல்லது உதர ) ரஜ்ஜூ

     4 ) கண்ட (கழுத்து ) ரஜ்ஜூ

     5) சிரசு ( தலை ) ரஜ்ஜூ

          மேற்கண்ட ஐந்துவிதமான ரஜ்ஜூவில் சிரசு ரஜ்ஜூ ,கழுத்து ரஜ்ஜூ ஆகிய இரண்டு ரஜ்ஜூ வும் ஒரே ரஜ்ஜூவாக தம்பதிகள் இருவருக்கும் வந்தால் பொருத்தம் இல்லை எனலாம்.
ஏனேனில் சிரசு ரஜ்ஜூ புருஷ நாசம் ஆகலாம் எனவும்,கழுத்து ரஜ்ஜூ ஸ்திரி (மணமகள்) நாசம் ஆகலாம் எனவும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகிறது.

               ஏனைய ரஜ்ஜூ க்கள் ஒரே ரஜ்ஜூ வாக வந்தால் திருமணம் செய்வதில் பாதிப்புகள் வந்துவிடுவதில்லை.

                தம்பதிகள் இருவருக்கும் ஒரே ரஜ்ஜூவாக நாபி ரஜ்ஜூ இருந்தால் புத்திர தடையை தர வாய்ப்பு உண்டு.
ஊரு ரஜ்ஜூ வாக இருப்பின் தனம் நாசம் ஆக வாய்ப்பு உணடு.இதேபோல இருவருக்கும் பாத ரஜ்ஜூவாக இருந்தால் தேசாந்திரம் போவான் .இவ்வளவுதான் ஒழிய உயிருக்கு பயம் இல்லை விவாகம் செய்யலாம்.

                  ஒருசில மூலநூல்களில்  ராசி அதிபதி பொருத்தம்  இருக்கும் பட்சத்தில் விவாகம் செய்யலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

            எனது அனுபவத்தில் கண்ட ,சிரசு ரஜ்ஜூகள் மட்டும் ஒரே ரஜ்ஜூவாக வரும்பட்சத்தில் விவாகத்தை தவிர்த்து ஏனைய ரஜ்ஜூ கள் ஒரே ரஜ்ஜூவாக வரும் பட்சத்தில் தம்பதிகள் இருிவரது "ஆயுள் ஸ்தானத்தை நன்கு ஆராய்ச்சி செய்து தீர்க்க ஆயுளாக இருக்கும் பட்சத்தில் விவாகம் செய்யலாம் என்பது எனது தனிப்பட்ட கருத்தாகும் .சோதிட ஆசான்கள் தங்களது கருத்தினை தெரிவித்தால் அனைவருக்கும் பயன்படும் பதிவாக மாறும் என்பதால் தங்களது கருத்தினை பகிரவும்.

   நன்றி! நன்றி!! நன்றி!!!

(தங்களது சாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன சாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக நீங்கள் எந்த நாட்டில் இருந்தாலும் பெற தங்களது பிறந்த தேதி,பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ்அப் எண்ணிற்கு மெஸ்ஸேஸ் செய்து கட்டணம் செலுத்தும் விபரம் பெறலாம்.)

   தொடர்புக்கு
வாட்ஸ்அப் எண்
  97 151 89 647

   செல்
   740 257 08 99
      97 151 89 647

   அன்புடன்

  சோதிடர் ரவிச்சந்திரன்
      M.Sc, MA ,BEd,
  சோதிட ஆராய்ச்சியாளர்,
ஓம்சக்தி சோதிடம் ஆன்லைன் ஆலோசனை மையம்,
கறம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்

Email
  masterastroravi@gmail. com

My website
  AstroRavichandransevvai.blogspot.com

--------------------------------------

No comments: