சாதகத்தில் சூரியபகவானும், சந்திரபகவானும் உண்டாக்கும் மாற்றங்கள்.
#கிரகங்கள் படுத்தும் பாடு- ( 100 )
ஸ்ரீபதரகாளியம்மன் துணை!
கிரகங்களில் ஆத்மாக்காரகன் மற்றும் உடல்காரகன் எனப்படும் சூரியனுக்கும்,மனதிற்காரகன் எனப்படும் சந்திரனுக்கும் மட்டும் ஒரே ஒரு வீடுகளை பெற்றிருக்கிறது.எனவேதான் சரராசிகளில் கடகராசியை சிறந்த ராசியாகவும்,ஸ்திர ராசிகளில் சிம்மராசியை சிறந்த ராசியாகவும் கருதப்படுகிறது.
சாதகங்களில் ஹோராவர்க்கம் காணும்போது சூரியனையும்,சந்திரனையும் மையமாக வைத்து பிரித்துஎடுக்கப்படுகிறது..சூரியனுக்கு கீழ் உள்ள ஆறு ராசிகளும் ஒரு பிரிவாகவும்,சந்திரனுக்கு மேல் உள்ள ஆறு ராசிகள் ஒரு பிரிவாகவும் பிரிக்கப்படுகிறது.
சந்திரன் ஒரு ராசியில் இரண்டே கால் நாள் வீதம் பணிரெண்டு ராசிகளையும் இருபத்தெழு நாட்கள் சுற்றி வருகிறது.இது ஒரு மாதமாக கணக்கிடப்படுகிறது.
சூரியன் ஒரு ராசிக்கு ஒரு மாதம் வீதம் வீதம் பணிரெண்டு ராசிகளையும் பணிரெண்டு மாதம் சுற்றி வருகிறது.இது ஒரு ஆண்டாக கணக்கிடப்படுகிறது.
சந்திரன் சுற்றி வருவதை அடிப்படையாக வைத்தே ராசி கணக்கிடப்படுகிறது.
சூரியன் சுற்றி வருவதை அடிப்படையாக கொண்டு சாதக கட்டத்தில் பூமியின் சுழற்சிக்கு ஏற்ப லக்கினம் கணக்கிடப்படுகிறது.பூமி தன்னை தானே சுற்றிவர ஒரு நாள் எடுத்துக்கொள்வதால் ஒரு நாளைக்கு இரண்டுமணி நேரம் ஒரு லக்கனமாக கருதப்படுகிறது.பூமி சூரியனை சுற்றிவர ஒரு ஆண்டு எடுத்துக்கொள்வதால் சூரியன் ஒரு ராசிக்கு ஒரு மாதம் என பணிரெண்டு ராசிகளையும் சுற்றி வருகிறது.
சூரியன் சுற்றி வருவதை அடிப்படையாக கொண்டு சாதக கட்டத்தில் பூமியின் சுழற்சிக்கு ஏற்ப லக்கினம் கணக்கிடப்படுகிறது.பூமி தன்னை தானே சுற்றிவர ஒரு நாள் எடுத்துக்கொள்வதால் ஒரு நாளைக்கு இரண்டுமணி நேரம் ஒரு லக்கனமாக கருதப்படுகிறது.பூமி சூரியனை சுற்றிவர ஒரு ஆண்டு எடுத்துக்கொள்வதால் சூரியன் ஒரு ராசிக்கு ஒரு மாதம் என பணிரெண்டு ராசிகளையும் சுற்றி வருகிறது.
சித்திரை மாதத்தில் பிறந்தவர்களுக்கு சூரியன் மேஷராசியில் இருக்கிறது.அது சரியான வெயில் காலமாக இருப்பதால் சூரியன் உச்சநிலையிலும்,அதேநேரத்தில் ஐப்பசி மாதம் கடுமையான மழைக்காலமாகவும் மற்றும் வானம் மேகக்கூட்டமாகவும் காணப்படும் என்பதால் அங்கு சூரியனின் உக்கிரம் அதாவது வெயிலின் தாக்கம் குறைவு என்பதால் நீசமாகவும் திகழ்கிறார்.
எனவே சூரியன் சாதக கட்டத்தில் இருக்கும் ராசியின் இடத்தை வைத்து அவர் எந்த மாதத்தில் பிறந்திருப்பார் என்பதையும் எளிமையாக கண்டறியலாம்.
அதேபோல ஒருவர் பிறந்தது வளர்பிறையா? ,தேய்பிறையா ? என்பதை கண்டறியவும் சூரிய-சந்திர சுழற்சியானது முக்கியமானது.ஒருவரது சாதகத்தில் சந்திரன் சுபரா?அசுபரா ?என கணக்கிடவும் சூரிய-சந்திர சுழற்சி அவசியமானது.
வளர்பிறை சந்திரனை இயற்கை சுபராகவும்,தேய்பிறை சந்திரனை இயற்கை பாவியாகவும் சாதகத்தில் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகிறது.
சூரியனும்,சந்திரனும் ஒரு ராசியில் சந்திக்கும் காலத்தை அமாவாசையாக கணக்கிடப்படுகிறது.இந்த நேரத்தில் சந்திரனின் நிழல் மட்டும் பூமியில் விழுகிறது.எனவே அமாவாசை நேரங்களில் முழு இருட்டாக காணப்படுகிறது.சந்திரன் மனதிற்காரகன் என்பதால் அமாவாசை நேரத்தில் பிறந்தவர்கள் சற்று மனக்குழப்பத்தை உண்டாக்கும்.சரியான முடிவு எடுக்க தயங்குபவனாக இருப்பான் என்பதை அறியலாம்.இது இரண்டெகால் நாள் வரை நீடிக்கும்.
சந்திரன் சூரியனை விட்டு பின்னோக்கி செல்லும் பதினைந்து நாட்களை பிரதமை,துவிதியை என தொடங்கி பொளர்ணமி காலம் வரை உள்ள பதினைந்து திதிகளை வளர்பிறை அல்லது பூர்வபட்சம் அல்லது சுக்கில பட்சமாக கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகிறது.
பொளர்னமி நேரத்தில் சூரியனும்,சந்திரனும் சமசப்தமாக நிற்கும்.இந்த நேரத்தில் நிலவின் முழு ஒளியும் பூமியும் புவிமீது விழும்.இவ்விரு கிரகங்களும் 180 பாகையில் ஒரே நேர்க்கோட்டில் நிற்கும்.இதற்கு பிறகு சந்திரன் சூரியனை நோக்கி செல்லும் பதினைந்து நாட்களில் பிரதமை முதல் அமாவாசை வரை உள்ள பதினைந்து நாட்களையும் தேய்பிறை காலம் அல்லது அமரபட்சம் அல்லது கிருஷ்ணபட்சம் என கணக்கிடப்படுகிறது.
எனவே சூரியனுக்கு பின் ஏழு ராசிக்குள் சந்திரன் சாதக கட்டத்தில் இருந்தால் அது வளர்பிறை சந்திரன் எனவும்,ஏழு ராசி தாண்டி சூரியனை நோக்கி சந்திரன் சென்றால் தேய்பிறை சந்திரன் எனவும் எவ்வித கணக்கீடு இன்றி எளிதில் கண்டறியலாம்.
சூரியனுக்கும்,சந்திரனுக்கும் ராகு,கேதுக்கள் கிரகணங்களை உண்டுசெய்வதால் இவ்விரு அரவுகளும் சூரிய-சந்திரர்களுக்கு பொது எதிரியாக கணக்கிடப்படுகிறது.
சூரியனையும் ,சந்திரனையும் அடிப்படையாக வைத்து பிரிக்கப்படும் ஆறு ,ஆறு மாதங்களை தேவர்களின் விழிப்புகாலம் மற்றும் உறக்க காலமாக கணக்கிடப்படுகிறது.
சூரியன் உச்சம் பெறும் ராசியில் சுற்றுபுரத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாகவும்ஜ,சூரியன் நீசம் பெறும் ராசிகளில் வெயிலின் தாக்கம் குறைவாக இருப்பதுபோல ,சந்திரன் உச்சம் பெறும் ராசியைகொண்டவர்கள் உறுதியான எண்ணம் மற்றும் மனநிலையை பெற்றவராகவும் உள்ளார்.சந்திரன் நீசம்பெற்ற விருட்சக ராசியை கொண்டவர்கள் உறுதியான முடிவு எடுக்க தெரியாதவர்களாகவும்,கோபக்காரர்களாகவும் திகழ்வார்.
சூரியன்
ஆத்மாகாரனாகவும்,தந்தைக்கும்,அரசாங்க ஊழியனாகவும்,ஒரு சிறந்த நாடளும் தலைமை பெற்றவனாகவும் ,எலும்புக்கு காரகனாகவும் உள்ள்ளார்.மேலும் ஆண்தன்மை கொண்டவராகவும் திகழ்கிறார்.
ஆத்மாகாரனாகவும்,தந்தைக்கும்,அரசாங்க ஊழியனாகவும்,ஒரு சிறந்த நாடளும் தலைமை பெற்றவனாகவும் ,எலும்புக்கு காரகனாகவும் உள்ள்ளார்.மேலும் ஆண்தன்மை கொண்டவராகவும் திகழ்கிறார்.
சந்திரன்
மனதிற்கு காரகராகவும்,மாதர்காரகனாகவும்,
இரத்தத்திற்கும்,பால் பொருட்களுக்கும்,நீர் காரகராகவும் உள்ளார்.மேலும் பெண்தன்மையுடையவராகவும் திகழ்வார்.
மனதிற்கு காரகராகவும்,மாதர்காரகனாகவும்,
இரத்தத்திற்கும்,பால் பொருட்களுக்கும்,நீர் காரகராகவும் உள்ளார்.மேலும் பெண்தன்மையுடையவராகவும் திகழ்வார்.
சூரியனை சிவமாகவும்,சந்திரனை சக்தியாகவும் பரிணாமிக்கிறார்.
சூரியனோடு செவ்வாய் சேரும்போது கபடு,சூது மற்றும் சூழ்ச்சிகாரனாகவும் சாதகரை மாற்றிவிடுகிறது.
சந்திரனோடு செவ்வாய் சேர "சசிமங்கள யோகத்தை" வழங்குகிறது.
சூரியனோடு சனி சேர்க்கை மற்றும் பார்வை தந்தை -மகன் உறவுநிலை பாதிப்பு.
சந்திரனோடு சனி சேர மற்றும் பார்க்க திருமணவாழ்வு மற்றும் மனநிலை பாதிப்பு.
சூரியனோடு அரவுகளான ராகு மற்றும் கேது சேர தந்தையின் உடல்நலபாதிப்பு.
சந்திரனோடு ராகு,கேது சேர்க்கை சாதகரின் மனநிலை பாதிப்பு.
சூரியனோடு குரு சேர மற்றும் பார்க்க "சிவயோகம்".இதன் சிறந்த ஆன்மீக தலைவனாக்குகிறது.
சந்திரனோடு குரு சேர மற்றும் பார்க்க "குரு-சந்திர யோகம்".இதன்பலன் செம்பொன் , மண் மற்றும் மனை ,மனைவி வழி பொருள் சேர்க்கை போன்ற பலன்கள் உண்டாகும்.
சந்திரனுக்கு கேந்திரத்தில் குரு இருப்பின் "கஜ-கேசரி யோகம்".கஜம்-யானை,கேசரி-சிங்கம்.இவற்றை படையாக கொண்டு திகழும் நாடளும் மன்னனாகும் யோகம்.
நன்றி !
(தங்களது சாதகபலன், திருமணபொருத்தம் மற்றும் ஜெனன சாதகம் கணித்தல் போன்ற சேவைகளை போன் வழியாக நீங்கள் எந்த நாட்டில் இருந்தாலும் பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ்அப் எண்ணிற்கு மெஸ்ஸேஸ் செய்து கட்டணம் செலுத்தும் விபரம் பெறலாம்.)
(தங்களது சாதகபலன், திருமணபொருத்தம் மற்றும் ஜெனன சாதகம் கணித்தல் போன்ற சேவைகளை போன் வழியாக நீங்கள் எந்த நாட்டில் இருந்தாலும் பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ்அப் எண்ணிற்கு மெஸ்ஸேஸ் செய்து கட்டணம் செலுத்தும் விபரம் பெறலாம்.)
தொடர்புக்கு
அலைபேசி
97 151 89 647
740 257 08 99
அன்புடன்
சோதிடர்ரவிச்சந்திரன்
M.Sc ,MA,BEd,
சோதிட ஆராய்சியாளர்,
முதுநிலை வேதியியல் ஆசிரியர்,
ஓம்சக்தி அஸ்ட்ரோ ஆன்லைன் சென்டர்,
கறம்பக்குடி,புதுக்கோட்டை மாவட்டம்,
தமிழ்நாடு,இந்தியா.
No comments:
Post a Comment