Sunday, 27 August 2017

சாதக அடிப்படையில் ஒருவருக்கு நோய் வரக்காரணம் என்ன ?

சாதக அடிப்படையில் ஒருவருக்கு
நோய் வரக்காரணம் என்ன...?
*********************************

#கிரகங்கள் படுத்தும்பாடு -(103)
செவ்வாய்பட்டி
ஸ்ரீபத்ரகாளியம்மன் ஆசியுடன்

           "  நோயற்ற வாழ்வே 
             குறைவற்ற செல்வம்" 
                                             என்பார்கள்.

               "எப்பொழுது அறிவியல் தொழில்நுட்பம் வளர ஆரம்பித்ததோ அப்பொழுதே மனிதனிடம் சுய உழைப்பு குறைந்து எல்லாம் இயந்திரமயமாகிவிட்டது.
அதேபோல் விவசாயத்திலும் இயற்கை உரங்களுக்கு பதிலாக செயற்கை உரங்கள்,பூச்சிகொல்லி மருந்துகள்,கலப்பின விதைகள்(மரபணுநீக்கம் செய்யப்பட்ட விதைகள்) மற்றும் மனிதர்களுக்கு பதிலாக நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி குறுகிய காலத்தில் அதிக விளைச்சல் தரக்கூடிய உணவுப்பொருட்களை உண்ண ஆரம்பித்ததாலும் மனிதனுக்கு நோய் வர ஆரம்பித்து விட்டது.

                          ஜாதக அடிப்படையில் ஒருவருக்கு நோய் வரக்காரணங்களை ஆராய கீழ்கண்ட ஸ்தானங்களை ஆய்வு செய்யவேண்டும்.

                           1) ருண,ரோக ஸ்தானம் எனப்படும் ஆறாமிடம்,அதன் அதிபதி

                            2)  லக்கனம் மற்றும் லக்கனாதிபதி

                            3) சுகம் ஸ்தானம் என அழைக்கப்படும் நான்காமிடம் மற்றும் அதன் அதிபதி

                          4) ராசி  ,ராசி இருக்கும் வீட்டின் அதிபதி,ராசிக்கு 4,6 ம் இடங்கள்

                             

சோதிட கவிதை
*******************
உடல் உயிரோடு அரவுகூடி
உடலோனும் உயிரோனும் கெட்டு
சுபர் உறவு பார்வையற்று
சுகத்தோனும் வலுவிழந்தால்
ருணகாரன் ஆட்சி செய்ய
என்னடா அவன் பாவம் செய்தான்
எந்தாலும் அவனுக்கு பிணிதானே"


விளக்கங்கள்
                                   1) உடல் மற்றும் உயிர் என சொல்லக்கூடிய லக்கனம்,ராசியில் ராகு,கேது அமர்ந்து பாவிகள் பார்வை பட்டாலும் அல்லது இவ்விருஸ்தானங்களோடு சனி,செவ்வாய்,ராகு மற்றும் கேது போன்ற பாவிகள் சம்பந்தப்பட்டு நின்றாலும்,

                                    2) லக்கனாதிபதி,ராசிக்கு அதிபதி நீசம்,பகை பெற்றாலோ அல்லது 6,8,12 போன்ற மறைவிடத்தில் இருந்தாலோ(சுபர் பார்வையற்று)

                                   3) நான்காமிடத்தில் பாவிகள் இருந்து சுபர் பார்வையற்றும் அதன் அதிபதி நீசம்,பகை மற்றும் 6,8,12 இடங்களில் இருந்தாலும்,

                                     4 ) ஆறாம் அதிபதி ஆட்சி உச்சம் பெற்று , அதேநேரத்தில் லக்கனாதிபதி வலுவிழந்து நின்றாலும்,

                                     5) ராசிக்கும்,ராசியிலிருந்து 4 மற்றும் 6 ம் இடத்தையும் கவனிக்கவேண்டும்.

                                    6) மனதுக்காரகன் சந்திரனும் மற்றும் அதன் அதிபதியும் பலவீனப்பட்டு நின்றாலும் எந்நாளும் திடமான மனதின்றி மனகுழப்பத்தால் மனவியாதிகள் வரவாய்ப்புண்டு.இதுபோன்ற அமைப்புகள் உடையோரின் லக்கனமும் அதன் அதிபதியும் உடலும் பலவீனப்பட்டு நின்றால் உடலும் ,உள்ளமும் பாதிக்கப்பட்டு நிற்பான்.

                மேற்கண்ட அமைப்புகள்( அடிப்படை விதிகள்) அனைத்தும் இருந்தால் வாழ்நாள் முழுவதும் நோயாளியாக இருப்பான்.
தெய்வ வழிபாட்டாலும்,யோகா,தியானம் போன்ற செயல்களாலும் குறைக்கலாம்.

                               

மேலும் சில விதிகள்;-
++++++++++++++

                              1)  1,6 க்குடையவர்கள் பரிவர்தனை பெற்று 4-ம் அதிபதியும் கெட்டு இருந்தால் லக்கனாதிபதி தசை ஆறாம் அதிபதி புத்தியிலோ அல்லது ஆறாம் அதிபதி தசை லக்கனாதிபதி புத்தியில் நோயாளியாவான்.

                             2) துய்ய கேரளம் எனும் சோதிடநூல் பாடல்

"என்னிய ஒன்றிற் கோளாறாமிடத்துக் கோளுடன் கூடி

உன்னிய ராகு கேதுவோடு ஒரு தலத்தே நிற்க

 தன்னுடல் சுகமில்லாமல் சஞ்சல மனத்தனாகி 

மின்னலாய் வியாதிஸ்தானம் என விளம்பலாமே"



விளக்கம்
***********

                         லக்கனாதிபதி ஆறாம் அதிபதியுடன் கூடி இவர்களுடன் ராகு,கேது சம்பந்தபட்டால் உடல் சுகமில்லாமல் சஞ்சல மனதுடையவனாய் இருப்பான்.
*************௳***********************

(போன் வழியாகவே நீங்கள் எந்த நாட்டில் இருந்தாலும் சாதகபலன்,திருமணபொருத்தம் மற்றும் ஜெனன சாதகம் கணித்தல் போன்ற சேவைகளை பெறலாம்.கட்டாயம் பார்வைகட்டணம் உண்டு)
பிறந்ததேதி,நேரம் மற்றும் இடம் போன்ற விவரங்களை எனது வாட்ஸ்அப் எண்
97 151 89 647 க்கு மெஸ்ஸேஸ் செய்தால்போதுமானது.)

                                                                                     

அன்புடன்
சோதிடர் ரவிச்சந்திரன்
  M.Sc, MA ,BEd,
முதுநிலை வேதியல் ஆசிரியர்
ஓம்சக்தி ஜோதிட நிலையம்
கரம்பக்குடி
புதுக்கோட்டை மாவட்டம்


  செல்
9715189647
740 257 08 99


வாட்ஸ்அப்
97 151 89 647


Email
masterastroravi@gmail. Com


Website
AstroRavichandransevvai.blogspot.com

.................,

No comments: