Sunday, 20 August 2017

வாகன யோகம் உங்களது சாதகப்படி எவ்வித நிலையில் உள்ளது ?

வாகனயோகம் உங்களது சாதகப்படி எவ்வித நிலையில் உள்ளது ?


                     
கிரகங்கள் படுத்தும் பாடு- ( 162 )

செவ்வாய்ப்பட்டி பத்ரகாளியம்மன் துணை !

          இன்றைய கால கட்டத்தில் Two wheeler என்னும் ஈருளிலி வாகனங்கள் என்பது பெரும்பாலோனோர் வைத்திருக்கும் வாய்ப்பு இருக்கும் சூழல் உள்ளதால் தற்பொழுது வாகனயோகம் என்பது Four wheeler என்னும் நான்கு சக்கரங்கள் உள்ள வாகனங்கள் வைத்திருப்பதையே "வாகனயோகமாக 'காலத்திற்கு ஏற்றார்போல கருதப்படவேண்டும்.

               கிரகங்களில் சுக்கிரபகவானைத்தான் வாகன காரகர் என அழைக்கப்படுகிறது.எனவே ஒருவருக்கு வாகன யோகத்தை அள்ளித் தர  சாதகத்தில் சுக்கிரபகவான் சுபசாரம் வாங்கி சுபஸ்தான அதிபதியாக இருந்து பாவர்களின் கலப்பு இன்றி உச்சம்,மூலதிரிகோணம் , ஆட்சி மற்றும் நட்பு பெறும் சூழலில் அவரது வலிமைக்கு ஏற்றார்போல வாகனயோகத்தினை வாரிவழங்குவார்.

                                                         

      சுக்கிரபகவான் உச்ச  பலம் பெற்று தொழில் ஸ்தானமான பத்தாமிட தொடர்பினையடைந்து சுக்கிர திசையே நடைபெறும் காலங்களில் வாகனங்களை வைத்து பிழைப்பு நடத்தும் முதலாளி ஆவான்.பல வாண்டி வாகனங்களுக்கு உரிமையாளர் ஆக இருப்பர்.

           அதிலும் குறிப்பாக கனரக வாகனங்களுக்கு காரகர் ,இரும்புகாரகர் என அழைக்கப்படும் சனிபகவான் பலமடைந்து அத்துடன் தொழில்ஸ்தான அதிபதியாக சுக்கிர பகவான் வந்து பலமடைந்து சுக்கிரபகவான் திசையோ அல்லது சனிபகவான் திசையோ நடைபெறும் காலங்களில் jcp, போன்ற பெரிய கனரக வாகனங்களை வைத்து தொழில் நடத்தி லாபம் பெறும் முதலாளியாக திகழ்வார்.

            பூமிகாரகர் என அழைக்தப்படும் செவ்வாய் பகவான் ஆவார்.கனரக இரும்பு வாகன காரகர் சனிபகவான் மற்றும் வாகனகாரகர் சுக்கிரபகவான் ஆகிய இம்மூவரும் பலமான அமைப்பை பெற்றவர்களுக்கு விவசாயத்திற்கு உதவிபுரியக்கூடிய வாகனங்களைக்கொண்டு லாபம் அடையும் பெருமுதலாளியாக மாறுவார்.

           சுக்கிரபகவான் ஆனவர் சுயசாரம் வாங்கி பலமான அமைப்பினை பெற்று தொழில் ஸ்தானத்துடன் தொடர்பினை பெற மக்களை ஏற்றி செல்லும் பேருந்து முதலாளியாகவோ ( bus owner),டிராவல்ஸ் ஏஜென்ஸி வைத்து நடத்தும் முதலாளியாக இருப்பர்.

        வாகனயோகத்தினை அளிப்பதில் நான்காமிட அதிபதிக்கும் பெரும் பங்கு உண்டு என்பதால் மேற்கண்ட வாகன யோகத்தை பெற இந்த ஸ்தான அதிபதியும் பலமடைந்து வாகனகாரகர் சுக்கிரபகவான் உடனோ அல்லது பத்தாமிட அதிபதி உடனோ தொடர்பு பெற்றிருக்கவேண்டும்.

                               


வாகனயோகத்தை அளிக்க கீழ்கண்ட விஷயங்களை கவனிக்கப்படவேண்டும்.

      1)     ஒருவரது சாதகத்தில் நான்காமிட      அதிபதி மற்றும் சுக்கிரபகவான் ஆகிய இருவர்களின் வலிமை இவர்கள் தொழில்ஸ்தான அதிபதி உடன் கொண்டுள்ள தொடர்பு முதலியவற்றை கவனிக்கப்படவேண்டும்.  

        2)    நடைபெறும் திசையானது வாகன யோகத்திற்கு ஒத்துழைப்பாக உள்ளதா ? என கவனிக்கப்படவேண்டும்.

        3) நடைபெறும் திசையானது லக்கனாதிபதிக்கு நட்பாக உள்ளதா ? என ஆரயப்படவேண்டும் ? நட்பாக இருக்கும் பட்சத்தில் வாகன யோகத்தை வாரிவழங்கும்.

      4)வாகன காரகர் சுக்கிரபகவான் உடன் சனி,நான்காமிட அதிபதி மற்றும் செவ்வாய் பகவான் கொண்டுள்ள வலிமைகளுக்கு ஏற்ப அவரவர் சாதகத்தின் தன்மைக்கு ஏற்ப வாகன யோகத்தின் அளவினை கண்டறியப்படவேண்டும்.

    இவ்வாறு பலவகையில் ஆய்வு செய்து ஒருவரது வாகன யோகத்தை பற்றிய பலன் அளிக்கப்படவேண்டும்.
வாகனங்களை வைத்து பிழைப்பு நடத்தும் முதலாளியாகும் ஆசையில் பலர் இத்தொழிலிற்க்கு வந்து அவ்வித யோகம் சரியாக அமையாத பட்சத்தில் சொத்துக்களை இழப்பதற்கான காரணங்களை ஆய்ந்து பார்ப்போம்.

      வாகன யோகம் சரியாக  கிரக அடிப்படையில் சாதகத்தினை  ஆராய்ந்து பார்க்கமல் பல லட்சங்களை செலவளித்து தொழிலினை ஆரம்பித்து நட்டம் வரும் சூழலில் சாதகத்தினை தூக்கி கொண்டு வந்து பலன் பார்க்கும்போது அவர்களுக்கு வாகனயோகம் இருந்தாலும் ,வாகனங்களை வைத்து நடத்தும்  முதலாளியாகும யோகம் இல்லை என கூறியபோது அவர்கள் வருத்தப்பட்டு பல லட்சத்திற்கு கடன்காரர் ஆகிவிட்டேன் என வருத்தப்பட்டு செல்வதை பார்த்ததால் இதுபோன்ற நபர்களுக்கு பயன்படும் வகையில்தான் இப்பதிவினை பகிர்ந்துள்ளேன்.

                                                           

 
        தவறு நடக்க காரணம்


சாதகத்தினை மேம்போக்காக பார்க்கும் பட்சத்தில் சுக்கிரபகவான் உச்சம் பெற்றிருப்பதைப்போல தெரிந்தாலும் ஒரு குறிப்பிட்ட பாகை வரைதான் உச்சமாக இருக்கும் அவ்வெல்லையை தாண்டிய பிறகு சாதரன நிலை சுக்கிரபகவான் ஆக இருப்பர்.

         சில நேரங்களில் பாவக அமைப்பினை பார்க்கும்போது ராசியில் உச்சவீடான மீனத்தில் இருந்த சுக்கிரபகவான் பாவக வீட்டில் மேஷ வீட்டில் இருப்பர்.இதுபோன்ற அமைப்பில் சுக்கிரபகவானை முழு உச்சமாக கருத முடியாது.

         இதுபோன்ற தருணங்களில்தான் சரியாக ஆய்ந்து பார்க்காத சோதிடர்கள் வாகன யோகம் இருப்பதாக பலனளித்து வாகனங்களை வாங்க வைத்து விடுவதுண்டு.

           இதுபோன்ற அமைப்பை பெற்றவர்கள் வாகனங்களை இயக்கும் ஊழியர்களாக வேலை பார்க்கலாமேயொழிய முதலாளியாக முடியாது என்பதை தெளிவாக விளக்குகிறேன்.

வாகனங்களை இயக்கும் அரசு ஊழியராக

         பத்தாமிட அதிபதியானது சுக்கிரபகவான் உடன் தொடர்பினை பெற்று பலமான அமைப்பினை பெற்று அரசாங்க யோகம் தரக்கூடிய சூரியபகவானும் பலமடைய Government bus driver, conductor ஆக வேலைபெறும் யோகத்தினை பெறுவார்.

நன்றி

(தங்களது சாதகபலன், திருமணபொருத்தம் மற்றும் ஜெனன சாதகம் கணித்தல் போன்ற சேவைகளை போன் வழியாக நீங்கள் எந்த நாட்டில் இருந்தாலும் பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த இடம் மற்றும் பிறந்த நேரம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ்அப் எண்ணிற்கு மெஸ்ஸேஸ் செய்து கட்டணம் செலுத்தும் விபரம் பெறலாம்.)

தொடர்புக்கு

  வாட்ஸ்அப் எண்
   97 151 89 647


    செல்

97 151 89 647

   740 257 08 99

                              



அன்புடன்

  சோதிடர் ரவிச்சந்திரன்
       M.Sc ,MA ,BEd,
சோதிட ஆராய்ச்சியாளர்
ஓம்சக்தி ஆன்லைன் சோதிட ஆலோசனையாளர்,
கறம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.


Email
masterastroravi@gmail. com


My website
AstroRavichandransevvai.blogspot.com


.....................,..........................................................

No comments: