Thursday, 17 August 2017

ஜோதிடமும் ஆளுமைத்சன்மையும்

           ஜோதிடமும் ஆளுமைத்தன்மமையும்
                           *(*Astrology and Personality ) ***********************************
*****


                                                 
"கிரகங்கள் படுத்தும் பாடு - (98 )

ஸ்ரீபத்ரகாளியம்மன் ஆசியுடன்
மனித வாழ்வின் ஆளுமைத்தன்மையை நிர்ணயிப்பதில் முக்கிய பங்கு
வகிப்பவை மூன்று முக்கிய காரணிகள். உள்ளன.

அவையாவன
                                                      1) உடல்(Body)
                                                            2) உள்ளம்(mind)
                                                                    3) ஆன்மா(soul)

முதலில் உடல் பற்றிய விரிவான தகவல்களை பார்ப்போம்.

                    "சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும்"
உடல் நலமோடு இருந்தால்தான் உள்ளம் நலமாக இருக்கமுடியும்.உள்ளம் நன்றாக இருந்தால்தான் நல்ல சிந்தனைகள் பிறக்கும்.
எனவேதான்

                                           "உடல் வளர்த்தேன்
                                             உயிர் வளர்த்தேனே
                                              உடலை வளர்க்கும்
                                               உபாயம் அறிந்தேனே"

என திருமூலரின் திருமந்திரத்திலிருந்து மேற்கண்ட பாடலை படிப்பதிலிருந்து உடல் நலம் பேண வேண்டிய அவசியம் புரிகிறது.

உடல்நலம் பற்றி அறிய*************************


                                        ஒரு மனிதனுக்கு உடல் நலம் பற்றி அறிய
லக்கனம்,ராசி,சுகஸ்தானம் மற்றும் ரோண ரோக ஸ்தானம் மறறும் இவைகளின் அதிபதிகள் நிலை அறியவேண்டும்.
லக்கனாதிபதியும்,சுகாதிபதியும் ஆட்சி,உச்சம் பெற்று பாவிகள் சேர்க்கை மற்றும் பார்வை அற்று ,சுபர்களின் பார்வைபெற்று
அவ்விரண்டு இடங்களிலும் (1,4) பாவகிரகங்கள் தொடர்பின்றி
இருப்பின் முழு உடல் நலத்துடன் இருப்பர்.
இதேபோல் ஆறாம் அதிபதி நீசம் பெற்றோ அல்லது  மறைவு பெற்றோ  இருப்பது நலம்.பொதுவாக ஆறாமிடம் பலவீனமாக இருக்கவேண்டும்.

உள்ளமும்,ஜோதிடமும்

***************************

                            மனம் என்றழைக்கப்படும் உள்ளத்திற்கும் மனதுக்காரகன் என அழைக்கப்படும் சந்திரனுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு.
 
                           சந்திரன் இருக்கும் இடத்தை வைத்தே ராசி கணக்கிடப்படுகிறது.
சந்திரனை வைததே இரண்டு பட்சஙகள் நிர்ணயிக்கப்படுகிறது.
அமாவாசையிலிருந்து பொளர்ணமி வளர்பிறை இதனை பூர்வ பட்சம அல்லது சுக்கிலபட்சம என்பர்.

                             இதேபோல் பொளர்ணமியிலிருந்து அமாவாசை வரை தேய்பிறை என்
அழைக்கப்படும் இதனை கிருஸண
பட்சம்  அல்லது அமரபட்சம் என்பர்.

                               சந்திரனுக்கு வளர்பிறை ,தேய்பிறை இருப்பது போல மனதிற்கும் இன்பம்,துன்பம் என இரண்டாக அமைகிறது.மனம் எவ்வித காரணமின்றி சிலநேரங்களில் துள்ளி குதிக்கும்.சிலநேரங்களில் எதற்காக என சிந்திக்க தோன்றாமல் சோம்பலோடு காணப்படும்.எந்நேரமும் சிலர் குழப்பமாக காணப்படுவதற்கும் ,திடமான முடிவு எடுக்க முடியாமல் திண்டாடுவதற்கும்அவனது சாதகத்தில் மனதுக்காரகன் சந்திரபகவானே காரணமாகும்.இதனைப்பற்றி விரிவாக பார்ப்போம்.

                                          மனதினை உளவியலார்கள்

                                           1) இட்(அடி நிலை மனம்)
                                            2)ஈகோ(மனசாட்சி)
                                             3)சூப்பர் ஈகோ(மேல் நிலை மனம்)
என மூன்று நிலைகளாக பிரித்தனர்.

மனதிற்கு காரகர் சந்திரன்.உடலுக்கு காரகர் சூரியன்.

ஜோதிட ரீதியாக மனதினை ஐந்து வகைகளாக பிரிக்கலாம்.

1) தெளிந்த மனம் (Conscious mind )

                            லக்கனத்தில் உள்ள கிரகம் ஒருவர் தெளிந்த மனம் உடையவரா என்பதை தெரிவிக்கும்.

2) தன்னையறியாத மனம் (Un-conscious mind)

                              6-ம் பாவம் தன்னையறிமால் செய்யும் தவறை குறிக்கும்.இந்த இடத்தில் பாவிகள் இருந்தால் நிலைமை மோசமாகிவிடும்.

3) கீழ்தரமான மனம் (Lower mind )

                                   மூன்றாம் பாவத்தில் பாவிகள் இருந்தால் பொறாமை குணம் இருக்கும் அதை செயலில்காட்ட தயங்குவார்கள்.

4) உள்ளுணர்வுடையவர்கள்           (Sub-Conscious Mind )

                                  இவை 5-ம் பாவகம்.இதில் சுபர் இருப்பின் அல்லது பாவிகள் இருந்தாலும் சுபர் பார்வை பெற்றால் நல்ல மனம் உடையவர்கள்.வரக்கூடியதை முன்னாலே யூகிக்கும் திறன் இருக்கும்.
பாவிகள் இருப்பின் எண்ணத்திலே குறைபாடு இருந்து அதை செயலில் காட்டும் வஞ்சக நெஞ்சம் உடையவராக இருப்பார்.

5) மிக உயர்ந்த குணம்.                  

(Super-Conscious mind)

                            இதனை ஒன்பதாம் பாவம் காட்டுகிறது.
இந்த பாவம் நல்ல நிலையில் இருந்தால் மனம் உயர்ந்த நிலை உடையதாக இருக்கும்.
ஒன்பதாம் இடம் ஆட்சி உச்சம் பெற்று சுபர் பார்வை பெற்று இருக்கவேண்டும்.
9-ம் இடத்தில் ஞானகாரகன் கேது.
9-ம் இடம் மற்றும் அதன் அதிபதிக்கு குரு பார்வை கிடைப்பது.

*****************************************


நிலவிற்கும் ,மனிதனிற்கும் உள்ள தொடர்பு++++++++++++++++++++++++++



                     நிலவினால் கடல் பாதிக்கப்படுவது தெரியும்.கடல் நீரில் தண்ணீரும்,உப்பும் எந்த விகிதத்தில் உள்ளனவோ அந்த விகிதத்தில் நம் உடலிலும் உள்ளது.


                        கடல் நீர் நிலவினால் பொளர்னமி நேரத்தில் அதிக அலை எழுவதுபோல் நம் உடலிலும் மாற்றத்தை ஏற்படுத்துகிறது.

                       முழு நிலா நேரத்தில் உலகில் பைத்தியம் அதிகம் ஆகிறது.தேய் பிறை நேரத்தில் பைத்தியதன்மை குறைவு.


                 எனவே வான்மதிக்கும்,மதியிழந்தவர்க்கும் தொடர்புண்டு என்பதை நமது முன்னோர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

                       முழுமதி மதியிழந்தவரை பாதிக்கிறபோது அறிவுமதி படைத்தவரையும் பாதிக்கும்.

              மூளையின் கட்டமைப்பும்,உடலின் கட்டமைப்பும் எல்லா மனிதர்களுக்கும் ஒரே மாதிரியாக இருந்தாலும் புத்திசாலிதனத்தால் மாறுபடுவதற்கு காரணம் சந்திரனே ஆகும்.

சந்திரன் நீசம் பெற்று இருந்தாலும், ராகு கேதுவோடு சம்பந்தபட்டவர்கள் மன ரீதியாக பலவீனமாக இருப்பார்கள்.


                                                                      


   தொடரும் .........
அன்புடன்
                                  சோதிடர் ரவிச்சந்திரன்

                                               M.SC,MA,BEd
                              ஓம்சக்தி ஜோதிட நிலையம்
                               புதுக்கோட்டை மாவட்டம்.

                                           அலைபேசி:9715189647
                                                                                740 257 08 99

                                                  எனது வாட்ஸ்அப் எண்
                                                                            97 151 89 647


(தங்களுடைய ஜாதகம் தொடர்பான ஆலோசனையை  பெற மேற்கண்ட அலைபேசியில் (Cell) தொடர்புகொள்ளவும்.பிறந்ததேதி,நேரம்,பிறந்த இடம தேவை.வாட்ஸ்அப் மூலமாக மெஸ்ஸேஸ் செய்துMy bank detail தெரிந்துகொள்ளவும்.)


No comments: