#கிரகங்கள் படுத்தும் பாடு -( 102 )
ஒரு மனிதனின் சாதக கட்டத்தில் பணிரெண்டு ராசிகளில் கிரகங்கள் வலம்வருகிறது. அதாவது வானவீதியில் 360 பாகையை நீள்வட்ட பாதையாக கொண்டு ஒரு ராசிக்கு 30 பாகை வீதமாக கொண்டு அவை தாம் பெற்ற ஒளியின் அளவுக்கு ஏற்ப சில ராசிகளில் உச்சம்,மூலதிரிகோணம்,ஆட்சி,நட்பு,நீசம்,பகை ,வக்கிரம் மற்றும் அஸ்தமனம் இவற்றுள் ஏதாவது ஒன்றினை அக்கிரகங்கள் பெற்று அது தான் பெற்ற சக்திகளுக்கு ஏற்ப இயற்கை சுபராகவும் மற்றும் இயற்கை பாவியாகவும் கொண்டு வழிநடத்துகின்றன.
கிரகங்களில் குருபகவான்,சுக்கிரபகவான்,பாவியோடு சேராத புதன் பகவான் மற்றும் வளர்பிறை சந்திரன் பகவான் (அமாவாசையிலிருந்து பொளர்ணமிக்குள் பிறந்தவர்கள்) ஆகிய கிரகங்களை இயற்கை சுபராக சாதகத்தில் கருதப்படுகிறது.இவர்கள் சுபராக இருந்தாலும் சாதக கட்டத்தில் யோகராக இருக்கும் பட்சத்தில்தான் நன்மையை சாதகருக்கு தருகிறது.
உதாரணமாக
ஒருவரது சாதகத்தில் பாவியோடு சேராத புதன் பகவான் உச்சம்பெறும்போது அவன் வித்தைகாரகன் என்பதால் அவனுக்கு கணிதம் நன்றாக வரும்,எழுத்து அழகாக வரும்,கணிப்பொறியை இயக்குதலுக்கும்,கதை ,கவிதை ,கட்டுரை ,இசை மற்றும் சோதிடம் ஞானம் போன்றவற்றில் வித்தகனாக திகழ்வான் இதுபோன்ற நல்ல காரக பலன்களை தருவதாக இருந்தாலும் சில ராசிகளுக்கு ஆட்சி,உச்சம் போன்ற நேர்வலு பெறாமல் இருத்தல் நலம் .மேலும் அத்திசையே அவனுக்கு நடப்பில் வராமல் இருத்தல் நலம் என்கிறார்கள்.
ஒருவரது சாதகத்தில் பாவியோடு சேராத புதன் பகவான் உச்சம்பெறும்போது அவன் வித்தைகாரகன் என்பதால் அவனுக்கு கணிதம் நன்றாக வரும்,எழுத்து அழகாக வரும்,கணிப்பொறியை இயக்குதலுக்கும்,கதை ,கவிதை ,கட்டுரை ,இசை மற்றும் சோதிடம் ஞானம் போன்றவற்றில் வித்தகனாக திகழ்வான் இதுபோன்ற நல்ல காரக பலன்களை தருவதாக இருந்தாலும் சில ராசிகளுக்கு ஆட்சி,உச்சம் போன்ற நேர்வலு பெறாமல் இருத்தல் நலம் .மேலும் அத்திசையே அவனுக்கு நடப்பில் வராமல் இருத்தல் நலம் என்கிறார்கள்.
ஏனெனில் பாவியோடு சேராத புதன் பகவான் சுபராக இருந்தாலும் அவற்றின் கட்டஸ்தானத்தை பொறுத்து அச்சாதகருக்கு அவர் படுபாதகங்களை செய்யக்கூடிய பாவர் ஆகிவிடுகிறார்.பொதுவாக இயற்கை சுபராக இருக்ககூடிய ஒரு கிரகம் உச்சம் போன்ற வலிமை பெற்று சாதக கட்டத்தில் இருக்கும்போது ஸ்தான வலுப்படி அக்கிரகம் பாவராக இருப்பினும் அது தன் காரக பலனை சிறப்பாக தரும்.ஆனால் ஸ்தான வலுப்படி சாதகரை கஷ்டப்படுத்தி பார்க்கும்.
மேஷ ராசிக்கு புதன் பகவான் உச்சம்பெறும்போது அவை இயற்கை சுபராகவே இருந்து அதன் காரகபலனை தந்தாலும் அக்கிரகம் சாதக கட்டப்படி மூன்று மற்றும் ஆறு எனும் மறைவு ஸ்தான ஆதிபத்தியங்களை பெற்று அதிலும் குறிப்பாக ருணம்,ரோகம் மற்றும் எதிர்ப்பு ஸ்தானமான ஆறாம் இடத்தில் உச்சம் பெற்றிருப்பதால் அதன் திசை காலங்களில் சாதகரை கடன்,பிணி மற்றும் எதிரி தொல்லைகளுக்கு ஆட்படுத்தி பார்ப்பார்.
அதிலும் லக்கனம் மற்றும் ராசியும் ஒன்றாக பெற்றவர்களாக இருப்பின் (மேஷ லக்கனம் மற்றும் மேஷராசி) இன்னும் கூடுதலான இன்னல்களை பெறுவர்.
அதே நேரத்தில் லக்கனமும்,ராசியும் வெவ்வேறாக பெற்றவர்களாக இருந்தால் ஒரு சிலருக்கு ராசிப்படி(மேஷம்) மூன்று மற்றும் ஆறுக்குடையவராக இருந்தாலும் லக்கனப்படி பாதி சுபராக இருப்பர்.எனவே பாதி கஷ்டம் குறைய வாய்ப்புண்டு.
இதேபோல இயற்கை பாவிகளாக கருதப்படும் சனி,செவ்வாய்,சூரியன்,பாவியோடு சேர்ந்த புதன் ,தேய்பிறை சந்திரன்(பொளர்ணமியிலிருந்து அமாவாசையில் பிறந்தவர்கள்) மற்றும் அரவுகளான ராகு,கேது பகவான்கள் ஆகும்.
இவர்கள் இயற்கை பாவிகள் இந்த கிரகங்கள் சாதக கட்த்தில் உச்சம் மற்றும் ஆட்சி போன்ற நேர்வலு பெறாமல் இருத்தாலே நலம்.அதிலும் குறிப்பாக சனிபகவான் ஒருவருக்கு லக்கனாதிபதியாகவே இருந்தாலும் உச்சம் மற்றும் ஆட்சி போன்ற நேர்வலு பெறக்கூடாது என்பதன் காரணம் பாவிகளிலே சனிபகவான் முழுபாவர் என்பதால் ஆகும்.
.இதனை அடுத்து செவ்வாய் பகவான் முக்கால் பாவர் ஆகும்.இவை பலப்படும்போது முக்கால்வாசி தீமையை செய்தாலும் கால்வாசி நன்மையை தருவார்.இதனை அடுத்து சூரியன் அரைபாவராகவும் செயல்படுவார்.
அரவுகளான ராகு மற்றும் கேதுக்கள் பாவிகளாக இருப்பின் அதனோடு தொடர்பு பெறக்கூடிய கிரகங்களின் பலனை உறிஞ்சி நன்மையை தரும்.
இவைகள் இயற்கை பாவிகளாக இருந்தாலும் சாதக கட்டத்தில் ஸ்தான வலுப்படி நன்மையை செய்துவிடுகிறது.உதாரணமாக துலாம் லக்கனத்திற்கு சனி யோகர் என்பதால் பாவியாக இருந்தாலும் யோகர் எனும் முறையில் அதன் திசை காலங்களில் நன்மையை செய்கிறது.
*******************************************
தங்கள் சாதகங்களை ஆய்ந்து ஆராய்ந்து சாதகபலன்,திருமண பொருத்தங்கள் மற்றும் ஜெனன ஜாதகம் வாக்கிய அல்லது திருக்கணித முறையில் கணித்து தர எனது அலைபேசியிலோ அல்லது வாட்ஸ்அப்பிலோ "பிறந்ததேதி,நேரம் பிறந்த இடமும் ,மாவட்டமும் போன்ற தகவல்களை மெஸ்ஸீஸ் செய்து நீங்கள் எந்த நாட்டிலிருந்தாலும் பலன்பெறலாம்.எனது பார்வை கட்டணத்தை எனது வங்கி கணக்கில் செலுத்தினால்போதும் நன்றி.
தங்கள் சாதகங்களை ஆய்ந்து ஆராய்ந்து சாதகபலன்,திருமண பொருத்தங்கள் மற்றும் ஜெனன ஜாதகம் வாக்கிய அல்லது திருக்கணித முறையில் கணித்து தர எனது அலைபேசியிலோ அல்லது வாட்ஸ்அப்பிலோ "பிறந்ததேதி,நேரம் பிறந்த இடமும் ,மாவட்டமும் போன்ற தகவல்களை மெஸ்ஸீஸ் செய்து நீங்கள் எந்த நாட்டிலிருந்தாலும் பலன்பெறலாம்.எனது பார்வை கட்டணத்தை எனது வங்கி கணக்கில் செலுத்தினால்போதும் நன்றி.
தொடர்புக்கு
அலைபேசி
97 151 89 647
740 257 08 99
அன்புடன்
சோதிடர்ரவிச்சந்திரன்
M.SC,MA,BEd,
சோதிட ஆராய்சியாளர்,
முதுநிலை வேதியியல் ஆசிரியர்,
வாழ்வியல் ஆலோசகர்,
ஓம் சக்தி ஜோதிட ஆன்லைன் நிலையம்,
கறம்பக்குடி,புதுக்கோட்டை மாவட்டம்,
தமிழ்நாடு,இந்தியா.
No comments:
Post a Comment