கிரகங்கள் படுத்தும் பாடு - ( 93 )
நீங்கள் ஆன்மீகவாதியா ......?
"உலகை வெல்ல விஞ்ஞானம் அறிவு அவசியம்.அதேபோல்.தன்னை வெல்ல
மெய்ஞானம் அறிவு தேவை.
மெய்ஞானம் அறிவு தேவை.
தன்னையறிதலே ஆன்மீகம்.தன்னையறிய ஐம்புலன்களை
அதன் போக்கில் போகவிடாமல்
அடக்கியாண்டு மனதினை ஒருமுகப்படுத்தி இறைநிலையை அடைய முயற்சி செய்ய வேண்டும்.
அதன் போக்கில் போகவிடாமல்
அடக்கியாண்டு மனதினை ஒருமுகப்படுத்தி இறைநிலையை அடைய முயற்சி செய்ய வேண்டும்.
இந்நிலை அடைய முயற்சி செய்தவர் பலர்.ஆனால் எல்லோரும் வெற்றி பெறுவதில்லை.
"கண்டவர் விண்டிலர்
விண்டவர் கண்டிலர்"
முயற்சி செய்பவர் அனைவரும் வெற்றி பெறுபதில்லை.வெற்றி பெற்றவர்கள் அனைவரும் வெளியில் சொல்வதில்லை.
விண்டவர் கண்டிலர்"
முயற்சி செய்பவர் அனைவரும் வெற்றி பெறுபதில்லை.வெற்றி பெற்றவர்கள் அனைவரும் வெளியில் சொல்வதில்லை.
"ஓடி ஓடி ஓடி ஓடி
உட்கலந்த ஜோதியை
நாடி நாடி நாடி நாடி
நாட்களும் கடந்து போய்
வாடி வாடி வாடி வாடி
மாண்டு போன மனிதர்கள்
கோடி கோடி. கோடி கோடி
எண்ணிறந்த கோடியே"
உட்கலந்த ஜோதியை
நாடி நாடி நாடி நாடி
நாட்களும் கடந்து போய்
வாடி வாடி வாடி வாடி
மாண்டு போன மனிதர்கள்
கோடி கோடி. கோடி கோடி
எண்ணிறந்த கோடியே"
ஆன்மீகவாதியாகும் யோகம் உங்கள் ஜாதகத்தில் உண்டா. ++++++++++++++++++++++++++++++++++++++
ஒரு மனிதனை ஆன்மீகவாதியாக்குவதற்கு மூன்று முக்கிய நவக்கிரகங்கள் முக்கிய பங்கு வகிக்கிறது.
1) ஆன்மீக செம்மல் குரு
2) ஞானகாரகர் கேது
3) மனக்காரகன் சந்திரன்
4)கர்மக்காரகன் - சனி
மேற்கண்ட நான்கு கிரகங்களின் நிலையை நன்கு கவனிக்கவேண்டும்.
இவை ஆட்சி,உச்சம் ,நட்பு பெற்று சுப நட்சத்திர சாரத்துடன் சுப கிரகங்கள் சேர்க்கை மற்றும் பார்வை பெறல் வேண்டும்.
இதேபோல் பணிரெண்டு ராசிகளில் ஒன்பதாம் இடம் மற்றும் அதன் அதிபதி ஓரு மனிதனை
ஆன்மீகவாதியாக்குவதில்
முதல் பங்கு வகிக்கிறது.
ஆன்மீகவாதியாக்குவதில்
முதல் பங்கு வகிக்கிறது.
ஒன்பதாம் இடம்
ஒன்பதாம் இட பாவக காரகம்
தெய்வ பக்தி,ஆத்ம சாதனை,ஆலயத்திருப்பணி,சத்சங்கம்,மடம் நிறுவுதல்,ஆசிரமம் நடத்துதல்,தானதர்மம் வழங்குதல்,ஆன்றோர் தரிசனம்,குரு உபதேஷம் பெறுதல்,குருவாக இருத்தல்,யாத்திரை அழைத்து போதல் மற்றும் தந்தை நிலை,பாக்கிய நிலை முதலானவை ஆகும்.
தெய்வ பக்தி,ஆத்ம சாதனை,ஆலயத்திருப்பணி,சத்சங்கம்,மடம் நிறுவுதல்,ஆசிரமம் நடத்துதல்,தானதர்மம் வழங்குதல்,ஆன்றோர் தரிசனம்,குரு உபதேஷம் பெறுதல்,குருவாக இருத்தல்,யாத்திரை அழைத்து போதல் மற்றும் தந்தை நிலை,பாக்கிய நிலை முதலானவை ஆகும்.
எனவே ஜாதகத்தில் ஒன்பதாம் இடமும்,அதன் அதிபதியும் பலம் பெற வேண்டும்.
ஒன்பதாம் அதிபதி ஆட்சி,உச்சம்,நட்பு பெற்று சுபர்சேர்க்கை மற்றும் பார்வை பெற்று பலன் பெற வேண்டும்.
லக்கனாதிபதி
ஒருவரின் இயல்புகளையும்,குணாதிசியங்களையையும் லக்கனாதிபதியின் தன்மை வைத்துதான் தீர்மானிக்க வேண்டும்.
லக்கனாதிபதி அமரும் இடம் அதன் நட்சத்திர சாரம் ,பார்க்கும் மற்றும் சேர்ந்து இருக்கும் இடத்தை பொருத்தே ஜாதகரின் குணமும்,இயல்பும் அமையும்.
என்னதான் ஓன்பதாம் இடம்,குரு,கேது. மற்றும் கேது நல்ல நிலை பெற்று லக்கனாதி வலுவிழந்து விட்டால் சிலர் போலி சாமி ஆகிவிடுவார்.
ஒருவர் ஆன்மீகவாதியாக
1)லக்கனாதிபதி 9- ம் இடத்தில்
அமர வேண்டும்.அல்லது
9-ம் அதிபதி லக்கனத்தில் அமரவேண்டும்
2)
இருவரும் சேர்ந்து லக்கனம் அல்லது 9-ம் இடத்தில் அமர வேண்டும்.அல்லது பரிவர்தனை பெறவேணாடும்
3)
லக்கனத்தில் அல்லது ஐந்தில் அல்லது ஓன்பதில் அமர்ந்த குருபகவானும்,
குரு பார்வை பெற்ற சந்திரனும்,
திரிகோணத்தில் கேதுவும் ஆன்மீக சிந்தனையும்,சாஸ்திர அறிவும் தரும்.
லக்கனத்தில் அல்லது ஐந்தில் அல்லது ஓன்பதில் அமர்ந்த குருபகவானும்,
குரு பார்வை பெற்ற சந்திரனும்,
திரிகோணத்தில் கேதுவும் ஆன்மீக சிந்தனையும்,சாஸ்திர அறிவும் தரும்.
4)
ஒன்பதாமிடத்து அதிபதி பலமாக கேந்திர கோணங்களில் இருந்து ,லக்கனாதிபதி லக்கனத்தை பார்க்க,
ஒன்பதாமதிபதியுடன் சேர ஞானியாகி தவங்கள் செய்து தர்மவனாய் இப்புவியில் வாழ்வான்.
ஒன்பதாமிடத்து அதிபதி பலமாக கேந்திர கோணங்களில் இருந்து ,லக்கனாதிபதி லக்கனத்தை பார்க்க,
ஒன்பதாமதிபதியுடன் சேர ஞானியாகி தவங்கள் செய்து தர்மவனாய் இப்புவியில் வாழ்வான்.
இககருத்தை விளக்கும் 'ஜாதக பாரிஜாதம்" பாடல்
"நவமதிற்குடைய கோள் நற்பலவானாய்
நண்ணத் தவமிகு கேந்திர கோணந்தன்னில் இருந்து வாழ இவரலாற் சன்மக்கோள் இயல்பு இலக்கனத்தை பார்க்க
தவசியாய் ஞானியாகித் தவங்களாய் தன்மவானாம்"
"நவமதிற்குடைய கோள் நற்பலவானாய்
நண்ணத் தவமிகு கேந்திர கோணந்தன்னில் இருந்து வாழ இவரலாற் சன்மக்கோள் இயல்பு இலக்கனத்தை பார்க்க
தவசியாய் ஞானியாகித் தவங்களாய் தன்மவானாம்"
5) ஞானகாரகன் கேது பகவானை பலமடைந்த சுப குரு பார்த்தாலோ அல்லது இணைந்திருந்தாலோ ஆன்மீக யோகமுன்டு.
6)கர்மக்காரகன் சனிபகவானை சுப குரு ஐந்து மற்றும் ஒன்பதாம் பார்வை பெறுவதும் இவ்விதயோகமாகும்.
7) தர்மாதிபதி எனும் ஒன்பதாமாதிபதி மற்றும் கர்மாதிபதி எனும் பத்தாமாதிபதி இருவரும் இணைந்து ஒரு ராசியில் இருந்தாலோ அல்லது இருவரும் பரிவர்தனை பெற்றிருந்தாலோ அல்லது ஒருவரையொருவர் சமசப்தம பார்வை பெற்று #தர்மகர்மாதிபதியோகம் பெற்றிருந்தாலும் இவ்விதயோகத்தை தரலாம்.(இருவரில் ஒருவர் பாதகாதிபதியாகவோ ,மறைவுஸ்தான அதிபதியாகவோ அதாவது ஒரு கிரகத்தின் மற்றொரு ஸ்தானம் 6/8/12 க்குடையவனாகவோ அல்லது நீசம்,பகை ,அஸ்தமனம் மற்றும் வக்கிரம் பெறக்கூடாது )இந்த அமைப்புக்கு குருபார்வை விழவேண்டும்.
(இது தொடர்பான மேலும் விரிவான தகவல்களை பெற கீழ்கண்ட எனது பிளாக்ஸ்பாட்டில் (வெப்சைடில் ) #சன்னியாசயோகம் பறறி விரிவாக எழுதியுள்ளேன் .கிளிக் செய்து படிக்கவும்.
My website.click hear
****************************************
****************************************
AstroRavichandransevvai.blogspot.com
அன்புடன் சோதிடர்
ரவிச்சந்திரன் M.sc,MA,BEd(Teacher)
Email:masterastroravi@gmail.com
Cell: 9715189647
செல் ; 740 257 08 99
ஓம் சக்தி ஜோதிட நிலையம்
புதுக்கோட்டை மாவட்டம்
ரவிச்சந்திரன் M.sc,MA,BEd(Teacher)
Email:masterastroravi@gmail.com
Cell: 9715189647
செல் ; 740 257 08 99
ஓம் சக்தி ஜோதிட நிலையம்
புதுக்கோட்டை மாவட்டம்
ஜாதகம் தொடர்பான ஆலோசனையை போனில் பெற எனது அலைபேசியை தொடர்பு கொள்ளவும்.எனது வாட்ஸ்அப் எண் 97 151 89 647 க்கு பிறந்ததேதி,நேரம் மற்றும் பிறந்த மாவட்டம் போன்ற தகவல்களை மெஸ்ஸேஸ் செய்யவும்.கட்டணம் உண்டு )
நன்றி.வாழ்க நிறைவுடன்.
No comments:
Post a Comment