Tuesday, 22 August 2017

சோதிட அடிப்படையில் "மரபும் சூழ்நிலையும் "-ஓர் ஆய்வு

சோதிட அடிப்படையில் "மரபும் சூழ்நிலையும்-ஒர் பார்வை

                                                     
கிரகங்கள் படுத்தும் பாடு -( 141 )

செவ்வாய்பட்டிஸ்ரீபத்ரகாளியம்மன் துணை !

மரபும் சூழ்நிலையும்


                                ஒருவரை பார்த்த்வுடனே "நீ இன்னாருடைய பேரனா ?  அல்லது இவரோட மகனா ? என கேட்க ,அவன் ஆம் என பதிலளித்துவிட்டு எப்படி கண்டுபிடிச்சீங்க என கேட்கிறபோது அவர் "உங்க தத்தாவுடைய முகத்தை அப்படியே உரிச்சு வைத்து பிறந்திருக்கிறேயே ? அவருடைய மூக்கு அப்படியே இருக்கு-என்பார் "

                                  ஒரு சிலர் நடை ,உடை மற்றும் பாவனை என அனைத்து அம்சங்களையும் ஒருங்கே பெற்றிருப்பான்.

                                     இவ்வாறு "பெற்றோரின் பண்புகள் தலை முறை , தலைமுறையாக கடந்து செல்வதையே நாம் பாரம்பரியம் என்கிறோம்.இந்த பராம்பரிய பண்புகளை கடத்தும் பண்புகளை செல்லின் உட்கருவிலிருந்து செயல்படும் ஜீன்கள் செய்கின்றன.

                           

                    ஜீன்களில் உள்ள DNA மற்றும்     RNA களுக்கு முக்கிய பங்கு உண்டு.
ஒரு மனித தலைமுறையின் உள்ளார்ந்த திறன்கள் மற்றும் ஆற்றல்கள் இந்த
" டி.என்.ஏ "வில் பொதிந்து காணப்படுகிறது.எனவே மனிதவாழ்வினை வழிநடத்தி செல்வதில் இந்த மரபு பண்புகளுக்கு முக்கிய உண்டு.

                       .என்னதான் மரபுநிலை சிறப்பாக இருந்தாலும் அதாவது உதாரணமாக ஒரு நெல்லின் விதையை எடுத்துக்கொண்டால் அந்த விதை நெல் என்னதான் வீரியமாக இருந்தாலும் அதற்கு உகந்த மண்ணில் விதைக்கப்படாமலும் ,தகுந்த அளவு நீர் பாய்ச்சி ஊட்டச்சத்து அளிக்கப்படாமலும் மற்றும் தகுந்த சீதேஷ்ண நிலை இல்லாவிட்டால் நல்ல விளைச்சலை அவ்விதை தந்துவிடுவதில்லை.

                          அதேபோல ஒருவர் நல்ல மரபுநிலையை பெற்றிருந்தாலும் உகந்த சூழ்நிலை அமையாவிட்டால் அவனது வாழ்வு சிறக்காது.எனவே ஒரு மனிதனது வாழ்வானது சிறக்க "மரபும் சூழ்நிலையும்" அவசியமாகும்.
இந்த தகுந்த மரபுநிலையையும் சூழ்நிலைகளையும் மனிதனுக்கு உருவாக்கி தருவதில் கிரகங்களுக்கு முக்கிய பண்பு உண்டு.ஒருவரது சாதகத்தில் மரபுநிலைகளை ஆராய்ந்து பார்க்க முதலில் அவனது லக்கனம் மற்றும் லக்கனாதிபதிகளை கொண்டும் மற்றும் பூர்வபுண்ணியஸ்தானமான ஐந்தாமிடத்தை கொண்டு அவனது பூர்வபுண்ணிய நிலைகளை ஆராய்ந்து அறியலாம்.இந்த ஸ்தானங்களிலிருந்து தனது முந்தைய தலைமுறைகளை ஆய்ந்தறியப்படுகிறது.

                            

                               நான்காமிடம் மற்றும் சந்திரபகவானை கொண்டு  தனது தாய் மற்றும் தாய்வழிநிலைகளை உறவுகளை பற்றி தெளிவாக அளந்தறியப்படுகிறது.இதேபோல ஒன்பதாமிடம் மற்றும் சூரியபகவானை தந்தைவழியான உறவுநிலைகளை கணக்கிட்டு அறியப்படுகிறது.
தாத்தா மற்றும் பாட்டிவழிநிலைகளை ராகு மற்றும் கேதுபகவான்களை கொண்டு அவர்களது நிலையறியபபடுகிறது.

                               அம்மான் வழி உறவுநிலைகளை பற்றி அறிய நான்காமிடம் மற்றும் புதன்பகவானை பற்றி அறியப்படுகிறது.
ஒருவனது மரபுதன்மைகளை நாம் கிரகங்களை கொண்டும் அறியலாம்.செவ்வாயின் பலத்தை பெற்றவர்கள் வீரமிக்கவர்களாக உள்ளனர்.படைதளபதிகள் பிறக்கும்போது செவ்வாய்பகவான் உச்சத்தில் இருக்கும்போது பிறப்பெடுக்கிறார்கள்.இவர்களில் மருத்துவநிபுணர்கள், போலிஸ் ,இராணுவ அதிகாரி அல்லது ரொளடி இதுபோல இருக்கிறார்கள்.பெரும்பாலோனோர்களது சாதகங்களை ஆய்வு செய்து பார்க்கும்போது இந்த உண்மையானது புலப்படுகிறது.

                       இதேபோல கணிதமேதைகள் வேறு இராசியில் பிறந்தவர்களாக இருக்கிறார்கள்.அதாவது கணிதமேதைகள்,கவிஞர்கள்,எழுத்தாளர்கள் ,பேச்சாளர்கள் ,இசைநுணுக்கம்,கணிதவல்லுணர்கள் ,புள்ளியல் நிபுணர்கள் ,மற்றும் சோதிட வித்வான்கள் இவர்களை போன்றோரது பல்லாயிரக்கணக்கான சாதகங்களை எடுத்து ஆய்வு செய்து பார்க்கும்போது அவர்கள் புதன்பகவானை பலமாக தனது சாதகத்தில் கொண்டவர்களாக உள்ளார்கள்.

                       இதேபோல கலையர்வம் மிக்கவராகவும்,நடிப்பு ,நடனம் ,உடையார்வமிக்கவராக ,ஆடை ,ஆபரணம் ,ஹோட்டல் மற்றும் அழகுசாதனபொருட்களில் ஈடுபாடு மிக்கவராக உள்ளவர்களின் சாதகங்களில் சுக்கிரபகவான் 
பலம்மிக்கவராக உள்ளார்.

                             


                    குருபகவானை பலமாக கொண்டவர்கள் குருமார்களாக ,ஆன்மீக மற்றும் வேதவிற்பன்னர் ,போதகராக ,தத்துவவிசாரணை புரிபவர்களாக இருப்பதை காணலாம்.

                                நிறைய ஆய்வுகள் நடைபெற்றுள்ளது.சோதிடத்திலே சுத்தமாக நம்பிக்கையில்லாத பேராசிரியர் பிரவுன் மேற்கண்ட வகையில் ஆய்வு செய்து பார்த்தார்.தளபதிகள்,மருத்துவர்கள் மற்றும் திறமைசாலிகள் இவர்களது சாதக குறிப்புகளை எடுத்து ஆய்வு செய்துபார்த்தார்.அவரது ஆராய்ச்சின் வழியாக ஒருவனது உள்ளார்ந்த திறமையானது அவனது பிறக்கும் நேரத்தில் கிரகநிலைகளை பொறுத்தது என்ற சோதிட முடிவினை ஏற்றுக்கொண்டார்.

                              அறிவியல் அடிப்படையில் கூறப்படும் ஒரு மனித வளர்ச்சிக்கு தேவையான "மரபும் சூழ்நிலையும் "அவனது ஜெனன காலத்தில் உள்ள கிரக அமைப்புகளை கொண்டே அறியப்படுகிறது.

                     ஒருவரது நோக்கம்,சாத்தியம் ,விருப்பம் மற்றும் ஆசை முதலியவற்றிற்கு ஏற்ப அவர் ஒரு குறிப்பிட்ட நாளில் ஒரு குறிப்பிடாட நேரத்தில் பிறப்பெடுக்கிறார்.கர்ப்பம் தரிக்கும் நேரத்தையும் அந்த குழந்தையே முடிவு செய்துகொள்கிறது.பிறந்தபிறகு அவை என்ன நோக்கத்திற்காக பிறப்பெடுத்திருக்கிறதோ அதை நோக்கிய வளர்ச்சியில் செல்கிறது.
நன்றி

(தங்களது பிறப்பின் ரகசியத்தினை அதாவது சாதகபலன் ,திருமணபொருத்தம் மற்றும் ஜெனனசாதகம் கணித்தல் போன்ற சேவைகளை #போன்வழியாக பெற ,தங்களது பிறந்ததேதி,நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை கீழ்கண்ட எனது வாட்ஸ்அப் எண்ணிற்கு மெஸ்ஸேஸ செய்து கட்டணம் செலுத்தும் விபரங்களை பெறலாம்.)

                                                                     

தொடர்பு கொள்ள

செல்
740 257 08 99
  97 151 89 647

வாட்ஸ்அப்
97 151 89 647


அன்புடன்
சோதிடர்ரவிச்சந்திரன்
              M.SC ,MA ,BEd,
சோதிட ஆராய்ச்சியாளர்,
முதுநிலை வேதியியல் ஆசிரியர்,
வாழ்வியல் ஆலோசகர்,
ஓம்சக்தி ஜோதிட ஆன்லைன் ஆலோசனை மையம்,
கறம்பக்குடி,புதுக்கோட்டைமாவட்டம்,
தமிழ்நாடு.
My email id
masterastroravi@gmail.com

No comments: