Monday, 7 August 2017

கிரகங்களின் பார்வைகள் தரும் பலன்கள்

கிரகங்களின் பார்வைகள் தரும் பலன்கள்

                                                                               
கிரகங்கள் படுத்தும் பாடு-(152 )

செவ்வாய்பட்டிஸ்ரீபத்ரகாளியம்மன்  துணை !

                        நவகோள்களில் எல்லா கோள்களும் தான் இருக்கும் வீட்டிற்கு சமசப்தமாக ஏழாம் வீட்டை பார்வை செய்கிறது.குருபகவான் ஆனவர் ஐந்து ,ஒன்பதாம் இடத்தையும்,சனிபகவான் மூன்று ,பத்தாம் இடத்தையும் மற்றும் செவ்வாய்பகவான் நான்கு ,எட்டாம் இடத்தையும் கூடுதலாக பார்வை செய்கிறது.

                        எல்லா கிரகங்களும் clock-wise -ல் சுற்றிவர அரவுகளான ராகு,கேது மட்டும் பின்னோக்கி சுற்றி வருகிறது.எனவே இவைகளுக்கு வக்ரகதி கிடையாது.இவை பின்னோக்கிய பயணத்தில் தனது ஏழாம் பார்வையல்லாது மூன்று ,பதினொறாம் இடங்களையும் பார்வை செய்கிறது.

                            பார்வைகளில் சுபகிரகங்களின் பார்வை நன்மையையும்,பாவ கிரகங்களின் பார்வையானது தீமையையும் தரும் என்பது பொது விதிப்பலன் ஆகும்.

                        சில நேரங்களில் இயற்கை சுபகிரகமாக இருந்தாலும் ,  அதன் ஸ்தான பலனை பொறுத்து பார்வைபலன் மாறுபடும்.உதாரணமாக துலாம் ராசிக்கு குருபகவான் இயற்கை சுபகிரகமாக இருந்தாலூம் அதன் ஸ்தானமானது மூன்று,ஆறுக்குடைய மறைவுஸ்தானமாக இருப்பதால் இங்கு பலமடைந்த குருவின் பார்வை நன்மையை செய்துவிடுவதில்லை.எனவே "குரு பார்த்தால் கோடி நன்மை " என்பதனை எல்லாவிதமான குருபார்வைகளுக்கும் சொல்லிவிட முடியாது.

                    இதேபோல நீசமடைந்த கிரகத்தின் பார்வைபலன் பயன் தருவதில்லை.குருபார்வையில் ஐந்தாம் பார்வையானது அரை பலமும்,ஒன்பதாம் பார்வையானது முக்கால் பலமும் தருகிறது.இதேபெல சனியின் பார்வைகளில் மூன்றாம் பார்வை அரை பலமும்,பத்தாம் பார்வை கால் பலமும் தருகிறது.செவ்வாயின் பார்வைகளில் நான்காம் பார்வை அரை பலமும்,எட்டாம் பார்வையானது முக்கால் பலத்தையும் தருகிறது.எல்லா கிரகங்களுக்கும் ஏழாம் பார்வையானது முழு பலத்தையும் தருகிறது.

                    பார்வைகளில் சனி ,செவ்வாய் ஆகிய இருகிரகங்களும் இணைந்து ஒரு வீட்டை பார்த்தாலும் அல்லது தனிதனியாக நின்று இருவரும் ஒரே வீட்டை பார்த்தாலும் அக்கிரகங்கள் பார்கப்படும் வீட்டினை பாதிக்கும்.எந்த வீட்டினை பாதிக்கிறதோ அந்த வீட்டின் ஸ்தான பலத்தையும் மற்றும் அந்த வீட்டில் ஏதேனும் கிரகங்கள் இருப்பின் அக்கிரகங்களது காரக பலன்களையும் பாதிக்கும்.

சனி மற்றும் செவ்வாய் பார்க்கும் பார்வையினால் உண்டாகும் பலன்களை பார்ப்போம்.

                                உதாரணமாக லக்கனத்தை பார்த்தால் சாதகரின் குணநலன்களில் சறறு அடாவடித்தனங்கள் மிகுந்து கானப்படும்.

                          .வாக்குஸ்தானமான இரண்டாமிடத்தினை பார்த்தால் வாக்கு சுத்தம் அவரிடம் இருக்காது. கொடுத்த வாக்கை காப்பாற்றும் தன்மையில்லாமல் அவரது பேச்சில் ஒருவிதமான பொய்மைதன்மையும்,பித்தலாட்டமும் மிகுந்து காணப்படும்.திருமணவாழ்வு காலதாமதபட்டு கொண்டிருக்கும்.

                        மூன்றாமிட பார்வையானது சகோதர தோஷத்தை தரும்.நெஞ்சில் துணிச்சல் மிக்கவனாக காணப்படுவான்.காமகற்பனை உணர்வுகள் மேலோங்கி காணப்படும்.

                       நான்காமிட பார்வையானது தன் சுகம், தாய் சுகம்,வாகனசுகம் மற்றும் கல்வியால் கிடைக்கும் சுகம் தடைபடும்.காம கற்பனை எண்ணங்கள் மிகுதி.
.
                       இவ்வாறாக சனி ,செவ்வாய் பார்க்கப்படும்
ஸ்தானத்தின் தன்மையை மாற்றும் தன்மை படைத்ததாக உள்ளது.
குருபகவானை சனிபகவான் சமசப்தமாக பார்க்கும்போது குருவின் இயற்கை தன்மையை இழக்கசெய்கிறது.குருவானவர் ஏனைய பார்வைகளால் பார்க்கப்படும்போது ஆன்மீக சிந்தனை உடையவராக மாற்றுகிறார்.

                                  ஞானகாரகன் கேதுபகவானை குருபகவான் பார்க்க தெய்வதன்மை உருவாக்கும்.
                        குரு -சந்திர பார்வையானது "குரு-சந்திரயோகத்தையையும்,,குரு-செவ்வாய் பார்வையானது குரு-மங்கள யோத்தையும் தருகிறது.

(தங்களது சாதகபலன்  ,திருமணபொருத்தம் மற்றும் ஜெனனசாதகம் கணித்தல் போன்ற சேவைகளை போன்வழியாக பெறலாம்.பிறந்ததேதி,நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ்அப் எண்ணிற்கு மெஸ்ஸேஸ் செய்து கட்டணவிபரம் பெறலாம்.)

வாட்ஸ்அப்
  97 151 89 647

செல்
740 257 08 99
  97 151 89 647
                                                              
அன்புடன்
சோதிடர்ரவிச்சந்திரன்
M.SC,MA,BEd,
சோதிட ஆராய்ச்சியாளர்
ஓய்சக்தி சோதிட ஆன்லைன் ஆலோசனை மையம்,
கறம்பக்குடி,புதுக்கோட்டை மாவட்டம் .
My email
masterastroravi@gmail.com

No comments: