Wednesday 19 April 2023

குழந்தை பேறு உண்டாக செய்ய வேண்டிய பரிகாரங்கள்.

 குழந்தை பேரு உண்டாக செய்ய வேண்டிய பரிகாரங்கள்.

                


செவ்வாய்ப்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!

  


  திருமணம் ஆன சில மாதங்களுக்கு பிறகு எல்லோரும் எதிர்பார்க்கக் கூடிய ஒரு நல்ல செய்தி புத்திர பாக்கியம் ஆகும்.


புத்திர பாக்கியம் உருவாவதே அந்த திருமணத்திற்கு கிடைத்த வெற்றி ஆகும்.


    ஒரு பெண் பிறந்து அவள் பூப்பெய்திய உடன் 50 சதவீத பெண்ணை அடைகிறான். பிறகு திருமணம் ஆகும்போது 75% பெண்ணாக மாறுகிறார். அவளே பிறகு ஒரு குழந்தையை பெற்றெடுத்து அதற்கு தாயாக மாறிய பிறகு தான் நூறு சதவீத பெண்மை தன்மை அடைகிறார் அதாவது தாய்மை தன்மையை அடைகிறார்.


   ஒரு குழந்தையை பெற்றெடுப்பது என்பது அடுத்த அடுத்த தலைமுறைக்கு கொண்டு போய் சேர்ப்பதாகும். இன்றைய காலகட்டத்தில் ஒரு ஜெனரேஷன் தொடர்ந்து வருவது என்பது அவள் பெற்றெடுக்கும் ஆண் குழந்தையை சார்ந்தே அமைகிறது.


  ஒருவரது ஜாதகத்தில் இந்த குழந்தை பாக்கியத்தை பெற்றெடுக்கக்கூடிய பெரிய வாய்ப்பை ஆராய்ந்து அறியக்கூடிய ஸ்தானம் என்பது புத்திர ஸ்தானம் எனும் ஐந்தாமிடம் ,

புத்திர ஸ்தான அதிபதி என்னும் ஐந்தாமிட அதிபதி மற்றும் புத்திர காரகன் குரு ஆகிய மூன்றையும் லக்னம் மற்றும் ராசி ஆகிய இரண்டு வழிகளிலும் ஆய்வு செய்து பார்க்கப்பட வேண்டும். திருமணமான தம்பதிகள் இருவர் ஜாதகத்திலும் ஆராய்ந்து பார்த்து அவருடைய புத்திர பாக்கிய பற்றிய கேள்விக்கு பதில் தர முடியும்.


 புத்ர ஸ்தானம், அதன் அதிபதி மற்றும் காரகன் ஆகிய மூன்றிற்கும் ஒவ்வொன்றிற்கும் 40 மதிப்பெண் வீதம் கொடுக்கப்பட்டு புத்திர பாக்கியம் பற்றிய ஆய்வில் ஈடுபடப்படுகிறது.


  புத்திர ஸ்தானமான ஐந்தாம் இடத்தில் கரும்பாம்பு என்று அழைக்கப்படும் ராகு பகவான் அமர்ந்து இருப்பதும் அல்லது புத்திர ஸ்தானாதிபதியான ஐந்தாம் வீட்டு அதிபதியோடு ராகு நெருக்கமாக இணைந்து இருப்பதும் அல்லது புத்திர காரகன் குருவோடு ராகு நெருக்கமாக இணைந்து இருப்பதும் புத்திர தோஷத்தை வழி வகுக்கும்.


 பொதுவாக புத்திர ஸ்தானமான ஐந்தாம் இடத்தில் பாவ கிரக தொடர்பு, புத்திர ஸ்தானதிபதி மற்றும் புத்திர காரகன் குரு ஆகிய இருவரும் நீசம், அஸ்தமனம்,பகை , மறைவிடம் செல்லுதல் மற்றும் பாவ கிரகங்கள் உடன் இணைந்து நிற்பது புத்திர தடையை வழிவகுக்கும்.


சில நேரங்களில் உகந்த திருமண யோகம் வருவதற்கு முன்பாகவே திருமணம் நடந்து விடுவதும் அல்லது புத்திர பாக்கியத்திற்கு உரிய தசாபுத்தி வராமல் இருப்பதும் புத்திர தடையை உண்டாக்கிவிடுகிறது.


குழந்தை பேரு உண்டாக செய்ய வேண்டிய பரிகாரங்கள்


    ராகு காலத்தில்  துர்க்கை அம்மனுக்கு அல்லது மாரியம்மன் அல்லது ஸ்ரீ பத்திரகாளி அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்து அர்ச்சனை செய்து மெய் தீபம் ஏற்றவும்.


  திருநாகேஸ்வரம், பேரையூர் திருக்காளஸ்த்ரி போன்ற புண்ணிய ஸ்தலங்களில் உள்ள ராகு பகவானுக்கு ராகு காலத்தில் பாலாபிஷேகம் செய்யவும்.


  புத்திர தோஷம் உள்ளவர்கள் அரசமரம் சுற்றி வழிபாடு செய்ய வேண்டும் சுற்றும் போது நீராடி விட்டு தலை துவட்டாமல் ஈரத் துணியுடன் சுற்ற வேண்டும் .ஒரு நாளைக்கு ஒன்பது சுற்றுகள் சுற்ற வேண்டும் அவ்வாறு சுற்றும் போது கொஞ்சம் ,கொஞ்சமாக அரிசி குருணை அல்லது பொரியினை மரத்தைச் சுற்றி போட்டு வரவும். அரச மரம் சுற்றும் போது விநாயகர் உடைய காயத்ரி மந்திரம் சொல்லவும் ,அதன் பிறகு மும்மூர்த்திகளுடைய மந்திரத்தை சொல்லி வரவும்.


 (  விநாயகர் மந்திரம்


 ஓம் தத்புருஷாய வித்மஹே

வக்ரதுண்டாய தீமஹி,

தன்னோதந்தி ப்ரஜோதயாத்தே


மும்மூர்த்திகளுடைய மந்திரம்


  "மூலதோ பிரம்ம ரூபாய மத்யதோ

விஷ்ணு ரூபினி அக்ரதோ சிவரூபாய

விருட்ச ராஜாயதே நம் ")


    இவ்வாறு மூன்று சுற்று சுற்றிய பின் ஒரு தாம்பலத்தில் ஒன்பது உருட்டு மஞ்சள், குங்குமம், தாலிக்கயிறு, வெற்றிலை பாக்கு மற்றும் ஏதாவது ஒரு வஸ்திரம் வைத்து 9 சுமங்கலி பெண்களுக்கு தானம் கொடுக்கவும்.


இறை வழிபாடு செய்யவும் தீர்க்க ஆயுளுடன் நிச்சயம் குழந்தை பிறக்கும்.


இதற்கான மருந்துகள்


  1) வில்வ இலையை எடுத்து சிவபெருமானுக்கு அர்ச்சனை செய்து அந்த இலையை வாங்கி வந்து மிளகாய் அரைக்காத அம்மியில் அரைத்து ஒரு எலுமிச்சங்காய் அளவு உருட்டி பசும்பாலில் கலந்து அதிகாலை மூன்று நாட்கள் சாப்பிடவும்..


2) மலைவேம்பு ,சின்ன வெங்காயம் ,சீரகம் இம்மூண்டையும் இடித்து சாறெடுத்து அதிகாலை 3 நாட்களுக்கு சாப்பிடவும்.


3) அரச விதை அரைத்து பசும்பாலில் கலந்து கொடுக்கவும்.


இதற்கான பத்தியம்

 ‌ மூன்று நாட்களுக்கு கணவன் மனைவி சேர்க்கை கூடாது. மருந்து சாப்பிட்ட நாட்களில் மாமிசம் உண்ணக்கூடாது. காலை 10 மணிக்கு தக்காளி ரசம் வைத்து சுடு சாதம் சாப்பிடவும்.

 தலை குளித்த நான்கு, ஐந்து ,ஆறு நாட்களில் மருந்து சாப்பிடவும் தொடர்ந்து 48 நாட்களுக்கு கந்த சஷ்டி கவசம் படிக்கவும்.


நன்றி


வாட்ஸ் அப் & செல் & கூகுள் பே


  097151 89647 


மற்றொரு செல்: 7402570899


(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)

                      



அன்புடன்


சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன் 

    M.Sc,M.A,BEd

ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர்,

ஓம் சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கறம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.

No comments: