பன்னிரெண்டு பாவகங்களுடன் தொடர்பு கொள்ளும் செவ்வாய் மற்றும் சனி பகவான்
செவ்வாய்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!
ஒருவர் ஜாதகத்தில் ஒரு குறிப்பிட்ட ஸ்தானத்தை அல்லது ஒரு குறிப்பிட்ட பாவகத்தையையோ சனி மற்றும் செவ்வாய் இருந்தாலும் அல்லது பார்த்தாலும் அல்லது சேர்ந்த நிலையிலோ அல்லது தனி தனியாகவோ பார்த்தால் அந்த பார்க்கப்படும் அல்லது சேர்ந்து நிற்கும் கிரகங்கள் மிகவும் பாவத்துவ நிலைக்கு உட்படும்.
இதேபோல செவ்வாய் சனியை நான்காம் பார்வையாக பார்த்து அதேபோல சனி தனது பத்தாவது பார்வையால் செவ்வாய் பகவானை பார்த்து ஒன்றையொன்று பார்வை செய்து மிகவும் பாவத்துவமாகி இருக்கும் இடத்தையும் அவை பார்க்கும் இடத்தையும் அதிக பாவத்துவ நிலைக்கு உட்படுத்துகிறது.
ஒருவர் ஜாதகத்தில் செவ்வாய், சனி சேர்ந்து லக்னத்தில் இருந்து ஏழாம் இடத்தை பார்த்தாலோ அல்லது வேறு ஏதாவது இடத்தில் தனித்தனியாக அல்லது சேர்ந்து நின்று லக்னத்தை பார்த்தாலோ அந்த லக்கன பாவம் கெட்டு விட்டது. லக்கனாதிபதி உடைய வலியைப் பொறுத்து ஜாதகருடைய ஆளுமை தன்மை.அமைகிறது.
வாக்கு ஸ்தானமான இரண்டாம் இடத்தில் செவ்வாய் மற்றும் சனி சேர்ந்திருந்தாலும் அல்லது செவ்வாய் மற்றும் சனி தனித்தனியாக அல்லது சேர்ந்த நிலையில் இரண்டாம் இடத்தை பார்வை செய்தாலும் அல்லது செவ்வாய் மற்றும் சனி ஒருவரை ஒருவர் பார்த்து கொண்ட நிலையில் இரண்டாம் இடத்துக்கு தொடர்பு கொள்ளும்போது கூடுதல் பாவத்துவ நிலையை அடைகிறது. இரண்டாம் இடம் அதிகமாக வலிமை இழந்து விட்டது.
இது திருமண தடையை உண்டாக்குகிறது.கொடுத்த வாக்கை காப்பாற்றும் தன்மை அற்றவராக இருப்பார்.
மூன்றாம் இடத்தில் செவ்வாய் மற்றும் சனி இணைந்து இருந்தாலும் அல்லது சேர்ந்து நின்று வேறு இடத்திலிருந்து பார்த்தாலும் சகோதர தோஷத்தை உருவாக்குகிறது.
கீர்த்தி, புகழ் மற்றும் அந்தஸ்து போன்ற வகையில் பாதிப்பை உண்டாக்குகிறது.
காம எண்ணம் மிகுதியாகி சுபத்துவம் இல்லாத நிலையில் தவறான நிலையில் மனிதனை நகர்த்தி வைக்கும்.
நான்காம் இடத்தில் சனி மற்றும் செவ்வாய் இருக்கும் போது தன் சுகம், தாய் சுகம், கல்வியால் சுகம், வண்டி வாகன சுகம் போன்றவற்றில் பாதிப்பு உண்டாக்கிறது. இந்த பலன் மாறுபாடு சுபத்துவம் பெற்ற நிலையிலையோ அல்லது அந்த வீட்டு அதிபதி மற்றும் அதற்குரிய காரக நிலையைப் பொருத்தம் பலன் மாறுபடும்.
ஐந்தாம் இடத்தில் சனி மற்றும் செவ்வாய் இருக்கும் நிலையில் புத்திர தோஷத்தை உண்டாக்குகிறது பூர்விக சொத்தில் வசிக்க இயலாத நிலையும் , பூர்வீக செத்தால் வில்லங்கம் போன்றவற்றையும் உண்டாக்குகிறது. இந்த பலன் ஐந்தாம் இடத்திற்கு சுபத்துவம் கிடைக்காத நிலையிலும், மேலும் ஐந்தாம் இடம் அதிபதி மற்றும் புத்திரகாரன் குரு ஆகியவற்றை பொறுத்தும் பலன் அமைகிறது.
சத்ரு ஸ்தானமான ஆறாம் இடத்தில் சனி, செவ்வாய் அமர்ந்திருப்பது கடன் ,பிணி, எதிர்ப்பு ஆகியவற்றை தடுக்கும் நிலையையும், எதிரியை வெல்லக்கூடிய நிலையை தருகிறது..
களத்திர ஸ்தானமான ஏழாம் இடத்தில் சனி, செவ்வாய் அமர்ந்திருப்பது திருமண தடை உருவாக்குகிறது. ஏழாம் அதிபதியும் மற்றும் களத்திரக்காரர்கள் சுக்கிரனும் கெட்டுப் போன நிலையில் மிகுந்த பாதிப்பை உருவாக்குகிறது. திருமணமே நடக்காத நிலையில் அல்லது அவ்வாறு நடந்தால் ஒரு வீட்டில் ஒன்றாக வசிக்க இயலாத நிலையில் தருகிறது. நட்பு நிலையில் கெடு பலனை அனுபவிக்க கூடிய நிலையை தருகிறது.
எட்டாம் இடத்தில் சனி மற்றும் செவ்வாய் பகவான் நிற்கும் போது அதன் தசை காலங்களில் மரணத்திற்கு நிகரான தொல்லைகளை கொடுக்கிறது.சனி தசை செவ்வாய் பத்தி மற்றும் செவ்வாய் தசை சனி புக்தி போன்ற காலங்களில் விபத்து,வெட்டு காயம் போன்றவை உண்டாகிறது.
ஒன்பதாம் இடத்தில் சனி மற்றும் செவ்வாய் பகவான் நிற்பது தந்தை மற்றும் தந்தை வழி ஆதரவு கிடைக்காத நிலை, கஞ்சத்தனம் மற்றும் எந்த வகை பாக்கியங்களும் அனுபவிக்க இயலாத தன்மை உண்டாக்குகிறது.
பத்தாம் இடத்தில் பாவியாவது இடம் பெற வேண்டும் என்ற விதிப்படி பத்தாம் இடத்தில் சனி மற்றும் செவ்வாய் பகவான் அமர்வது நல்ல யோக நிலையை தரக்கூடிய அமைப்பாக கருதப்படுகிறது.
லாப ஸ்தானமான பதினொன்றாம் இடத்தில் சனி மற்றும் செவ்வாய் சேர்ந்திருப்பது உப ஸ்தானம் என்ற வகையில் நட்பு நிலையில் அமரும்போது மட்டும் நல்ல பலனை தரக்கூடிய அமைப்பில் இருக்கும். இளையதரம், மூத்த சகோதரன் போன்ற அமையாது நிலையை தரும்.
12ஆம் இடத்தில் சனி, செவ்வாய் சேர்ந்து பாவத்துவமான நிலையில் இருப்பவர் கஞ்சத்தனம் உடையவராகவும், செலவு செய்ய மனமில்லாதவராகவும் மற்றும் அதே நேரத்தில் மாறுபட்ட காம எண்ணங்களை உடையவராகவும் திகழ்வார்.
நன்றி
வாட்ஸ் அப் & செல் & கூகுள் பே
097151 89647
மற்றொரு செல் ; 7402570899
Email masterastroravi@gmail.com
(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)
அன்புடன்
சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்
M.Sc,M.A,BEd
ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர், ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கறம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.
No comments:
Post a Comment