ஜோதிடம் காட்டும் சிறப்பு நிலை
செவ்வாய்ப்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!
ஒரு குழந்தை பிறக்கும் நேரம் ,பிறக்கும் இடம், பிறக்கக்கூடிய பெற்றோர்கள், வாழக்கூடிய சூழ்நிலை போன்றவற்றை முடிவு செய்வது அந்த வித்தின் வினை பயனே ஆகும்.
ஒருவர் ஜெனிக்கும்போது வான்வெளியில் பிரபஞ்சத்தை இயக்கி கொண்டிருக்கும் கிரக நிலைகளையே நாம் ஜெனன ஜாதகமாக கட்டமைக்கிறோம்.
ஜாதகத்தில் ஜெனிக்கும்போது உள்ள கிரக நிலைகளை தற்போது சாதகம் பார்க்கும் போது வான வெளியில் உள்ள கிரக நிலைகளோடு ஒப்பிட்டுப் பார்த்து பலன் அறியப்படுகிறது.
தற்போது வான் வீதியில் உள்ள கிரக நிலைகளை கோச்சார நிலை என்று அழைக்கப்படுகிறது.
ஜெனன காலத்தில் ஒரு கிரகம் லக்கனம் மற்றும் ராசிக்கு ஏற்ப எந்த ஸ்தானத்தில், எந்த ஆதிபத்தியம் பெற்று , எந்த கிரகத்தோடு சேர்க்கை,
சேர்ந்து உள்ள கிரகங்களுக்கு இடையேயான உறவு நிலை ,
சேர்ந்து உள்ள கிரகங்களுக்கு இடையேயான பாகை அடிப்படையில் தொலைவு ,எந்த கிரகத்தில் பார்வை ,
அந்த கிரகம் இருக்க கூடிய வீட்டினுடைய அதிபதி , அவை பெற்ற நட்சத்திர சாரம் ,சார நாதன் நிலை, அந்த கிரகம் அம்சத்தில் சுப வர்க்கம் ஏறி உள்ளாரா ? அல்லது பாவ வர்க்கம் ஏறி உள்ளாரா ? அம்சத்தில் அந்த கிரகத்துடன் சேர்ந்து உள்ள கிரக உறவுகள்
போன்ற பல வகைகளில் ஆய்வு செய்து பார்க்கப்பட வேண்டும்.
இவ்வாறு ஆய்வு செய்து பார்க்கப்பட்ட பின்னர் நடக்கக்கூடிய தசா புக்தியை கவனிக்க வேண்டும்.எந்த தசை நடப்பில் இருக்கிறதோ அந்த கிரகம் தற்போது வான் வீதியில் எந்த நிலையில் உள்ளது என்று ஜெனன மற்றும் கோச்சார கிரக நிலைகளுடன் ஆய்வு செய்து பார்க்கப்பட வேண்டும்.
ஒரு கிரகம் தரும் பலனனானது அந்த கிரகம் எந்த இடத்தில் உள்ளது என்பதை ஆய்வு செய்து பார்க்கப்பட வேண்டும்.அந்த கிரகம் தனது தசையில் அதன் ஆதிபத்தியம் பலனை தான் இருக்கும் இட ஆதிபத்தியம் வழியாக தரும் என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.பிறகு அந்த கிரகம் ராசி, அம்சம் மற்றும் பாத சாரம் வழி நின்று பலன் தர முற்படும்.
இரண்டு ஆதிபத்தியம் பெற்ற ஒரு கிரகமானது எந்த ஆதிபத்தியத்துடன் தொடர்பு கொண்டுள்ளது என்பதை பொறுத்து பலன் அமைகிறது.தொடர்பு பெறக்கூடிய ஆதிபத்தியம் பலனை அதிகமாக தரும் நிலையில் இருக்கும் என்பதையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
கிரகமானது 1,5,9 போன்ற கோண அதிபதிகள் தசைகள் நடப்பில் இருப்பின் அவை யோக தசையாக இருப்பதால் அவை எந்த விதத்திலும் பங்கமடையாத நிலையில் இருக்கும் போது அதன் தசை ஜாதகருக்கு யோகத்தை அள்ளித் தரக்கூடிய தசையாக விளங்குகிறது.
குரு அணியை சேர்ந்த தனுசு, மீனம், மேஷம், விருச்சிகம், கடகம் மற்றும் சிம்மம் லக்கனங்களுக்கு குரு அணியை சேர்ந்த சூரியன், சந்திரன், செவ்வாய் மற்றும் கேது பகவான் தசைகளும் மற்றும் சுக்கிரன் அணியை சேர்ந்த ரிஷபம், துலாம், மிதுனம், கன்னி, மகரம் மற்றும் கும்பம் லக்கனங்களுக்கு சுக்கிரன் அணியை சேர்ந்த சுக்கிரன், சனி ,புதன், ராகு தசைகள் வந்தாலும் ஜாதகருக்கு யோகத்தை அள்ளித் தரக்கூடிய நிலையில் உள்ளது.
குரு அணியை சேர்ந்த லக்னங்களுக்கு சுக்கிர அணியை சேர்ந்த தசைகளும், சுக்கிரன் அணியை சேர்ந்த லக்னங்களுக்கு குரு அணியை சேர்ந்த தசைகளும் நடப்பில் வந்தால் அவை உப ஜெய ஸ்தலமான மூன்று, ஆறு, பத்து மற்றும் பதினொன்னு ஆகிய இடங்களில் நட்பு நிலையில் இருக்க வேண்டும் அவ்வாறு இருப்பின் அதன் தசைகள் யோகத்தை அளித்த தரும்.
மேஷம், விருச்சகம் இலக்கணங்களுக்கு புதன் திசையும், ரிஷபம் மற்றும் துலாம் லக்னங்களுக்கு குரு தசையும் ,
மிதுனம் மற்றும் கன்னி லக்கனங்களுக்கு செவ்வாய் தசையும், தனுசு மீன் லக்னங்களுக்கு சுக்கிரன் தசையும், மகரத்திற்கு சூரிய தசையும், கடகத்திற்கு சந்திர தசையும் நடப்பில் வந்தால் அது அவயோகத்தை தரக்கூடிய தசையாக கருதப்படுகிறது.
இயற்கை பாவ கிரகமான சனி, செவ்வாய் பார்த்த அல்லது இணைந்த கிரக தசைகளும், ராகு பகவான் மற்றும் தேய்பிறை சந்திரன் நெருக்கமாக இணைந்த கிரக தசைகளும் , அதன் தசை காலங்களில் கடுமையான கஷ்டங்களை சாதகருக்கு தருகிறது.
இயற்கை சுப கிரகங்களான குரு, வளர்பிறை சந்திரன், தனித்த புதன் சுக்கிரன் ஆகிய கிரகங்கள் பார்வை சேர்க்கை போன்ற நிலையில் தொடர்பு பெற்ற கிரக தசைகளும் அதன் தசை காலங்களில் யோகத்தை அள்ளித் தருகிறது.
நன்றி.
வாட்ஸ் அப் & செல் & கூகுள் பே
097151 89647
மற்றொரு செல்: 7402570899
(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)
அன்புடன்
சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன் M.Sc,M.A,BEd
(ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர்)
ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கறம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.
Email masterastroravi@gmail.com
No comments:
Post a Comment