Tuesday 25 April 2023

உங்கள் பிள்ளைகளுக்கு திருமண 💒 வரன் தேடும் பெற்றோர்களுக்கு -சிறப்பு விழிப்புணர்வு பதிவு


 உங்கள் பிள்ளைகளுக்கு திருமண 💒 வரன் தேடும் பெற்றோர்களுக்கான சிறப்பு விழிப்புணர்வு பதிவு.

          


செவ்வாய்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!


   உங்களது பிள்ளைக்கு திருமண முயற்சி மேற்கொள்ள எண்ணும்போது முதலில் அவனது /அவளது ஜாதகத்தை எடுத்துக் கொண்டு நன்கு ஆராய்ந்து பார்க்கும் ஜோதிடரிடம் சென்று உங்களுடைய பிள்ளையின் ஜாதகத்தில் திருமணம் செய்வதற்கு உரிய காலம் வந்து விட்டதா ? என்பதை ஆராய்ந்து பார்க்கப்பட வேண்டும்.


 திருமணத்திற்கு உகந்த ஸ்தானமான லக்கனம் என்னும் ஜாதகர் , குடும்ப ஸ்தானமான இரண்டாம் இடம், களத்திர ஸ்தானமான ஏழாமிடம் , மாங்கல்ய ஸ்தானமான எட்டாம் இடம் மற்றும் இவர்களின் அதிபதி ஆகியவற்றை ஆய்வு செய்து பார்க்கப்பட வேண்டும். தாம்பத்திய சுகத்தை தரக்கூடிய சுக்கிரன் நிலைமையும் மற்றும் அந்த சுகத்தை தரக்கூடிய தசா புத்திகளும் வந்துவிட்டதா? என்று கவனிக்க வேண்டும். புத்திர தோஷம் ஏதாவது உள்ளதா ?  என்பதையும் ஆய்ந்து கவனிக்கப்பட வேண்டும்.


   தனிப்பட்ட முறையில் பார்க்க சென்றால் உங்கள் பிள்ளைக்கு காதல் திருமணத்திற்கு வாய்ப்பு உண்டா ? அவ்வாறு இருப்பின் பெற்றோரின் மரியாதைக்கு பங்கம் விளைவிக்காத வகையிலும் மற்றும் பெற்றோரின் சம்மதத்துடனும் நடக்குமா ? இது போன்ற விவரங்களை கேட்டு தெரிந்து கொள்ளலாம்.உங்கள் பிள்ளைகளுக்கு உங்கள் கொளரவம் குறைக்கின்ற வகையிலான தவறான பழக்கம் (மது,மாது மற்றும் சூது) உள்ளதா?  அல்லது இல்லையா? இது போன்ற பயன்படக்கூடிய தகவல்களை பெற்று கொண்டு அதற்கு ஏற்றார் போல் திருமண முயற்சிகளை மேற்கொள்ளலாம்.


 உங்கள் பிள்ளைக்கு இளமை திருமணமா ? கால தாமதம் திருமணமா ?  சொந்தமா? அந்நியமா? படித்த நபரா ?,வேலையா ? தொழிலா ? வேலை எனில் அரசு வேலையா ? தனியார் வேலையா ?அடிமை வேலையா ? , தொழில் எனில் சொந்த தொழிலா ?  இது போன்ற பல்வேறு நல்ல விஷயங்களை ஜாதகத்தில் ஜோதிடரிடம் ஆய்வு செய்து பார்க்கப்பட வேண்டும்.


  குழந்தை பாக்கியம் தரக்கூடிய குரு பகவான் மற்றும் தாம்பத்திய சுகத்தை தரக்கூடியவ சுக்கிரன் பகவான் ஆகிய கிரக வலிமையை ஆராய்ந்து பார்க்கப்பட வேண்டும்.உங்கள் பிள்ளை தாம்பத்திய சுகத்தை கொடுக்கக்கூடிய அல்லது பெறக்கூடிய செக்ஸ் வலிமை உள்ளதா? அல்லது அலி தன்மை உள்ளதா ? போன்ற விவரங்களை கேட்டு பெற வேண்டும்.


  மேற்கண்ட இந்த விஷயங்களை விடுத்து நீங்கள் சோதிர்களிடம் உங்களது பிள்ளையோடு எத்தனை பேர் பிறந்துள்ளார்கள்.ஆண் எத்தனை மற்றும் பெண் குழந்தை எத்தனை , பிள்ளையின் அப்பாவோடு எத்தனை பேர் பிறந்துள்ளார்கள், பிள்ளையின் அம்மாவோடு எத்தனை பேர் பிறந்துள்ளார்கள், மாமன்கள் எத்தனை? இதே போல கட்டிக்கிற போற வாழ்க்கைத் துணை உடைய பெண் அல்லது ஆணுடைய திசை எந்த பக்கம் அமையும்.  அந்த வாழ்க்கை துணையோடு பிறந்துள்ள ஆண் எத்தனை ? பெண் எத்தனை?  அவங்க அம்மாவோடு கூட பிறந்தவங்க எத்தனை பேர் ?  உங்க அப்பாவோடு கூட பிறந்தவங்க எத்தனை பேர் ?  இது போன்ற திருமணத்திற்கு தேவையில்லாத கேள்விகளை கேட்டு அதை சரியாக சொல்லும் பட்சத்தில் திருமணம் தொடர்பாக ஆய்வு செய்து நன்கு ஆழமாக பார்க்காமலே  அவர் கூறும்   திருமண பொருத்தம் சரியாக இருக்கும் என்பதை முடிவு செய்து விடுகிறீர்கள்.


  இவற்றை சரியாக சொல்லி விட்டால் அந்த ஜோதிடர் சிறப்பான ஜோதிடர் ஆகும். இதனை  சரியாக சொல்வதற்கு காரணம் நீங்கள் ஜாதகம் பார்க்க கொண்டு செல்லக்கூடிய நோட்டில் சோதிடர்களுக்கு மட்டுமே புரியக்கூடிய வகையில் சாதகத்தை எழுதியவர் பிறப்பு துருவக் கணிதத்தை போட்டு விடுவது தான் காரணம் ஆகும்.இந்த உண்மையை முதலில் பெற்றோர்களாகிய நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.


  இவ்வாறு தேவையில்லா கேள்விகளை தவிர்த்து மேற்குறிப்பிட்ட ஆழாமான வினாக்களை கேட்டு உங்கள் பிள்ளையின் ஜாதகத்தை ஆய்வு செய்து பார்த்து திருமணத்திற்கு உரிய காலம் வந்து விட்டது என்று சொன்னால் பிறகு உங்கள் பிள்ளைக்கு வரன் தேடிய ஆண் அல்லது பெண் ஜாதகத்தையும் கொடுத்து பொருத்தம் பார்க்க சொல்ல வேண்டும்.


 ஜோதிடர்களாகிய நாம் இருவரது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை வாங்கி இருவரது ஜாதகத்தையும் ஏதாவது ஒரு முறையில் (வாக்கியம்/திருக்கணித முறை) கணித்து பலன் அறியவேண்டும்.


ஜாதக பொருத்தம் பார்க்கும் போது பத்து பொருத்தம் என்னும் நட்சத்திரம் பொருத்தத்தை மட்டுமே வைத்து கொண்டு முடிவு செய்து விட கூடாது.தம்பதிகள் இருவரது ஜாதகத்தில் உள்ள கிரக அமைப்புகளை ஆய்வு செய்து பொருத்தம் பார்க்கப்பட வேண்டும்.திருமண தாம்பத்திய சுகத்தை தரக்கூடிய சுக்கிரன் மற்றும் புத்திர பாக்கியம் தரக் கூடிய குரு பகவான் போன்றவற்றை ஆராய்ந்து அதற்கு ஏற்றார் போல் திருமண பொருத்தம் பார்க்க வேண்டும்.


 திருமணம் பொருத்தம் பார்க்கும் போது லக்கன அவயோக தசைகள்,ஆறு மற்றும் எட்டுக்கு உடைய தசைகள் திருமணம் நடக்கும் காலத்தில் அல்லது திருமணம் நடந்த பிறகு வர இருக்கிறதா? கோச்சார அடிப்படையில் ஏழரை மற்றும் அஷ்டம சனி நடப்பில் அல்லது திருமணம் நடந்த சில மாதங்களில் வருகிறதா ? இது போன்ற விவரங்களை ஆய்வு செய்து பார்த்து அதற்கேற்ப பொருத்தம் போட வேண்டும்.


திருமணம் செய்ய இருக்கும் தம்பதியினருக்கு தார தோஷம் உள்ளதா ? என்பதை ஆய்வு செய்து பார்க்கப்பட வேண்டும்.


இவை தவிர்த்து 1,7 ல் ராகு மற்றும் கேது உள்ளவர்களுக்கு 2,8 ராகு மற்றும் கேது இருக்க வேண்டும் என்பது போன்ற விதிகளை தவிர்க்கப்பட வேண்டும்.

செவ்வாய் தோஷம் என்பது உயிரை கொல்லும் அளவிற்கு பெரிய தோஷம் இல்லை அவற்றை பெரிதாக கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டாம்.இந்த செவ்வாய் திருமண ஸ்தானமான 1,2,7 மற்றும் 8 ஆம் இடங்களில் சுபத்துவமின்றி இருப்பதோ அல்லது அந்த இடத்தை பார்ப்பதோ பாவத்துவம் ஆகும்.அது திருமண தடையை கொடுக்கும் அவ்வளவுதான்.


பிறகு மூலம் மாமனுக்கு ஆகாது, ஆயில்யம் மாமியாருக்கு ஆகாது,கேட்டை மூத்த மைத்துனருக்கு ஆகாது.விசாகம் இளைய மைத்துனருக்கு ஆகாது.இது போன்ற ஜோதிட பழமொழிகளை நம்ப வேண்டாம்.


  இவ்வாறு உங்கள் பிள்ளைக்கு திருமண பொருத்தம் பார்க்கும் பெற்றோர்களுக்கு ஜோதிட விழிப்புணர்வு அவசியம் ஆகும்.இன்றைய கால கட்டத்தில் சமூக ஊடகங்களின தடவினால் ஜோதிடம் தொடர்பான அடிப்படை அறிவு தெரிந்து கொள்வது மிகவும் முக்கியமான ஒன்றாகும்.


 திருமணம் ஒருவருக்கு கால தாமதமாகி கொண்டு செல்வதற்கு திருமண ஸ்தானமான லக்கனம் மற்றும் ராசிக்கு ஒன்று , இரண்டு,ஏழு மற்றும் எட்டாம் இடத்தில் தேய்பிறை சந்திரன், சனி செவ்வாய், ராகு மற்றும் கேது  போன்ற பாவ கிரகங்கள் இடம் பெறுவது அல்லது சனி, செவ்வாய் மற்றும் தேய்பிறை சந்திரன் போன்ற பாவ கிரகங்கள் பார்ப்பது ,1,2,7,8 ஆம் அதிபதி பலவீனம் அல்லது பாவத்துவம் அடைந்த நிற்பது.

களத்திர சுகம் மற்றும் புத்திர பாக்கியம் தரக்கூடிய தசாபுத்தி வராமல் இருப்பதும் காரணமாக அமைகிறது.


இவ்வாறு கால தாமதம் ஆகி கொண்டே சென்றால் இவற்றிற்கு உரிய பரிகாரம் செய்யும் முறைகளை ஜோதிடரிடம் கேட்டு தெரிந்து கொண்டு அதற்கு உரிய பரிகார பூஜைகள் செய்ய வேண்டும்.


நன்றி.


வாட்ஸ் அப் & செல் & கூகுள் பே

‌. 097151 89647 


மற்றொரு செல்: 7402570899


(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)

            



அன்புடன்

  சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன் 

      M.SC,M.A,BEd

ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர், ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கறம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.


Email masterastroravi@gmail.com

No comments: