வாழ்வியல் சம்பவங்களை துல்லியமாக காட்டும் தசா புத்தி பலன்கள்.
செவ்வாய்ப்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!
ஒருவர் ஜாதகத்தில் இதுவரை நடந்த இப்பொழுது நடக்கின்ற மற்றும் இனிமேல் நடக்க இருக்கின்ற ஆகிய முக்கால பலன்களையும் கூறுவதற்கு ஒருவர் ஜாதகத்தில் ஜனன காலத்தில் இருந்து இதுவரை நடந்த மற்றும்
இனி நடக்கப் போகின்ற தசா புத்திகளை வைத்துக் கொண்டே துல்லியமாக பலன்களை கூறிவிட முடியும்.
ஒவ்வொரு தசா புத்தி பலன்களை கூறும்பொழுதும் அக்காலகட்டத்தில் அந்த தசா புத்தி கிரகங்கள் கோச்சார அடிப்படையில் எந்த இடத்தில் இருந்திருக்கும் என்ன மாதிரியான நிலையில் இருக்கும் என்பதை ஆராய்ந்து பார்த்து ஜனன கால சாதகத்தோடு ஒப்பிட்டுப் பார்த்தும் பலனை கூற வேண்டும்.
ஒருவர் ஜனன காலத்திலிருந்து இதுவரை நடந்திருக்க கூடிய தசாபுத்தி பலன்களை சொல்வது எந்த அளவுக்கு சரியாக உள்ளது என்பதை பொறுத்தே இனி நடக்க இருக்கின்ற பலனை ஜோதிடர்களாகிய நாம் சொல்லும் பொழுது அது நிச்சயமாக அது போல் நடக்கும் என்ற நம்பிக்கைக்கு வருவதற்கு உகந்ததாக இருக்கும்.
உங்களுடைய ஜாதகத்தில் தற்பொழுது நடக்க இருக்கும் அல்லது நடக்கின்ற பலனை துல்லியமாக சொல்ல வேண்டுமாயின் அவருடைய தசை, புத்தி மற்றும் அந்தாரம் ஆகிய மூன்றையும் கணக்கிட்டு பிறகு நடப்பு தசை நாதன் மற்றும் புத்தி நாதன் ராசி கட்டத்தில் எப்படி உள்ளார் என்பதையும்,
.அதன் ஷட் பல பலனை ஆராய்ந்து பார்த்து பலன் அறிய முயல்வார்.தசை நாதன் மற்றும் புத்தி நாதன் ஆகிய இருவரும் எந்த வகையில் செயல்படுவார் என்பதை பின்வரும் உதாரணம் மூலமாக எளிதாக புரிந்து கொள்ளலாம்.
ஒருவர் ஜாதகத்தில்
தசா நாதனே முதலாளி ஆவார்.
அவர் இட்ட வேலைகளை செய்ய பணிக்கப்பட்டவராக புத்தி நாதன் செயல்படுவார்.ஒரு வேளை புத்தி நாதன் உங்களுக்கு நண்பராக இருந்தால் முதலாளி இட்ட வேலையையும் நிறைவேற்றுவார்.அதே நேரத்தில் உங்களையும் பெரிய அளவுக்கு தொந்தரவு படுத்தி காரியத்தை செய்யாமல் இலகுவாக செயல்படுவார்.ஆனால் புத்தி நாதன் உங்களுக்கு பகை எனில் முதலாளி இட்ட பணியை உங்களிடம் முரட்டுத்தனமாக காட்டி செயல்படுத்துவார்.
தற்பொழுது அந்தரநாதன் கோச்சார் அடிப்படையில் ஜாதக கட்டத்தில் எந்த இடத்தில் உள்ளார் என்பதையும், எத்த கிரகத்துடன் தொடர்பு கொண்டு உள்ளார் , என்பதையும், எந்த ஆதிபத்திய தன்மையை பெற்றுள்ளார் என்பதை பொறுத்து மற்றும் சுபத்துவம் அல்லது பாவத்தன்மையும் ஒப்பிட்டு பார்த்து பலன் கூற வேண்டும்.
ஒரு தசை சிறப்பாக நல்ல பலனை தர உச்சம்,மூல திரிகோணம் மற்றும் ஆட்சி போன்ற ஸ்தான வலிமை பெற்று கேந்திர , கோணங்களில் தான் இருக்க வேண்டும் என்பது அவசியம் கிடையாது. அவை பெற்ற ஸ்தான அடிப்படையில் நல்ல பலனைத் தர அந்த தசை நடத்தும் கிரகம் அதிக சுபத்துவமாக இருந்தால் மட்டுமே போதுமானது ஆகும்.
ஒரு கிரகம் இயற்கை பாவ கிரகமாக இருந்தாலும் அல்லது லக்கன அவ யோகராக இருந்தாலும் அந்த கிரகம் 3,6,10,11 போன்ற உப ஜெய ஸ்தானத்தில் நட்பு நிலையில் இருந்தால் மட்டும் போதுமானது.அவ்வாறு இருந்தால் கூட அந்த கிரகம் யோக பலனை தந்து விடுகிறது.
மேஷம் மற்றும் துலா லக்னத்திற்கு புதன் மற்றும் குரு இயற்கை சுப கிரகமாக இருந்தாலும் மூன்று மற்றும் ஆறாம் இடத்திற்கு உடையவன் என்ற வகையில் நல்ல பலனை சாதகருக்கு தருவதில்லை. மாறாக ரிஷபம் மற்றும் துலாம் லக்னங்களுக்கு சனி பகவான் இயற்கை பாவ கிரகமாக இருந்தாலும் மிகுந்த யோக பலனை ஜாதகருக்கு கொடுக்கிறது.
மேஷ மற்றும் விருச்சிகம் லக்கனத்திற்கு புதன் தசை,சனி தசை,
ரிஷபம் மற்றும் துலாம் லக்கனத்திற்கு குரு தசை, சூரியன் மற்றும் சந்திரன் தசை,
மிதுனம் மற்றும் கன்னி லக்கனத்திற்கு செவ்வாய் தசை,
தனுசு மற்றும் மீனம் லக்கனத்திற்கு சுக்கிரன் தசை மற்றும் புதன் தசை
மகரத்திற்கு சூரியன் தசை,
கும்பத்திற்கு சந்திரன் தசை,
ஆகிய தசைகள் அவ யோகத்தை தரக்கூடிய தசைகள் ஆகும்.
இந்த அவயோகத்தை தரக்கூடிய தசைகள் மிகுந்த நல்ல பலனை தர மூன்று மற்றும் பதினொன்றாம் இடத்தில் நட்பு வலிமை பெற்று திகழ வேண்டும்.
நன்றி.
Cell & What's app & Gpay
097151 89647
Another cell ; 7402570899
Email masterastroravi@gmail.com
(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)
அன்புடன்
சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்
M.SC,M.A, BEd
(Teacher & Astrologer)
Omsakthi online astro consulting centre
Karambakkudi, Pudukkottai District.
No comments:
Post a Comment