Wednesday 19 April 2023

தசைக்குள் புத்தி செய்யும் மாயஜாலம்

 தசைக்குள் புக்தி செய்யும் மாயாஜாலம்.

            


செவ்வாய்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!


  ஜாதகத்தில் நடக்கக்கூடிய தசைக்குள் புக்தி எவ்வாறு செயல்படுகிறது? என்று கேட்கப்படும் வினாவிற்கான விடையை ஆராய்ந்து பார்த்ததில் கீழ்க்கண்ட முடிவுகளே கிடைக்கிறது.


  ஜாதகத்தில் மனித வாழ்வியல் தொடர் நிகழ்ச்சிகளை முடிவு செய்வது தசைகளே ஆகும்.. மனிதன் பிறந்ததிலிருந்து தொடர்ந்து அவருக்கு நடந்த தசைகளை  எடுத்து ஆராய்ந்து பார்த்து அந்த காலகட்டங்களில் என்னென்ன நடந்திருக்கும் என்பதை நாம் கூறினால் நிச்சயமாக அந்த பலன் மிக துல்லியமாகவே எனது அனுபவத்தில் வருகிறது..


தசையே அந்த மனிதனின் வாழ்வியல் சம்பவங்களை முடிவு செய்கிறது 


       சில தசைகள் வாழ்க்கையை உயர்த்திக் கொடுத்திருக்கும் .


    சில தசைகள் வாழ்க்கையில் பெரிய அடியை கொடுத்து ஒரு பாடத்தை தந்திருக்கும் .

  

    சில தசைகள் நடுத்தரமாக இன்ப மற்றும் துன்பங்கள்  இரண்டும் கலந்து நடந்து இருக்கும்.


 தசையே ஒரு மனிதனுக்கு முதலாளி போன்றவர்கள் . அந்த தசையில் வருகின்ற  புத்திகள்  என்பது தசைநாதன் இட்ட பணியை செய்யக்கூடிய வேலைக்காரர்கள் தானே ஒழிய அவர்களே முதலாளியாகி விட முடியாது..


  ஒருவர் ஜாதகத்தில் நடக்கும் தசை சரியான தசையாக இல்லாமல்

 அதாவது  ஆறு அல்லது எட்டுக்குடைய தசையாகவோ அல்லது லக்கன அவயோக தசையாகவோ இருப்பின் அவற்றுக்குள் வரக்கூடிய புத்திகள் என்ன தான் யோகத்தை தரக்கூடிய புத்திகளாக இருந்தாலும் அவர்கள் முதலாளியின் அனுமதியை மீறி நல்லதை தந்து விட இயலாது.


  ஒரு முதலாளி தனக்கு கீழ் வேலை பார்க்கக் கூடிய ஒரு தொழிலாளியை மற்றொரு தொழிலாளியிடம் 

" இவனை அடித்து தொரத்து" என்று சொன்னால் ஒரு சமயம் அந்த வேலை ஆளுக்கு முதலாளி அடிக்கச் சொன்ன நபர் நண்பராக இருக்க கூடிய பட்சத்தில் அடிப்பது போல் பாசாங்கு செய்து வெளியில் துரத்தி விடுவார்.


 இங்கு முதலாளி என்பவர் நடக்கும் தசை ,அடிக்க சொன்ன நபர் புத்தி  மற்றும் அடி வாங்கும் நபர் ஜாதகர் ஆவார்.


 அடிக்கச் சொன்ன நபருக்கும் அடிவாங்க கூடிய நபருக்கு பகை எனில் செமத்தியாக அடித்து வெளியில் துரத்துவார்.


 ஆனால் இருவருமே அந்த கடையை விட்டு வெளியில் துரத்த கூடியவர்கள் தான்.


    இங்கு புத்தி நன்றாக இருக்கும் பொழுது அந்த தசை கொடுக்கக் கூடிய தண்டனை ஒரு பாசாங்கு போல வந்து விட்டுப் போய்விடும் .பெரிய அளவில் கஷ்டம் இல்லாமல் கடக்க வைப்பார்.


   தசைக்குள் வரும்  புத்தி  என்பது 

சஷ்ட  மற்றும் அஷ்டமமாக (6,8 ) இருக்கக்கூடிய புத்திகள் சாதகருக்கு  மிகுதியான கெடுதலை தரக்கூடியவையாக இருக்கும்.


   அருள் அணி என அழைக்கப்படும்

குரு அணியைச் சேர்ந்த தனுசு, மீனம், மேஷம், விருச்சகம், கடகம் மற்றும் சிம்மம் ஆகிய ஆறு லக்னங்களுக்கு வரக்கூடிய குரு ,சந்திரன் ,செவ்வாய் ,சூரியன் மற்றும் கேது ஆகிய ஆறு தசைகள் யோக தசைகளாக செயல்படும்.


 இதே போல பொருள் அணி என்று அழைக்கப்படும் சுக்கிரன் அணியைச் சேர்ந்த ரிஷபம் ,துலாம் ,மிதுனம் ,கன்னி, மகர மற்றும் கும்பம் ஆகிய ஆறு லக்னங்களுக்கு சுக்கிரன், புதன், சனி மற்றும் ராகு தசைகள் யோக தசைகளாக கருதப்படுகிறது.


எனவே குரு அணி  சேர்ந்த லக்னங்களுக்கு குரு அணியை சேர்ந்த தசைகளே நடக்கக்கூடிய காலங்களில் எதிரணியைச் சேர்ந்த சுக்கிரன், ,புதன், சனி மற்றும் ராகு புத்திகள் கெடுதல் தரக்கூடிய புத்திகளாக கருதப்படுகிறது. தசைநாதன் யோக தசையாக இருக்கக்கூடிய பட்சத்தில் இந்த புத்திகள் பெரிய அளவில் பாதிப்பை சாதகருக்கு தந்து விடுவதில்லை.


  இதே போல சுக்கிரன் அணியைச் சேர்ந்த லக்னங்களுக்கு சுக்கிர அணியைச் சேர்ந்த தசைகளே நடக்கும் பொழுது குரு அணியைச் சேர்ந்த சூரிய, சந்திர, செவ்வாய் ,ராகு மற்றும் குரு புத்திகள் பாதிப்பை தரக்கூடிய புத்திகளாக கருதப்படுகிறது .இருப்பினும் தசைநாதன் வலுவாக இருக்கக்கூடிய பட்சத்தில் இந்த புத்திகள் பெரிய அளவில் பாதிப்பை தந்து விடுவதில்லை.


  குரு அணியைச் சேர்ந்த லக்னங்களுக்கு எதிரணியான சுக்கிர அணியை சேர்ந்த தசைகள் நடக்கும் பொழுது குரு அணியைச் சேர்ந்த புத்திகள் வரும்போது இந்த குரு அணியை சேர்ந்த புத்திகள் என்னதான் யோக புத்திகளாக இருந்தாலும் தசையை மீறி நல்லதை சாதகருக்கு தந்து விட முடியாது .


    இதே போல சுக்கிரன் அணியைச் சேர்ந்த லக்னங்களுக்கு குரு அணியைச் சேர்ந்த தசைகள் நடந்து கொண்டிருக்கும் போது சுக்கிரன் அணியை சேர்ந்த புத்திகள் நடக்கும் பொழுது அந்த புத்திகள் என்னதான் யோக புத்திகளாக இருந்தாலும்  தசையை மீறி அதாவது முதலாளியை மீறி அந்த புத்திகள் நல்லதை சாதகருக்கு  தந்துவிட முடியாது.


  ஆனால் முதலாளிக்கு தெரியாமல் பெரிய அளவில் பாதிப்பை தராமல் அதாவது அடித்து நொறுக்காமல் அடிப்பது போல் பாசாங்கு செய்து சாதகரை  அந்த புத்தி காலங்களில் நகர வைப்பார்.


 குரு அணியைச் சேர்ந்த லக்னங்களுக்கு குரு அணியை சேர்ந்த தசா மற்றும் புத்தி நடக்கும் பொழுதும் மற்றும் சுக்கிரன் அணியை சேர்ந்த லக்னங்களுக்கு சுக்கிரணியைச் சேர்ந்த தசா மற்றும் புத்தி நடக்கும் பொழுதும் சாதகர் டபுள் டெபாசிட்டர் முறையில் மிகுந்த யோகத்தை அனுபவிக்க கூடிய காலமாக இருக்கும் .இதில் சுபத்துவம் ஒன்று விதிவிலக்காகும்.


   குரு அணியை சேர்ந்த லக்னங்களுக்கு சுக்கிரன் அணியை சேர்ந்த புக்தி நடக்கும் பொழுதும் அல்லது சுக்கிரன் அணியை சேர்ந்த லக்னங்களுக்கு குரு அணியை சேர்ந்த புத்திகள் நடக்கும் பொழுதும் அவை எதிர் அணியை சேர்ந்த புத்தியாக இருப்பினும் அவை சுபத்துவமாக இருந்தாலும் அல்லது உப ஜெய ஸ்தானமான 3 ,6 ,10, 11 ஆம் இடங்களில் நட்பு நிலையில் இருந்தாலோ நல்ல பலனைத் தந்து விடும்.


  இவையே தசைக்குள் புக்தி செய்யும் மாயாஜாலம் ஆகும்.


நன்றி.


வாட்ஸ் அப் & செல் & கூகுள் பே


   097151 89647 


மற்றொரு செல்; 7402570899


(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)

                        



அன்புடன்


 சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன் 

      M.Sc,M.A,BEd

ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர்,

ஓம் சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கறம்பக்குடி

புதுக்கோட்டை மாவட்டம்.


My email masterastroravi@gmail.com

No comments: