Wednesday 19 April 2023

சிற்றின்பமா ? பேரின்பமா ?

 சிற்றின்பமா ? பேரின்பமா ? 

                


செவ்வாய்ப்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!


 லெளகீக வாழ்க்கையில் ஈடுபாடு கொண்ட சராசரி  திருமணமான மனிதனுக்கு அத்தியாவசியமான மற்றும் அவசியமான தேவைகள்

 பணம், பட்டம்,பதவி, மனை ,மனையாள் ,காம சுகம், மற்றும் புத்திர பாக்கியம் ஆகும்.


 மேற்கண்ட அனைத்தையுமே ஜாதகருக்கு அள்ளி தரக்கூடிய அமைப்பை ஆய்வு செய்து பார்க்க வேண்டுமாயின் அவரது ஜாதகத்தில் சுக்கிரன் மற்றும் குரு பகவானின் நிலையை ஜாதக கட்டத்தில் ஆய்வு செய்து பார்க்க வேண்டும்.


ஒருவருக்கு பணம் பதவி பட்டம், புகழ் அந்தஸ்து, கல்வி ,புத்ர பாக்கியம் மற்றும் ஞானம் ஆகியவற்றை அள்ளி  தரக்கூடியவர் ஆவார்.இதற்கு ஒருவரது ஜாதகத்தில் குரு பகவான் சனி ,ராகு மற்றும் தேய்பிறை சந்திரன் ஆகிய தொடர்பு இன்றி நல்ல ஸ்தான வலிமை பெற்று கேந்திர கோணங்களில் நின்று வலுப்பெற்ற அமைப்பை பெற்று இருக்க வேண்டும்.


 குரு பகவான் உபய ராசிகளாக கருதப்படும் தனுசு மற்றும் மீனம் லக்கனத்திற்கு கேந்திர ஸ்தானமான நான்கு மற்றும் பத்தாம் இடங்களில் நின்றால் கேந்திராதிபத்திய தோஷத்தை தரும் என்பதால் அவை லக்கனத்தில் ஆட்சி பெற்ற நிலையில் அல்லது மறைவிடங்களில் சுப வலுப்பெற்று நிற்கும் போது ஜாதகருக்கு நல்ல பலன்களை தரும் அமைப்பை பெறுகிறது.


  ஒருவருக்கு உடல் பசியானது  உரிய வயதை எட்டியவுடன் அவர் விரும்பியோ அல்லது விரும்பாமலோ ஒருவரது உள்ளத்தில் தாகமாக வந்து நின்று விடுகிறது.


 பசி ,தாகம் வந்தால் உணவையும் மற்றும் நீரை அருந்துவது போல காமமும் ஒருவர் துய்க்க வேண்டும்.நாம் பெறும் காமம் சமூகத்தால் திருமணம் என்ற பந்தத்தால் அங்கீகரிக்கப்பட்டு ஒன்றாக இருக்க வேண்டும் என்பது சமூக ஒழுங்கு ஆகும்.இவ்வாறு தவிக்கிக்கின்ற உடல் வேட்கையை தணித்து சந்தோஷப்படுத்தும் விழாவினை சாந்தி முகூர்த்தம் என்று பெயர் வைத்தார்கள்.


 சுக்கிர பகவானை ஒருவருக்கு காமத்தை அனுபவிக்க கூடிய நிலையை அறிய உதவும் கிரகமாகும். தாம்பத்திய சுகத்தை ஒருவருக்கு தரக்கூடிய கிரகம் எது என ஜாதகத்தில் ஆராய்ந்து பார்க்கும் பொழுது முழு முதல் கிரகமாக சுக்கிர பகவானே திகழ்கிறார்.


 ஜாதகத்தில் சுக்கிர பகவானை  வைத்து அவர் அனுபவிக்க கூடிய காமம் முறையான காமமா  அல்லது முறையற்ற காமமா என்பதை கண்டறிந்து விடலாம். ஒருவர் பெண் என்றால் என்ன என்பதை அறிந்து கொள்ள உதவக்கூடிய கிரகம்  சுக்கிரன் பகவான் ஆகும்.


சிலர் பெண் சுகத்தை கடைசி வரை அனுபவிக்க இயலாமல் அல்லது வாய்ப்பு இல்லாமல் இருப்பதற்கும் சுக்கிரன் உங்கள் ஜாதகத்தில் எந்த நிலையில் இருக்கிறார் என்பதை பொறுத்து அமைகிறது.


சிலர் எண்பது வயதிலும் செக்ஸை நன்றாக அனுபவித்து மற்றவரை திருப்தி படுத்தக் கூடிய நிலையில் இருப்பதற்கும் ,சிலர் செக்ஸ் என்றாலே பயன்படக்கூடிய நிலையிலோ அல்லது மற்றவரை திருப்தி படுத்த இயலாத தன்மை படைத்தவராக இருப்பதற்கும் அவரது ஜாதகத்தில் சுக்கிரன் இருக்கும் இடம், சேர்க்கை மற்றும் பார்வை போன்ற தொடர்பை பொறுத்து அமைகிறது.


 ஒருவருக்கு சுக்கிரன் உச்சம் பெற்று நின்றால் மனைவி அல்லாது பல பெண்களுடன் சல்லாபம் அதே நேரத்தில் சுக்கிரன் நீசம் பெற்று நின்றாலும் தனது ஒரே மனைவி உடனான தொடர்பு ஆகும்.


 சிலருக்கு தனது மனைவியே படுக்கை சுகத்தை தர மறுக்கும் அல்லது தர இயலாத நிலையில் இருப்பதற்கான காரணங்களை ஆய்வு செய்து பார்த்தால் குரு பகவானை சுக்கிரன் பார்ப்பது அல்லது குரு மற்றும் சுக்கிரன் சேர்க்கை போன்ற அமைப்பு காரணமாக இருக்கும்.இது ஒரு பொது பலனே ஆகும்.அவரவர் சாதக நிலையினை பொறுத்து பலன் மாறுபட வாய்ப்பு கட்டாயம் உண்டு.


  சுக்கிரன் பகவான் உடன் சனி, செவ்வாய் அல்லது ராகு எட்டு பாகைக்குள் இணைந்த நிலையில் அல்லது சுக்கிரன் பகவான் ஆனவர் செவ்வாய், ராகுவுடன் இணைந்து சனி பார்க்கும் நிலையில் அல்லது சுக்கிரன் ஆனவர் சனி மற்றும் ராகு உடன் இணைந்து செவ்வாய் பார்க்கின்ற நிலையில் இந்த அமைப்பானது காம வீரியம் ஸ்தானமான மூன்றாம் இடம், கணவன் மனைவி செக்ஸ் உறவு நிலை ஸ்தானமான ஏழாம் இடம் மற்றும் படுக்கை சுகத்தை தரும் பன்னிரண்டாம் இடத்தில் இருந்தால் கூடுதலான பாதிப்பை ஜாதகருக்கு கொடுக்கும்.


 மேற்கண்ட இது போன்ற அமைப்பை பெற்று சுப கிரகங்களான குரு, வளர்பிறை சந்திரன் ,தனித்த புதன் சுக்கிரன் ஆகியவற்றின் சேர்க்கை அல்லது தொடர்பை பெறாத நிலையில் ஒருவர் சொல்லி கொள்ள வெட்கப்பட கூடிய நிலையில் தன்னுடன் வயதில் மூத்த அல்லது கீழ் மட்ட நிலை அல்லது முறையற்ற உறவு நிலையில் காமத்தை துய்க்க கூடிய நிலையில் இருப்பர்.


 சுக்கிரன் பகவான் ஜாதகருக்கு சிற்றின்ப வாழ்வை தருபவர். சுகபோகங்களில் திளைத்து மகிழும் ஆற்றல், மாட மாளிகை, திருமண வாழ்க்கை,  குடும்பம் திருமணம், வாழ்க்கைத்துணை  தேர்ந்தெடுக்கும் கலா ரசனை ,அழகு சம்பந்தமான அழகியல் ஈர்ப்பு, தன்னை அழகாக காட்டிக் கொள்ளக்கூடிய தன்மை, ஆபரணங்கள் மீது நாட்டம் அழகான தோற்றம் ,பெண்களின் நளினம் ஒருவருடைய திருமணம், கவர்ச்சி, வீரிய சக்தி ,மனதிற்குப் பிடித்த வகைகளில் அடையும் ஆகுதி, இயல் ,இசை ,நடனம் மூலம் இன்ப சுகம் அனுபவித்தல் ,இசை உணர்வு ,கற்பனை உணர்வு வளர்த்தல்,

 காவிய இன்பம் , அடுக்குமாடி சொகுசு ரக வீடுகள் பங்களா நவீன ரக கார்கள் பொருள் சேர்த்தல் ஆடவர்க்கு சுகம் தரும் வாசனை திரவியங்கள் ஆகிய மேற்கண்ட இவை அனைத்தும் தான் மற்றவரை கவர்ந்து இருக்கக்கூடிய விஷயங்களோடு தொடர்பு கொண்டதாகும்.


 மற்றவரை மகிழ்விக்க கூடிய வேசக்காரன் நாடக நடிகர் கலைத்துறை ஒப்பனைப் பொருட்கள் பயன்படுத்துதல், அலங்கார வண்டிகள், ஆடம்பர வஸ்துக்கள், வெண்ணிற பொருட்கள் வைரம் போன்ற விலை உயர்ந்த ஆவணங்களை அணிதல், விடியற்காலம், , களத்திரக்காரகன் உயர்க வாகனம்  உயர்ந்த,நடுத்தர மற்றும் கீழ்நிலை வாகனமா என்பது அவருடைய சுக்கிரன் நிலையை குறித்து அமைகிறது. ஒருவருக்கு சொந்த வீடு அல்லது வாடகை வீட்டில் கடைசி வரை வசிப்பதும் சுக்கிர பகவான் நிலையை பொருத்து அமைகிறது.


 ஒருவருக்கு திருமணம் நடக்குமா? நடக்காதா? என்பதை ஆராய ஒன்று இரண்டு, ஏழு  மற்றும் எட்டாம் இடங்கள் இருந்தாலும் சுக்கிரனுடைய நிலைய வைத்து அவர் காம சுகத்தை அதாவது மனைவி மூலம் சுகத்தை எப்பொழுது பெறுவார் என்பதை கணித்து விட முடியும்.


 ஒருவருக்கு கட்டி சுகத்தை தருவதும் சுக்கிரன் பகவான் என்றால் தொட்டில் சுகத்தை தருவது குரு பகவானே ஆகும்.


 சுக்கிரனை பலம் ஆக பெற்றவர்கள் அனைத்து விதமான ஆடம்பர விஷயங்களை அனுபவிக்க துடிப்பார்கள். மனதளவில் நிம்மதியற்றவர்களாக இருப்பார்கள். இன்னும் வேண்டும் என்ற உள்ள பிச்சைக்காரர்களாக இருப்பார்கள். ஆனால் குரு பகவானை பலமாக பெற்றவர்கள் நேரிய வழியில் முறையான விஷயங்களை மட்டும் அனுபவிக்க ஆசைப்படக் கூடியவர்களாக இருப்பார்கள். இவர்கள் மற்றவர்களை வஞ்சித்தோ அல்லது எல்லா ஆடம்பர விஷயங்களையும் அனுபவித்து விட வேண்டும் என்றோ நினைக்காதவர்கள். உள்ளதைக் கொண்டு நிறைவாக வாழும் மனம் படைத்தவர்கள் அதனால் மனதளவில் பெரும் பணக்காரராக இவர்கள் திகழ்வார்கள்.


 ஒருவருக்கு எப்பொழுது புத்திர பாக்கியம் அதாவது புத்திரத்தை தூக்கி கொஞ்ச கூடிய நேரம் எந்த தசா புத்தியை வருகிறது என்பதை ஆராய்ந்து பார்த்தே அவருக்கு எப்பொழுது திருமணம் நடக்கும் என்றும் எளிதாக கணித்து விட முடியும்.


 ஒருவருக்கு எப்படிப்பட்ட குழந்தை பிறக்கும் அந்த குழந்தை பிறந்த பிறகு அவருடைய குடும்ப வாழ்வு சரிந்து விழக்கூடிய நிலையா அல்லது குப்பையில் தூசியாக இருந்தாலும் இந்த குழந்தை பிறந்த பிறகு கோபுர கலசமாக உயர்ந்து நிக்கக்கூடிய குழந்தையா அரசாங்க அதிகாரியாக திகழும் குழந்தையா அல்லது நாடாளும் குழந்தையா என்பதை ஒருவருடைய ஜாதகத்தில் உள்ள குரு பகவான் நிலையை வைத்து இத்துடன் ஐந்தாம் இடம் மற்றும் ஐந்தாமிடம் அதிபதியுடைய நிலையினை வைத்து முடிவு செய்யப்படுகிறது.


 ஒரு மனிதனுக்கு சிற்றின்ப வாழ்வை தரக்கூடியவர் சுக்கிர பகவான் ஆவார். அதேபோல ஒரு மனிதன் பேரின்ப நிலை அடைய குரு பகவானுடைய அருள் ஆசி அவசியமானதாக அமைகிறது.


 குருபகவான் தேவர்களுடைய தலைவன் குருவுடன் சூரிய, சந்திர மற்றும் செவ்வாய் ஆகிய கிரகங்கள் நட்பு கிரகங்களாக கருதப்படுகிறது .

சுக்கிரன் அசுரனுடைய தலைவன் ஆவார். புதன் ,சுக்கிரன் மற்றும் சனி ஆகியவை இதன் நட்பு கிரகங்கள் ஆகும்.


நன்றி.


வாட்ஸ் அப் & செல் & கூகுள் பே

   097151 89647 


மற்றொரு செல்; 7402570899


(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)

         



அன்புடன்

  சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன் 

      M.Sc,M.A,BEd

ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர், ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கறம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.


Email masterastroravi@gmail.com

No comments: