Tuesday 25 April 2023

ஜோதிட பலன் பார்க்கும் போது..

 ஜோதிட பலன் பார்க்கும் போது.....



              
          


செவ்வாய்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!


 ஜோதிடத்தில் பலன் கூறும் போது பல்வேறு ஜோதிட உட் கூறுகளை ஆய்வு செய்து பார்த்து பலன் சொல்ல வேண்டும்.எண்ணற்ற விதிகளை மனதிற்குள் கொண்டு வந்து தனது சுய மனதை கழட்டி வைத்து விட்டு ஆராய்ச்சி செய்து பார்த்து நாம் படித்த விதிகளை கொண்டு மட்டுமே பலன் தேட முயலாமல்  விதிகளுக்குள் உள்ள விதி விலக்குகளை ஆராய்ந்து பலன் கூற முயல வேண்டும்.


  இருபது நிமிடத்திற்குள் பலன் கேட்க வரும் ஒருவரது குண நலன்களை அவரது லக்கனம் மற்றும் அதிபதி உடன் ஏனைய கிரகங்கள் கொண்ட பார்வை , சேர்க்கை மூலமாக கொண்ட தொடர்பின் அடிப்படையில் ஜாதகரை பற்றி புட்டு புட்டு வைத்து அவரை ஜோதிடத்தின் மேலே முழு நம்பிக்கை வரும்படியாக சில நேரங்களில் கண்களில் கண்ணீர் மல்கி இருகரம் கொண்டு கை தொழ செய்திட வேண்டும்.


அடுத்தபடியாக நடக்கும் தசா புக்தி மற்றும் கோச்சார பலன்கள் அடிப்படையில் தற்போது உங்கள் ஜாதகப்படி என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை துல்லியமாக எடுத்து கூறி பாராட்டை பெற்று விட வேண்டும்.


   நிச்சயமாக  நடந்த ,நடக்கும்  மற்றும் நடக்க இருக்கும் தசா புக்தி கொண்டு ஜாதகர்  முழு வாழ்வில் உள்ள  வாழ்வியல் சம்பவங்களை துல்லியமாக கணித்து விடலாம்.


    பன்னிரெண்டு ராசிகள் ,ஒன்பது கிரகங்கள் மற்றும் இருபத்து ஏழு நட்சத்திரங்கள் ஆகிய எல்லாமே மனித வாழ்வினை வழி நடத்த கூடியவை.

இவைகளை கொண்டு இவை இருக்கும் இடம் , பார்வை மற்றும் சேர்க்கை மற்றும் அதற்கு உரிய காரகன் கிரகம் ஆகிய எல்லாவற்றையும் பாவகம் அதன் அதிபதி மற்றும் காரக கிரகம் ஆகிய மூன்று வழிகளில் ஒரு வழிக்கு 40 மதிப்பெண் வீதம் கொடுக்கப்பட்டு ஒரு குறிப்பிட்ட ஆதிபத்தியம் பலனை எடுக்கும் மதிப்பெண் அடிப்படையில் பலனை கணிக்க வேண்டும்.‌


    பலன்  பார்க்க வரும் ஒருவரது ஜாதகத்தில் லக்கனத்தின் அடிப்படையில் எந்த ஒரு கிரகம் ஜாதகருக்கு நன்மை தரக்கூடிய நிலையில் உள்ளது என்பதை அறிய அந்த கிரகம் இருக்கும் ஸ்தானம் அதாவது வீடு கொடுத்தவன் வலு, அவற்றுடன் சேர்த்து உள்ள கிரகங்கள் அவை டிகிரி அடிப்படையில் எவ்வளவு நெருக்கமாக இணைந்து உள்ளது .எட்டு பாகைக்குள் இருந்தால் முழுமையாக பாதிக்கப்படும்.இணைந்த கிரகம் சுபராக இருப்பின் அதிக சுபத்துவ படுகிறது.பாவ கிரகமாக இருந்தால் அதிக பாவத்துவ படுத்துகிறது.


பதின்மூன்று பாகை அதாவது ஒரு நட்சத்திர பாகை அளவு விலகி இருப்பின் பாதி அளவு பாதிக்கப்படுகிறது.இருபத்து மூன்று பாகை தாண்டி இருந்தால் ஒரே வீட்டில் இருந்தாலும் ஒன்றாக இல்லை என்ற அடிப்படையில் முழுவதுமாக பாதிக்கப்படுவதில்லை.


இதே போல ஒரு கிரகம் இயற்கை சுப  கிரகமான குரு , வளர்பிறைச் சந்திரன், தனித்த புதன் மற்றும் சுக்கிரன் ஆகியை பார்க்க   சுபத்துவ படுகிறது .மாறாக இயற்கை பாவ கிரகமான சனி, செவ்வாய்  மற்றும் தேய்பிறைச்சந்திரன் பார்க்க அந்த கிரகம் பாவத்துவ நிலையினை அடைகிறது.ஒரு கிரகம் மற்றொரு கிரகத்தை பார்த்து சுபத்துவ படுத்துகிறதா ? அல்லது பாவத்துவ படுத்துகிறதா ? என்பதையும் அந்த கிரகங்கள் பெற்ற பாகை அடிப்படையில் முடிவு செய்யப்படுகிறது.


 ஒரு கிரகத்துடன் பாவ கிரக சேர்க்கை மற்றும் பார்வை பாவத்துவ படுத்துகிறது.பகை, நீசம், அஸ்தமனம் அந்த கிரகத்தை பலவீன படுத்துகிறது.


இவ்வாறாக ஒரு கிரகம் ராசியிலே பலவீனப்பட்டு நின்னாலும் அல்லது பாவத்துவப்பட்டு நின்றாலும் அவை அம்சத்தில் சுப வர்க்கம் ஏறி இருந்தால் நல்ல‌ பலனை தருகிறது .பாவ வர்க்கம் ஏறி இருந்தால்  பாவத்துவம் அடைகிறது.


நன்றி


வாட்ஸ் அப் & செல் & கூகுள் பே

   097151 89647 

மற்றொரு செல்: 7402570899


(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)

          

     


அன்புடன்


 சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன் 

      M.SC,M.A,BEd

 ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர், ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கறம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.

No comments: