Monday 24 April 2023

திருமணம் எப்பொழுது நடக்கும்?

 திருமணம் எப்பொழுது நடக்கும்?

           


செவ்வாய்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!


        ஒரு ஜாதகத்தை பார்த்தவுடன் திருமணம் நடக்கவில்லையா? 

அல்லது திருமணம் எப்பொழுது நடக்கும்? 

அல்லது நடந்து பிரிந்து இருக்கிறார்களா ? குழந்தை பாக்கியம் கால தாமதம் ஆகி கொண்டிருக்கிறதா ? இது போன்ற கேள்விகளுக்கு விடை தர முடியுமா? என கேட்டால் கட்டாயம் மேற்கண்ட கேள்விகளுக்கு விடை தர முடியும்.


  சரியான பிறந்த தேதி, நேரம் மற்றும் இடத்தை கொண்டு சரியாக கணிக்கப்பட்ட ஜாதகத்தினை கொண்டு ஜோதிடத்தில் எல்லா கேள்விகளுக்கும் விடை தர முடியும்.


 ஒருவருக்கு திருமணம் இன்னும் நடக்க வில்லை என்பதை அவருடைய ஜாதகத்தில் திருமண ஸ்தானமான லக்கனம் என்னும் ஒன்றாம் இடம், குடும்ப ஸ்தானமான இரண்டாம் இடம், களத்திர ஸ்தானமான ஏழாம் இடம் மற்றும் மாங்கல்ய ஸ்தானமான எட்டாம் இடம் ஆகிய நான்கு ஸ்தானங்களை லக்கனம் மற்றும் ராசி ஆகிய இரு வழிகளில் ஆய்வு செய்து பார்க்கப்பட வேண்டும்.இவை தவிர திருமண ஸ்தானத்திற்கு அதாவது தாம்பத்திய சுகத்திற்கு காரகரான களத்திர காரகன் என அழைக்கப்படும் சுக்கிரன் மற்றும் புத்திர பாக்கியம் தரக்கூடிய குரு பகவான் ஆகிய இருவரையும் ஆய்வு செய்து பார்க்கப்பட வேண்டும்.லக்கனம் மற்றும் லக்கனாதியின் வலிமை மிகவும் முக்கியமான ஒன்றாகும்.


 மனித வாழ்வியல் சம்பவங்களை முடிவு செய்வது தசாபுத்தி மற்றும் கோச்சார பலன்கள் ஆகிய இரண்டும் என்பதால் இவைகளுக்கு ஏற்பவே திருமணம் நடந்து இருக்கிறதா ? அல்லது எப்போது நடக்கும்? திருமணம் நடந்து பிரச்சினை அல்லது பிரிவினை ஏதாவது உண்டா? புத்திர பாக்கியம் போன்ற பல்வேறு கேள்விகளுக்கு துல்லியமாக பதில் தர இயலும்.


 ஒருவருக்கு திருமணம் இதுவரை நடக்க வில்லை என்பதையும் அதே நேரத்தில் திருமணம் எப்பொழுது நடக்கும் அல்லது திருமணமே நடக்காது என்பதையும் மேற்குறிப்பிட்ட (1,2,7,8) ஸ்தானங்களுடனும் , அதன் அதிபதிகளுடனும் மற்றும் கார்க் கிரகங்களுடனும் சுப கிரக அல்லது பாவ கிரக தொடர்பு அடிப்படையில் தசாபுத்தி மற்றும் கோச்சார பலன்களுக்கு ஏற்ப முடிவு செய்யப்பட வேண்டும்.


 இயற்கை பாவ கிரகங்களான சனி செவ்வாய் ராகு மற்றும் கேது ஆகிய கிரகங்கள் மேற்குறிப்பிட்ட ஸ்தானங்களில் அல்லது காரக கிரகங்கள் உடன் நின்றாலும் அல்லது அந்த ஸ்தானங்களை மற்றும் கிரகங்களை சனி மற்றும் செவ்வாய் பகவான் ஆனவர் பார்வை செய்து லக்கன அவயோக அல்லது ஆறு ,எட்டுக்குடைய தசை நடப்பில் இருந்தாலும் அல்லது கோச்சார அடிப்படையில் தென்மச்சலியின் ஜென்ம நட்சத்திரத்தில் சனி போகும் காலம் அஸ்தம சனி காலம் நலத்தில் இருந்தாலும் அவருக்கு திருமணம் காலதாமதம் ஆகிக்கொண்டே செல்லும் எனவே அவருக்கு இதுவரை திருமணம் நடக்கவில்லை என்பதை உறுதியாக கூறிவிட முடியும்.


உதாரண ஜாதகம்-(1)

 இவருக்கு 47 வயது வரை இன்னும் திருமணம் நடைபெறவில்லை.


பிறந்த தேதி 13.03.1976 , பிறந்த நேரம் 6.30 am

மீன லக்னம், கடக ராசி ,

பூசம் நட்சத்திரம் நான்காம் பாதம்.


 இவருடைய ஜாதகத்திலே லக்னத்திற்கு ஏழாம் இடத்தை செவ்வாய் ,சனி ஆகிய இரண்டு கிரகங்கள் பார்வை செய்கிறது.அதாவது செவ்வாய் மிதுன வீட்டில் இருந்து நான்காம் பார்வையாகவும், சனி கடக ராசியில் இருந்து மூன்றாம் பார்வையாகவும் பார்வை செய்கிறது.


 ஏழாம் இடத்திற்கு வேறு எந்தவிதமான சுபத்துவமும் இல்லாத நிலையில் சனி, செவ்வாய் ஆகிய கிரகங்கள் தனித்தனியாக பார்த்தால் அல்லது சேர்ந்து பார்த்தாலோ அந்த இடம் சர்வ நாசம் ஆகும் என்பது விதியாகும்.


 மேலும் ஏழாம் அதிபதி புதன் 12 இல் மறைவு, களத்திரகாரகன் சுக்கிரனும் 12ஆம் இடத்தில் மறைந்துள்ளார். லக்னத்திற்கு இரண்டாம் இடமான குடும்ப ஸ்தானத்தில் குரு பகவான் உடன் கேது இணைந்த நிலையில் சனி தனது பத்தாவது பார்வையால் இரண்டாம் இடத்தை பார்த்து குடும்ப ஸ்தானமுமும் கெட்டு விட்டது. மாங்கல்ய ஸ்தானமான எட்டாம் இடத்தில் ராகு தொடர்பு.


  திருமண வயதை நெருங்கிய இருபத்தைந்தாவது வயதில் மீன லக்கனத்திற்கு அவயோக தசையான மூன்று மற்றும் எட்டுக்குரிய சுக்கிர தசை அதனைத் தொடர்ந்து ஆறுக்குடைய சூரிய தசை 50 வயதை நெருங்கும் அதற்கு அடுத்து வரக்கூடிய சந்திர தசையோ யோக தசையாக இருந்தாலும் தசைநாதன் சந்திரனும் சனி சேர்ந்து நிலையில் திருமணத்திற்கு வாய்ப்பு இல்லை எனலாம்.


 ராசிநாதன் சந்திரனுடன் சனி பகவான் இணைந்து ஏழாம் இடத்தை பார்வை செய்கிறார். ராசிக்கு ஏழாம் இடத்தை சனி ஏழாம் பார்வையாகவும் , செவ்வாய் தனது எட்டாவது பார்வையாலும் பார்வை செய்து ராசிக்கு ஏழாம் இடமும் மிகுந்த பாவத்துவ நிலை அடைந்து விட்டது.


உதாரண ஜாதகம் -2


 திருமணம் நடைபெற்றுவிட்டது .ஒரே வீட்டில் இருந்தாலும் 6 வருடமாக பேசி கொள்ளாமல் இருக்கும் ஜாதகம்.பிரிவு ஜாதகம் 


பிறந்த தேதி: 08.10.1978

பிறந்த நேரம்: 7.03 pm

ஜென்ம லக்னம்; மேஷம்

ஜென்ம ராசி: தனுசு

ஜென்ம நட்சத்திரம்: மூலம் -4 ம் பாதம்


  இவருடைய ஜாதகத்திலே‌ ஏழாம் இடத்தில் தன மற்றும் களத்திர ஸ்தானாதிபதியும் மற்றும் களத்திரக்காரனுமான சுக்கிரன் ஆட்சி பெற்ற நிலையில் இருப்பதால் திருமணம் இவருக்கு நடைபெற்று விட்டது.


  ஆனால் இந்த சுக்கிரன் உடன் இயற்கை பாவ கிரகமான செவ்வாய் சேர்ந்து நின்ற நிலையில் சனிக்கு பகை வீடான சிம்மம் வீட்டில் இருந்து மூன்றாம் பார்வையாக சனி பார்வை செய்து ஏழாம் இடம், ஏழாம் அதிபதி மற்றும் களத்திரகாரன் சுக்கிரன் ஆகிய மூன்றையும் பாவத்துவ மாக்கி விட்டது.சனி தனது பத்தாவது பார்வையால் குடும்ப ஸ்தானமான இரண்டாம் இடத்தையும் பார்வை செய்து விட்டது. திருமணம் நடைபெற்ற சில வருடங்களிலே செவ்வாய் தசை ஆரம்பித்து விட்டது.தனுசு ராசிக்கு கோச்சார படி ஏழரை சனியும் நடப்பில் இருந்ததால் கடந்த ஆறு ஆண்டுகளாக கணவனும் மனைவியும் ஒரே வீட்டில் இருந்தாலும் ஒன்றாக மனம் ஒத்து இல்லை.பேசி கொள்வது இல்லை.சனி பெயர்ச்சி நடைபெற்று விட்டதாலும் செவ்வாய் தசை முடியும் வரை இந்நிலை தொடரும்.அடுத்து வரும் 4,9 பரிவர்த்தனை பெற்ற சந்திரன் தசையில் இணைந்து விடுவார்கள்.


உதாரண ஜாதகம் -3


புத்திர பாக்கியம் கால தாமதமாகி கொண்டிருக்கும் ஜாதகம்


பிறந்த தேதி 28/29 .03.1984

பிறந்த நேரம் 4.55 am

ஜென்ம லக்னம் மற்றும் ராசி: கும்பம்

ஜென்ம நட்சத்திரம்: அவிட்டம் -4-ம் பாதம்


  ஜாதகத்தில் ராசி லக்னத்திற்கு புத்திர ஸ்தானமான ஐந்தாம் இட அதிபதி புதன் பகவான் தனது பகை வீடான செவ்வாய் வீடு ஏறி நின்று உச்சம் பெற்ற சனி பகவானுடைய சமசப்தம பார்வையை பெற்றுள்ளது. ஐந்தாம் அதிபதி புதனுக்கு குரு பகவான் உடைய பார்வை கிடைத்தாலும் அந்த குரு பகவானையும் சனி மூன்றாம் பார்வையாக பார்த்து பாவத்துவப்படுத்திவிட்டது.


 கோச்சார அடிப்படையில் கும்ப ராசிக்கு தற்பொழுது ஏழரைச் சனியும் நடப்பில் உள்ளது. நடப்பு தசையும் சனி திசையில் சனி புத்தி நடைபெறுவதால் புத்திர பாக்கியம் காலதாமதம் ஆயிக் கொண்டு செல்கிறது.

      




    ஒருவருடைய பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் சரியாக நீங்கள் தரக்கூடிய பட்சத்தில் உங்களுடைய வாழ்க்கையிங நடக்கக்கூடிய அனைத்து விஷயங்களையும் துல்லியமாக கணித்து பலன் தரலாம்.


நன்றி.


வாட்ஸ் அப் & செல் & கூகுள் பே

  097151 89647 


மற்றொரு செல்: 7402570899


Email masterastroravi@gmail.com


(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)


அன்புடன்

 சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன் 

   M.SC,M.A, BEd

ஓம் சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கறம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.

No comments: